Friday, 8 May 2026

​#19வது_நாள்_போர்



குருஷேத்திரப் போர் நிறைந்த மறுநாள்! அதிகாலையில் எழுந்துவிட்டார் கிருஷ்ணர், இன்றைக்கு பாஞ்சஜன்யம் ஒலிக்க வேண்டியதில்லை என்பதால் அதை அவர் படுக்கை அறைக்கே கொண்டு வரவில்லை. பாமாவும் ருக்மிணியும் சமையல் அறையில் சண்டையிட்ட சத்தம் காற்றில் ஒலித்தது.


காலை உணவாக இட்லியும், தக்காளி சட்னியும் என்ற பாமாவின் கருத்தை மறுத்து பொங்கலும், தேங்காய் சட்னியும் தான் என்று ருக்மிணி வாதம் செய்து மோத.. கிடைத்த இடை வெளியில் கோகுலப் பசுக்களிடம் கறந்த பாலில் ஸ்டிராங் காபி போட்டு தந்த ராதை கிருஷ்ணரின் மனதை வென்றாள்! 


பத்து சிங்கங்களின் கர்ஜனை போல சேர்ந்திசையாக ஒலித்த பீமனின் குறட்டைச் சத்தம் ஊர் எல்லை வரை எதிரொலிக்க அர்ஜுனன் அறையில் ஒலித்த பெண்ணின் சிணுங்கல்கள் அதில் அடங்கிப் போனது! தர்மரின் அறை முன்பு நியாயம் கேட்டு போரில் உயிரிழந்தவர்களின் கூட்டம் அமர்ந்திருந்தது.


குதிரை லாயத்திலிருந்த குதிரைகள் மகிழ்வோடு கனைக்க அவற்றோடு அன்புடன் குதிரைகள்  மொழியில் பேசியபடி  தீவனம் கொடுத்துக் கொண்டிருந்தான் நகுலன்!  சகுனியின் பகடைகளை சுக்கு நூறாக நொறுக்கிவிட்டு தர்மர் முடிசூட நல்ல நாளை கணித்துக் கொண்டிருந்தான் சகாதேவன்.


கர்ணன் இறந்த சோகத்தில் இருந்து இன்னும் மீளாத குந்தி மாளிகையின் ஓரமாக குந்தியிருக்க, பாண்டு குதுகலத்தில் இருந்தார். கண்களைக் கட்டி இவை எதையும் பார்க்காத காந்தாரியும், பார்வையற்ற திருதராட்டிரரும் வேறு வழியின்றி தனது தம்பி மகன்களின் வெற்றியை போற்றினர்.


பீஷ்மரும், துரோணரும், சகுனியும் இல்லாத காரணத்தால் வேறு வழியின்றி தர்மர் சொல்வதே தர்மம் என்ற நிலை உருவாகியிருந்தது! போர் முடிந்த மறுநாள் இத்தனையும்  சத்தமின்றி நடந்து கொண்டிருக்க, குருஷேத்திரப் போர் இன்னும் முடிவடையவில்லை இன்றும் தொடர்கிறது..


கிருஷ்ணரின் புதிய பறக்கும் தேர்.. கெளரவர்கள் அச்சம்! ஒரே நேரத்தில் 100 அம்புகள் விடும் அர்ஜூனனின் புதிய வில்! கர்ணனின் குலை நடுக்கம்.. பாண்டவர்களின் புதிய போர் தந்திரங்கள் வகுத்துக் கொடுத்தது யார்? துரோணாச்சாரியார் பீதி.. பீமனிடம் 500 கிலோ பேரழிவு கதாயுதம்..


போன்ற போர் செய்திகள் அஸ்தினாபுரமெங்கும் பரவியது! தாக்குதலில் அர்ஜூனன் உயிருக்குப் போராடுகிறார் என்ற செய்தியை அர்ஜூனனே படித்துக் குழம்பினார். பீமனை உணவு அறையில் சிறை வைத்ததாக ஒரு தகவல்! தர்மரை நிராயுதபாணியாக நிறுத்தியது கெளரவர்களின் இராணுவம்! 


