Thursday 28 January 2016
கஸாலி..
Tuesday 19 January 2016
பொருட்காட்சியும் மனசாட்சியும்...
Friday 15 January 2016
ஸ்பானிஷ் லீகில் இந்தியா..
Wednesday 13 January 2016
30. வங்கக் கடல்...
29. சிற்றம் சிறுகாலே...
Tuesday 12 January 2016
28. கறவைகள் பின்சென்று...
Monday 11 January 2016
27. கூடாரை வெல்லும்...
Sunday 10 January 2016
26. மாலே மணிவண்ணா...
Saturday 9 January 2016
25. ஒருத்தி மகனாய்...
Friday 8 January 2016
24. அன்று இவ்வுலகம்...
Thursday 7 January 2016
23. மாரி மலைமுழைஞ்சில்...
Wednesday 6 January 2016
22. அங்கண்மா ஞாலத்து...
Tuesday 5 January 2016
21. ஏற்ற கலங்கள்...
#ஆண்டாள்_பெருமை
கறந்தபால் அடுப்பின்றி பொங்குமா? பொங்கும் என்கிறார் ஆண்டாள். வழக்கம் போல கண்ணனுக்கு இக்காலத்து அரசியல் தலைவர்களுக்கு ப்ளக்ஸ், பேனர், போஸ்டர், ஆர்ச்சில் கொடுக்கும் அடை மொழி போல் அவர் காலத்து வாசகங்களுடன் போற்றிப் பாடிப் புகழ்ந்து எழுப்புகிறார்.
19ஆம் நாள் 20ஆம் நாள் ஆகிய இரண்டு நாட்களும் பாடிய பாசுரங்கள் கேட்டு கண்ணன் எழுந்திருக்கவில்லை.. இப்போது என்ன செய்வது? சரண்டர் தானே! அதையும் அழகான உவமையுடன் சொல்லி ஆண்டாள் அடையும் சரணாகதியைப் பாருங்கள்.
பசுவிடம் இருந்து பால் கறக்கும் போது அதன் மடியில் இருந்து பாத்திரத்தின் அடியில் விழும் பால் வேகமாக மேலேறி பொங்குகிறது.. (இந்த உவமை நியூட்டனின் விதியை நினைவு படுத்துகிறது)அப்படியென்றால் எவ்வளவு பால்வளம்! எவ்வளவு ஆரோக்கியமான பசுக்கள். இதுபோல பல பசுக்கள் வைத்திருக்கும் நந்தகோபரின் மகனே.
உலகை காப்பவனே, பெரிய மனிதனே, அவதாரப் புருஷனே,ஒளிவடிவனே, நீ தூங்கலாமா? உன் எதிரிகள் கூட உன் பலம் அறிந்து உன்னுடன் மோத பயந்து உன் வாசல் வந்து காத்திருப்பது போல அடியவர்கள் நாங்களும் உன் வாசலில் வந்து உன்னைப் புகழ்ந்து பாட காத்து நிற்கின்றோம்.. நீ எழுந்து எமக்கு அருள் புரிவாய்.
ஆண்டாள் கோபமாய், தாபமாய், செல்லமாய், காதலாய், ஊடலாய் கண்ணனைப் பாடுபவர். எதற்கும் மசியவில்லை என்றால் படாரென்று கண்ணனின் காலில் விழுந்துவிடுவாள்.. அவள் ஆதாயத்திற்காகவும் பதவிக்காகவும் இன்றைய அமைச்சர்கள் போல் காலில் விழுபவள் அல்ல.. கண்ணன் மேல் காதலில் விழுந்தவள்.
மார்கழி 21 ஆம் நாள் பாடல்...
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண்
ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.
Monday 4 January 2016
20. முப்பத்து மூவர்...
Sunday 3 January 2016
திருப்பாவை 2015 -16
திருப்பாவை..
1. மார்கழித் திங்கள்..
#ஆண்டாள்_பெருமை
ஒரே வார்த்தையில் பல விஷயங்களை சொல்லிவிடுவார்கள் சிலர். ஆண்டாளும் அப்படியே நிலா சூரியன் மேகம் மூன்றுமே கண்ணன் ஒருவனே என்கிறார்.. கார்மேக வண்ணமும் சூரியன் போல சூடும் நிலா போல் குளிர்ச்சியும் ஒன்றாக உடையவன் என்கிறார்.. மார்கழி மாதத்து நிறை நிலா நன்னாளில் நீராடச் செல்வோம்
ஆயர்குல செல்வப் பெண்களே கூரான வேலினால் கொடுமையை அழிக்கும் நந்தகோபனும் அழகிய கண்ணுள்ள யசோதையும் வளர்த்த இளம் சிங்கம் கார்மேகவண்ண சூரிய சந்திரன் போல முகமுடைய கண்ணன் நமக்கு பறை தந்து அருள்வான் உலகமே அவனை புகழும்படி பாடிடுவோம் வாருங்கள்.
இந்தப் பாடலில் ஏரார்ந்த கண்ணி என்று அழகான கண் உடையவள் என யசோதையையும் வர்ணிக்கிறார்.. உலகில் மாமியாரின் அழகை வர்ணித்த ஒரே பெண் ஆண்டாளாகத் தான் இருக்க முடியும்.. சரிதானே!
மார்கழி 1ஆம் நாள் பாடல்..
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.
2. வையத்து வாழ்வீர்காள்...
