Friday 28 February 2014

வெடிவேலு பஞ்ச்...!

இன்றைய அரசியல் செய்திகளுக்கு..! வடிவேலு பஞ்ச்..!


காங் - தேமுதிக கூட்டணி இல்லை..!

வொய் பிளட்...சேம் பிளட்..!

மதவாதிகளுடன் கூட்டணி இல்லை...! மோடி என் நண்பர்- கலைஞர்...

அதுபோன மாசம்... இது இந்த மாசம்..!

மக்கள் காங் ஆட்சியை மீண்டும் அரியணையில் ஏற்றுவர்.. ஈ.வி.கே.எஸ்...!

நான் அப்டியே ஷாக்காயிட்டேன்...!

40 தொகுதிகளில் அதிமுக நின்றாலும் கூட்டணி தொடரும்...! தா.பா.?

ஊருக்குள்ள நாங்க  அடி வாங்காத இடமே இல்லை..! போங்க தம்பி..!

காங் - பா.ம.க சமுதாயக் கூட்டணி...! 

உஸ்ஸ்ஸ்ஸ்..அப்பா இப்பவே கண்ண கட்டுதே..!

நாடு காவி புரட்சியை பார்ப்பதற்கான தருணம் வந்து விட்டது..! மோடி.!

தம்பி டீ இன்னும் வர்லை..!

ராஜ்நாத் சிங் - சுதீஷ் சந்திப்பு..

இன்னுமாடா நம்மள இந்த உலகம் நம்புது

விளம்பர தட்டிகளில் என் படம் போடக்கூடாது...வை.கோ..!

அட மொழி வச்சவங்க அழிஞ்சதா சரித்திரம் இல்ல..!

பா.ம.க எம் எல் ஏ முதல்வரை சந்தித்தார்...!

நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டாண்டா...!

இன்றைய அரசியல் செய்திகளுக்கு..! வடிவேலு பஞ்ச்..!

வெயில் தாளாமல் ஞானதேசிகன் & ஈவிகேஎஸ் பிரச்சாரத்தில் திணறல்...

வொய் பிளட்...சேம் பிளட்..!

மோடி என் நண்பர்..... திருமணத்தை மறைத்த மோடிக்கா உங்கள் ஓட்டு- கலைஞர்...

அதுபோன மாசம்... இது இந்த மாசம்..!

மக்கள் காங் ஆட்சியை மீண்டும் அரியணையில் ஏற்றுவர்.. தங்கபாலு...

நான் அப்டியே ஷாக்காயிட்டேன்...!

மின்வெட்டு அதிமுகவின் தோல்வியை பாதிக்காது.. சரத்குமார்

போங்க தம்பி.! ஊருக்குள்ள போய் கேட்டு பாருங்க நாங்க அடி வாங்காத இடமே இல்லை..! 

அம்மா கொடுத்த மாடு தினமும் 500 ரூபாய் கொடுக்கும்.. ராமராஜன்...

உஸ்ஸ்ஸ்ஸ்..அப்பா இப்பவே கண்ண கட்டுதே..!

நாடு காவி புரட்சியை பார்ப்பதற்கான தருணம் வந்து விட்டது..! மோடி.!

தம்பி டீ இன்னும் வர்லை..!

என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா... நடிகர் கார்த்திக்...

அட நம்புங்கய்யா நானும் ஏரியால ரவுடின்னு ஃபார்ம் ஆயிட்டேன்...

நாங்க இரண்டு பேருமே சிங்கங்கள் தான்... கேப்டன்...

பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட்டு வீக்கு...!

முதல்வரை சந்தித்து அதிமுகவில் இணைந்தார் ரித்தீஷ்...

நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டாண்டா...!


Thursday 27 February 2014

அஜ்னபி..!

இன்று சுஜாதா நினைவு நாள்...

என்னைப் போன்ற அவரது தீவிர பக்தர்களில் ஒருவரான் அஜ்னபி எழுதிய வெண்பா மிக ரசிக்கவைத்தது.. அதிலும் அவர் காளமேகத்தை போல சிலேடையில் குறிப்பிட்டுள்ள விதம் அருமை. தமிழில் வஞ்சப்புகழ்ச்சியணி நமக்கு தெரியும் ஒருவரை பாராட்டுவது போல திட்டுவது, அந்த நயத்தை இதில் கையாண்டு இருக்கிறார்,அதாவது ஒரே வெண்பாவில் அவரை போற்றுவாரும் தூற்றுவாரும் பாடியது போல அர்த்தம் கொண்டு எழுதியிருப்பது ரசிக்க வைக்கிறது. "னெஞ்சினியர்" என்ற வார்த்தையில் உள்ள சிலேடை அற்புதம் இரு வேறு மொழிகளை உள்ளடக்கிய சிலேடை அர்த்தம் அது..! தளை தட்டாமல் எழுதிய இவ் வெண்பா என்னை கைத் தட்ட வைத்துவிட்டது.இதோ அந்தப் பாடலும் விளக்கமும்...

வெண்பா 

சாரங் கிசையன்ன செந்தமிழில் நாட்சிலவும்

பீரங் கியம்பாக பிற்பொழுதும் - வாரங்கள்

ஜல்லிய டிக்காதா னெஞ்சினியர் பேரையூர்

சொல்லும் சீ ரங்கராஜன்.


பொருள் 1:- ( பாராட்டு )
சாரங்கி இசை போல மென்மையாய் செந்தமிழில் சில தினங்களும் பீரங்கி அம்பாக பிற வேளைகளிலும் எழுதும் இவர், வாரங்களை இழுத்து 'ஜல்லியடி' பண்ணுவதில்லை. இந்த நெஞ்சுக்கினியவரது பெயர் அவரது ஊரை உணர்த்தும் அவர் ஸ்ரீ ரங்க ராஜன்  

பொருள் 2:- ( திட்டு )
சார் அங்கி (ஒட்டுண்ணி) இசையன்ன: சேரும் இடத்திற்கு தக்கவாறு தாளம் போட்டு தமிழில் சில முடிச்சு( knot )களை இட்டு எழுதுவார்; பீர் அங்கு இயம்புதல் போல் (சொல் விளம்பி என்றறிக) பின்னாட்களில் எழுதினார். வாரங்களை ஜல்லியடித்து நீட்டும் காது (குற்றம்) உடைய எஞ்சினியர் பெயரை ஊர் 'சீ, ரங்க ராஜன்' என பழித்துத் தூற்றும்.

இதில் "ஜல்லியடி" என்ற வார்த்தையை கேட்டதும் "மோகனமாக"சிலிர்த்தேன்.. எங்கள் ஆசான் அடிக்கடி பயன் படுத்தும் வார்த்தை அது.. அஜ்னபிக்காக சுஜாதா அவர்களுக்கு பிடித்த ஒரு தளை தட்டும் நேரிசை வெண்பா.! இதை எழுதியவர் சேஷாசலம்.!


சிறகு கொடு வண்ணமெல்லாம் வேணுமென்பதில்லை

சருகு கொடு,வேணாம் விறகு - பருகுவதற்கு

பானமெல்லாம் வேணாமே தண்ணீர் கொடு போதும்

நான் சமாளிக்க மாட்டேனா.

வாழ்த்துக்கள் Ajnabhii Al Srilanki தொடரட்டும் உங்கள் பணி.

இரு வரிக்கதைகள்..!

2வரிக்கதைகள்.!

என்ன வரம் வேண்டுமென்றார் கடவுள்,அழகான இளம்பெண்கள் என்னை விரும்பவேண்டும் என்றான்! அப்படியே என்றார்! அங்கு ஒரு பிரேசியர் கிடந்தது.

சிவப்பு சேலை அதுதான் டியர் அடையாளம் SMSவந்தது, மனைவியிடம் வேலை என சொல்லிவிட்டு கிளம்புகையில் பார்த்தான் அவள் சிவப்பு சேலையிலிருந்தாள்.

பிரபலம் ஒருவர் பேர் சொல்லி நண்பனிடம் இருந்து போன்,அவரு செத்துட்டாரா இல்ல சாகலியா சீக்கிரம் சொல்லு,என்ன அவசரம்டா !நான் ஸ்டேட்டஸ் போடணும்!

சூரியனை விட பெரிய கோள்கள் உள்ளது அதற்கு முன் பூமியே கடுகு என வாசித்து கொண்டிருக்கையில்,இடத் தகராறில் இருவர் வெட்டிக் கொலை என்றது டிவி.

ஆளு அவுட்டுங்க,பரவாயில்லை காப்பாத்திடலாம்! ஏன் டாக்டர் செத்தவனை எப்படி காப்பாத்துவிங்க நீங்க கடவுளா? இல்லை நான் அரசியல்வாதியும் கூட!

ஆயிரம் ரூபாய் கட்டு தெருவில் கிடந்தது! வேகமாக எடுத்து வந்து மனைவியுடன் நகைக் கடைக்கு போனான்! போலீஸ் கைது செய்தது!பூரா கள்ளநோட்டாம்!

சுகர் இருப்பதால் ஸ்வீட் தின்ன மனைவி விடமாட்டாள்,ஒருவிருந்துக்கு தனியாக போனான் ஆசையோடு ஸ்வீட் எடுக்க செல்கயில் அவன் டாக்டர் வரவேற்றார்.

குழந்தைக்கு சுகமில்லை மோதிரத்தை எடுத்துகிட்டு பணம் குடுங்க என கேட்டவனுக்கு 500ரூ கொடுத்தான் நண்பன்,இது தங்கமில்லடா என்றேன். தெரியும் என்றான்.

புதுத்தம்பதிகள் திருமணமானதிலிருந்து ஓய்வில்லா அலுவல்! இருவரும் ஆபிஸில் பேசி4 நாட்கள் விடுமுறை வாங்கி வீடுவர,தாத்தா பாட்டி! 4 நாளு இருக்கலாம்னு வந்தோம்!

புதுவீட்டுக்கு குடி வந்த பெண் எஸ்.ஐ காதில் விழுந்தது அண்டைவீட்டு பேச்சுக்குரல் 3 கல்யாணம் பண்ணிட்டானே பாவி! எட்டிப்பார்க்க டிவி சீரியல்.!

Wednesday 26 February 2014

நிஜமல்ல கனவே..!

ஒரு இந்தியனின் கனவு...!

அந்த அரங்கம் மிக மிக மிக ஆனந்தமாக இருந்தது..! 

திடீரென இந்தியப் பங்கு சந்தை மதிப்பு உயர்ந்து அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு 3 ரூபாய்க்கு வந்ததால் ப.சிதம்பரம் பல வரிகளை ரத்து செய்து,ஒரு லிட்டர் பெட்ரோல் இனி 10 ரூபாய் தான் என்று அறிவிக்க..! 

எங்களால் முடியாத சாதனை இது எனவே நான் வழி விட்டு விலகிக் கொண்டு அத்வானியை பிரதமராக்குவேன் என மோடி ஒப்புக் கொள்ள..! 

நாங்களும் ராஜ பக்ஷேவை ஐ.நா. வில் போர்க் குற்றவாளியாக்கும் தீர்மானத்தை ஆதரித்து தனி ஈழம் பெற்றுத் தருவோம் என சல்மான் கர்ஜிக்க.!

இனி எந்த குடிசை வீட்டுக்கும் போய் சாப்பிடமாட்டேன் என ராகுல் சத்தியம் செய்ய... அரசியலே வேண்டாம் என்று சோனியா சொல்ல..! 

தமிழக மீனவர்களின் மீது தாக்குதல் நடத்தினால் இலங்கை மீது போர் தொடுப்போம்... இதே நிலை தான் பாகிஸ்தான்& சீனா எல்லை நாடுகளுக்கும் என ஏ.கே.அந்தோணி எச்சரிக்க.!

நான் இனி அமெரிக்காவில் செட்டிலாக போகிறேன் என சுப்பிரமணிய சாமி கூற..! எனக்கு பிடிக்காத எண் 15 என நாராயணசாமி சூளுரைக்க.! 

தேர்தலில் இனி போட்டியிடவே மாட்டேன் என லாலு தேம்பி அழ.! திமுகவின் அடுத்த தலைவர் வை.கோ என கலைஞர் அறிவிக்க, அதை கட்டிபிடித்து கை குலுக்கியபடி அழகிரியும் ஸ்டாலினும் வழி மொழிய.! 

ஆனந்த கண்ணீருடன் கனிமொழி அதை ரசிக்க.! இனி அடுத்த 3 ஆண்டுகளுக்கு அமைச்சரவை மாற்றமே கிடையாது , மேலும் இன்று முதல் டாஸ்மாக் மூடப்படுகிறது என்று அம்மா அறிவிக்க.! 

அம்மா பிரதமராகவே முடியாது என நாஞ்சில் அடித்து சொல்ல அதை சரத்குமார் ஆமோதிக்க.. சுயமரியாதை உள்ள எவரும் அதிமுகவின் கூட்டணியில் இருக்கமாட்டார்கள் என தா.பா தன்மானத்துடன் முழங்க.! 

