Saturday, 21 February 2026

​#சால்னா_ஸ்டோரி



மதுரையில் ஒரு ஃபேமஸான புரோட்டா கடையில் உங்க கடை சால்னா பத்தி கேள்விப்பட்டு தான் இங்க வந்திருக்கோம் என்றார் ஒருவர். அவரும் அவரது 4 நண்பர்களும் ஆவலுடன் அங்கு அமர்ந்திருந்தனர். சரி எங்கேயாவது திருச்சி பக்கமிருந்து வந்திருப்பார்கள்னு நினைச்சா அவங்க வந்திருப்பது காசர்கோட்டில் இருந்து! முதல் நாள் மதியமே கிளம்பி விட்டார்களாம். 


வடிவேலு பாவனாவிடம் கேட்பது போல அப்படி உனக்கு இந்த மதுரையில் பிடிச்சது எது செல்லம்னு? கேட்டதுக்கு ஐந்தாறு கடைகளின் பேரைச் சொல்லி அங்க சால்னா சாப்பிடத்தான் இந்த டூரே வந்திருக்கோம் என்றனர் கோரஸாக. காலணா செலவழிக்கவே கணக்குப் பார்க்கும் காலத்தில் ஒரு புறாவுக்காக போரா? மாதிரி சால்னாவுக்கு ஒரு டூரா? என எண்ணினேன்.


உடனே வீடு வந்து சால்னாவை பத்தி கூகுளில் தேடினால், சாரி புரோட்டாக்கு கூட விக்கி பீடியா இருக்கு, சால்னாவுக்கு அப்படி ஏதும் இல்லை என்றது. நான் சில விநாடிகள் விக்கித்து நின்றேன். சால்னாவை ருசிக்கக் கிளம்பி ஒரு க்ரூப் டூரே வந்திருக்காங்க அந்த சால்னா பத்தி விக்கியில் எழுதாட்டி என்ன? நான் எழுதலைன்னா இந்த ஹிஸ்டரி நம்மை ஃபர்கிவ்வாதல்லவா..


இதோ கூகுள் செய்யாது சால்னா பற்றி நான் தேடித் தேடி தொகுத்தவை👇🏿


“சால்னா” என்றால் சளசளன்னு தண்ணீர் போல இருக்கும் குழம்பு என்று அர்த்தம். சல்னா என்ற வேற்று மொழிச் சொல்லில் இருந்து உருவானதே சால்னா. மதறாஸ் துறைமுகம் மெட்ராஸ் தமிழுக்கு தந்த பல சொற்களை தந்துள்ளது.  ஜாமீன், ரசீது, நாஷ்டா, கஷ்மாலம், பேஜார் போன்ற சொற்கள் எல்லாமே அங்கிருந்து சென்னைக்கு கரையேறிய வார்த்தைகள் தான். 


இந்த சால்னா கிடைக்கும் ரோட்டோரக் கடைகள் பிளாட்பார கடைகள் என்று அழைக்கப்படும் முன்பு சால்னாக் கடைகள் என்றே அழைக்கப்பட்டன. கூலித் தொழிலாளர்கள், கை ரிக்‌ஷாக்காரர்கள், பழம், காய்கறி விற்பவர்கள் போன்ற எளிய பாட்டாளிகளின் உணவாக இருந்தது தான் சால்னா. அன்று மதறாஸில் ஆப்பம் இட்லி, தோசை கடைகளில் சாம்பார், சட்னி கிடையாது. 


ஆப்பம்/ இடியாப்பம் பாயா தான் அன்னிக்கு ஃபேமஸ். தினமும் இட்லி, தோசைக்கு பாயா வாங்கி சாப்பிடவும் முடியாது. இதுக்காகவே அன்னைக்கு பாயா போல தண்ணியா செய்து தந்தது தான் சால்னா குழம்பு. கிட்டத்தட்ட கறிக் குழம்பு போல மசாலா பொருட்கள் சேர்த்து போனா போவுதுன்னு மிச்ச மீதி எலும்புகள் போட்டு செய்யும் அசைவ சால்னா படு ஹிட்டடித்தது.