#ஆண்டாள்_பெருமை
Universal என்னும் வார்த்தைக்கு உலகெங்கும் பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வதில் காட்டும் அக்கறையை உதாரணமாகச் சொல்லலாம்.பெண்கள் மேக்கப் போட உடை மாற்றி கிளம்ப ஆகும் நேரம் இதையெல்லாம் கிண்டலடித்து துணுக்குகள் படித்திருப்போம்.
இன்று பல வீடுகளிகளில் அழகு சாதனப் பொருட்கள் அத்யாவசியப் பொருட்களாகி விட்டன. மாதம் சில பல ஆயிரங்கள் அதற்குச் செலவும் ஆகிறது. ஆனால் அதிகாலை எழுந்து குளித்துவிட்டு அதன் பின் கண்ணில் மையிட்டுக் கொள்வதில்லை தலையில் பூச்சூடிக் கொள்வதில்லை என எந்தப் பெண்ணும் சொல்வாளோ..!!
பாவை நோன்பு என்னும் விரதத்தை கடைபிடிக்கும் ஆண்டாள் சொல்கிறார். நெய் உண்ணோம் பால் உண்ணோம் என சாப்பாடும் விஷயத்தில் மட்டும் விரதம் இருப்பது பெரிதல்ல.தீய சொற்கள் பேசாதிருப்பது பெரிதல்ல.. தான தருமங்கள் செய்வது பெரிதல்ல..
செய்யக் கூடாததை செய்யாமல் இருப்பது பெரிதல்லபெண்ணின் இயல்பான அலங்கரிக்கும் குணத்தையும் அந்த மாலவனுக்கு அர்ப்பணிப்பது தான் பெரிது.. அதுவே இந்நோன்பின் நோக்கம் என்னும் போது கண்ணன் மேல் ஆண்டாள் கொண்ட அளவிலா நேசம் புரியும்.
மார்கழி 2ஆம் நாள் பாடல் :
வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
3. ஓங்கி உலகளந்த...
#ஆண்டாள்_பெருமை
சினிமாவில் மாண்டாஜ் ஷாட்டுகள் என்னும் ஒரு வகை உண்டு.. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத வெவ்வேறு காட்சிகள் ஆனால் அனைத்தும் அது தொடர்பானவை.
உதாரணமாக முதல்வன் திரைப்படத்தில் ஒரு நாள் முதல்வராக அர்ஜுன் இருந்துவிட்ட பின் நாடெங்கும் வெவ்வேறு ஊர்களில் மக்கள் அவரது ஆட்சியின் சிறப்பைப் பற்றி டிவியில் கூறுவார்கள். இது மாண்டாஜில் ஒரு வகை.
பாலுமகேந்திரா மணிரத்னம் படங்களில் மாண்டாஜ் காட்சிகள் பாடலில் இடம் பெறும் கலைஞன் படத்தில் வரும் எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா பாடல் மாண்டாஜுக்கு நல்ல உதாரணம். இந்த மாண்டாஜ் உத்தியை ஆண்டாளும் கையாள்கிறார்.
ஓங்கி இவ்வுலகை அளந்த பெருமாளை வணங்கி குளித்து விரதம் இருக்கிறார்கள் பெண்கள் அவரை வணங்குவதால் என்னவெல்லாம் நடக்கும்? அப்படியே ஷாட்டை இங்க கட் பண்ணா...
நாட்டில் தீயவை அழிகிறது மாதம் மும்மாரி பொழிகிறது நெல்கள் செழிப்பாக வளர்கிறது.. அந்த வயல்களிடையே ஓடும் கால்வாயில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன.. அதன் கரைகளில் இருக்கும் கருங்குவளை மலர்களில் தேன் உண்ணுகிறது..
மடி நிறைய பால் நிறைந்திருக்கும் பசுக்கள் கறப்பதற்கு முன் தானாகவே கொடுத்த வள்ளல் போல பாலை சுரக்கிறது.. எங்கும் செல்வம் செழிக்கிறது. இத்தனயும் மார்கழி விரதத்தின் மகிமைகள் என்கிறார் இயக்குநர் இமயம் ஆண்டாள்.
மார்கழி 3 ஆம் நாள் பாடல்..
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரிபெய்து
ஓங்கு பெருங் செந்நெல் ஊடு கயலுகளப்
பூக்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ எம்பாவாய்.
4. ஆழிமழைக் கண்ணா...
#ஆண்டாள்_பெருமை
கடல் நீர் ஆவியாகி மேகத்தில் சேர்ந்து மழையாகப் பொழிகிறது என்பது இன்றைய அறிவியல் மனிதர்களான நமக்கெல்லாம் தெரியும்.. ஆனால் இது ஆண்டாள் வாழ்ந்த காலத்திலும் தெரிந்திருக்கிறது என்பது தான் வியப்பான செய்தி.
ரமணன் இல்லாத காலத்திலும் ஆண்டாள் வாசித்த வானிலை அறிக்கை தான் இந்த பாடல்.. கருமை நிற கண்ணனை மேகமாக உருவகப்படுத்துகிறார் ஆண்டாள்.
மழைக் கடவுளான வருணா நீ கடலுக்குள் நுழைந்து நிறைய நீரை எடுத்துக் கொண்டு பெரும் ஒலியுடன் மேலெழுந்து மேகமாக மாறி மின்னல் ஒளிர அம்பு போல் சரம் சரமாய் மாலவன் அடியவர்களுக்கு அருள்வது போல மழையை பொழிவாயாக என்கிறார்.