இனி எந்த கட்சி காலடியிலும் வீழ்ந்து கிடக்க மாட்டோம் என வீரமணியும் திருமாவும் இணைந்து சபதமேற்க.! இனி காதல் திருமணம் செய்வோருக்கு புகலிடமே நாங்கள் தான் என அய்யா முழங்க, குருவும் அன்பு மணியும் அதை கைத்தட்டி வரவேற்க.! 

இனி தெளிவான முடிவுகளை தான் எடுப்பேன் என கண் சிவக்க உணர்ச்சியோடு கேப்டன் கர்ஜிக்க, அவரது கட்சியில் இருந்து பிரிந்த 7 எம்.எல்.ஏக்களும் மீண்டும் கேப்டன் வசம் வந்து சேர.! 

கேப்டன் வெங்காயம் அல்ல பெருங்காயம் அவரது வாசனை தெரியாது போய்விட்டது அண்ணா விருது வேண்டாம் எங்கள் அன்ணாவே போதும் என பண்ட்ருட்டியார் சொல்ல... 

காங்கிரசில் இனி கோஷ்டிகளே இல்லை என ஞானதேசிகன் ஆரம்பிக்க.! அதை தங்கபாலு முன்மொழிய,வாசன் வழிமொழிய, கார்த்தி சிதம்பரம் உறுதியேற்க, ஜெயந்தி நடராஜன் செயல்படுத்த...

இந்த நல்ல நேரத்தில் அந்த 7பேரையும் விடுதலை செய்யாவிட்டால் நான் மனித வெடிகுண்டாக மாறுவேன் என ஈ.வி.கே.எஸ். கொக்கரிக்க.! 

 நடிகர் கார்த்திக் கட்சியும் டி.ராஜேந்தர் கட்சியும் காமெடிச் சானலாக மாறும் என்று அறிவிக்க.! 

இனி ஒரு பைசா கூட வாங்காமல் IPL கிரிக்கெட் ஆடுவோம் என தோனி தலைமையில் அனைவரும் சொல்ல.! நடிகர்கள் அனைவரும் ஒழுங்காக வரிசெலுத்த ஒப்புக் கொள்ள.!

அம்பானி தலைமையில் தொழிலதிபர்கள் இனி கறுப்பு பணம் பதுக்க மாட்டோம்...! அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்க மாட்டோம் என உறுதியேற்க.!

இந்த மகிழ்ச்சியைக் கொண்டாட ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சி நடைபெறும் என்ற அறிவிப்பை தொடர்ந்து அரங்கம் அதிர நடந்து வந்து கலகலப்பாக பேசத் தொடங்கினார் மன்மோகன்...!!!

  மீண்டும் காங்கிரஸ் தான் ஆட்சியமைக்கும் என்ற முதல் ஜோக்கிற்கே கைத்தட்டல் சப்தம் காதைப் பிளந்தது.! அவன் கனவும்அத்தோடு கலைந்தது...!

Sunday 23 February 2014

ஸ்வாமிஜி அருளுரைகள்..!

குருவே தங்களைப் பற்றி ஒரு கேள்வி..!

மகனே எதுவானாலும் கேள் சொல்கிறேன்..!

மகிழ்ச்சி, துக்கம் எது வந்தாலும் ஒரே மாதிரி எப்படி இருக்கிறீர்கள்.?

குழந்தாய் நான் துறவி அல்லவா எனக்கு இரண்டும் ஒன்றே..!

இல்லை இதை யாரிடம் கற்றுக் கொண்டீர்கள்..? உங்கள் குரு யார்..?

மகனே எனது குரு நாதர் கழுதை தான்...!

ஸ்வாமி!!! ஒரு கழுதை உங்கள் குருவா!! எப்படி?.?

தினமும் அதிகாலை அழுக்குதுணிகளை சுமந்து கொண்டு அது ஆற்றங்கரைக்கு
வருகிறது மாலையில் சுத்தமான துணிகளை சுமந்து கொண்டு திரும்புகிறது..!

சரி கழுதை சுமக்கிறது..! இதில் என்ன குருஜி பாடம் இருக்கிறது.?

மகனே.. அது அழுக்கு துணிகளை சுமக்கயில் வருந்துவதும் இல்லை... தூய
துணிகளை சுமக்கயில் மகிழ்வதும் இல்லை.. இதைத்தான் அதனிடம் கற்றேன்..
இப்போது புரிகிறதா..!

இன்ப துன்பத்தை சமமாக கருதவே கடவுள் மனிதனோடு விலங்குகளையும்
படைத்தான்.. அவை மனிதனுக்கு பல நேரங்களில் குருவாக உள்ளது..!

ஆஹா..ஆஹா... குருவே சரண்டர்...! 

அருளுரை: 

ஜென் வெங்கடேஷானந்தா..



குருவே அசரீரி என்றால் என்ன?

குழந்தாய் அசரீரி என்பது தேவக்குரல்..!

அதனால் என்ன பயன் குருஜி..?

குழந்தாய் அசரீரி நாம் தவறு செய்கையில் எச்சரிக்கும்..!

அப்படி என்றால் அது மனசாட்சியா ஸ்வாமி..?

கிட்டத்தட்ட அப்படித்தான் ஆனால் இது வெளியிலிருக்கும்..!

இந்த அசரீரி யாருக்கெல்லாம் கேட்கும்..?

தர்ம சிந்தனைகளும் அறத்தோடும் வாழ்பவர்களுக்கு கேட்கும்..!

அப்படியா ஸ்வாமி ஏன் இந்த காலத்தில் அது ஒலிப்பதில்லை..?

யார் சொன்னது அப்படி இப்போதும் அது வேறு வடிவில் உள்ளதே..!

அப்படியா..! இதுவும் நல்லவர்க்கு தான் கேட்குமா குருஜி..?

இல்லை... இப்போதுள்ள அசரீரி எல்லா மனிதர்க்கும் கேட்கும் நவீன அசரீரி..!

அப்படியா ஸ்வாமி அது என்ன..?

"எங்க இருக்கிங்க" என்று மனைவி கணவனுக்கு அனுப்பும் SMS தான்
இந்த காலத்து அசரீரி..! .

ஆஹா..ஆஹா... குருவே சரண்டர்...! 

அருளுரை: 

ஜென் வெங்கடேஷானந்தா..



குருவே மனிதனுக்கு எது தேவை எது தேவையில்லை?

குழந்தாய் இரண்டிற்கும் ஒரே பதில் "பணம்"

குருஜி! எப்படி இரண்டுக்கும் ஒரே பதில்..?

மகனே..!  பணம் சம்பாதிப்பது எதற்கு?

வசதியாக வாழ வாழ்வை அனுபவிக்க குருஜி..!

சரி அப்படி என்றால் அந்த பணத்தால் நிம்மதியை வாங்க முடியுமா..!

ஸ்வாமி...! அது..அது..

குழந்தாய்... வாழ்க்கைக்கு பணம் தேவை தான்... ஆனால் அது மட்டுமே 
மனிதனின் எல்லா தேவையையும் பூர்த்தி செய்யாது... பணம் திறக்காத 
பல கதவுகளை உன் குணம் திறக்கும்.. அங்கு பணம் தேவையில்லை..!

நற்குணங்களுடன் நல்ல வழியில் சம்பாதிக்கும் பணமும், பிறர்க்குதவும்
மனமும் உன்னிடம் இருந்தால் உன் வாழ்க்கையில் பணம் ஒரு பிரதானமில்லை 
என்பதை உணர்வாய்... புரிகிறதா..!

ஆஹா..ஆஹா... குருவே சரண்டர்...! 

அருளுரை: 

ஜென் வெங்கடேஷானந்தா..



குருவே சில ஆன்மீகவாதிகள் அரசியல் பேசுகிறார்களே இது சரியா?

குழந்தாய் ஆன்மீகவாதிகள் அக்காலத்தில் ராஜகுருவாக இருந்துள்ளார்கள்
அவர்கள் சொற்படி தான் ஆட்சியே நடக்குமாம்..!

குருஜி.. அரசாட்சி சரி.! இன்று அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தருவது சரியா?

மகனே அதுதான் பட்டுப் பூச்சிக்கும் சிலந்தி பூச்சிக்கும் உள்ள வித்யாசம்..!

குருஜி தங்கள் பதில் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை சற்று விளக்குங்கள்..!

குழந்தாய்!சிலந்திப்பூச்சியும் நூற்கிறது பட்டுப்பூச்சியும் நூற்கிறது...பட்டுப்பூச்சி
நூற்றதை நாம் விரும்பி அதை ஆடைகளாக ஏற்றுக் கொள்கிறோம்.!

சிலந்தி நூற்றதை ஒட்டடையாக கருதி நீக்கிவிடுகிறோம்..மேலும் பட்டுப்பூச்சி 
தன்னுயிர் தந்து நூற்பது பொதுநலம்! சிலந்தி பிற உயிர் பிடிக்க நூற்பது சுயநலம்.!

மக்களின் பொது நலனில் அக்கறை கொண்டு ஆள்வோர்க்கு நல்ல ஆலோசனை 
சொல்பவரை மக்கள் பட்டுப்பூச்சி போல ஏற்றுக்கொள்வார்கள்..!

தங்கள் சுயநலத்திற்காக துதி பாடும் ஆன்மீகவாதிகளை மக்கள் சிலந்தியின் 
ஒட்டடையாக ஓரம் கட்டி விடுவார்கள்... புரிந்ததா..!

ஆஹா..ஆஹா... குருவே சரண்டர்...! 

அருளுரை: 

ஜென் வெங்கடேஷானந்தா..


குருவே இவ்வுலகில் எதிரிகளே இன்றி மனிதன் வாழ்வது எப்படி?

குழந்தாய் எதிரி இன்றி வாழ்வா?அதற்கு அவன் இறந்து விடலாம்.!

ஸ்வாமி..! என்ன சொல்கிறிர்கள்??

ஆம் மகனே மனிதனுக்கு எதிரி இன்றி வாழ்வு சிறக்காது..!

எப்படி குருஜி... விளக்குங்கள்..!

வாழ்வில் வெற்றி மட்டுமே இருந்தால் முதலில் கர்வம் வரும் தான் என்ற
அகம்பாவம் வரும் யாரையும் மதிக்காத குணம் தலை தூக்கும்..!அதே 
நேரத்தில் எதிரி இருந்தால் உனக்கு அவன் மேலும் அவனுக்கு உன்
மேலும் கவனம் இருக்கும்.. சிறு தவறு கூட செய்ய மாட்டீர்கள்..!

நீங்கள் வெற்றி பெறுவதை விட மற்றவர் வெற்றி பெறக் கூடாது என்று தான்
நினைப்பீர்கள்.!அவரை வீழ்த்தவேனும் பிறரை மதிப்பீர்கள்.!எதிரி ஜெயித்தால் 
கிடைக்கின்ற தோல்வி உங்களுக்கு பாடங்கள் சொல்லித்தரும்..!தோல்வி
கற்றுத்தந்த பாடங்கள் தான் உலகை வெல்லும்..!

மனிதனுக்கு எதிரி அவசியம் குழந்தாய்..!

இருப்பினும் எதிரிகள் இன்றி வாழ்பவன் நல்ல மனிதனில்லையா குருஜி?

மகனே சிந்தித்து பார் ஒருவனுக்கு எதிரியே இல்லை என்றால்.. அவனுக்கு
எப்படி நண்பர்கள் இருப்பார்கள்?எதிரி இல்லாதவனுக்கு நண்பனும் இல்லை
இது தான் உலக நியதி.. புரிகிறதா..!

ஆஹா..ஆஹா... குருவே சரண்டர்...!


அருளுரை: 

ஜென் வெங்கடேஷானந்தா..


குருவே மனசாட்சி உறுத்துகிறது என்றால் ஏன் தவறு செய்கிறார்கள்?

குழந்தாய் அது மனதனின் தோல்வி..!

எப்படி குருஜி விளக்குங்கள்..!

மகனே.. நல்லதை செய்யும் போது மனசாட்சி தனியாக வந்து கேள்வி 
கேட்காது..உனக்கும் அதை கேட்கவேண்டிய அவசியமும் வராது உன்
செயல்களோடு அது இணைந்திருக்கும்.. ஆனால்..

கெட்டதை செய்யும் போது மனசாட்சி கேள்வி கேட்கும், எச்சரிக்கும் 
அதற்கு பயந்தால் உன் செயலை கைவிடுவாய்....மீறி அந்தத் தவறைச்
செய்தால் அங்கு உன் மனசாட்சி தோற்றுவிடுகிறது.! 

குருஜி.. இது எப்படி மனிதனின் தோல்வி? தோற்றது மனசாட்சி தானே.!

மகனே மனசாட்சியை மீறுபவன் எப்படி மனிதனாக இருக்க முடியும்.! அதன்
சொல் கேளாது தவறிழைத்துவிட்டு சாகும் வரை நிம்மதியின்றி உறுத்தலுடன்
வாழ்வது வெற்றிகரமான வாழ்க்கையா?! இங்கு நான் மனசாட்சியின் தோல்வி 
என்று குறிப்பிட்டது அது உன்னை காப்பாற்ற முடியாது போனதே.!