சூடான இட்லி, தோசைக்கு சளசளன்னு ரசம் போல தரும் காரசாரமான சால்னாவை எளிய மக்கள் இட்லியில் குழைத்து அமிர்தம் போல சாப்பிடத் துவங்கினர். மதறாஸ் பட்டணத்தை கட்டிப் போட்ட சால்னா, புரோட்டாவின் அறிமுகத்துக்குப் பின்னரே வேற லெவலுக்கு சென்றது. குருமா, கெட்டிக் குழம்புன்னு அதன் கன்ஸிஸ்டன்சியும் கூடியது. மெல்ல மெல்ல சால்னா..


தமிழ்நாட்டின் தென் பகுதிக்குள் அடியெடித்து வைத்தது. கொங்கு நாட்டில் தண்ணிக் குழம்புன்னும், மதுரையில் ஆடு & கோழி ரசம் என்றும் மரு வைக்காமல் உலவிய குழம்பு முறை தான் மரு வைத்து சால்னா என்ற பேரில் உலவுகிறது என்ற சூட்சுமம் மக்களுக்குப் புரிந்துவிட, சால்னாவின் பொற்காலம் துவங்கியது. அதிலும் தென் மாவட்டங்கள் ஜொலித்தன.


இட்லிக்கு பல சட்னிகள் தந்தது போல புரோட்டாவுக்கு 4 சால்னா, 5 சால்னா தர ஆரம்பித்தனர். தேங்காய், கசகசா, முந்திரி, பட்டை, கிராம்பு, மிளகு, சோம்பு, ஏலக்காய் போட்டு அரைத்து வைக்கும் சைவ சால்னாக்கள் மணம் வீசி மக்கள் மனங்களை வென்றன. புரோட்டாவை விட சால்னா குடிக்கும் மக்கள் பெருகினர். எக்ஸ்டிரா சால்னா ஒரு கப் ஐந்து ரூபாய்னு விற்றனர்!


இதில் ஆச்சரியம் அன்னிக்கு ஒரு புரோட்டாவே 2 ரூபாய் தான். பச்சை மிளகாய் சால்னா, முந்திரி சால்னா, ஒயிட் சால்னா, எண்ணெய் சால்னா, தேங்காய் சால்னா, சால்னா, நிலக்கடலை சால்னா இப்படி சால்னாக்கள் தசாவதாரத்துடன் விஸ்வரூபமும் எடுத்து நின்றது. போட்டி அதிகரிக்க அசைவ எலும்பு சால்னாக்கள் களமிறங்கின. கோழி உதிரிகள், மட்டன்..


எலும்புகள் போட்ட சால்னாக்கள் சைவ சால்னா விலைக்கே விற்றனர். மட்டன் சுக்கா, நாட்டுக் கோழி, ஈரல் போன்ற குழம்புகள் ஒன் பை திரீ கூட தந்தனர். கொத்து புரோட்டா அறிமுகமானது! அதில் ஊற்றி கொத்தவே தனித்தனி சால்னாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கொத்து புரோட்டாவில் உள்ள சால்னாவும் அதுக்கு தரும் சால்னாவும் ருசியில் தனித்துவமானவை.


அசைவக் கடைகளில் சால்னா சக்கை போடு போடுவதைக் கண்டு சைவக் கடைகளும் சால்னா தயாரித்தன. மல்லி புதினா சால்னா, ப்ளைன் சால்னா, அரைச்ச காய் சால்னா (காய்களை வேக வைத்து அரைப்பது) காளான் சால்னா, வெங்காய சால்னா, தக்காளி பொட்டுக்கடலை சால்னா, நெய் சால்னான்னு சைவத்திலும் சால்னாவின் கொடி பறக்கத் துவங்கியது. 