இது போன்ற தகவல்களாலும் குழம்பிய பஞ்ச பாண்டவர்களும் இதற்கு விளக்கமளிக்க கீதை சொன்ன கண்ணன் தான் சரியானவன் என்றெண்ணி அவரது மாளிகையை நோக்கி விரைந்தனர். ராதையின் ஸ்டிராங்கான காபியையும், பாமா தந்த இட்லியையும் மீறி ருக்மிணி செய்த பொங்கலால்..


கிட்டத்தட்ட மூர்ச்சையானது போல உதட்டில் மோகனப் புன்னகையுடன் நித்திரையில் ஆழ்ந்திருந்தார் கண்ணன். பேரானந்தத் தூக்கத்தில் இருந்த கண்ணனைப் பார்த்ததும் வழக்கம் போல அர்ஜூனன் கால்மாட்டில் அமர, அடேய் தம்பி  இப்போது நாம் போருக்கு உதவி கேட்டு வரவில்லை புரியுதா?


தர்மரான நான் தான் அங்கே அமரவேண்டும் என்றதும் வெட்கித் தலை குனிந்து அர்ஜூனன் எழ தர்மர் அமர்ந்தார். போர் தான் முடிந்துவிட்டதே அவர் 18நாட்கள் ஓயாது போரிட்டு.. போதா குறைக்கு வண்டி வண்டியாய் உங்களுக்கு கீதோபதேசம் சொல்லிய களைப்பில் ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறார்.


தயவுசெய்து அவரை தொட்டு எழுப்பாதீர்கள் என்றனர் பாமாவும் ருக்மிணியும்! கண்ணனின் ஆனந்த சயனத்தை பார்த்தால் அவர் பல மாதங்கள் தூங்குவார் போல தர்மருக்குத் தெரிந்தது! அவர்.. பாற் கடலில் பள்ளிக் கொண்ட பெருமாளின் அவதாரம், நித்திரையில் முத்திரை பதித்த கடவுள் அல்லவா! 


கிருஷ்ணரை எப்படி எழுப்ப என தர்மர் தர்மசங்கடத்தில் விழிக்க, மனைவிகள் பாமா, ருக்மிணியை தாண்டி அவரது பெஸ்டியான ராதை இங்கு உதவிக்கு வந்தார். வெண்ணெய்யை உருக்குங்கள் அந்த வாசனையில் எழுந்துவிடுவார் என்றார். ஆஹா! அது பாலகோபாலனின் பால்ய காலத்து பால் திருட்டு! 


வெண்ணெய் உருகியதும் கண்ணைத் திறந்தார் கண்ணன்! பஞ்ச பாண்டவர்களும் அவரது பாதம் பணிந்து நிற்பதைப் பார்த்து ‘அட நீங்களெல்லாம் ஓய்வெடுக்கவில்லையா’ என்றார். போர் முடிந்தும் போர் நடப்பதாக வரும் தகவல்களைப் பற்றிச் சொன்னார் தர்மர்! கண்ணன் கலகலவென நகைத்தார்!


தர்மா! இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை! இந்தத் தகவல்களை பரப்புவது நமது சங்கத்து தீவிர ஆதரவாளர்களே! நாமே போரை நிறுத்தினாலும் அவர்கள் நிறுத்தமாட்டார்கள்! போர் பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் போர் நடக்கிறது என்பார்கள்! நாம் எதைச் சொன்னாலும் கண் மூடி அப்படியே ஏற்பார்கள்! 


பாஞ்சஜன்ய சங்கு ஒலித்து நாம் போர் துவங்குவோம் என்பது மட்டும் தான் நமது சங்கத்தார்க்கு நன்கு தெரியும்! அவர்களுக்கு வேறு ஒன்றுமே தெரியாது! நம் சங்கு சத்தம் ஓய்ந்தாலும் நமது சங்கத்தார் சத்தம் ஓயாது! இது பெருமைக்காக பரப்பும் தகவல்கள் அதைக் கேட்டு குழம்ப வேண்டாம் என்றார்..


“ஓ!! இது சங்கத்தார் போடும் சங்கிச் சத்தமா” என்றார் அர்ஜூனர்..