மனசாட்சியின் எச்சரிக்கையை மீறுபவர்களுக்கு சாகும் வரை உறுத்தலான 
வாழ்வு தான்..! புரிகிறதா குழந்தாய்...!

ஆஹா..ஆஹா... குருவே சரண்டர்...!


அருளுரை: 

ஜென் வெங்கடேஷானந்தா..


குருவே பதிலில்லா கேள்வி எது?

குழந்தாய் உலகில் எல்லா கேள்விக்கும் பதில் உள்ளது..
அதற்கு நான் ஒரு சிறு கதை சொல்கிறேன்.. கேள்..!

காட்டில் சிங்கமும் நரியும் நண்பர்களாக இருந்தன.. 

நரியின் ஆலோசனைப்படிதான் சிங்கம் வேட்டையாடும்..

சிங்கம் சாப்பிட்ட பின் மீதி நரிக்கு..ஆனால் முதலில்..

சிங்கம் தான் சாப்பிட வேண்டும்.. பிறகு தான் நரிக்கு...

ஒரு நாள் சிங்கத்துடன் உறவினராக இருப்போம் வா..

என் ஒரு காட்டெருமையை வஞ்சகமாக பேசி அழைத்து..

வந்தது நரி.. அவ்வெருமையும் சிங்கத்தின் உறவினன் என்ற..

மகிழ்வோடு வர சிங்கம் அதை பாய்ந்து கொன்றது.. சரி நான்..

போய் குளித்துவிட்டு வருகிறன் இந்த இரையை பார்த்துக்கோ..

என நரியிடம் கூறிவிட்டு சென்றது.. சிங்கத்திற்கு முன் இதுவரை..

சாப்பிட்டிராத நரி இம்முறை சிங்கம் வருவதற்குள் எருமையின்..

மூளையை தின்றுவிட்டது.. திரும்பி வந்த சிங்கம் சாப்பிட துவங்கி..

மூளையை காணவில்லை என்பதை கண்டுபிடித்தது.. நரியே..

இந்த எருமையின் மூளை எங்கே என்றது கோபத்துடன்..

நரி பதறாமல் சொன்னது.. நண்பா மூளை மட்டும் இருந்திருந்தா..

இந்த எருமை இங்கு என் பேச்சை நம்பி வந்திருக்குமா..! என்றது.

நீ அறிவாளி என்றால் எந்த சமயத்தில் எவர் கேட்டாலும் எல்லா 
கேள்விகளுக்கும் உன்னிடம் பதில் இருக்கும்

ஆஹா..ஆஹா... குருவே சரண்டர்...!


அருளுரை: 

ஜென் வெங்கடேஷானந்தா..


குருவே கவலை இல்லாத மனிதன் இவ்வுலகிலுண்டா?

குழந்தாய் முதலில் கவலை என்றால் என்ன?

என்ன ஸ்வாமி சிறுவன் என்னிடம் கேட்கிறிர்கள்?

பரவாயில்லை உனக்கு தெரிந்ததை சொல் மகனே..! 

எனக்கு சொல்லத் தெரியவில்லை குருஜி நீங்களே கூறுங்கள்..!

நாம் நினைப்பது நடக்குமா என எதிர்பார்ப்பதே கவலை..!

நினைப்பது நடந்துவிட்டால் கவலை போய்விடுமா ஸ்வாமி?

அதுதான் இல்லை கவலைகள் எண்ணிலடங்காதவை...

அது எப்படி விளக்குங்கள் குருஜி..!

குடும்பம், உறவு, தொழில், நட்பு,சுற்றம், பணம், புகழ், அரசியல், கல்வி, 
வேலை, திருமணம், பந்தம், பாசம்,ஆரோக்கியம், நியாயம், அநியாயம், 
நீதி,நேர்மை,இன்னும் என்னனென்ன உண்டோ அத்தனையிலும் அது
பற்றிய கவலையைப் பார்ப்பதே மனித இயல்பாகிறது.! 

மனிதனுக்கு வாழ்வில் கவலை இல்லை என்பது தான் மிகப் பெரிய 
கவலையாக இருக்கும்.! உழைக்காது எதிர்பார்ப்புகளை வளர்த்துக்
கொள்வது கவலையின் தொடக்கம்..திட்டமிடுபவன் கவலைகளை
விரட்டி அடிக்கிறான்.! சோர்வுற்றமனமே கவலைப்படும்..எப்போதும் 
சுறுசுறுப்பாக இருந்தால் கவலையே வராது..!

பிரச்சனைகள் வரும்போது அதைக் கண்டு சோர்ந்துவிடாமல் அந்த
பிரச்சனைக்குள்ளும் ஒரு வாய்ப்பு ஒளிந்திருக்கிறதா எனக் கண்டு...
அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவனே சிறந்த மனிதன்..!
அவன் தான் கவலைஇல்லாத மனிதன்...!

ஆஹா..ஆஹா... குருவே சரண்டர்...!


அருளுரை: 

ஜென் வெங்கடேஷானந்தா..


குருவே புகழும் ஒரு போதையாமே?

ஆமாம் குழந்தாய்..அதில் சந்தேகமென்ன!

பிறகு ஏன் அதை எல்லோரும் விரும்புகின்றனர்?

புகழ் ஒரு சிற்றின்பம்.! மனிதர்கள் எப்போதும் சிற்றின்ப பிரியர்கள் அது தான்..!

புகழில் மயங்காது இருப்பது எப்படி ஸ்வாமி?

உன் பெயர் பட்டத்தினாலோ,புகழ்ச்சியாலோ பேசப்படுவதை
எப்போது நீ விரும்புகிறாயோ அன்று தான் நீ அதன் அடிமையாகிறாய்.!

நீ செய்த நல்லவைக்கு நல்லதும், தீயவைக்கு தீயதும் தொடர்ந்து வரும்.!
அதை எந்த புகழும் தடுக்காது..புகழுரை என்பதே பொய்யுரை 

உலகில் தாய் தந்தையரை விட புகழுதலுக்குரியவர் எவருமில்லை..! இது
மட்டும் நினைவிலிருந்தால் பெயர்,புகழ்,பட்டம் மனிதனுக்கு தேவையே இல்லை..!

ஆஹா..ஆஹா... குருவே சரண்டர்...!

என் ஞானக்கண்ணும் இன்று தான் திறந்தது துறவிக்கு எதற்கு பட்டங்கள்
என்ற ஞானோதயம் வந்ததால் பட்டங்கள் அனைத்தும் துறந்து விட்டேன்... 
இனி இதுவே என் பெயர்.. (ஜென் என்பது பட்டமல்ல... நிலை)

அருளுரை: 

ஜென் வெங்கடேஷானந்தா..


குருவே பெண்கள் மட்டும் எப்படி எதிலுமே திருப்தி அடைவதில்லை?

குழந்தாய் இந்த தவறான தகவலை உனக்கு சொன்னது யார்?

குருஜி நம் ஆசிரமத்திற்கு வரும் கணவர்கள் தான் சொன்னார்கள்..!

தவறுகளை அவர்கள் மீது வைத்துக் கொண்டு பெண்களை குறை சொன்னார்களா?

புரியவில்லை ஸ்வாமி..! இச் சிறுவனுக்கு அதை விளக்குங்கள்..!

குழந்தாய் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருப்பதே இல்லறம்.! அது நல்லறமாக
ஒருவருக்கொருவர் புரிதல் வேண்டும்..உங்களது நேசிப்பு பரஸ்பரம் இருவரது 
எண்ணமும் ஒன்று போல் இருப்பது.. அப்படி இல்லாவிட்டால் அதற்கேற்றபடி
தம்மை மாற்றிக் கொள்வது அதாவது விட்டுக் கொடுப்பது..!அப்படிச் செய்யாது போனால்..

பெண்களுக்கு அது ஒரு வித தனிமை மனப்பான்மையை உண்டாக்கும் கணவனின் கவனம் தன் மீது திரும்ப எதிலும் திருப்தி இல்லாதது போல் அவர்களும் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்..அவர்கள் அன்புக்கு ஏங்குபவர்கள் விட்டுக் கொடுத்து பாருங்கள்.. அவர்கள் நேசிப்பின் ஆழம் அனைவருக்கும் புரியும்..! சரியான புரிதலே மனைவியின் திருப்தி என்ன என எல்லா கணவர்களும் அறிந்து கொள்வர்..!

20 பவுன் நகை வாங்கித் தந்தால் வருகிற சந்தோஷத்தை விட..அன்போடு வாங்கித்தரும் 20 ரூபாய் மல்லிகைப்பூ போதும் பெண்களின் திருப்திக்கு...!

ஆஹா..ஆஹா... குருவே சரண்டர்...!


அருளுரை: 

சுவாமி ஶ்ரீலஶ்ரீ விஜயபூஷண சன்மார்க்க சாகர
        
       ஜென் "வெங்கடேஷானந்த பார்வதி"



குருவே போதும் என்ற மனம் கிடைக்க என்ன செய்யவேண்டும்?

குழந்தாய் அதற்கு முதலில் நீ ஆசைகளை துறக்க வேண்டும்..!

அதைத்தவிர வேறு வழியில்லையா ஸ்வாமி?

ஏன் இல்லை ஆசைப்பட்டாலும் அதை கட்டுப்படுத்து...!

அதுதான் முடியவில்லையே ஸ்வாமி...!

எப்போதும் உனக்கு கீழ் உள்ளவரை நினைத்துப்பார் சரியாகும்..!

ஆக மனிதன் போதும் என்று சொல்வதே இல்லை.. சரியா குருவே?

தவறு மகனே..! எல்லா மனிதனும் போதும் என்று சொல்வார்கள்
அவர்கள்வயிறு நிரம்பியவுடன்...!

ஆஹா..ஆஹா குருவே சரண்டர்...!

வயிறு நிரம்பியதைப் போல நல்லெண்ணங்களால் மனதும் நிறைந்திருந்தால் போதும் என்ற குணம் அனைவருக்கும் கிட்டும்..இருக்கும்வரை இயன்ற அளவு இல்லாதவருக்கு உதவுங்கள்..
போதும் என்ற மனம் கிடைக்கும்...!

அருளுரை: 

சுவாமி ஶ்ரீலஶ்ரீ விஜயபூஷண சன்மார்க்க சாகர
        
       ஜென் "வெங்கடேஷானந்த பார்வதி"


குருவே மறதி என்பது குணமா? நோயா?

இரண்டுமல்ல குழந்தாய்.! மறதி என்பது மருந்து..!

மறதி என்பது மருந்தா?எப்படி குருவே?

மகனே..! ஆசை, காதல், துன்பம் இவையெல்லாம் 
இல்லாத மனித வாழ்வு உண்டா நீ சொல்..!

இவையெல்லாம் கட்டாயம் இருக்கும் ஸ்வாமி..!

உனக்கு ஏற்பட்ட இன்பம் பற்றி கவலையில்லை ஆனால்
துன்பத்தை மறக்க வேண்டாமா? ஆக மறதி சிறந்த மருந்தே..!

ஆஹா..குருவே சரண்டர்...!

கால ஓட்டத்தில் மறதி தான் மிகப் பெரிய மருந்து... மனிதர்களாகிய நாமும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்களித்து அதை உலகிற்கு உணர்த்துகிறோம்..!


அருளுரை: 

சுவாமி ஶ்ரீலஶ்ரீ விஜயபூஷண சன்மார்க்க சாகர
        
       ஜென் "வெங்கடேஷானந்த பார்வதி"


குருவே ஏப்ரல் 1 மட்டும் தான் முட்டாள்கள் தினமா?

குழந்தாய் இவ்வுலகில் எல்லா தினமுமே முட்டாள்கள் தினம் தான்..!

எல்லா தினங்களுமா? எப்படி ஸ்வாமி?

பற்றாக்குறையாக சம்பாதித்து, மனைவி பிள்ளைகள் கேட்டது வாங்கித்தர முடியாமல், கடன் வாங்கி விழி பிதுங்கி, ஏமாற்றுவான் எனத் தெரிந்து ஓட்டு போட்டு,

நிம்மதியான வாழ்வு கிடைத்துவிடும் என்று ஆயுள் முழுவதும் ஏங்கி, தினமும் தூங்கி நாளை விழிப்போம் என நம்பி நகரும் நாட்கள் அனைத்தும் முட்டாள்கள் தினமே...

ஆஹா... குருவே சரண்டர்..!

புத்திசாலி என்பவன் தான் முட்டாளிலில்லை என்று நடிப்பவேனே..!


அருளுரை: 

சுவாமி ஶ்ரீலஶ்ரீ விஜயபூஷண சன்மார்க்க சாகர
        
       ஜென் "வெங்கடேஷானந்த பார்வதி"


குருவே எரிச்சலூட்டுவது என்றால் என்ன?

இனிய காலை வணக்கம்.. 

குருவே எனக்கெதற்கு இப்போது வணக்கம்?