பொரிச்ச புரோட்டா, பன் பரோட்டா, அல்வா பரோட்டா, நூடுல்ஸ் புரோட்டா, பர்கர் புரோட்டான்னு இன்று அதற்கும் தனி சால்னாக்கள் வந்துவிட்டன. சென்னைத் தமிழில் யாரையாவது திட்டினால் கூட “பேமானி! ஓங்கி அட்ச்சேன்னா தவட சால்னா உட்டுக்கும் என்ற வழக்கு இருந்தது. இவ்வளவு ஏன் 1968இல் வந்த பொம்மலாட்டம் படத்தில் மனோரமா பாடுவார்..


{வா வாத்யாரே வூட்டாண்ட.. பாடல்}


நைனா உன் நெனப்பாலே நான் 

நாஸ்தா பண்ணி நாளாச்சு

மச்சான் ஒன் மூஞ்சப் பார்த்தேன்

சால்னா நெனப்பு வந்தாச்சு

ஆயாக்கடை இடியாப்பம் நான்

பாயாக்கறியும் நீயாச்சு


இப்படி சால்னாவின் கதை ருசியானது தான். உங்களுக்கு தெரிந்த சால்னா பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இருந்தால் பகிருங்கள் அதையும் சேர்த்து விக்கி பீடியாவில் பதிவேற்றம் செய்யலாம். இன்னிக்கு வீட்டில் இரவு உணவு தோசையும் நெய் சால்னாவும் தான் 💖



​#ஜாங்கிரி_VS_ஜிலேபி



இந்த வார்த்தையை உச்சரிக்கும் போது ஒரு இனிப்புப் பண்டத்தின் பேரை உச்சரித்த உணர்வே வராது. தலக் கறி, வடகறி, எலும்புக்கறி என்று அசைவக் கறிகளின் ஞாபகமே வரும். இடையில் ஜிலேபின்னு ஒரு பேரு குறுக்கே வரும், ஆனா ஜாங்கிரி வேறு, ஜிலேபி வேறு.


என்ன சொல்றிங்க? உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கும் கேட்குது. ஆம் ஜாங்கிரியும், ஜிலேபியும் ஒரே குடும்பம் தான் என்றாலும் இரண்டுக்கும் நிறைய வித்யாசம் உண்டு. ஜாங்கிரி முழுவதும் உளுந்து உபயோகித்து செய்வது, ஜிலேபியானது மைதாமாவில் செய்வது.


மைதா மாவை குழைத்து எண்ணெய்யில் முறுக்கு போல க்ரிஸ்பியா சுடுவது ஜிலேபி. உளுந்தில் மாவு அரைத்து பதமாக ஸ்பாஞ்ச் போல சுடுவது ஜாங்கிரி. இரண்டுமே பொரித்த பின்பு சர்க்கரை பாகு சேர்த்துத் தரணும். ஜிலேபிக்கான பாகில் புளிப்பு சேர்ப்பார்கள். 


ஜிலேபியை அந்தப் பாகில் நனைத்தாலே போதும், ஆனால் ஜாங்கிரியில் சர்க்கரைப்பாகு நன்கு இறங்கும்படி ஊற வைக்கணும். ஜாங்கிரியில் கோலம் போல சுற்றும் முறையை கண்டறிந்தவர் அநேகமா ஒரு ஆந்திரக் காரரா இருந்திட வாய்ப்புகள் இருக்கு.


ஏன்னா ஜிலேபியை பிச்சிப் போட்டா அப்படியே தெலுங்கு எழுத்துகள் மாதிரியே இருக்கும். இதில் ஏலக்காய், குங்குமப்பூ, கிராம்பெல்லாம் சேர்ப்பாங்க. எப்படி சாதா தோசையும், கோதுமை தோசையும் ஒன்றாகாதோ அப்படித்தான் ஜிலேபியும், ஜாங்கிரியும். 