இதில் பெருமாளின் சங்கினை இடியாகவும் அவரது சக்கரத்தின் ஒளியை மின்னலாகவும் அவரது சாரங்கம் என்னும் வில் அம்பை மழையாகவும் ரசனையோடு உவமைப் படுத்துகிறார். மார்கழியிலும் அக் காலத்தில் மழை இருந்திருக்கிறது என்பது இன்றைய சென்னை வாசிகளுக்கு திகிலூட்டும் சேதி.
மார்கழி 4 ஆம் நாள் பாடல்..
ஆழிமழைக்கண்ணா!ஒன்று நீ கைகரவேல்;
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியம் தோளுடைய பற்பநா பன்கையில்
ஆழி போல் மின்னி,வலம்புரி போல நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய்,நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
5. மாயனை மன்னு...
#ஆண்டாள்_பெருமை
நாளைய வரலாறே.. இளஞ்சிங்கமே, புதுமை விரும்பியே, மாவீரனே, வாழும் வள்ளுவரே, இப்படி எல்லாம் பல அரசியல் தலைவர்களுக்கு அடைமொழி கொடுத்து அவர்களது தொண்டர்கள் போஸ்டர்கள் பேனர்கள் அடித்திருப்பதை பார்த்திருப்போம்.
இதற்கும் முன்னோடி ஆண்டாள் தான். தன் தானைத் தலைவன் கண்ணனுக்கு பாசுரத்தில் அவர் தரும் அடை மொழிகளைப் பாருங்கள் மாயனே, வடமதுரை மைந்தனே, யமுனைத் துறைவனே, ஆயர்குல அணிவிளக்கே, என்றெல்லாம் விளித்து விட்டு..முத்தாய்ப்பாக கூறுகிறார்...
தாயை குடல்விளக்கம் செய்த தாமோதரனே என்று அதாவது கண்ணனைப் பெற்றதால் அவரது தாயின் வயிறு பரிசுத்தம் அடைந்ததாம்.. எப்படி ஒரு கற்பனை பாருங்கள் தற்போதைய தமிழகத்தில் ஆண்டாள் அரசியல்வாதியாக இருந்திருந்தால்..
நிச்சயம் இந்த வார்த்தைக்காக அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும். ஆனால் எவரும் தூய மனதோடு மலர் தூவி கண்ணன்பேரை சொல்லி பூஜிப்பதே போதும் அப்படிச் செய்தாலே நம் செய்த செய்ய நினைக்கிற கேடுகள் எல்லாம் தீயினால் தூசாகும் என்கிறார்.
இந்தத் தீயினால் தூசாகும் என்னும் தொனியில் தன் தலைவன் கண்ணனால் நம் பாவங்கள் பஸ்பமாகும் பொசுங்கும் பொடிப் பொடியாகிவிடும் என பிறருக்கு உத்திரவாதம் அளிக்கிறார்.. தனக்கு அதுவே போதும் என்கிறார் பதவியை எதிர்பாராத அப்பாவித் தொண்டரான ஆண்டாள்.
மார்கழி 5 ஆம் நாள் பாடல்..
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
6. புள்ளும் சிலம்பின...
#ஆண்டாள்_பெருமை
சங்கு ஊதிட்டாங்க என்றால் இப்போது கதை முடிஞ்சது ஆள் காலி என்று தான் அர்த்தமாகிறது.. சங்கில் ஊற்றி வாயில் பால் ஊற்றினால் பிறப்பு சங்கூதி வாயில் பால் ஊற்றினால் இறப்பு என ரைமிங்காக ஸ்டேட்டஸ் போடுகிறோம் ஆனால் பெருமாளுக்கு சங்கு ஓர் அடையாளம் ஓர் ஆயுதம்.
பொதுவாக நாஸ்டால்ஜியா நினைவுகளில் நமது இளம் பிராயத்தில் காலை 6 மணிச்சங்கு மதியம் 12 மணிச் சங்கு என சங்கொலிப்பதை கேட்டு இருப்போம்.. இதில் ஆலைகளில் இழுந்து எழும்பும் சங்கொலியும் உண்டு.. சங்கொலி என்பது எதையும் தொடங்கும் போது ஒலிக்கும் சப்தம்.
அப்போது ஏன் இறப்புக்கு ஊதவேண்டும்? அது முடிவல்லவா?இல்லை இறப்பு மனிதர்களுக்கு மறுமையின் தொடக்கம் அதில் நம்பிக்கை இல்லாதவர்கள் அமர வாழ்வின் தொடக்கம் என்று கூட எடுத்துக்கொள்ளலாம் இப்படி பிறப்பு இறப்பு ஆலயம் போர் என வாழ்வில் சங்கொலிக்காத இடமே இல்லை
அது பாஞ்சஜன்யமாய் பாரதப் போரில் முழங்கியதை இங்கு நினைவு கூர்வோம். அதோ அந்தச் சங்கு கருடனின் தலைவனானப் பெருமாள் கோவிலில் இருந்து பேரொலியாய் ஒலிக்கிறது.. அது அந்த நாளின் நல்ல தொடக்கமாக அமைய அந்த சப்தம் உன் காதுகளில் விழவில்லையா.?