இனிய காலை வணக்கம்...

சரி நானும் வணங்குகிறேன்... என் கேள்விக்கு பதில்?

இனிய காலை வணக்கம்...

ஸ்வாமி என்ன ஆயிற்று உங்களுக்கு?

இனிய காலை வணக்கம்...

என்னை ஏதும் சோதிக்கிறீர்களா குருவே?

இனிய காலை வணக்கம்...

ஸ்வாமி என்னை மன்னியுங்கள் தவறாக ஏதும் கேட்டிருந்தால்..!

இனிய காலை வணக்கம்...

நீங்கள் இன்று மன அமைதி இன்றி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்..!

இனிய காலை வணக்கம்...

ஐயோ... போதும் ஸ்வாமி என்னால் முடியவில்லை...

இது தான் மகனே எரிச்சலூட்டுவது.....! புரிந்ததா?


எல்லா பதிவிலும் வீட்டில் நோட்டீஸ் போடுவது போல காலை வணக்கம் போடும் காலை வணக்க டிஸ்ட்ரிப்யூட்டர்களே...காலை வணக்கம் என்று ஒருவர் பதிவு போட்டிருந்தால் அங்கு போய் காலை வணக்கம் சொல்வதில் தப்பில்லை..! 

எல்லா பதிவிலும் நீங்கள் போடும் காலை வணக்கம் மேற்க்கண்ட உரையாடல் போலத்தான் எரிச்சல் தரும்.! ஒரு பதிவிற்கு அது சம்பந்தமாக ஒரு பதில் அளித்து அதோடு கூட உங்கள் காலை வணக்கத்தை சேர்க்கலாம்..! அது நீங்கள் அந்த பதிவிற்கு அளிக்கும் அங்கீகாரம்..!

காலையில் வணங்கியே தீர வேண்டும் எனில்பெற்ற தாய் தந்தையை வணங்குவீர் புண்ணியமாவது கிடைக்கும்..! இங்கு ஒரு புண்ணாக்கும் கிடைக்காது..! இதற்கும் காலை வணக்கம் சொல்லி நீங்கள் கடமையாற்றினால் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்..

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்... திருட்டை ஒழிக்க முடியாது...


அருளுரை: 

சுவாமி ஶ்ரீலஶ்ரீ விஜயபூஷண சன்மார்க்க சாகர
        
       ஜென் "வெங்கடேஷானந்த பார்வதி"



குருவே பித்து என்றால் என்ன?

குழந்தாய் அதுவும் ஒரு வகை ஞானமே..!

என்ன.! பித்து ஞானமா? எப்படி ஸ்வாமி?

பித்து என்பது ஆசையையும் குறிக்கும் புத்தி பேதலிப்பதையும் குறிக்கும்..!

ஆம் குருவே அது தெரியும்..! அது எப்படி ஞானமாகும்?

ஒன்றின் மீது பித்தாக இருப்பது ஆசை..! அந்த பொருள் உனக்கு
அளவுக்கு அதிகம் கிடைத்தால் உண்டாகும் சலிப்பே ஞானம்..!

ஆஹா..! அடுத்து ஸ்வாமி?

புத்தி பேதலித்தவர்க்கு மனித ஆசாபாசங்கள் தேவையில்லை.! அவர்கள்
எந்த பற்றும் இல்லாது வாழ்கிறார்கள் ஆகவே அதுவும் ஞானமே...!

ஆஹா...ஆஹா... குருவே சரண்டர்...


ஆசைப் பித்தினால் பேதலித்து பேசுகின்ற அனைவரும் "ஞானதேசிகர்களே..!


குறிப்பு :  (இது அரசியல் உரை அல்ல அருளுரை)


அருளுரை: 

சுவாமி ஶ்ரீலஶ்ரீ விஜயபூஷண சன்மார்க்க சாகர
        
       "வெங்கடேஷானந்த பார்வதி"



குருவே ஜென் நிலை என்றால் என்ன?

குழந்தாய் இது நல்ல கேள்வி..! ஃபேஸ்புக்கில் பலர் இது பற்றி ஒன்றும்
தெரியாமல் சல்லியடித்து கொண்டு இருக்கிறார்கள்..!

ஆமாம் ஸ்வாமி அதைப் பார்த்து தான் கேட்டேன்..!

மகனே நீயும் ஜென் தான் நானும் ஜென் தான்..!

நானும் ஜென்னா..?? புரியவில்லையே குருவே..!

செய்யும் செயலை ரசித்து செய்வதே ஜென்னிசம்..அப்படி செய்பவர்கள்
தான் ஜென்கள்..!

ஸ்வாமி..இதற்கு சற்று விரிவாக விளக்கமளியுங்கள்...

ஒருவர் செய்யும் செயல் அது தேநீர் அருந்துவதாக இருந்தாலும்அதை 
ரசித்து பருகுவதே ஜென்நிலை...!

டீக்குடிப்பதில் என்ன குருவே ஜென்நிலை?

அந்த தருணத்தில் அதைத் தவிர வேறு உன்னதம் உலகில் இருக்க முடியாது 
என அனுபவித்து அருந்துவதே ஜென்நிலை..!

சரி..ஸ்வாமி...! நானும் நீயும் ஜென் என்றீர்கள் அது எப்படி?

நீ என்னிடம் கேள்விகளை சளைக்காது கேட்பதால் நீயும் ஜென்..!
அதற்கு சலிக்காமல் பதில் தருவதால் நானும் ஜென்..! புரிந்ததா..!

ஆஹா...ஆஹா குருவே சரண்டர்...


ரசித்து செய்வது ஜென்நிலை என்றால் ரசித்து மனமார பாராட்டுவது தெய்வ நிலை..!
இதைப்படித்து லைக்கிட்ட நீங்கள் தெய்வங்கள்...!


அருளுரை: 

சுவாமி ஶ்ரீலஶ்ரீ விஜயபூஷண சன்மார்க்க சாகர
        
       "வெங்கடேஷானந்த பார்வதி"



குருவே.! இவ்வுலகில் எளியது எது? வலியது எது?.

குழந்தாய்.! சொல்வதும் செய்வதும் தான் அது.! 

புரியவில்லை குருஜி..?! 

மகனே சொல்லும், செயலும் என்று சொன்னதா புரியவில்லை..?

ஆமாம் குருஜி..சற்று தெளிவாக விளக்கவும்..!

குழந்தாய் பிறருக்கு அறிவுரை சொல்வது எளிது.!அதை சொன்னவரே
அதை செயல் படுத்துவது வலியது இப்போது புரிகிறதா..!

ஆஹா... குருவே சரண்டர்..!

நம்மால் செய்ய முடியாதவற்றை பிறருக்கு அறிவுரையாகக் கூறக்கூடாது..! 

அருளுரை: 

சுவாமி ஶ்ரீலஶ்ரீ விஜயபூஷண சன்மார்க்க சாகர வெங்கடேஷானந்த பார்வதி...!



குருவே.! நேற்று டிவியில் டெய்லர்கள் பற்றி ஒரு நிகழ்ச்சி..!

அப்படியா..! மகனே நன்றாக இருந்ததா?

இருந்தது... நீங்கள் சொல்லுங்கள் குருவே சிறந்த டெய்லர் யார்?

ஒரு டெய்லர் இருக்கிறார் அவரால் எல்லோரையும் திருப்தி படுத்த முடியும்!

அப்படியா ஸ்வாமி...! அவரது சிறப்பென்ன?

யாருக்கு எது சரியென்று பார்வையிலேயே பார்த்து அவரவர்க்கு ஏற்றபடி அளந்து தருபவர்..!

குருவே..! ஒரு வேளை அவர் தருவது பிடிக்கவில்லை என்றால்?

அதற்கு வாய்ப்பே இல்லை.! அவரைக்கூட உனக்கு பிடிக்காமல் போகலாம்
அவர் தருவதை மறுக்க கூடிய அதிகாரம் எவருக்குமில்லை..! 

ஓ அப்படியா..! அந்த டெய்லர் யார் ஸ்வாமி?

அவரா...! அந்த டெய்லரின் பெயர் இறைவன்..!

ஆஹா..! குருவே சரண்டர்...!


வாழ்க்கை எனும் ஆடையை வடிவமைத்து தருபவன் இறைவன்..! உன் தகுதியை உயர்த்த உயர்த்த உனக்கு புகழாடைகளை தைத்து தந்து கொண்டே இருப்பான்.! ஆணவமிருப்பின் அதை கிழித்து கந்தலாக்கியும் விடுவான்..!


அருளுரை: 

சுவாமி ஶ்ரீலஶ்ரீ விஜயபூஷண வெங்கடேஷானந்த பார்வதி...!

 (லேட்டஸ்ட் பட்டம் அட்டாச் ஆகியுள்ளது)


குருவே..! குருவே...!

குழந்தாய் ஏனிந்த பதட்டம்?

நம் ஆசிரமத்திற்கு ஒரு கூட்டம் வந்திருக்கிறது.!

அதனாலென்ன மகனே அனைவரையும் அன்போடு உபசரி..!

அதெல்லாம் செய்தாகிவிட்டது ஆனால்....

ஆனால்..? என்ன பிரச்சினை குழந்தாய்...

அவர்கள் நாம் என்ன சொன்னாலும் சொன்னதயே சொல்கிறார்கள்..

குழந்தாய் அவர்கள் அனைவரும் முகநூலில் உள்ளவர்களா?

அட..! எப்படி குருவே கண்டு பிடித்தீர்கள்? உங்கள் ஞானக்கண்னிலா?

ஞானக்கண் எதற்கு.?என்ன சொன்னாலும் அவர்கள் சொன்னதயே 
சொல்கிறார்கள் என்ற போதே அவர்கள் முகநூலில் யார் என அறிந்து கொண்டேன்..!

அவர்கள் முகநூலில் யார் ஸ்வாமி?

நீ என்ன கருத்துகள் போட்டாலும் கண்ணும் கருத்துமாக அதற்கு "காலை வணக்கம்" 
கமெண்ட் போடும் கருத்து பெட்டகங்கள் தான் அவர்கள்...

ஆஹா..! ஆஹா...! குருவே சரண்டர்...

பலனை எதிர்பாராது கடமையை செய்வது வேறு... நம் கடமையே யாருக்கும் எந்த பலனும் போய் சேர்ந்து விடக்கூடாது என்பது வேறு...

அருளுரை: 

சுவாமி ஶ்ரீலஶ்ரீ விஜயபூஷண வெங்கடேஷானந்த பார்வதி...!

 (லேட்டஸ்ட் பட்டம் அட்டாச் ஆகியுள்ளது)


குருவே நிலையானது எது? நிலையில்லாதது எது?

மகனே இவ்வுலகில் நிலையில்லாதது தான் நிலையானது.!
நிலையானது தான் நிலையில்லாதது இது தான் நியதி.!

ஒன்றும் விளங்கவில்லையே குருஜி....?

அதாவது அரசியல்வாதிகளுக்கு நாம் போடும் ஓட்டு நிலையானது.!
ஆனால் வரும் அரசாங்கம் நிலையற்றது... புரிகிறதா...?

இல்லை குருஜி சற்று விளக்கவும்..

எத்தனை ஆட்சிகள் மாறினாலும் இறக்கும் வரை உன் ஓட்டு நிலையானது..!
ஆனால் 5 வருடமே ஆளும் ஆட்சி நிலையற்றது.. நிலையில்லா அவர்கள் தான் 
நிலையான ஆட்சி தருவதாக சொல்லுகிறார்கள்.. நீயும் நம்புகிறாய் புரிகிறதா? 

ஆஹா குருவே சரண்டர்...!

நிலைத்து நிற்பது நிலை இல்லாததை தேர்ந்தெடுக்கிறது.. 
நம் நிலையை நிலையில்லாமல் ஆட்டி எடுத்து விடுகிறது...!


அருளுரை: 
சுவாமி வெங்கடேஷானந்த பார்வதி...!


குருவே நான் ஒரு கிரிக்கெட் வீரன்..!

அப்படியா குழந்தாய் உனது மனக்குறை என்ன?

குருவே அடிக்கடி என்னை அணியில் இருந்து தூக்கிவிடுகிறார்கள்..!

ஓ..அதுதான் உன் குறையா?

அதுமட்டுமல்ல குருஜி என்னால் அதிக ரன்கள் குவிக்க முடியவில்லை..!

மகனே வேறு எதாவது?

இல்லை குருஜி நான் நிரந்தரமாக அணியில் இடம் பிடித்து நிறைய 
சதங்கள் அடிக்க வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

நீ குடித்துவிட்டு நடிகைகளோடு பாரில் ஆடுவதை விட்டு கிரவுண்டிலே ஆடு..!
அது தான் தீர்வு இனி நோ ரவுண்ட் ஒன்லி கிரவுண்ட்...!

ஆஹா குருவே சரண்டர்...!

எங்கு ஆட வேண்டுமோ அங்குதான் ஆட வேண்டும் இடம் மாறி ஆடுவது எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கிவிடும்..! ஆடாத ஆட்டம் போட்டவர் ஆடி அடங்கிவிடுவர்...!


