#விறகுவெட்டியும்_தேவதையும்
ஜெர்மானியக் கதை..
S.இராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய கேள்விக்குறி புத்தகத்தை (விகடன் பிரசுரம்) படித்த போது நம்ம ஊரு விறகுவெட்டி தேவதை கதையைப் போல ஜெர்மன் நாடோடிக் கதையும் ஒன்று உள்ளது என்பதை அறிந்தேன் சுவாரஸ்யமான அக்கதை இனி..
ஏழை ஜெர்மானிய விறகு வெட்டி பனிப் பிரதேசத்தில் வாட்டும் குளிரில் மரம் வெட்டி பிழைத்து வந்தான்.. அவன் மட்டுமே அங்கு வசித்து வந்தான்., தனிமை என்றால் அப்படி ஒரு தனிமை.. நன்கு சாப்பிடக்கூடியவன் அவன்.. ஆனால் அவனுக்கு அரைவயிறு உணவே கிடைத்தது.!
அவன் மீது கருணை கொண்ட தேவதை அவன் முன் தோன்றி.. விறகு வெட்டியே நான் ஒரு தேவதை உனக்கு என்ன வேண்டுமோ ஒரே ஒரு வரம் கேள் என்றார்.! என்ன வேண்டுமானாலும் தருவாயா அப்ப இரு..என யோசித்துவிட்டு..
என் பசி தீர ஒரே ஒரு பெரிய பழரொட்டி கொடு என்றான், ஐயோ இவன் இவ்வளவு அப்புராணியாக இருக்கிறானே என நினைத்த தேவதை.. வேறு ஏதாவது கேள் என்றது.. இல்ல நீ தேவதைன்னா முதல்ல ரொட்டியைக் கொடு..
அப்போதான் நம்புவேன் என ரின் சோப் விளம்பர மாடல் போல ஆதாரத்தை நிரூபிக்கச் சொன்னான் அந்த விறகு வெட்டி.. உடனே தேவதை விரல் சொடுக்க விதவிதமான ரொட்டிகள் வந்தன, ஆவலுடன் அதை சாப்பிட ஆரம்பித்தான் விறகுவெட்டி!
அவன் சாப்பிடுவதை பார்த்த தேவதை தம்பி இப்படி செல்லூர் ராஜு போல வெள்ளந்தியாக இருக்கிறாயே.! உனக்கு ஒரு வரம் தந்தே ஆகவேண்டும் கேள் என்றார்.. அப்போதும் மன்னார்குடி குடும்பம் போல அதிக பேராசை இல்லாது.. அப்படியா சொல்றிங்க.. இருங்க
ஆங் ரைட்டு.. அப்போ எனக்கு ஒரு அடுப்பு தாங்க இத்தனை ரொட்டிகளையும் என்னால் இப்பவே சாப்பிட முடியாது இது பனிக்காடு என்பதால் இவை கெட்டும் போகாது தேவைப்படும் போது சூடு பண்ணிக்க ஒரு அடுப்பு போதும் என்றான்.!
விறகு வெட்டி சொன்னபடி அடுத்து அடுப்பும் அங்கே வந்தது.. இப்போதும் தேவதைக்கே ஒரு அதிருப்தி.. ஏம்ப்பா இவ்வளவு தானா உன் ஆசை.! இது போதுமா! உனக்கு ஒரு வரம் தந்துட்டு தான் நான் போவேன்..
கேளு கேளுப்பா கேளு என்றது சூரியன் எஃப் எம்ஆர்.ஜே.போல.! சிறிது நேரம் யோசித்த விறகு வெட்டி சரி நீ இவ்வளோ ஆசைப்படுற.. எனக்கும் உதவிக்கு ஆள் இல்ல வீடு பெருக்க, துணி துவைக்க, சமைக்க, பாத்திரம் கழுவ...
இதுக்கெல்லாம் யாருமில்லை பேசாம நீ என் வீட்டு வேலைக்காரி ஆகிடேன்..என்றான்.! தேவதையும் மறுநிமிடமே அவன் வீட்டு வேலைக் காரியாக மாறிவிட அன்றிலிருந்து அவளும் மனிதர்கள் படும் கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்தது.!
அன்றிலிருந்து தான் தேவதைகள் மனிதர்கள் முன் தோன்றுவதே இல்லையாம்.! ஆனால் இன்று நம் கஷ்டத்தில் வந்து உதவும் ஒவ்வொரு நல்ல உள்ளங்களுமே தேவதை தான் என முடிகிறது அக்கதை.
No comments:
Post a Comment