ஜாங்கிரிக்கு ஜாங்கிரின்னு பேரு வச்ச முகலாய பாதுஷா யாருன்னு நீங்க ஈஸியா சொல்லிடலாம். மன்னர் ஜஹாங்கீர் தான் இந்தப் பெயரை வைத்தவர். ஜாங்கிரிக்கே ஜஹாங்கிர் என்றொரு பேருண்டு. ஆனா அவருக்கு ஏன் பாதுஷான்னு பேரு வச்சாங்களோ!?


முகலாய மன்னர்கள் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பல வகையான உணவுகள் தான் இன்றும் இந்தியக் கலாச்சார உணவுகளாக இருக்கின்றன. உ.பியில் உள்ள கோரக்பூர் தான் ஜாங்கிரிக்கு புகழ் பெற்ற ஊர். ஜாங்கிரி & ஜிலேபியின் தாயகம் ஈரான் நாடாகும். 


நம்ம ஊரில் அம்மனுக்கு ஆடிமாதம் கூழ் ஊற்றுவது போல ஈரானில் இன்றைக்கும் ரம்ஜான் நோன்பு திறக்க வரும் ஏழை மக்களுக்கு ஜிலேபியை இலவசமாக தினமும் விநியோகிக்கிறார்கள். பாரசீக மொழியில் சோல்பியா என்று ஜிலேபி அழைக்கப்படுகிறது. 


நம்ம ஊரு டீக்கடையில் டீயோடு நாம வடை, பஜ்ஜி, போண்டா சாப்பிடுற மாதிரி குஜராத்தில் டீயோடு ஜிலேபி, டில்லியில் தயிரோடு ஜிலேபின்னு வெரைட்டியா சாப்பிடுவதை இன்றும் காணலாம். ஜிலேபி தான் இதில் அதிக நாடுகளில் கிடைக்கும்.


ஜாங்கிரி மட்டும் தமிழ்நாட்டு ஸ்டைலுக்கு மாறி விட்டது. ஈசியா இதை நினைவில் வச்சிக்க ஜிலேபி புளிப்பா இருக்கும், ஜாங்கிரி இனிப்பா இருக்கும்னு வச்சுக்கலாம். இனி இந்த சந்தேகம் இல்லாம ஜிலேபி & ஜாங்கிரியை ரசித்து ருசித்து சாப்பிடுங்க.. ஓகே 💜



Friday, 20 February 2026

​“சங்கோத்யா ஆரண்யம்”



சரித்திர காலங்களுக்கு பல மில்லியன் ஆண்டுகளுக்குமுற்பட்ட வேத காலத்தில் இருந்தது தான் “சங்கோத்யாஆரண்யம்” எனும் பெருங் காடுஎண்ணிலடங்கா அறிவியல்மற்றும் விஞ்ஞான அற்புதங்களை இது தனக்குள் ஒளித்துவைத்துள்ளதுஅதையெல்லாம் தெரிந்து கொள்ள நாம் 56 கோடி ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்க வேண்டும்பயணிப்போமா..


விந்தியமலைக்கு வடதெற்கே 5000 காத தூரத்தில் மேற்குநோக்கி அமைந்த கடலோரத்தில் அமைந்த மலைப்பாங்கானஅடர்ந்த கானகம் இதுஇந்த கானகத்தின் எந்தப் பகுதியிலும்கிழக்கு திசையே வராது இது ஒரு உலக அதிசயமாகும்இந்தக்காடு டைனோசர்கள் உலகில் உருவாகும் முன்பே பல வேதவிஞ்சாணிகள் பிறந்து வளர்ந்த பழம் பெருமை கொண்டகாடாகும்.