அருளுரை: 
சுவாமி வெங்கடேஷானந்த பார்வதி...!



குருவே சோதனைகளை தாங்கிக் கொள்வது எப்படி?

குழந்தாய் அவைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.!

புரியவில்லை குருவே..!

அதாவது உனக்கு இன்பம் வந்தால் ஏற்றுக் கொள்வதைப்போல்.!

அது எப்படி ஸ்வாமி இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரி ஏற்பது?

ஆம் மகனே இரண்டையும் ஒன்றாகத்தான் பார்த்தல் வேண்டும்..!

குருவே இரண்டும் ஒன்றென்றால் ஏன் அதை இன்பம் துன்பம் என
வேறு வேறு பெயர்கள் வைக்க வேண்டும்?

சரி உன் மனைவி பெயர் என்ன? 

அவள் பெயர் மங்களம் ஸ்வாமி..! 

அப்படியென்றால் மங்களம் உன் மனைவியா?

என்ன ஸ்வாமி இது இரண்டும் ஒன்று தானே..!

மகனே...! இப்போது புரிகிறதா இரண்டையும் ஒன்றாகப் பார்க்க வேண்டும் என்பது..!

ஆஹா... ஆஹா... குருவே சரண்டர்...!

இன்பமும் துன்பமும் நம்மிடமே இருக்கின்றது அதை அணுகுவதில் தான் சூட்சமம் இருக்கிறது, மனைவியின் அன்பை அவளது கண்டிப்பு என தவறாக நினைப்பது போல்..



அருளுரை: 
சுவாமி வெங்கடேஷானந்த பார்வதி...!



குருவே ஒருவன் எப்போதும் உண்மை சொல்வது சாத்தியமா?

மகனே சத்தியம் தான் நிலைக்கும் அதை கடைபிடிப்பதில் தவறில்லை.!

யாராவது அதனால் பாதிக்கப்பட்டால் கூடவா?

ஆம் மகனே உன் மனசாட்சி அதை மறைப்பது தவறு என்று சொல்லி விட்டால்
பிறர் பாதிப்பைப் பற்றிக் கவலைப்படக்கூடாது..!

நேற்று கூட என் உள்ளதை உறுத்திய ஒரு உண்மையை சொல்லி விட்டேன்..!

சபாஷ்..! நீ தான் என் சீடன்..! அப்படி யாரிடம் உண்மை கூறினாய்...!

நேற்று நம் ஆசிரமத்துக்கு வந்த வருமான வரி அதிகாரிகளிடம் குருவே..!

நம்மால் மறைக்கப்பட்ட சில உண்மைகள் மற்றவரால் வெளிப்படும் வாய்ப்பு உள்ளது..!

அருளுரை: 
சுவாமி வெங்கடேஷானந்த பார்வதி...!



குருவே மகாபாரதத்தில் காந்தாரிக்கு என்ன சிறப்பு?

அவளது கணவன்திருதராஷ்டிரன் கண் பார்வையற்றவன்.!

நான் படித்து இருக்கிறேன் குருவே..! 

தனது கணவன் காணாத எதையும் என் கண்களும் காணக்கூடாது
என்று தன் கண்களை கட்டிக் கொண்ட தியாகத் திருவுருவம் அவள்.!

ஆஹா..! மெய் சிலிர்க்கிறது..! ஏன் குருவே இந்தக் காலத்தில் 
பெண்கள் அப்படி தன் கணவருக்காக காந்தாரி ஆவார்களா?

ஏன் இல்லை எல்லாப் பெண்களும் அப்படி காந்தாரி ஆகிறார்களே..!

குருவே..! இந்தக் கால நவ நாகரீக பெண்களா? எப்படி?

கணவனின் உறவினர்க்கு துன்பம் என்றால் எல்லா பெண்ணுமே காந்தாரி தான்..!! 

ஆஹா... ஆஹா... குருவே சரண்டர்


பிறர் படும் துன்பத்தை கண்டு கொள்ளாது இருப்பதும் பெரும் துன்பத்தை தரும்..!


அருளுரை: 
சுவாமி வெங்கடேஷானந்த பார்வதி..!



குருவே தாங்கள் வசிக்கும் இவ்விடம் ஏன் ஆசிரமம் என அழைக்கப்படுகிறது.?

துறவிகள் இருக்குமிடம் அப்படித்தான் அழைக்கப்படும் குழந்தாய்.!

சற்று விளக்குங்கள் ஸ்வாமி...!

மகனே இன்று துறவு பூண்டவர்கள் சந்தேகத்திற்கு 
அப்பாற்பட்டவராக இருத்தல் வேண்டும், இல்லையா?

ஆமாம் குருவே மிக்க சரி.!

நமது சீடர்களை ஜாக்கிரதையாக தேர்வு செய்வது,பெண்களிடம் கண்ணியமாக பழகுவது, ஆசிரமத்தின் வரவு செலவுகளை முறை படுத்துவது, அரசியல்வாதிகளை அனுசரித்து போவது, நற்காரியங்களுக்கு நன்கொடையளிப்பது, ஆசிரம புகழ் பரப்புவது, அயல் நாட்டு பக்தர்களை கவர்ந்திழுப்பது,ஆன்மிகத் தலங்களுக்கு யாத்திரை செல்வது,செய்திகளில் எப்போதும் இருக்கும் படி பார்த்துக்கொள்வது, தியான வகுப்புகள், யோகநிலை கூட்டங்கள், நடத்துவது அதை பிரபலப்படுத்துவது,அதனை விளம்பரம் செய்வது இதைபோல இன்னும் பல.

ஆ.!, இவ்வளவு சிரமமா..! 

அதுதான் ஆசிரமம்...!!!!!!


"சிரமங்கள் பலப்பல இருந்தாலும் சிரத்தையுடன் நம் பணிகளில் ஈடுபடுவதே தெய்வீகம்"

அருளுரை: 
சுவாமி வெங்கடேஷானந்த பார்வதி...!



குருவே என் மனைவியை சந்தேகப்பேய் பிடித்து ஆட்டுகிறது.!

மகனே அது மிக மிக கொடூரமான பேய்..

அந்த பேயை அழிக்க முடியாதா குருவே?

அழிப்பது சுலபமல்ல அதற்கு ஆன்ம பலம் வேண்டும்..!

அதை எவ்வாறு பெறுவது குருவே.!

ஆசை,காமம்,துரோகம் இம்மூன்றையும் ஒழிக்க வேண்டும்.!

அய்யோ இல்லறவாசி என்னால் இது எப்படி குருவே சாத்தியம்..?

சாத்தியமானால் தான் மகனே சாந்தி கிடைக்கும்.

அந்த "சாந்தியால்" தானே ஸ்வாமி என் வீட்டில் இப்பிரச்சனையே..!

மகனே இது ஓயாது உன் மனைவி தான் இதற்கு நீதிபதி போய் வா..!

"பிரச்சனையின் வேர்கள் உனக்குள் இருந்தால் வாழ்க்கையில் வேறு யாராலும் உனக்கு நிம்மதி கிடைக்காது"


அருளுரை: 
சுவாமி வெங்கடேஷானந்த பார்வதி...!


குருவே கவலையை போக்குவது எப்படி?

குழந்தாய் கவலை ஒரு ஆடை போல அதை களைந்து விடலாம்.!

பிறகு ஏன் அனைவரும் அதை அணிந்து கொள்கிறார்கள் குருவே?

குழந்தாய் அணியும் போது அது அவர்களுக்கு தெரிவதில்லை.!

எனக்கு விளங்கும்படி சொல்லுங்கள் குருவே..!

மகனே சந்தோஷமாக திருமணம் செய்து கொள்கிறார்கள் அல்லவா.!?

ஆமாம் குருவே...!!

அதே தான்..! அப்போது அவர்கள் இருவருக்கும் தெரியாது 
அது தான் கவலை என்று..!

ஆஹா..! ஆஹா.... ! குருவே சரண்டர்...

நமது சந்தோஷங்கள் தான் பின்னாளில் கவலைகளாக மாறுகின்றன.! 

அருளுரை: 
சுவாமி வெங்கடேஷானந்த பார்வதி....


குருவே துறவறம் இல்லறம் என்ன ஒற்றுமை?

மகனே..! இரண்டிலும் அறம் இருப்பதே ஒற்றுமை.!

ஓ,,அப்படி என்றால் ஏன் நீங்கள் துறவறம் பூண்டீர்கள்?

மகனே அவ்வறம் உடல் சார்ந்தது இது மனம் சார்ந்தது..!

ஓ நீங்கள் ஆண்-பெண் உறவை சொல்கிறிர்களா?

மகனே உடல் சார்ந்தது என்றால் அது தானா?

பிறகு வேறென்ன இருக்க முடியும்..குருவே?.!.?

நீ படுகின்ற காயங்களும் அடி உதைகளும் உடல் சார்ந்தது தானே.!

ஆஹா...அடி தூள்..! குருவே சரண்டர்..

நீயும் பொய்.. நானும் பொய் காயமே அது மெய்...! இல்லறமே பெருங்காயம்..!

அருளுரை: 
சுவாமி வெங்கடேஷானந்த பார்வதி....



குருவே புலனடக்கம் கடினமா?

உலகில் கடினம் என்பது எதுவுமில்லை குழந்தாய்.!

அடக்குவது சிரமமாக உள்ளது குருவே..

அப்படியா உனக்கு என்ன பிரச்சனை சொல்.!

என்னால் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதை நிறுத்த முடியவில்லை..

அப்படியா அவை உன் பார்வையில் படாதபடி பார்த்துக் கொள்.

குருவே பார்க்காவிட்டாலும் குறிப்பிட்ட நேரத்தில் ஞாபகம் வருகிறது

ம்ம்ம்..மனதை நிலைப்படுத்தி ஆசையை விழுங்கிவிடு.!

முயற்சிக்கிறேன் குருவே.. வருகிறேன்.

நில்..ஆசிரம நிர்வாகியிடம் சொல்லி எனக்கு 4 ஐஸ்க்ரீம் கொண்டு வரச்சொல்.!

குருவே என்ன இது!!!!!!!!! எனக்கு அறிவுரை சொல்லிவிட்டு தாங்களே..

நிறுத்து நான் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதில் உனக்கு என்ன ஆச்சரியம்! புலனடக்கம் என்பது ஐஸ்க்ரீம் சாப்பிடாமல் இருப்பதல்ல..! 

50 தின்றால் திணறிவிடுவாய் நமக்கு பிடித்ததே ஆனாலும் வயிறு நிரம்பியிருந்தால் மறுப்போம் அல்லவா.. 

அதே தான்.! எனக்கு ஐஸ்க்ரீம் வேண்டாம்.! உனக்கு உணர்த்தவே அப்படிச் சொன்னேன் புரிகிறதா.! 

ஆஹா.! குருவே சரண்டர்...

"உனக்குள் பேரின்பம் நிறைந்து இருந்தால் சிற்றின்பம் உள்ளே வராது"


அருளுரை: 
சுவாமி வெங்கடேஷானந்த பார்வதி....



குருவே இல்லறத்தில் இருப்பவருக்கும் பரவச நிலை கிட்டுமா?

ஏன் கிட்டாது மகனே.! கட்டாயம் கிட்டும்.

அது தாம்பத்ய உறவில் அல்லவா கிடைக்கும்..

யார் சொன்னது அப்படி இன்றியும் அந்நிலையை அடையலாம்.!

ஆச்சரியமாக உள்ளதே..! அதெப்படி குருவே?

உன் தாய் வீட்டுக்கு போய் வா என்றதும் மனைவிக்கும்...

அப்படி அவள் கிளம்பிவிட்டால் கணவனுக்கும் ஏற்படும் நிலையே

                           பரவச நிலை...!

"வாழ்க்கை ஒரு நவரசம்....நிம்மதியே பரவசம்"

அருளுரை: 
சுவாமி வெங்கடேஷானந்த பார்வதி....



குருவே நம் பிறவிப்பயன் என்பது என்ன?

குழந்தாய் அது சொல்லியவுடன் புரியாது.

நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்..

அதற்கான காலம் இன்னும் கனியவில்லை..

எவ்வளவு காலம் அதற்கு காத்திருக்க வேண்டும்..

நீ ஞானம் பெற வேண்டும் அறுதியிட்டு கூற முடியாது

ஞானம் பெற என்ன செய்ய வேண்டும்?

கற்றுக்கொள்ள வேண்டும் இப்படி அவசரப்படக் கூடாது..

மன்னியுங்கள் குருவே இனி நான் உங்கள் சொல் கேட்பேன்.

ஆஹா நான் பிறவிப்பயனடைந்தேன் குழந்தாய்...!


கீழ்ப்படிய கற்றுக் கொண்டால் நீ தேடியவை உன்னைத் தேடி வரும்.


அருளுரை: சுவாமி வெங்கடேஷானந்த பார்வதி....



குருவே மாயை என்பது என்ன?

சீடா .! இல்லாத ஒன்றை இருப்பது போல நினைப்பதே மாயை.