அனைவரும் ‘கொல்’லென்று சிரித்தனர்…  கிழக்கு வானில் கதிரவன் உதித்தது 🩷


Tuesday, 5 May 2026

சாரணர் காலம்

#பீச்சே_மூட் 


நான்காம் வகுப்பில் பயிலும் போது பள்ளியில் ஸ்கவுட் என்றசாரணர் இயக்கத்தில் சேர ஆசிரியர்கள் பரிந்துரைத்ததில்எனது பெயரும் இருந்தது. 10 வயது வரை குருளையர் (ஸ்கப்என்றும் அதற்கு மேல் சாரணர் (ஸ்கவுட்என்றும் நமது நிலைஉயரும்


நான் ஸ்கவுட்டில் சேர முதல் காரணம் அந்த காக்கிச் சீருடைவெள்ளைச் சட்டைநீல டவுசர் என தினமும் அணியும் பள்ளிச்சீருடைக்கு மத்தியில் காக்கி உடை அழகாகத் தெரிந்ததுகழுத்தில் கட்டும் ஸ்கார்ப்அதற்கான வோகுல்தொப்பிஅந்தமஞ்சள் நிற துணி பெல்ட்..


(அனைத்திலும் ஸ்கவுட் சிம்பல்பிரவுன் கேன்வாஸ் ஷு எனஅனைத்தும் ஒரு போலீஸ் சீருடை போலவே இருக்கும்எனதுவகுப்பாசிரியர் திருஅர்ஜுனன் அவர்கள் தான் எங்கள் ஸ்கவுட்ஆசிரியரும் கூடஅவருடன் இராமலிங்கம் சார் ஸ்கப்பிற்குஆசிரியர்


சாரணர் இயக்க வரலாறு அதன் நிறுவனர் பேடன் பவுல் பற்றியஅரிச்சுவடியை ஆரம்பித்து பிறகு சாரணர் சின்னம்சாரணர்கொடி பாடல்கள் இந்தி மற்றும் தமிழில் பாடப்படும்இராமலிங்கம் சாரின் ஸ்கப்பில் இருந்த போது நிறையபாடல்கள்விளையாட்டுகள் சொல்லித் தருவார்


முட்டையிலிருந்து வரும் போது முட்டையிலிருந்து வரும்போது என்ன தான் சொல்லிச்சாம் கோழிக் குஞ்சு” பாடல்துவங்கி “இந்தப் பெட்டி தெரியுமாதெரியுமாமுத்தில் செய்தபெட்டியும் இதுதான்இதுதான்”.. இந்த ரொட்டித் தெரியுமாதெரியுமா


முத்தில் செய்த பெட்டியில் வைத்த நல்ல ரொட்டியும் இதுதான்இதுதான்.. இந்த எலி தெரியுமாதெரியுமாமுத்தில் செய்தபெட்டியில் வைத்த நல்ல ரொட்டியை தினம் தின்ற எலியும்இதுதான்இதுதான்எனப் பாடும் இந்தப் பாடல் நம் ஞாபகம்சக்தியை வலுப்படுத்தும் பாடல்.


பெட்டிரொட்டிஎலிபூனைநாய்பசு என தொடர்ந்து இதைவரிசையாக நினைவில் வைத்துப் பாடவேண்டும் 45 ஆண்டுகள் கடந்து இப்போதும் முழுதாக இந்தப் பாடல் என்நினைவில் இருக்க இந்தப் பாடலைப் பாடி கிடைத்த பயிற்சியேகாரணம். “தவளைகளாம்தவளைகளாம் தஞ்சாவூருதவளைகளாம்


பரம்பொருள் ஞான பக்தி தா பரமேஸ்வரனே தூய்மை தா” (தயாக்கர் தான்போன்ற பாடல்கள் எனக்கு நன்றாகநினைவில் இருக்கிறதுஸ்கப் பீரியட் வாரம் 2 தினங்கள்இருக்கும்பள்ளி முழுவதும் வெள்ளைநீலச் சீருடையில்இருக்கஎலுமிச்சை பழங்களின் குவியலில் வைத்த ஆப்பிள்போல நாங்கள் தனித்து தெரிவோம்


ஸ்கப்பில் பாடல்விளையாட்டு என்று கழிந்த காலம் சாரணர்ஆன பின்புவிதவிதமான முடிச்சுகள்கூடாரம் அமைத்தல்தோட்ட வேலைசிறு சிறு மெக்கானிக் வேலைகள் என்றுசொல்லித் தந்தனர்ஸ்கவுட் சல்யூட் (மூன்று விரல்ஸ்கவுட்கிளாப்ஸ் போன்றவை மிகுந்த சுவாரஸ்யமான பயிற்சிகளாகஇருந்தன.


