இவர் பெரும் விஞ்ஞானி! 19ம் நூற்றாண்டில் பிறந்த இவர் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தனது 76வது வயதில்மறைந்தார். சரி இவர் அப்படி என்ன கண்டுபிடித்தார்? அதைக்கண்டுபிடிக்கவே ஒரு நூற்றாண்டு ஆகலாம். ஆம் ஜி.டி நாயுடுஅவர்களுக்கே முன்னோடி தான் முனுசாமி ரெட்டி!
19ஆம் நூற்றாண்டில் இவர் கண்டுபிடித்த பல அரியகண்டுபிடிப்புகள் வெள்ளைக்காரர்கள் கண்டுபிடித்தாகஉலகிற்கு சொல்லப்பட்டது. ஆனால் இந்த உண்மை 125 ஆண்டுகள் கழித்தே கண்டுபிடிக்கப்பட்டது. அன்றையஸ்பெயின் பேரரசு இவரது சாதனையை அறிந்து வியந்தது.
முனீசை ஸ்பெயினின் அரச விருந்தினராக வரச் சொல்லிஅழைப்பு விடுத்தது. தனது உடலின் வெயின் முழுதும்கண்டுபிடிப்பு, கண்டுபிடிப்பு எனப் பெயினோடு உழைத்துக்கொண்டிருந்தவர் அன்று பெய்த ரெயினையும்பொருட்படுத்தாமல் விரைந்து வந்து ஸ்பெயினுக்கு கப்பல்ஏறினார்.
இவரை வரும் வழியிலேயே சோதிக்க விரும்பிய ஸ்பெயின்மன்னர் ஆப்பிரிக்காவின் கடல் வழியான நன்னம்பிக்கைமுனையை சுற்றாமல் உங்களால் ஸ்பெயினுக்கு வரமுடியுமாஎன்று சவால் விட்டார். முனுசாமியிடம் முடியுமா? அவர்நன்னம்பிக்கை முனையை தொடாமல் மிகுந்த..
தன்னம்பிக்கையோடு மொரீஷியஸ் மற்றும் மடகாஸ்கர் வழியேஆப்பிரிக்காவின் வலது புறமாக ஏறி ஐரோப்பாவை அடைந்துஅங்கிருந்து தரை வழியாக மெயில் மூலம் மாட்ரிட்டுக்குவந்தடைந்தார். அதிர்ச்சியில் கீழே விழுந்த மாட்ரிட் நகரமேஅவரை மல்லாந்து கிடந்து பார்த்தது.
பிறகு அவர் ஸ்பெயினில் இருந்த மூன்று மாதமும் தினமும் 3 கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துக் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் ஸ்பெயினில் தொலைந்த அனைத்தையுமே அவர்கண்டுபிடித்து தர இந்த ஆள் எப்போ போய்த் தொலைவானோஎன மொத்த ஸ்பெயின் தேசமும் ஏங்கியது.
ஒரு வழியாக அவர் கிளம்பும் நாள் வந்தது. கப்பல் தளத்திற்குநாடே திரண்டு வந்து அவரை வழியனுப்பியது. எங்கே அவர்கிளம்பாமல் இருந்துவிடுவாரோ என்ற பீதி மக்கள் முகத்தில்தெரிந்தது. கப்பல் கிளம்ப மக்களும் மன்னரும் விட்ட பெருமூச்சு 100 நாட்டிக்கல் மைல் தூரம் கப்பலை கடலுக்குள்தள்ளியது.
பிரிட்டிஷ் அரசு இப்போது “ஐரோப்பா வந்தது தான் வந்துட்டிங்கஎங்க கண்டுபிடிப்புகளை வாங்க.. நீங்க இங்கிலாந்துக்கும்வாங்க என்று ஜுவல்லரி விளம்பரம் போல அழைக்க முனுசாமிஅதை மறுத்தார். விளைவு ஆத்திரத்தில் முனுசாமி வந்தகப்பலை தாக்கி அழிக்க உத்தரவிட்டனர்.
ஆப்பிரிக்க வருவதற்குள் அவர் கப்பலை தாக்க கப்பல் உடைந்துஅனைவரும் கடலில் மூழ்கினர் அப்போது அங்கிருந்த நீலத்திமிங்கலக் கூட்டம் அனைவரையும் விழுங்கியது. ஆனால்அவை ஒன்று கூட அய்யா முனுசாமி ரெட்டியின் சுண்டுவிரலைக் கூட சீண்டவில்லை.! ஏன் தெரியுமா?
அய்யா அவர்கள் கடலில் குதித்த போது நீலத்திமிங்கலங்களைப் பார்த்தார். ஒரு நன்கு வளர்ந்த நீலத்திமிங்கலத்தின் முதுகின் மேல் ஒன்றன்பின் ஒன்றாக ஒன்பதுயானைகளை நிற்க வைக்க முடியும் என்ற அறிவியல் உண்மைநினைவுக்கு வர அதில் ஒரு திமிங்கலத்திடம் கேட்டாராம்..
உங்க பேரு நீலத் திமிங்கலம்னு நினைச்சேன் ஆனா நீங்கநீளத் திமிங்கலம் தானே என்றதும் மாரடைப்பில் சிலதிமிங்கலங்கள் இறக்க, தப்பிய திமிங்கலங்கள் இவரை விட்டுவிலகி உசேன் போல்ட் வேகத்தில் நீந்திச் சென்றன. தனதுகண்டு பிடிப்பு குணம் தான் தன்னைக் காப்பாற்றியது என
அதையும் அய்யா கண்டுபிடித்தார். ஒரு வழியாக இறந்துமிதந்த திமிங்கலங்களின் உடலை பிடித்தபடி நீந்தி வந்தே கரைஒதுங்கினார். இவர் தான் முனுசாமி ரெட்டி என்பதைகண்டறிந்த கரையோர மக்கள் அவரை காண்டோடுஇந்தியாவுக்கு உடனே அனுப்பி வைத்தனராம்.
🚩 💪🏾 ஜெய் முக்காமாலா முனுசாமிரெட்டி 💪🏾🚩
டிஸ்கி : பழம்பெரும் நடிகர் எஸ்.வி.ரங்காராவ் இவரது பேரன்தான்.