என கேட்டு ஆரம்பிக்கிறார்.. அந்த சங்கொலியோடு பறவைகள் சிலம்பும் சப்தமும் பேரரவமாய் ஒலிக்கிறது என்கிறார்.இன்றும் மதுரைத் தமிழில் சலம்புவது என்றால் சத்தம் இடுவது என அர்த்தம்.. இந்த சிலம்புவது தான் சலம்புவதாக மருவியிருக்கும் என்று எண்ணுகிறேன்.
ஒரு விஷயத்தில் இன்றைய தமிழக அமைச்சர்களுக்கு ஆண்டாள் முன்னோடி இவர்களுக்கு அம்மா புகழ்.. ஆண்டாளுக்கு அரியின் புகழ்.. அவன் புகழ் பாடாது அவர் வாய் ஓயாது.. பறவைகள் சிலம்ப சங்கதிர ஒலி கேட்டு எழுந்திருக்காத பிள்ளைகளா.. உங்களுக்கு தெரியுமா..?
நம் பெருமான் பூதகியிடம் பால் குடித்து கொன்றது சகடனை காலால் நிறுத்திக்கொன்றது பாம்பின் மேல் உறங்கியது என.. அவர் காலத்து மாண்பு மிகு இதயதெய்வம் தங்கத்தாரகை போல கிருஷ்ணரின் பெருமைகளைச் சொல்லி இறுதியில் இப்படி முடிக்கிறார்... மனதில் நாரணனை நினைத்து
முனிவர்களும் யோகிகளும் அரி என்று உச்சரிக்கும் பேரொலியைக் கேட்டால் அது நம் காது வழியே மனதிற்குள் சென்று நம்மை குளிரச் செய்யுமாம் அதை கேட்பதற்காகவாவது எழுந்து வா என்கிறார்.
பொதுவாக அதிகாலையில் அரி என உச்சரிப்பது நலம் விளைவிக்கும் என்பார்கள்.ஆனால் ஆண்டாள் அரி என்னும் சப்தம் காதுகளில் விழுந்தால் போதும் என்கிறார்.. அவருக்கு அதுவே போதும்.
பின்குறிப்பு:
பாடல்களில் அரி என்று உச்சரிக்காமல் ஆபாசமாக உச்சரித்து அதற்கும் பீப் போட்டு சாங்கு பாடி தனக்கே சங்கு ஊதிக் கொண்டவர்களின் சங்கொலி பற்றி இதில் நான் குறிப்பிடவில்லை.
மார்கழி 6ம் நாள் பாடல்...
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டுகள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சிவெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினைஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்மெள்ள வெழுந்து அரியென்ற பேரரவம்உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!
#ஆண்டாள்_பெருமை
நாளைய வரலாறே.. இளஞ்சிங்கமே, புதுமை விரும்பியே, மாவீரனே, வாழும் வள்ளுவரே, இப்படி எல்லாம் பல அரசியல் தலைவர்களுக்கு அடைமொழி கொடுத்து அவர்களது தொண்டர்கள் போஸ்டர்கள் பேனர்கள் அடித்திருப்பதை பார்த்திருப்போம்.
இதற்கும் முன்னோடி ஆண்டாள் தான். தன் தானைத் தலைவன் கண்ணனுக்கு பாசுரத்தில் அவர் தரும் அடை மொழிகளைப் பாருங்கள் மாயனே, வடமதுரை மைந்தனே, யமுனைத் துறைவனே, ஆயர்குல அணிவிளக்கே, என்றெல்லாம் விளித்து விட்டு..முத்தாய்ப்பாக கூறுகிறார்...
தாயை குடல்விளக்கம் செய்த தாமோதரனே என்று அதாவது கண்ணனைப் பெற்றதால் அவரது தாயின் வயிறு பரிசுத்தம் அடைந்ததாம்.. எப்படி ஒரு கற்பனை பாருங்கள் தற்போதைய தமிழகத்தில் ஆண்டாள் அரசியல்வாதியாக இருந்திருந்தால்..
நிச்சயம் இந்த வார்த்தைக்காக அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும். ஆனால் எவரும் தூய மனதோடு மலர் தூவி கண்ணன்பேரை சொல்லி பூஜிப்பதே போதும் அப்படிச் செய்தாலே நம் செய்த செய்ய நினைக்கிற கேடுகள் எல்லாம் தீயினால் தூசாகும் என்கிறார்.
இந்தத் தீயினால் தூசாகும் என்னும் தொனியில் தன் தலைவன் கண்ணனால் நம் பாவங்கள் பஸ்பமாகும் பொசுங்கும் பொடிப் பொடியாகிவிடும் என பிறருக்கு உத்திரவாதம் அளிக்கிறார்.. தனக்கு அதுவே போதும் என்கிறார் பதவியை எதிர்பாராத அப்பாவித் தொண்டரான ஆண்டாள்.
மார்கழி 5 ஆம் நாள் பாடல்..
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
7.கீசு கீசு என்று...
ஆண்டாள்_பெருமை
தயிர் சப்தம் போடுமா?போடும் அது தான் தயிரரவம் என்கிறார் ஆண்டாள்.. அரவம் என்றால் பெருஞ் சப்தம் பேரொலி என்னும் அர்த்தமும் உண்டு. ஆண்டாளின் அழகிய வர்ணனையைக் கேளுங்கள்.. அதிகாலையில் வாசனைக் கூந்தலுடைய ஆயர்குலப் பெண்கள் மத்தினால் தயிர்கடைய தயிரரவம் எழும்புகிறது.
