நான்கு தலைமுறைகளை வசப்படுத்திய புன்னகைப்பூவே
திரையுலகில் நல்லநேரம் என்றும் உன் பின்தொடர்கிறது
கலைத்தாயின் பேர் சொல்லும் பிள்ளை நீ..உனை வாழ்த்த
பார்க்கலாமா நதிமூலம் ரிஷிமூலம்.. உன்னை நிழலில் மட்டும்
யானை மாலையிட்டு அரசியாக்கவில்லை நிஜத்திலும் அதுவே!
ஏனெனில் உன்னை ஜெயிக்க வைக்க கலைவாணியே எடுத்த
சரஸ்வதி சபதம் அது.! கற்பக விருட்சமாய் உன் புகழ் சிறக்கும்
என்பதால் தான் நீ கற்பகத்தில் அறிமுகமானாய்.. உன் நடிப்பும்
உன் புன்னகையும் என்றும் வாடாத இரு மலர்கள்.. திரையுலகிற்கு
அன்னை வேளாங்கண்ணி என்றாலும் தசாவதார பாத்திமா என்றாலும்
அம்மன் வேடம் என்றாலும் எல்லா மதத்திற்கும் கை கொடுத்த தெய்வம் நீ
கந்தன் கருணை ஆனாலும் திருமால் பெருமை ஆனாலும் உனக்கும்
அதில் ஒரு இணையில்லா பங்குண்டு நடிகர்களை தெய்வமாக ரசிகன்
பார்க்கலாம்.. ஆனால் நீ தெய்வமாகவே நடிக்கப் பிறந்தவள்.! நீ திரையில்
திரிசூலம் ஏந்தி தோன்றிய போது கும்பிட்ட கரங்கள் தான் எத்தனை.!
நிஜத்திலும் நான் ஏன் பிறந்தேன் என்றுணர்ந்து நான் வாழ வைப்பேன் என
பலருக்கு உதவும் உத்தமி நீ... மொழி கடந்து உன் ரசிகர்கள் ஒன்றுபடுவதும்
ஒரு பாரத விலாஸ் தான்.! நீ வாழும் பட்டணத்தில் பூதம் இருந்தாலும் அதுவும்
உன் ரசிகனாகவே மாறியிருக்கும்.. அல்லது அது சொர்க்கம் ஆகியிருக்கும்.!
திரையுலகின் தெய்வமே புன்னகை செல்வமே உன் பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்
இவ்வாழ்த்தை நீ எடுத்துக் கொண்டால் அதுவே எனக்கு கிடைத்த..
தங்கப்பதக்கம்..
No comments:
Post a Comment