எனக்கு புரியவில்லை குருவே.!

பொய்யான கற்பனையில் வாழ்வது

இப்போதும் விளங்கவில்லை குருவே.!

மாயை ஒரு சுழல் அதில் சிக்கியவர்கள் அதற்குள் தான் உழல்வார்கள்..

மன்னிக்க வேண்டும் குருவே இன்னும் புரியும் படி சொல்லவும்.!

மாயை நம் பொன்னான வேளைகளையும் வேலைகளையும் தின்றுவிடும்.

குருவே என் அறிவுக்கு மாயை என்ன என்பது பிடிபடவே இல்லை

(குரு கண்மூடி யோசித்து) சீடா.! இப்போது விளங்குகிறதா பார்....

மாயை என்பது #ஃபேஸ்புக்...

ஆஹா தீர்ந்தது என் சந்தேகம்... குருவே சரண்டர்..


மாயலோகத்து மனிதர்களுக்கு அவ்வுலகே மாயம் என்ற எண்ணம் மாயமாகிவிடுகிறது.!


அருளுரை: சுவாமி வெங்கடேஷானந்த பார்வதி....



குருவே ஆசையை அடக்குவது எப்படி?

நீ எதன் மீது ஆசைப்பட்டாய் சீடா?

நமது ஆசிரமத்திலுள்ள ஒரு மாதாஜி மீது.!

ம்ம் பெண்ணாசை...இயல்பு தானே..

இருப்பினும் அது தவறோ என மனம் குழம்புகிறது

ஓ.. அப்படியா எப்படி அவள் உன்னை கவர்ந்தாள்

அவள் சேலை உடுத்தும் விதம் ஸ்வாமி அதை 
பார்த்ததும் ஆசையை அடக்க இயலவில்லை.

மன்னிக்கவும் சீடனே இனி நீ துறவில் இருக்க முடியாது 
நீ லெளகீக வாழ்விற்கு திரும்பிவிடு..

வேறு வழியில்லையா குருவே?

இல்லை போய்விடு... (சீடன் கிளம்புகிறான்)

குரு (மனதிற்குள்) ஆசிரமத்தின் யூனிஃபார்மை உடனே மாற்ற வேண்டும்...!

பிறர் கெடுவதில் நமது பங்கும் இருக்கிறது..!

அருளுரை: சுவாமி வெங்கடேஷானந்த பார்வதி....



நிம்மதி எங்கிருக்கிறது குருவே... குரு பதில் பேசாமல் சீடனை உற்றுப் பார்க்கிறார்...

குருவே நிம்மதி எங்கிருக்கிறது? மீண்டும் குரு மெளனம்....

உங்களைத் தான் குருவே நான் கேட்டது உங்கள் காதில் விழவில்லை...! குரு மெளனம் தொடர்கிறது... 

அடச்சே.! சீடன் கோபமாக வெளியேற குரு அவன் வெளியேறி தொலைவில் போனதை பார்த்துவிட்டு சொன்னார்...

"அப்பாடா போயிட்டான் நிம்மதி"

"நிம்மதி எங்கே என்று நாம் தேடப்போய் பிறர் நிம்மதியை கெடுத்து விடுகிறோம்"

"அருளுரை" - 
சுவாமி வெங்கடேஷானந்த பார்வதி...

Friday 21 February 2014

பூசணியும்... ஈசனும்...!

கவி காளமேகத்தின் சிலேடை வெள்ள(ல்ல)ம்....

பூசணிக்காயும்... பரமசிவனும்...


பாடல்...

அடிநந்தி சேர்தலா லாகம் வெளுத்துக்

கொடியுமொரு பக்கத்திற் கொண்டு - வடிவுடைய

மாசுணத்தைப் பூண்டு வளைத்தழும்பு பெற்றதனால்

பூசணிக்கா யீசனெனப் போற்று.

இதில் கடைசி வரிக்கான விளக்கம் பூசணியை ஈசன் என்று கருதி போற்ற வேண்டும் ஏனெனில்.... இனி சிலேடையை பார்க்கலாம்...

பூசணி..... அடி நந்தி சேர்தலால் : அடிப்பகுதியிலே பெரிய காம்பு சேர்ந்து இருப்பதால், ஆகம் வெளுத்து கொடியு மொரு பக்கத்திற் கொண்டு : உடல் வெளுத்து ஒரு பக்கம் கொடியைக் கொண்டு, வடிவுடைய மாசுணத்தைப் பூண்டு: அழகான வெண் சுண்ணத்தை மேற்புறத்தே கொண்டு, வளைத்தழுப்பு பெற்றதனால் : வளைவான தழும்புகள் பெற்றதனால்...

பரமசிவன்.... அடி நந்தி சேர்தலால் : திருவடியிலே நந்திப் பெருமான் வீற்றிருக்க, ஆகம் வெளுத்து கொடியு மொரு பக்கத்திற் கொண்டு : திருநீறணிந்து உடல் வெள்ளையாகித் தோன்ற பூங்கொடி போன்ற உமையவளை ஒரு பக்கம் கொண்ட, வடிவுடைய மாசுணத்தைப் பூண்டு: சிறந்த பாம்பாபரணத்தைக் கொண்டிருப்பதனாலும், வளைத்தழுப்பு பெற்றதனால் : அம்மையின் கரங்கள் திருமேனி தழுவியே இருப்பதால் அவர் வளையல்கள் அழுத்திய தழும்பு உடையவர்...


என்னுடைய பஞ்ச் : ஈசன் முடி சந்திர பிம்பத்திற்கும் அரிந்த பூசணித்துண்டிற்கும் ஒரே பெயர்.! அது என்ன?

விடை: "கீற்று"

Thursday 20 February 2014

அட்டாக் - 3

அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5


விக்ரம் என்றால் விக்கில் உள்ள ரம் அல்ல...

மார்டின் என்றால் நெஞ்சில் டின் கட்டுவதல்ல...

ரெய்னா என்றால் மழையா என கேட்பதல்ல...

மோர்கன் என்றால் துப்பாக்கியில் மோர் ஊற்றுவதல்ல...

பீட்டர் என்றால் அடித்து கிழிப்பதல்ல...


தொடரும்......



அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5


பாஸ்போர்ட் என்பது தேர்ச்சி பெற்ற கோட்டையல்ல...

ராக்போர்ட் என்பது துறைமுகப் பாறை அல்ல...

கம்ஃபோர்ட் என்பது கோட்டையை அழைப்பதல்ல...

ஃபுட்போர்டு என்பது காலில் மாட்டும் போர்டல்ல..

எக்ஸ்போர்ட் என்பது முன்னாள் துறைமுகமல்ல...


தொடரும்......



அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5


5 செண்ட்டில் வீடு என்பது 5 பாட்டில் செண்ட் இருக்கும் வீடல்ல...

இன்னாசெண்ட் என்பது செண்ட்டை என்னவென்று கேட்பதல்ல...

டீசெண்ட் என்பது டீ கலந்த செண்ட் அல்ல...

ஆப்செண்ட் என்பது அரை பாட்டில் செண்ட் அல்ல...

கிரஷெண்ட் என்பது செண்ட்டை கசக்கி பிழிவதல்ல...


தொடரும்......



அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5


ஹாலிவுட் என்பது கட்டையின் லீவல்ல...

ப்ளைவுட் என்பது பறக்கும் கட்டையல்ல...

கோலிவுட் என்பது மரத்தால் செய்த கோலியல்ல...

டைகர்வுட் என்பவர் ஒரு கட்டைப்புலி அல்ல...

பாலிவுட் என்பது பாலி தீவிலுள்ள மரமல்ல...


தொடரும்......



அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5


டாக்டரேட் என்றால் டாக்டரின் விலை அல்ல...

கால்குலேட்டர் என்பது தாமதமான கால் அல்ல...

அக்நாலேட்ஜ் என்பது 'ஃ'பற்றிய அறிவு அல்ல...

ஃபென்டாஸ்டிக் என்பது ஒரு குச்சி அல்ல...

எக்ஸ்ட்ரா என்பது ஜூசில் போடும் ஸ்ட்ரா அல்ல...


தொடரும்....



அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5


பேக் கிரவுண்ட் என்பது மைதானத்தின் பின்புறம் அல்ல...

அண்டர்கிரவுண்ட் என்பது மைதானத்தின் அடிப்புறமல்ல...

"சர்"ரவுண்ட் என்பது பட்டம் பெற்ற உருண்டை அல்ல...

கிரவுண்ட்நட் என்பது மைதானத்திலுள்ள பருப்பல்ல...

கேஷ்யூநட் என்பது பணம் வைத்திருக்கும் பருப்பல்ல...


தொடரும்....



அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5


விண்டோA/C என்பது மைக்ரோ சாஃப்ட் அக்கவுண்ட் அல்ல...

எந்த செல்போன்களும் வட்டமாக இருக்காது...

டிராவல்பேக்கால் தனியாக டிராவல் செய்ய முடியாது...

CD ப்ளேயர் என்பது ஒரு விளையாட்டு வீரர் அல்ல...

நைட் லேம்ப்பை பட்டப்பகலிலும் எரிய வைக்கலாம்...


தொடரும்....



அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5

ஆபரேஷன் தியேட்டரில் புரொஜக்டர் கிடையாது...

டிரான்ஸ்பார்மர் என்றால் விவசாயியை மாற்றுவதல்ல...

சப்போர்ட் என்பது உதவி துறைமுகமல்ல...

ஐலேண்ட் என்றால் கண் இறங்கும் இடமல்ல...

போயிங் என்பது விமானத்தில் போவது மட்டுமல்ல வருவதும்...

தொடரும்.....



அட்டாக் ஆறுமுகத்தின்....

 அரிய தகவல்கள் - 5.


 You tube என்பது லேபில் உள்ள ட்யூப் அல்ல...

Test tube என்பது ட்யூபை சோதிப்பது அல்ல...

Blue tooth என்பது நீல நிறப் பல் அல்ல...

FBபதிவுகளின் ஷேர் பங்குசந்தையில் வராது...

Network என்பது வலைகளில் செய்யும் வேலையல்ல...


தொடரும்.....



அட்டாக் ஆறுமுகத்தின்....

 அரிய தகவல்கள் - 5.


காம்பினேஷன் என்பது ஒரு நாடல்ல...

கார்பரேஷன் என்பது ரேஷன் கடையல்ல...

கம்யூனிகேஷன் என்பது ஒரு கட்சியல்ல...

காம்ப்ளிகேஷன் என்பது காம்ப்ளியின் பணமல்ல...

வேல்யூவேஷன் என்பது மதிப்பின் வேஷமல்ல...


தொடரும்....




அட்டாக் ஆறுமுகத்தின்....

 அரிய தகவல்கள் - 5.


கன்பூசியஸ்"என்பவர் குழம்பி போனவர் அல்ல...

பிளாட்டோ"என்பவர் போதையில் மட்டையானவர் அல்ல...

மாவோ"என்பவர் இட்லி மாவு விற்பவர் அல்ல...

காஸ்ட்"ரோ என்பவர் விலையை நிர்ணயிப்பவர் அல்ல...

மண்டே"லா என்பவர் திங்கட்கிழமை சட்டம் அல்ல...


தொடரும்.....

அட்டாக் ஆறுமுகத்தின்....

அரிய தகவல்கள் - 5.


லைப்ரரி என்பது பொய் சொல்லும் இடமல்ல...

கீ-செயின் என்பது கழுத்தில் மாட்டும் நகையல்ல...

சீடி என்பது சீடனின் பெண்பால் அல்ல...

மணி பர்சில் உள்ள மணி அடிக்காது...

ஹாட் பேக் என்பது நெருப்பு உள்ள பை அல்ல...


தொடரும்...



அட்டாக் ஆறுமுகத்தின்....

அரிய தகவல்கள் - 5.


சீலிங் ஃபேன் என்பது சீல் வைக்கப்பட்டதல்ல...

வாட்டர் பாட்டிலில் ஜூஸும் ஊற்றலாம்...

லேப் - டாப் என்பது ஆராய்ச்சிகூட கூரையல்ல...

பிசிபேளாபாத் என்பது அகமதாபாத் அருகில் உள்ள ஊர் அல்ல...

டிகிரி காபி என்பது பட்டம் பெற்றது அல்ல...


தொடரும்.....


அட்டாக் ஆறுமுகத்தின்....

அரிய தகவல்கள் - 5.


குரோஷியா என்பது காகங்களின் நாடல்ல...

ஸ்டாக்ஹோம் என்பது வீட்டில் இருப்பு வைப்பதல்ல...

பின்லாந்து என்பது ஊசி விற்கும் நாடல்ல...

செக் குடியரசு! குடியரசு என்பவரின் செக் அல்ல...

டென்மார்க் என்பது பத்து மதிப்பெண்ணயும் குறிக்கும்...


தொடரும்.....



அட்டாக் ஆறுமுகத்தின்....

அரிய தகவல்கள் - 5.


லாஸ் ஏஞ்சல்ஸ் என்றால் நஷ்டமடைந்த தேவதைகள் அல்ல...