இந்த ஒரு சப்தத்திற்கு துணையாக இன்னும் சில இசைகளை இதனோடு இணைக்கிறார் ஒரு இசைஞானி போல ஆண்டாள்.. ஆனை சாத்தான் குருவிகளின் கீச்சென்ற பேச்சு தயிர்கடையும் போது அசையும் பெண்களின் மீதிருந்து கலகலவென ஒலிக்கும் கழுத்துத் தாலியும் காசுமாலையும் ஒன்றொடு ஒன்று மோதும் சத்தம்..
இத்தனை ஒலிகளுடன் நாங்கள் கேசவனைப் பற்றி பாடும் பாட்டு இத்தனையுமா உன் காதுகளில் விழவில்லை? அல்லது கேட்டும் கேட்காதது போல இருக்குறாயா! அடி பேய்ப்பெண்ணே எழுந்திரு என்கிறார்.. உண்மையில் பேய்ப் பெண் ஆண்டாள் தான்.. கண்ணனை பேய் போல நினைத்து துதிக்க அவர் ஒருவரின்றி யாரால் முடியும்..!
மார்கழி 7ஆம் நாள் பாடல்..
கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.
8. கீழ்வானம் வெள்ளென்று...
#ஆண்டாள்_பெருமை
தன்னை வணங்குபவனை அருள்வது கடவுளின் குணம். ஆனால் நம்மை வா வா என்றழைத்து அருளும் கடவுள் இருக்கிறாரா.! கண்ணன் இருக்கிறான் என்கிறார் ஆண்டாள். கண்ணன் ஆ வென்று வாய் பிளந்த போது அவரது அன்னைக்கு அன்று உலகில் உள்ள எல்லாமும் தெரிந்தது.. அது தான் உலகின் முதல் கூகுள்.. காட்டியது நம் கோகுல்..
நம் வேண்டுதலுக்கு ஏற்றபடி திருவிளையாடல் தருமி சொல்வது போல எவ்வளவு பிழை இருக்கிறதோ அதற்கு ஏற்றபடி... என அதை ஆராய்ந்து நம்மை ஆ வென்று அழைத்து ஆட்கொள்வான் ஆயர்குலக் கண்ணன்.. ஆ வென்றால் பசுக்கள் என்றும் அர்த்தம் அந்தப் பசுக்கள் பாலைப் பொழிவது போல அவன் பக்தர்களுக்கு அன்பைப் பொழிவான்.
அவனைச் சேவிக்க என்ன செய்ய வேண்டும் உறங்கும் பெண்ணே..? பார் கீழ் வானம் விடிந்துவிட்டது எருமைகள் புல்வெளியில் பரந்து மேய்கின்றன.. பாவை விரதம் இருக்கின்ற இடத்திற்கு பலர் போய்விட்டனர் சிலர் அங்கு கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களை தடுத்து நிறுத்தி உன் வீட்டு வாசலில் நிற்கின்றோம் நீ எழுந்து வா..
குதிரையாக உருமாறி வந்த கேசி என்னும் அரக்கனின் வாயைப் பிளந்தவன் சாணுகன் முஷ்டிகன் என்ற இருமல்லர்களை வீழ்த்தியவன் தேவாதி தேவன் அவன் அவனை சேவிப்போம் அப்போது தான் அவன் வா வென்று அழைத்து நம்மை அருள்வான் என்கிறார்.. கண்னனின் அருள் வருகிறதோ இல்லையோ ஆண்டாள் ஆ வென்றால் கண்ணனே வருவான் போல.
மார்கழிப் பாடல் - 8
கீழ்வானம் வெள்ளென்று எருமைசிறுவீடுமேய்வான் பரந்தனகாண் மிக்குள்ளபிள்ளைகளும்போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னைகூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடையபாவாய்! எழுந்திராய் பாடிப்பறை கொண்டுமாவாய் பிளந்தானை மல்லரை மாட்டியதேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
9. தூமணி மாடத்து...
#ஆண்டாள்_பெருமை
பாலுமகேந்திரா, பி.சி.ஶ்ரீராம், சந்தோஷ்சிவன், மணிகண்டன் போன்ற புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர்கள் படமாக்கும் காட்சிகள் கலைநயம் மிக்கதாக இருக்கும். அதற்கு முக்கியக் காரணம் காட்சிக்கேற்ற அழகான லைட்டிங்.! இயற்கையாகவோ செயற்கையாகவோ வரும் ஒளியின் மூலம் அந்தக் காட்சியை மெருகு ஏற்றுவார்கள். ஆண்டாளும் ஒரு ஒளிப்பதிவாளர் தான்.!
ஆண்டாள் இப்பாடலில் நம் கண்முன்னே படமாக லைட்டிங் அமைக்கிறார்இப்படி (வைட் ஆங்கிளில்)ஒரு வீடு அந்த அதிகாலை இருளில் வீட்டில் ஒரு அழகான விளக்கு மாடம் அங்கு மணிகளுடன் வெண்ணிற திரைச்சீலைகள் அசைகின்றன அதனைச் சுற்றி அலங்காரமான விளக்குகள் எரிகின்றன.