ஸ்கவுட் கேம்ப் என்று எங்களை சேஷன் சாவடிகந்தாஸ்ரமம்குமரகிரி போன்ற குட்டி மலைகளுக்கு அழைத்துச் சென்றுபயிற்சி அளிப்பார்கள்அப்போது தரப்படும் பொட்டல உணவுகள்மிக அற்புதமாக இருக்கும்காலையில் சுடச்சுட இட்லி & உப்புமாவை வாழையிலை வைத்து பொட்டலம் கட்டி எடுத்துவந்து தருவார்கள்.


அபார சூட்டில் வாழை இலையோடு வெந்து மணக்க மணக்கஇருக்கும்அதற்கு தரப்படும் சாம்பாரும் சட்னியும் அத்தனைஅற்புதமாக இருக்கும்மதியம் இதே போல எலுமிச்சை சாதம்தயிர் சாதம் போன்றவை இலை மணத்துடன் கிடைக்கும்இந்தஉணவுக்காகவே விரும்பி ஸ்கவுட் கேம்ப் வந்தவர்களும்உண்டு


இதன் தொடர்ச்சியாக 9ஆம் வகுப்பில் NCCயில் சேர்ந்தேன்அந்த அனுபவங்கள் தனிஆனாலும் அதிகாலையில் எழுந்துவந்து ரைட் டர்ன்லெஃப்ட் டர்ன்மார்ச்என டிரில் வாங்கிவியர்க்க விறுவிறுக்க கிரவுண்டில் பயிற்சி முடிக்கும் போதுசைக்கிள் ரிக்‌ஷாவில் எங்கள் காலை உணவு அட்டைப் பெட்டிவந்திறங்கும்.


NCC மாஸ்டர் அபவுட் டர்ன் சொல்லும் முன்பே நாங்கள் டர்ன்அடிக்க காத்திருப்போம்பட்டாலியன் டிஸ்போஸ் என்றகமெண்ட் ஒலித்த அடுத்த மைக்ரோ விநாடி கை கழுவும்இடத்திலிருப்போம் பந்தி போல வரிசையாக கீழே நாங்கள்அமர எங்கள் பொட்டலம் விநியோகிப்படும்பார்சலின் சூடேஎங்கள் பசியைத் தூண்டும்.


செல்வம் & பத்ரி இருவரும் தான் சாம்பார்சட்னி ஊற்றும்பணியாளர்கள்சில சமயம் நானும்கண்ணனும் இந்தபணியைச் செய்வோம்ஆகவே மற்றவர்களை காட்டிலும்எங்களுக்கு சற்று தாராளமாக அவை கிடைக்கும். NCCயில்துப்பாக்கி சுடும் பயிற்சி இருக்கும் நாளில் ஒரு பொட்டல உணவுநம் பசிக்கு பற்றாது.


அன்றைக்கு மட்டும் 2 பொட்டலங்கள் ஆர்டர் செய்திருப்பார்கள்இட்லிபொங்கலாஇட்லிபூரியாஉப்புமாபூரியாஎன்றுஎங்களுக்குள் பந்தயம் நடக்கும்ஜெயித்தால் 1 இட்லி அல்லதுபூரி வெல்வோம்இது போன்ற உணவுகளை சமைக்கவும்கற்றுக் கொண்டது எனது ஸ்கவுட்& NCC பயிற்சிகளுக்குஇணையானது


மல்லூரில் நடந்த 3 நாட்கள் NCC கேம்ப் தான் என்னை முழுநேர மேடைக் கலைஞனாக மாற்றியதுஅந்த மூன்று தினங்கள்என் வாழ்வின் இன்றைய இந்த நிலைக்கு உயர்த்திய மிகமுக்கியமான தினங்களாகும்வாழ்க்கை சீராக நேர்க்கோட்டில்சென்றாலும் அவ்வப்போது அதை திரும்பி நின்று பார்ப்பதும்ஒரு இன்பம் தானே..


அதான் சொல்றேன் “பீச்சே மூட்