உருகுவே என்பது உருகிய பாதை அல்ல...

அண்டார்டிக் என்பது அண்டாவில் டிக் செய்வதை குறிக்காது...

கேப் டவுன் என்பது தொப்பி விற்கும் நகரம் அல்ல...

துருக்கி என்பது துரு பிடித்த சாவி அல்ல...


தொடரும்....



அட்டாக் ஆறுமுகத்தின்....

அரிய தகவல்கள் - 5.


எலிசபெத் டைலர் ஒரு தையற்காரி அல்ல...

ஜேம்ஸ்பாண்ட் பத்திரம் விற்பவர் அல்ல...

சில்வர்ஸ்டர் ஸ்டேலின் வெள்ளி வியாபாரி அல்ல...

ஜிம்கேரி ஜிம் வைத்து நடத்துபவர் அல்ல...

டாம் க்ரூஸ் என்பது கப்பலின் பெயர் அல்ல....


தொடரும்.....



அட்டாக் ஆறுமுகத்தின்...

அரிய தகவல்கள் - 5

எலுமிச்சை சாதத்தில் எலுமிச்சை பழம் இருக்காது...

புளியோ"தரை"யில் அமர முடியாது...

வெஜி"டபிள்"பிரியாணி என்பது ஒரு பிரியாணியே...

மல்லி சாதம் மல்லிகை பூவால் செய்ததல்ல...

தேங்காய் சாதத்திற்குள் தண்ணீர் இருக்காது...


தொடரும்....



அட்டாக் ஆறுமுகத்தின்...

அரிய தகவல்கள் - 5


டேஷ் போர்டு என்பது காலியான போர்டு அல்ல...

டைப் செய்யும் கீபோர்டில் சாவிகள் இருக்காது...

க்ளிப்போர்டு என்பதில் க்ளிப் மாட்டியிருக்காது...

பிளாக்போர்டு என்பது தடை செய்யும் போர்டல்ல...

போர்டு மீட்டிங் என்பது போர்டுகள் சந்திப்பதல்ல...


தொடரும்...



அட்டாக் ஆறுமுகத்தின்....

 அரிய தகவல்கள் - 5

அட்மினிஸ்ட்ரேஷனில் அரிசி கிடைக்காது...

ஜெனரேஷன் என்பது ஜென்களின் ரேஷன் அல்ல...

கார்ப்பரேஷன் என்பது கார் விற்கும் ரேஷன் அல்ல...

ஆப்ரேஷன் என்பது ஆப்பு கிடைக்கும் ரேஷனல்ல...

ரிஜிஸ்ட்ரேஷன் என்பது ரேஷனில் போய் பெயர் பதிவது அல்ல...

தொடரும்....



அட்டாக் ஆறுமுகத்தின்...

அரிய தகவல்கள் - 5


பியூட்டி"புல்லை" மாடு தின்னாது...

வொண்டர்புல் என்பது அதிசயப் புல் அல்ல...

புல்பாட்டிலை வைத்து சியர்ஸ் சொல்வது சியர்புல் அல்ல...

புல்லுகட்டு மீது அக்கறை கொள்வது கேர்புல் ஆகாது...

சக்ஸஸ்புல் என்பது வெற்றி பெற்ற புல் இல்லை...


தொடரும்...



அட்டாக் ஆறுமுகத்தின்...

அரிய தகவல்கள் - 5


நண்பர்களுக்கு ட்ரீட் கொடுப்பது ட்ரீட்மெண்ட் அல்ல...

பேஸ்மெண்ட் என்பது முகத்தில் இருப்பதல்ல...

டெவலப்மென்ட் என்பது போட்டோ டெவலப் செய்வதல்ல...

டாக்குமெண்ட் என்பது நாய் வளர்ப்பது அல்ல...

எண்டர்டெயின்மெண்ட் என்பது வாசலில் செய்வதல்ல...


தொடரும்...



அட்டாக் ஆறுமுகத்தின்... 

அரிய தகவல்கள் - 5.  

ஃபுட் கோர்ட் என்பது உணவுக்கான நீதிமன்றம் அல்ல...

டென்னிஸ் கோர்ட்டிலும் ஜட்ஜ் இருப்பார்...

கோர்ட் இஸ் அர்ஜண்ட் என்பது கோர்ட் அவசரப்படுவதல்ல...

கோர்ட் ஆர்டருக்கு பொருட்கள் சப்ளை செய்ய முடியாது...

மொபைல் கோர்ட்டுக்கு நெட்வொர்க் தேவையில்லை...

தொடரும்....



அட்டாக் ஆறுமுகத்தின்... 

அரிய தகவல்கள் - 5


சிம்கார்டை கேஸ் அடுப்பு சிம்முக்கு போட முடியாது...

சிலிண்டர் என்பது சிலி நாட்டை சேர்ந்தது இல்லை...

கேஸ்கட் என்பது கேஸை வெட்டுவதல்ல...

கேஸ்லைட்டரில் பல்பு இருக்காது..

குக்கருக்கு மேலே கேஸ் அடுப்பை வைக்கக் கூடாது...


தொடரும்....



அட்டாக் ஆறுமுகத்தின்... 

அரிய தகவல்கள் - 5

கெமிக்கல் என்பது ஒரு கல் அல்ல...

பிஸிக்கல் என்பது பிஸியான கல் அல்ல...

பேசிக்கல் என்பது பேசும் கல் அல்ல...

ப்ராக்டிக்கல் என்பது தவளைக்கல் இல்லை...

சர்ஜிக்கல் என்பது சர் பட்டம் பெற்ற கல் இல்லை...

தொடரும்....



அட்டாக் ஆறுமுகத்தின்... 

அரிய தகவல்கள் - 5.

மெக்கானிக் என்பவர் மெக்காவில் இருப்பவரல்ல...

டைட்டானிக் என்பது இருமல் டானிக் இல்லை...

கிளினிக் என்பது கிளி இருக்கும் இடமல்ல...

பிக்னிக் என்பது பன்றியை போய் பார்ப்பதல்ல...

எலக்ட்ரானிக் என்பது தேர்தலில் நிற்பது இல்லை...

தொடரும்.....



அட்டாக் ஆறுமுகத்தின்... 

அரிய தகவல்கள் - 5.

பஞ்சாமிர்தத்தில் பஞ்சு இருக்காது...

சுண்டல் கொடுத்தாலும் அது பிர"சாதமே"...

பிரகாரம் என்பது பலகாரமல்ல...

அர்ச்சனை என்றால் திட்டுவதல்ல...

நேர்த்தி கடனுக்கு வட்டி கிடையாது...

தொடரும்....


அட்டாக் ஆறுமுகத்தின்...


அரிய தகவல்கள் - 5.


சப்"பாத்தியில்" பயிரிட முடியாது...


நமது ப்ரோவை டா போட்டு அழைப்பது புரோட்டா அல்ல...


ஊத்தப்பத்தில் ஊற்று இருக்காது...


மல்லிச் சட்னி மல்லிகைப் பூவில் செய்தது அல்ல...


மோரில் குழம்பு ஊற்றுவது மோர்க்குழம்பு அல்ல...


தொடரும்.....




அட்டாக் ஆறுமுகத்தின்... 

அரிய தகவல்கள் - 5.

ஆக்டோபஸ் என்பது பேருந்து அல்ல...

ஸ்டார் ஃபிஷ் வானத்தில் இருக்காது...

கடல் குதிரைக்கு கடிவாளம் கிடையாது...

டால்பின் என்றால் உயரமான பின் அல்ல...

திருக்கை மீனுக்கு ஒரு கையும் கிடையாது...


தொடரும்...



அட்டாக் ஆறுமுகத்தின்... 

அரிய தகவல்கள் - 5.


சேனைக் கிழங்கு போருக்கு போகாது

கட்டிக்கரும்பு என்பது வீங்கிய கரும்பல்ல...

ஸ்ட்ராபெர்ரியில் ஸ்ட்ரா இருக்காது...

அரநெல்லிக்காய் முழுதாக தான் இருக்கும்...

நொங்கு என்றால் ஒருவரை அடித்து போடுவதல்ல...


தொடரும்...

நான் முதல்வரானால்...!

நான் முதல்வரானால்... விஜயதரணி...!!!!

(ஒரு விபரீத கற்பனை)

முதல்வராக விஜயதரணி பத்திரிக்கையாளரை சந்திக்கிறார்... இனி பேட்டி...!

கேள்வி: நீங்கள் முதல்வராகிவிட்டீர்கள் இது பற்றி உங்கள் கருத்து?

வி.த : இப்படி ஒரு நாளை தமிழக மக்களின் கருப்பு தினமாக தான் பார்க்கிறேன்.. இப்படி ஒரு படுபயங்கரமான செயலை மக்கள் ஏன் செய்தார்கள்? இது ஒரு பயங்கரவாத நடவடிக்கை..!

கே: அட என்னங்க நீங்க பதவி ஏற்றதை பத்தி கேட்டா என்னன்னவோ சொல்றிங்க! இன்னிக்கு கருப்பு தினம்ன்னே எழுதிக்கவா?

வி.த : (சட்டென்று சுதாரித்து) அட அதில்லிங்க இப்ப முடி நரைச்சா வெள்ளையாகுது அதுக்கு கருப்பு அடிச்சா இளமையாகுது இல்லையா அத தான் அப்படி சொன்னேன்...

கே: பதவி ஏற்றவுடன் நீங்க செய்யப்போற முதல் வேலை என்ன?

வி.த: மேக்கப் போடுவது..!

கே: (அதிர்ச்சியாகி) மேக்கப்பா என்னங்க சொல்றிங்க?

வி.த: அட நீங்க வேற பொலிவிழந்து அசிங்கமான முகத்தோட இருக்குற நம்ம தமிழகத்த என்னை மாதிரியே பளபளப்பா ஜொலிக்க வைக்க போறேன்...

கே: அதுக்கு என்னா செய்விங்க?

வி.த: தமிழகத்துல இருக்குற அம்மா உணவகங்களை எல்லாம் மாத்திட்டு அங்க அன்னை பியூட்டி பார்லர் அமைக்கப் போறேன்...

கே: மக்களுக்கு குறைஞ்ச செலவுல சாப்பாடு போடறத விட இது முக்கியமா?

வி.த: கண்டிப்பா இன்னிக்கு ஒரு லிப்ஸ்டிக் 500ரூபா விக்குது...ஏழைங்க அத வாங்க முடியுமா? சாப்பாடு வேணும்ன்னா கூட கோயில்ல அன்னதானம் வாங்கி சாப்புடலாம் மேக்கப் அப்படியா? பெண்கள் அழகா இருக்க இப்படி ஒரு திட்டம் அவசியம்..

கே: இருந்தாலும் இது ஓவர் மேக்கப் மாதிரி இல்லை...

வி.த: என்னா என்னையவே கிண்டலா?

கே: அய்யய்யோ நீங்க இப்ப சி.எம் நாங்க எப்படி உங்களை கிண்டல் பண்ணுவோம்..

வி.த.: ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்.. சாப்பாட்டுக்கு இன்னொரு ஐடியா இருக்கு...

கே: என்னாங்க அது?

வி.த: "அன்னை ஃபாஸ்ட் ஃபுட் நிலையம்"மாநிலம் முழுக்க பீட்ஸா கடைத் திறக்கப் போறோம்..இளந்தலைவர் ராகுல் " கையால"அடுத்த மாதம் வீடியோ கான்பரசிங் மூலமா 5000 கடைகள் நாடு முழுக்க திறக்கப்போறோம் அதுல 500 கடை தமிழ்நாட்டுல எப்புடி!

கே: புல்லரிக்குதுங்க... ஏங்க மக்களுக்கு இப்ப பீட்ஸா கடை அவசியமா?

வி.த.: புரியாத ஆளா இருப்ப போல நாட்டுல சந்துக்கு சந்து ஆயிரம் டீக்கடை இருக்கும் போது நமோ டீக்கடை போட்டவங்கள கேக்காம இப்ப என்னைய வந்து கேக்குற...

கே: இல்லிங்க அதுக்கு காரணமே உங்க கட்சி ஆளு சொல்லப்போய் தானே அப்படி நடந்துச்சு ... சரி அதை விடுங்க....இந்த திட்டத்தால மக்களுக்கு என்னங்க பயன்?

வி.த.: அப்படி கேளுங்க..! நாடு முழுக்க பீட்ஸா கடை வரும் ... இந்தியா இத்தாலியாகும் பல பெண்களுக்கு வேலை வாய்ப்பு தந்து அவர்கள் தாலியும் காக்கப்படும்..!

கே: வேற ஏதாவது (மனதிற்குள்..."நல்ல ") திட்டங்கள் இருக்கா?

வி.த: பணக்காரங்களுக்காக சரவணபவன் மாதிரி சத்யமூர்த்தி பவன் கிளைகள் தமிழகமெங்கும் திறக்கப் போறோம்..

கே: மறுபடியும் ஓட்டலா?