இந்த கானகத்தில் வசித்த ஒருவருக்கு கூட சூரியன் என்னும்ஒரு கோள் இருப்பதே தெரியாதுஆனால் இவர்கள் ஆரியன்என்ற கடவுளை வழி பட்டு வந்தனர்இவர்கள் பேசிய மொழிசங்கோத்ய கிருதம் என்னும் மொழி ஆகும்இதுதான் சமஸ்க்ருதத்தின் ஆதி மொழிஸ்ருங்கர பாஸ்கரசங்கோத்யாயா என்ற ஒரு ரிஷி அவர்களின் தலைமையில்தான் இந்த கானகம் இருந்தது


இந்த பாஸ்கர சங்கோத்யாயா பின்னாளில் விண் வெளிஆராய்ச்சியில் புகழ்பெற்ற இந்திய ரிஷியான பாஸ்கரரின்எள்ளுத் தாத்தா முறை ஆவார்புல்லரிக்கிறது அல்வாமேலும்உங்களை புல்லரிக்க வைக்கும் பல செய்திகள் இந்தக்கானகத்தின் ஒவ்வொரு மில்லி மீட்டர் புற்களுக்கும் அடியில்மறைந்துள்ளது.


அந்த அற்புதங்களைப் பற்றி கேட்டாலே தானாக உங்கள்காதுகள் ஆடும்லேசர் ஒளிஹாலோ கிராம் என்றால் இன்றுநமக்குத் தெரியும்ஆனால் அன்று இன்ஸ்டாகிராம் என்றால்எத்தனை கிலோ கிராம் என்று கேட்கும் காலத்தில் டெலிகிராம்மோனோ கிராம்போன்றவை பரவலாக புழக்கத்தில் APP ஆகவே இருந்துள்ளதாம்.


இதை தீவிரமாக ஆராய்ந்து தெளிந்த ஜெர்மன் விஞ்ஞானிகள்இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியைக் கண்டு மிகப்புழுக்கத்தில் இருந்தனராம்இதை அவர்களோடு நல்லபழக்கத்தில் இருந்த ரஷ்ய விஞ்ஞானி ஒருவர் வழக்கம் போலகுறிப்பு ஒன்றிலே எழுதி வைத்ததால் இன்று இந்தஉண்மையானது இந்த உலகிற்கு தெரிய வந்துள்ளது


மேலும் சங்கோத்யாயா வனத்தில் பல இடங்களில் சிசிடிவிகாமிராக்கள் வைத்திருந்தாராம்காட்டில் யாரும் வழிதவறிவிடக் கூடாது என்பதற்காக ஜிபிஎஸ்சும் கண்டுபிடித்தாராம்இந்தக் காட்டின் ஜியான எனக்கு எல்லாம்தெரியும் இனி நீ பேசாமல் சரி என்று சொன்னால் போதும்என்பதே (GPS) ஜி.பிஎஸ்ஸின் முழுமையான அர்த்தம்என்கிறார்கள் சர்வதேச விஞ்ஞானிகள்.


55 கோடி ஆண்டுகளுக்கு முன்பே ஏரோநாட்டிக்ரோபோட்டிக்ஜெனிடிக் மற்றும் பொட்டிக் பற்றிய ஆராய்ச்சிகள் இங்குநடந்துள்ளதுஇதை நீங்கள் எப்பாடு பட்டேனும் நம்பியேஆகவேண்டும் என்று சங்கோத்யாயா கெஞ்சிக் கதறி அழுதுஎழுதி வைத்துள்ளார்தென்னை ஓலைகளில் ராக்கெட்செய்வதுசுட்ட களிமண்ணில் கம்ப்யூட்டர் கோரை புல்லில்ரோபோ போன்றவற்றை தயாரித்தாராம்


