Wednesday, 22 October 2025

#ஜுராசிக்_விரதம் 


இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் பக்திப் படங்கள் வருவதே இல்லை. அவை தினசரி சீரியல்கள் பக்கம் கரை ஒதுங்கி விட்டன. கே.பி.சுந்தராம்பாள் காலத்து பக்தி படங்கள், பிறகு சிவாஜி & APN கூட்டணி, தேவர் பிலிம்ஸ், பக்திப்படப் புகழ் இயக்குநர் சங்கர், KSG,ஜெகதீசன், இராமநாராயணன் போன்ற இயக்குநர்கள் இதில் குறிப்பிடத் தகுந்தவர்கள்.


ஆனால் இவர்கள் காலத்தில் எடுக்கப்பட்டதைவிட இன்றைய காலம் தான் பக்திப்படங்கள் எடுக்க சரியான காலம். ஏனெனில் CG, VFH தொழில்நுட்பங்களை தாண்டி AI கோலோச்சும் காலம் இது நினைத்தால் அந்த கே.பி சுந்தராம்பாளையே இப்படங்களில் நடிக்க வைக்க முடியும். AI தொழில்நுட்பமும் பெரும் பொருட் செலவுகளைத் தராது. 


தேவர் & இராமநாராயணன் பாணியில் யானை, ஆடு, பாம்பு, நாய் போன்ற மிருகங்களை வைத்து படம் எடுப்பதும் கடினம். ஏனென்றால் நீலக் கூட்டல் குறி அமைப்பினர் விதிக்கும் நிபந்தனைகளும், கெடுபிடிகளும் அப்படி, AIயில் இந்தப் பிரச்சனைகள் ஏதும் இல்லை. இந்த AI டெக்னாலஜியில் டைனோசர்களை வைத்து ஒரு பக்திப்படம் எடுக்க என் கதை..


“ஜுராசிக் மங்கலம்” சத்தியமங்கலம் வனப்பகுதியில் அமைந்துள்ள மலை கிராமம். 


இந்த வனப்பகுதியில் ஏராளமான டைனோசர்கள், மற்றும் அவற்றின் இனங்களான டைரொனோசர்கள், அந்த இனத்துப் பறவைகளான ராப்டர்கள்தியோபரோட்டுகள்ப்ராச்சோஸரஸ்அபோடோசரஸ் மற்றும் டிப்ளோடோகஸ்போன்ற உயிரினங்கள் பக்தியுடன் வாழ்ந்து வந்தன


இந்த இடத்தை அரசாங்கம் ‘டைனோசர் ரிசர்வ் ஃபாரஸ்டாக’ அறிவித்திருந்தது. மேலும் காட்டின் நடுவே ஒரு வன பத்திரர் ஆலயமும் அமைந்திருந்தது. ஒவ்வொரு மாசி மாத கடைசி அமாவாசையன்று இங்கு ஒரு திருவிழா நடக்கும். அச்சமயம் அங்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதியில்லை. முழுக்க முழுக்க டைனாஸர்கள் மட்டுமே வழிபடும் திருவிழா இது.


அச்சமயம் டைனோசர்கள் அங்கப் பிரதட்சணம் செய்யும் டைரொனோசர்கள்மண் சோறு சாப்பிடும்ப்ரோச்சோஸரஸ்கள் அலகு குத்தி காவடி எடுத்து டும் அபோடோசரஸ் தீ மிதிக்க பூக்குழி இறங்கும். அந்த தினம் முழுவதும் அங்கே விழா சீரும் சிறப்புமாக நடைபெறும். இதை விடியோவாக எடுத்து யூடியூபில் அப்லோடு செய்ய..


ஒரு சதிகார கும்பல் முடிவு செய்கிறது. திடீரென காட்டில் ஒரு விநாயகர் கோவில் துவங்குகிறது வனபத்திரரை வழி பட்ட டைனோசர்கள் புதுக் கோவிலை கண்டு குழப்பம் அடைந்தாலும் அதையும் பயபக்தியோடு வணங்குகிறது. டைனோசர்களின் மாசி விழா போலவே வன கணபதி ஜெயந்தி என்று ஒரு விழாவே உருவாக்கப்படுகிறது.


மக்கள் அந்தக் காடு நோக்கி படையெடுக்க வனப்பகுதியில் ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் கட்டப்படுகின்றன. டைனாஸரின் வாழ்விடங்கள், வழித்தடங்கள் ஆக்ரமிக்கப்படுகின்றன. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது, மரங்கள் வெட்டப்படுகின்றன டைனோசர் இனங்கள் மடிகின்றன. அமைதியாக வளமாக இருந்த காடு பொலிவிழந்து சுடுகாடாக மாறுகிறது.


டைனோசர்கள் கூடி வன பத்திரர் ஆலயத்திற்கு சென்று மனமுருகி வேண்டுகின்றன. இந்த மனிதக் கூட்டத்திடம் இருந்து எங்களை காப்பீர் என்று மன்றாடி பாடுகின்றன. என்ன ஆச்சரியம்! மறுநாள் காலை அந்த காட்டிற்கு டைனோசர்களின் வன வாழ்வியல் குறித்து பலவித ஆராய்ச்சிகளை செய்து வரும் ஒரு குழுவினர் வருகின்றனர். 


அதன் தலைவர் விஞ்ஞானி “வெங்கட பத்திரன்” அவர் அந்த ஜுராசிக் மங்கலத்தில் பிறந்தவர் தான். அவர் குலதெய்வமும் அந்த வனபத்திரர் தான்! டைனோசர்கள் அக மகிழந்தன. தம் வேண்டுதலுக்கு செவி சாய்த்த வனபத்திரரை போற்றி கர்ஜித்தன. விஞ்ஞானி காடு முழுதும் சுற்றுகிறார் வழியில் மயங்கி கிடக்கும் டைனோசர்களை காப்பாற்றுகிறார்.


மேலும் டைனோக்களை பசியும் தாகமும் தாங்க, வாரா வாரம் வெள்ளிக்கிழமை தோறும் விரதம் இருக்க பழக்குகிறார். டைனோக்களும் சரியானபடி விரதத்தைப் பழகி குறைந்த அளவு நீரிலும், குறைவான உணவிலும் நிறைவாக வாழத் துவங்கின, டைனோசர்கள் வனபத்திரருக்கு இணையாக விஞ்ஞானி வெங்கட பத்திரரை வணங்க ஆரம்பித்தன. 


தற்செயலாக எதிரிகள் மாசி விழாவை படம் பிடிக்க காட்டில் பல இடங்களில் பொருத்தியிருந்த காமிராக்களை இந்த விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்து அதை அகற்றுகின்றனர். கொதித்து போன எதிரிகள் காட்டில் ஒரு ‘கஜேந்திர ஆதரவாளர்கள் மாநாடு’ என்று தேதி அறிவிக்கிறார்கள்.


முன்னைவிட பெருங்கூட்டம் காட்டிற்கு வரும் என்று கணித்த விஞ்ஞானி வெங்கட பத்திரர் உடனடியாக வனபத்திரர் ஆலயத்தின் அருகே முகாமிடுகிறார்! இந்த கூட்டத்தின் ஆட்டத்தை நிறுத்த அவர் என்ன செய்தார்? அவரது திட்டம் என்ன? டைனோசர்கள்  எப்படி அவருக்கு உதவின? அனைத்தையும் வெண் திரையில் காண்பீர்..


வீர வனபத்திரா.. வெற்றி வனபத்திரா.. 

பத்திரா பப்பா மோர்யா.. 

No comments:

Post a Comment