மணம் கமழும் சாம்பிராணிப் புகை பரவிக்கிடக்க காமிரா பார்வேர்டில் ஜூம் ஆகிறது. இலவம் பஞ்சுமெத்தையில் உறங்கிக் கொண்டு இருக்கிறாள் ஒருத்தி. அப்படியே இந்த காட்சியைக் கற்பனை செய்து பார்த்தால் அடடா ஒரு மணிரத்னம் படம் போலவோ ஷங்கர் படம் போலவோ இருக்கிறதா..!!
ஆண்டாள் ரசனை ராணி.. அவளது அழகியல் மிகுந்த பார்வை பாசுரங்களின் பல இடத்தில் பிரதிபலிக்கும்.. வார்த்தைகளிலேயே இந்தக் காட்சியை அமைத்த அவள் திறனைப் பாருங்கள் வளமானகற்பனை, ஆழ்ந்த ரசனை, கண்ணன் மேல் கொண்ட அளவிலாக் காதல் அத்தனையும் விளங்கும்.
இங்கே இந்த காட்சியை நிறுத்திவிட்டு அடுத்த ஷாட் அப்படியே கதவிற்கு இந்தப்பக்கம் நாம் மாற்றுவோம்... அங்கே தினமும் இந்த வீட்டிற்கு வரும் அப் பெண்ணின் தோழிகள் கதவுக்கு வெளியில் இருந்து இவளை கூப்பிட்டு எழுப்புகிறார்கள். மாமன் மகளே என்ன உறக்கம்? மணிக்கதவை திறந்துவிடுஅட மாமியே நீ உன் மகளை எழுப்ப மாட்டாயா.?
உன் மகள் என்ன பேசா மடந்தையா? செவித்திறன் அற்றவளா? மயங்கிக் கிடக்கிறாளா? யாராவது அவளை மந்திரத்தால் மயக்கிவிட்டார்களா? மாயவர்களுக்கு எல்லாம் பெரிய மாயன், மாதவன்,வைகுந்தன் என்று அவன் பல நாமங்களை சொல்லிப்பாடுவோம் அவளை சீக்கிரம் எழுப்பு... ஆண்டாள் இது போல கூப்பிட்டு நம்மை எழுப்பினால் அதற்காகவே தூங்கலாம் போல.
மார்கழி 9 ஆம் நாள் பாடல்.
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோமாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்றுநாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்.
10. நோற்றுச் சுவர்க்கம்...
#ஆண்டாள்_பெருமை
ஆமா இவரு பெரிய பணக்காரரு அம்பானிக்கே கடன் கொடுத்தவரு மாதிரி பேசறாரு.. பொதுவாக நாம் கிண்டலாக பேசும் போது ஒப்பீடு இது போல மிகைப்படுத்தலாக இருக்கும்.. அதாவது அவரே பெரியவர் அதை விடவா நீ பெரியவன் என்னும் தொனியில் கூறுவோம்.. அதிகாலை எழும்பாமல் உறங்கிக் கிடக்கும் பெண்ணிற்கு ஆண்டாளும் ஒரு ஒப்பீடு தருகிறார்..
சொர்க்கம் புகவேண்டும் என்பதற்காக விரதம் இருக்கின்ற பெண்ணே.. நீ கதவைத்தான் திறக்கவில்லை ஒரு குரல் கொடுத்தாவது பதில் பேசலாமே.! நறுமண துளசியை மாலையாய் அணிந்திருக்கும் நாராயணன் பெருமையை ஊர் மெச்ச போற்றித் துதித்தால் அவர் பேரின்பத்தை நமக்கு பரிசாகத் தருவார்.. அதை விட்டுவிட்டு சிற்றின்பமான இந்த உறக்கம் தேவையா.?
அன்று யமனிடம் வாய் தவறி வரம் கேட்டு தூக்கத்தை வரமாக பெற்றானே கும்பகர்ணன் அவனிடம் நீ தூக்கத்தை பரிசாகப் பெற்றுக் கொண்டாயா.? உனக்கும் அவனுக்கும் போட்டியா? அல்லது அவன் உன்னிடம் தோற்று விட்டானா.? எல்லையற்ற உன் சோம்பலை துறந்துவிடு...
வா வந்து இவ்வாசல் கதவை திறந்துவிடு.. என உறங்குபவளை கும்பகர்ணனோடு ஒப்பிடுகிறார்.எனக்கென்னவோ ஆண்டாள் பாடினால் கும்பகர்ணனே எழுந்து வந்து விடுவான் என்றே தோன்றுகிறது.
மார்கழி 10 ஆம் நாள் பாடல்..
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்போற்றப் பறைதரும் புண்ணியனால்பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்தகும்ப கருணனும் தோற்றும் உனக்கேபெருந்துயில்தான் தந்தானோ ஆற்றஅனந்தல் உடையாய் அருங்கலமேதேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
11. கற்றுக் கறவை...
#ஆண்டாள்_பெருமை
இடையோ இல்லை.. இருந்தால் முல்லைக் கொடிபோல் மெல்ல அசையும்.. என எம்.ஜி.ஆர் படப் பாடலையும், உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக் கண்ணல்லவா இல்லை என்று சொல்வதுந்தன் இடை அல்லவா.. மின்னல் இடை அல்லவா..! சிவாஜிப் பட பாடலையும் கேட்டிருப்போம்.