இதை எல்லாம் நாஸாவே அதிர்ந்து போய் அச்சம் அடைந்தஅட்டகாசமான கண்டுபிடிப்புகளாகும்ஒரு கட்டத்தில்க்ரையோஜெனிக் தொழில் நுட்பத்தை முழுமையாககண்டறிந்த சங்கோத்யா ஏதோ ஒரு கோபத்தில் அதை மறந்துவிட்டாராம்அது முதல் முறை அல்ல எனவும் இதே போல அவர்பல முறை சினத்தில் அந்த நுட்பத்தை மறந்ததாகவும்ஆய்வாளர்கள் கூறுகின்றனர்


அதே போல சங்கோத்யாயாவிடம் எடுபிடிவேலை செய்தஎங்காத்யாயா என்பவர் AI டெக்னாலஜியை அன்றேகண்டுபிடித்து அதில் உருவாக்கியது தான் டைனோசர்இனமென்று கூறுகிறார்கள்அன்று பூமியில் சிங்கம்புலியானை போன்ற மிருகங்கள் தோன்றி இருக்கவில்லைஅப்போது உலகில் உயிர் வாழ்ந்த ஒரே மிருகம் யாளி மட்டும்தான்


யாளியை வைத்தே சிங்கம்புலியானைஒட்டகம் முதலானஅனைத்து மிருகங்களையும் AI மூலம் கண்டுபிடித்தது கானகஅறிஞர் எங்காத்யாயா தான்இதற்காக அவருக்கு 56 லட்சம்ஏக்கரில் ஒரு ஆய்வுக் கூடம் அமைத்துத் தரப்பட்டதாம்இவர்காலத்தில் தான் பல விஞ்ஞான அற்புதங்கள் இங்கு நடந்ததாம்அதை அவர் புத்தகமாக எழுதி புற்களுக்கு அடியில் ஒளித்துவைத்துள்ளாராம்.


ஒரு நாள் அறிவியல் மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள கிழக்குதிசையில் பயணித்த சங்கோத்யாயா முதன் முதலில்சூரியனை கண்டு வியந்து போய் பத்து நிமிடத்தில்டெலஸ்கோப்பை கண்டுபிடித்துஅங்கேயே வானசாஸ்திரத்தில் பல கணக்குகளை போட்டு அதை சங்கோமொழியில் சுருக்கமாக எழுதி வைத்தாராம்அந்த மொழியில் ரே யா (ர்தும்கே ளிர்மே என்று எழுதியது தான்பின்னாளில் கணியன் பூங்குன்றனார்..


எழுதிய “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் பாடலுக்குஆதாரமாக இருந்தது என்றும்இதன் மூலம் சமஸ்கிருதத்தில்இருந்து தோன்றிய மொழியே தமிழ் என்பதும் புலனாகிறதுஅல்வாஆம் இந்த சங்கோத்யா காடு கண்ட அறிவியல்விஞ்ஞான முன்னேற்றங்களை அண்ட சாரசரங்கள் கூடவிளங்கிக் கொள்ள முடியாதது.


இப்போதும் சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சி செய்த இடத்தில்ஆழமாக நன்றாகத் தோண்டினால் சங்கோத்யா காடு பற்றியஇன்னும் பல சுவாரஸ்யமான விஞ்ஞானஅறிவியல்உண்மைகள் கிடைக்கலாம்உலகளவில் இதைப் பற்றிமுழுமையான விவரம் அறிந்த அறிஞர்கள் இப்போதுசத்தமேயின்றி ஒரு விஞ்ஞானக் குழு அமைத்து அந்த ஆய்வில்தான் அல்லும் பகலும் ஈடுபட்டுள்ளனர்


ஆம்என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்.. ஏன் கையைஏந்த வேண்டும் வெளிநாட்டில்.. விரைவில் உண்மைகள் வெளிவந்தே தீரும்நமது வேத காலத்து பண்டைய பழம்பெருமைகொண்ட சரஸ்வதி நதிக்கரை ஆராய்ச்சி அந்த சரித்திரஉண்மையைச் சொல்லும்.. பாரதம் வெல்லும் 💪🏾🚩