இஞ்சி இடுப்பழகி, ஒல்லிக் குச்சி உடம்புக்காரி,போன்ற தமிழ்த் திரைப்படப் பாடல்களில் சொல்லப்படும் உவமைகள் போல ஆண்டாள் தன் பாடலில் இடை பற்றி குறிப்பிடுகிறார். ஆண்டாளின் உவமையில் அவளது இடை பாம்பின் படம் போல என்கிறார். சரேலென விரியும் போது தான் அது தெரியும் அதற்கு முன் அது இருக்கிறதா என்பதே தெரியாது என்கிறார். எவ்வளவு அழகான கற்பனை பாருங்கள்.
கன்றுகளோடு கறவைப் பசுக்களும் கூட்டமாக நிற்க பாலைக் கறந்து கொண்டிருக்கும் ஆயர் குலத்தினர் பாலைக் கறப்பதிலும் தம்மை எதிர்க்கும் பகைவர் குல வேரை அறுப்பதிலும் வல்லவர்கள் அக்குலத்தில் பிறந்த தங்கக் கொடியே..புற்றிலிருக்கும் பாம்பின் படம் போன்ற அல்குல் உடைய மெல்லிடையாளே.. மயில் போன்ற பெண்ணே..
உன் தோழியர் யாவரும் உன் வீட்டு வாசல் வந்து கார் முகில் வண்ணனின் புகழைப் பாடிக் கொண்டிருக்கிறோம்..எதற்கும் அசராமல் உனக்கு ஏனிந்த உறக்கம்? செல்வச் சீமான் பெற்ற செல்லப்பெண்ணே நீ அசையாமல் படுத்துறங்கும் நோக்கமென்ன? எழுந்திடுவாய் எம்பாவாய் என அழைக்கிறார்.
அல்குல் என்றால் பெண்ணின் பிறப்புறுப்பு அது தான் நாகத்தின் விரித்த படம் போல இருக்கும் இன்றைய உரையாசிரியர்கள் நாகரிகம் கருதி அல்குலை இடையாக்கி விட்டார்கள் என்ற கருத்தும் இருக்கிறது.. எப்படியோ இரண்டிற்கும் அந்த உவமை அழகாகப் பொருந்துகிறதே!
அரவமின்றி உறங்கும் பெண்ணிற்கு அந்த அரவம் விரிக்கும் படத்தையே உவமையாகச் சொன்ன ஆண்டாளின் பாசுரம் பக்தி இலக்கியத்தின் மகுடி... இதற்கு மயங்காத பாம்புகள் ஏது.! (அரவம் = பாம்பு & ஓசை)
மார்கழி 11ஆம் நாள் பாடல்..
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றம்ஒன் றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே
புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வபெண் டாட்டிநீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.
12. கனைத்து இளம்...
#ஆண்டாள்_பெருமை
நாட்டில் பாலும் தேனும் ஆறாக ஓடுகிறது என்னும் சொற்றொடரை சுபிட்சத்திற்கும் செழிப்பிற்கும் உதாரணமாகச் சொல்லுவார்கள். ஆண்டாள் வீட்டுச் சுபிட்சத்திற்கு இதை ஒப்பிடுகிறார்.. போகிற போக்கில் தாய்ப்பாசம், பேரன்பு இவையெல்லாம் மிருகங்களுக்கும் உண்டு என அழகாக சித்தரிக்கும் அவரது கற்பனையைப் பாருங்கள்..
தங்கள் கன்றுகளின் குரல் கேட்ட எருமைகள் தாய்ப்பாசம் பொங்க தம் கன்றுகளை நினைத்து தம் மடியில் இருந்த பாலை யாரும் கறப்பதற்கு முன் தாமாகவே சுரக்கின்றன.. அப்படி சுரந்த பால் வீடெங்கும் வெள்ளமென ஓடி வீடே பால் சகதியாக உள்ளது.. இத்தனை பால் தரும் செழிப்பான மாடுகள் பல வைத்திருக்கும் செல்வந்தனின் தங்கையே..
மார்கழி மாதம் பெய்யும் அதிகாலை பனியின் துகள்கள் எங்கள் தலைமீது படிந்திருக்க நாங்கள் உன் வீட்டருகே வந்து உனக்காக நிற்கின்றோம்.. இராவணனை வதம் செய்த இராமன் பேர் பாடுகிறோம் நீயும் வந்து வாய் திறந்து பாடு.. வா கதவைத்திற.. உனக்கு ஏனிந்த பெரு உறக்கம்.. நீ இப்படி உறங்குவது அக்கம் பக்கத்திலிருப்போர்க்கு எல்லாம் தெரிந்துவிட்டது எழுந்து வா பெண்ணே..
இந்த வர்ணனையைப் படித்ததும் ஒரு பால் பண்ணைக்குள் சென்று வந்த உணர்வு ஏற்படுகிறது அல்லவா! பால் மணம் கூட மூக்கில் உணர முடிகிறது.. இது பாலின் மணம் மட்டும் அல்ல ஆண்டாள் கண்ணன் பால் கொண்ட காதலின் மணம்.. ஆம் அது கறந்த பாலைப் போல் அவ்வளவு புனிதமானது.
மார்கழி 12ஆம் நாள் பாடல்..
கனைத்துஇளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்
அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.
16. நாயகனாய் நின்ற...
#ஆண்டாள்_பெருமை
பெரிய மனிதர்களை சந்திக்கச் செல்லும் போது அவர்களது செக்யூரிட்டிகளுக்கு நாம் பெரும் மரியாதை தருவோம் கிட்டத்தட்ட அந்த வி.ஐ.பி.யாகவே அவரும் பிகு செய்வார். இந்த பூசாரிகள் வரமளித்தால் தான் நீங்கள் கடவுளையே காண முடியும். இவ்வளவு ஏன் ஏ.வி.எம் ஸ்டுடியோ வாட்ச்மேன் காலில் விழுந்து அனுமதி கேட்ட எத்தனையோ பேர் இன்று மிகப் பெரிய பிரபலங்கள் ஆகியிருக்கின்றனர்.
இந்தப் பாடலில் விழித்தெழுந்த பெண்கள் நந்தகோபனின் மாளிகை வாசலுக்கு வந்து வாயில் காப்போனிடம் கேட்கிறார்கள் எங்கள் நாயகன் நந்தகோபனின் கொடி பறக்கும் தோரண வாயிலை காவல் காப்போனே ஆயர்குலப் பெண்கள் எங்களுக்கு வேண்டியதை தருவேன் என நேற்றே சொன்னார் மாய மணிவண்ணர் அவரை எழுப்ப வந்துள்ளோம்.
நோன்பிருந்து நீராடி தூய்மையாக வந்துள்ளோம் நாங்கள் வந்த இந்த நல்ல காரியம் நிறைவேற எங்களை உள்ளே சென்று பாட விடு அழகிய இம் மணிக்கதவின் தாழ்ப்பாளை திறந்துவிடு.. இந்த காலத்தில் இவ்வளவு இளம்பெண்கள் கூட்டமாகப் போனால் இப்படியெல்லாம் பாட வேண்டாம் வாட்ச்மேனே வாயில் ஜொள்ளு விட்டு கதவுகளைத் திறந்து இருப்பான்.
ஆண்டாளின் பாடல்களில் தமிழில் அருகி மறைந்த பல தமிழ் வார்த்தைகளை காணலாம். உதாரணமாக கொண்மூ, எழினி என்ற தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் என்னவென்று தெரியுமா? இவை இரண்டுமே மேகத்தை குறிக்கும் தமிழ்ச் சொற்கள்.. இன்று மேகம் முகில் போன்ற வார்த்தைகள் மட்டுமே வழக்கில் உள்ளன.
இந்தப் பாடலிலும் நென்னல் என்ற வார்த்தையைக் குறிப்பிடுகிறார். நென்னல் என்றால் நேற்று என அர்த்தம், மாணிக்கவாசகரின் திருவெம்பாவையிலும் இந்த வார்த்தை வருகிறது. ஆண்டாள் எழுதிய தமிழ் நென்னலில் மட்டுமன்று என்றும் கன்னல்.
மார்கழி 16 ஆம் நாள் பாடல்...
நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய
கோயில்காப் பானே கொடித்தோன்றும்
தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ
வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.
#ஆண்டாள்_பெருமை
கறந்தபால் அடுப்பின்றி பொங்குமா? பொங்கும் என்கிறார் ஆண்டாள். வழக்கம் போல கண்ணனுக்கு இக்காலத்து அரசியல் தலைவர்களுக்கு ப்ளக்ஸ், பேனர், போஸ்டர், ஆர்ச்சில் கொடுக்கும் அடை மொழி போல் அவர் காலத்து வாசகங்களுடன் போற்றிப் பாடிப் புகழ்ந்து எழுப்புகிறார்.
19ஆம் நாள் 20ஆம் நாள் ஆகிய இரண்டு நாட்களும் பாடிய பாசுரங்கள் கேட்டு கண்ணன் எழுந்திருக்கவில்லை.. இப்போது என்ன செய்வது? சரண்டர் தானே! அதையும் அழகான உவமையுடன் சொல்லி ஆண்டாள் அடையும் சரணாகதியைப் பாருங்கள்.
பசுவிடம் இருந்து பால் கறக்கும் போது அதன் மடியில் இருந்து பாத்திரத்தின் அடியில் வேகமாக விழும் பால் அதிவேகமாக மேலேறி பொங்குகிறது.. (இந்த உவமை நியூட்டனின் விதியை நினைவு படுத்துகிறது)அப்படியென்றால் எவ்வளவு பால்வளம்! எவ்வளவு ஆரோக்கியமான பசுக்கள். இதுபோல பல பசுக்கள் வைத்திருக்கும் நந்தகோபரின் மகனே.
உலகை காப்பவனே, பெரிய மனிதனே, அவதாரப் புருஷனே,ஒளிவடிவனே, நீ தூங்கலாமா? உன் எதிரிகள் கூட உன் பலம் அறிந்து உன்னுடன் மோத பயந்து உன் வாசல் வந்து காத்திருப்பது போல அடியவர்கள் நாங்களும் உன் வாசலில் வந்து உன்னைப் புகழ்ந்து பாட காத்து நிற்கின்றோம்.. நீ எழுந்து எமக்கு அருள் புரிவாய்.
ஆண்டாள் கோபமாய், தாபமாய், செல்லமாய், காதலாய், ஊடலாய் கண்ணனைப் பாடுபவர். எதற்கும் மசியவில்லை என்றால் படாரென்று கண்ணனின் காலில் விழுந்துவிடுவாள்.. அவள் ஆதாயத்திற்காகவும் பதவிக்காகவும் இன்றைய அமைச்சர்கள் போல் காலில் விழுபவள் அல்ல.. கண்ணன் மேல் காதலில் விழுந்தவள்.
மார்கழி 21 ஆம் நாள் பாடல்...
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண்
ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.
22. அங்கண்மா ஞாலத்து...