வி.த: இது ஓட்டல் அல்ல ஓட்டுகள்... காங்கின் சாதனையை சொல்ல தான் இந்த கிளைகள். சரி வேற கேள்வி இருக்கா பதவி ஏற்பு விழா போகணும்... அதுக்கு முன்னால  மேக்கப் போட போகணும் நிறைய வேலை இருக்கு.

கே: ஒரே ஒரு கேள்வி...ஏதோ 5 அம்ச திட்டம்ன்னு சொன்னாங்களே அது என்னாங்க

வி.த.: கரெக்ட் நானே சொல்ல நினைச்சேன்... கேட்டுக்கோங்க...
1.இனி சதாசிவம்ன்னு பேருவச்சவருக்கு சட்ட கல்லூரில இடம் கிடையாது.

 2. தமிழகத்துல உள்ள முருகன் கோயில் எல்லாம் தெலுங்கானா பக்கம் போகப்போகுது.! யாரும் முருகான்னு சொன்னா 3 மாசம் ஜெயிலு.

 3.நளினின்னு பேரு வச்சவங்க எல்லாம் வர்ற 30ஆம் தேதிக்குள்ள பேர கெசட்ல மாத்திக்கணும்.

 4. சாந்து பொட்டு எனக்கும் பிடிக்கும் இருந்தாலும் கட்சிக்காக தமிழகம் முழுக்க சாந்து தடை செய்யப்படுது. 

5.யாரும் அறிவா இருக்கவே கூடாது அப்படி இருந்தாலும் அவரை அறிவுன்னு சொல்லக்கூடாது... 

இதான் அந்த 5 அ(இ)ம்ச திட்டம் வரட்டுமா... (கை காட்டிவிட்டு கிளம்புகிறார்)

கே; நன்றிங்க மேடம் வணக்கம்.... (உள்மனதில்)

உண்மையிலேயே உங்க 5 வது திட்டம் தான் சூப்பரு அது உங்களுக்கே பொருந்தும்..

Wednesday 19 February 2014

நமீதா...

நமீதா சொன்ன கதை...!

காகா ஆட...! நரி ஆட...!

(பாட்டி வடைசுட்ட கதையின் புதிய பதிப்பு)

ஹாய் மச்சான்ஸ்.. ஒரு ஊர் இர்க்குது..அங்க காகா பர்க்குது..

ஒரு பாட்டி இர்க்குது..அது கட தொர்க்குது..

கட மேல பாட்டி வட சுட்து... பாட்டி சுட்ட வட்ய காகா சுட்து..

காகா பாஸ்ட்டா பர்க்குது..ஒரு மர்த்துல போய் உக்கார்து..

ஷாட் இங்க கட் ஆகுது... நரி இப்போ எண்ட்ரி ஆகுது..

கா கா நரி பாக்து..நரி காகா பாக்து..நரி ஹாய் சொல்து.. 

காகா வட்ய கால்லே வெச்சு ஹலோ சொல்து..

ரெண்டும் பிரண்ட் ஆகுது..நரி டேன்ஸ் ஆட்து..காகா பாட் பாடுது.. 

 நரி டேன்ஸ் நிர்த்துது... நைசாப் பேஸ்து..காகா பேச்ல மய்ங்குது..

இப்போ நரி பாட்து.. காகா ஆட்து..காகா ஸ்டெப்ஸ் போட்து..

வட தவறி கிள உள்து.. நரி வட கவ்து.. நேரா பாட்டி கடய்க்கு போக்து.. 

யெஸ்.. பாட்டிதான் நரி வள்க்குது..வட திர்ம்ப கெடிக்குது..

 பாட்டி குஷி ஆவ்து..நரிக்கு டென் மார்க்ஸ் கொட்க்குது..

காகா வட்வேலு ஆகுது.. வட போச்சே சொல்து.. 

ஹாய் மச்சான்ஸ்..! நாம ஒர்த்தர ஏமாத் பாக்து..கடசில ஏமாந்த் போக்து..

 இது இந்த கதயோட நீதி ஆக்து.. ( தமிழ் பேதி ஆகுது)

 நாள்க்கி வேற கத சொல்து.. பை மச்சான்ஸ்...!

Tuesday 18 February 2014

தீனா - மார்ச்


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா... இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

இந்த முள்ளு மரம் கீதே அத்த வள்ரவுடாம செய்ய இன்னா தெரிமா பண்ணணும் ? அத்து செடியா இர்க்கப்பவே வெட்டி எர்ஞ்சுட்ணும்..! நல்லா அத வள்ரவுட்டா இன்னா ஆகும்?

அது நல்யா காய்ச்சி இஸ்ட்ராங்கா வள்ந்து நிக்கும்... அப்ப போயி அத்த வெட்னா உன் கை தான் நோவும்.. அத்தே மேறி தான் உன் எதிரியையும் வள்ர விடவே கூடாத்து..! சர்யாபா..!

சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"வளரும் போதே வெட்டிறு முள்ளு... அதான் உன் தில்லு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"


இளைதாக முள்மரம் கொல்க ;களையுநர்

கைகொல்லும் காழ்த்த விடத்து.
 


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா... இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

ஒல்கத்த படச்ச கடவுளயே நீ பிச்சை எடுக்க போன்னு சாபம் உட்டுருக்காரு திர்வள்ளுபரு..! படா தில்லான கொரளுபா..! அவரு கோவத்துல சொன்னத அப்டியே ஒரு லுக் வுடுவமா..!

இந்த ஒல்கத்த படச்சவன் இத்த படய்க்கும்போதே மத்தவங்க கிட்ட கையேந்தி தான் பொயப்ப நட்த்தி உசுர் வாழணும் அப்டின்னு சில மன்சங்களையும் படச்சி மட்டும் இர்ந்தான்னு வையி..!

மவனே..! அவங்க எப்படி கையேந்தி அலையுறாங்களோ, அத்தே மேறி படச்சவனும் தெருத் தெருவா கையேந்தி அலைஞ்சு அலைஞ்சே தொலியட்டும்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா....

"கையேந்தரவன் இர்க்குற பூமி..அங்க கையேந்தி நிக்கட்டும் சாமி"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"


இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்.



தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா... இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

பிரிச்சினை இல்யாத வாழ்க்க எங்கியாவது இர்க்குதா? எதிர்கால்த்துல வர்ற பிரிச்சினிய அத்து வர்றதுக்கு மின்னாடியே தெர்ஞ்சிகினு அதுக்கேத்யா மேறி வாழ்றத்து தான்பா வாழ்க்க!

அப்டி வாழாம எதுவா இர்ந்தாலும் வந்த்ய பின்னாடி பாத்துக்கிலாம்ன்னு நீ வாழ்ந்தா..அந்தய பிரச்சினை வர சொல்லோ தான் தெர்யும் நீ பண்ணது எம்மாம் பெர்ய தப்புன்னு..!

சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"வர்றத மின்னாடியே யோசி.. வந்த பின்யாடின்னா நீ லேசி" (Lazy)

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"


முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை 

பின்ஊறு இரங்கி விடும்.



தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா... இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

உன் மன்சுக்குள்ள நீ எத்த நென்ச்சாலும் சின்னதா நெனிக்கக்கூடாத்து...! மன்சுல நெனிக்கிறத பெர்சா நெனை,நல்லதா நெனை,பெர்மயா நெனை..! ஒருக்கா நீ நெனிச்சது..

நட்க்காம பூட்டாலும் அடடா நாம நென்ச்சது நட்க்காம போச்சேன்னு ஒரியாவாம நட்க்குதோ நட்க்கலையோ எப்யும் நல்லதையே நென்ச்சிகினு இருக்கணும்...!

சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"நல்லதையே நெனை... அதான் உனுக்கு துணை"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்; மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து.



தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா... இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

நாம அல்லாரும் வாழ்க்கையில பெர்ய மன்சங்கோ பேஸ்ன பேச்ச கேட்டு நட்ந்தா ஒரி ஆவாம வாழலாம்.! ஒழுக்கமா நடக்கிற பெர்ய மன்சன் வார்த்த எப்டி தெரிமா ஓதவும்? 

கால வச்சா வழுக்கி உடுற சேத்து நெல்த்துல,நடக்க சொல்லோ கையில ஒரு கைத்தடி கண்க்கா அந்த வார்த்த,நம்ம கூடவே இர்ந்து வாழ்க்கயில சறுக்கி வுயுந்துடாம காப்பாத்தும்.!

சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"பெர்யவங்க பேச்ச நம்பு... உன் வாழ்க்கைக்கு அது கம்பு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"


இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா... இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

தலய மொட்ட அட்ச்சிகினோ இல்ய சடமுடி தாடி வள்த்துக்கினோ சாமியார் கணக்கா வெளிய காமிச்சுக்கினு உள்ளாற அல்லா மொள்ளமாரித்தனம் பண்றவங்களே.! கேளுங்க..!

நீங்க அல்லாரும் கெட்டத உட்டுட்டு ஒயுங்கா நேர்மியா நாயமா நட்ந்தாலே போதும் இந்தய ஒலகம் உங்கள பழிச்சி பேசாத்து.! நீங்க சாமியார் கணக்கா வேசம் கட்டவும் வோணாம்.!

சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா....

"முடிய வளத்து மோசமா வாழாத்த... மூடி மறைக்காம பாசமா வாழு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"


மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகம்

பழித்தது ஒழித்து விடின்.


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா... இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

நெர்ப்பு ஓன் உடம்புல பட்யு புண்ணாய்ட்ச்சுன்னா அந்த தயும்பு வெள்ள அல்லாத்துக்கும் தெரியும் ஆன்யா உள்ளாற ஆறிப்பூடும்..ஆனா எந்தய காயம் ஆறாது தெரிமா...!?

வாய தொர்ந்து நாக்கு மேல்ய பல்லப் போட்டு நீ பேஸ்ற கெட்ட வார்த்த இர்க்குதே அது எத்தினி வர்சம் ஆன்யாலும் ஆறவே ஆறாது..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"தீயில சுட்டா கூட ஆறும்.. தீய நாக்குல சுட்டா ஆறாது"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"


தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு.



தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா... இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

உனுக்கு தோஸ்த்தா இர்க்கவன் எந்தய தப்புத்தண்டாவும் செய்யாதவுனா இர்க்கணும்..! அப்டி ஏதாவுது கேப்மாரித்தனம் பண்ற ஆளா இர்ந்தா அவுன நீ இன்னா தெரிமா பண்ணணும்..?

உங்கிட்ட இர்க்குற எத்யாவது ஒண்ய கொட்த்து"போய் தொல்ஞ்சுரு சனியனேன்னு" கயட்டி வுட்டுட்டு வந்துர்ணும்..! அதான் நல்து.! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"நல்லவன் தோள்ல கை போடு...நாசமாபோனவன கயட்டி வுடு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"


மருவுருக மாசற்றார் கேண்மை; ஒன்றீத்தும்

ஒருவுக ஒப்பிலார் நட்பு.



தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.. இன்னிக்கு இன்னா கர்த்துன்னா

பெர்ய பெர்ய பங்ளா வூட்டுக்குள்ள போனா தரயில பளிங்கு கல்லு பதிச்சு இர்ப்பாங்கோ..! அதாண்ட எது போன்யாலும் சொம்மா கண்ணாடி மேறி காமிச்சு குட்த்திரும்.! அத்தே மேறி..

மன்சன் நெஞ்சுயுக்குள்ளாற இன்னா நென்ச்சாலும்..., அத்த மூடி வச்சாலும் உன் மூஞ்சியே அதெல்லாத்தியும் காமிச்சு குட்த்திரும்...! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா....

"மன்சுக்குள்ள மர்ச்சது... மூஞ்சி மேல தெர்யும்"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"


அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம்.



தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.. இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...


ஒரு மன்சனுக்கு கெட்டது எதுன்னா இன்னா இன்னா கேப்மாரித்தனம் செய்யக் கூடாத்தோ அத்த செஞ்சான்னா அவன் காலி..! இதான் அல்லாத்துக்கும் தெரிமேன்றியா! 

இன்னொண்யும் இருக்குபா.! இன்னா இன்னா வேலய கரீட்டா செஞ்சே ஆகணுமோ அத்த செய்யாம உட்டாலும் அவன் காலி..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"கெட்டத செய்வே செய்யாதே.. நல்லத செய்யாம இர்க்காதே"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"


செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க

செய்யாமை யானும் கெடும்.



தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.. இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

ஒரு வேலய இஸ்டாட் பண்ண சொல்லோ மொதல்ல, அத்த எப்டி நல்யா செய்றது? அதுல ஏதுனாச்சும் பிரிச்சினை வர்மா? அப்டி வந்த்யா அத்த எப்படி தீர்க்குறது? இத்தனையும்...

அல்சி ஆராஞ்சு பாத்து தான் இஸ்டாட் பண்ணணும்..! அத்தவுட்டுட்டு  ஒன்யும் ஓசிக்காம இன்னா வந்தாலும் பாத்துகிலாம்ன்னு அஸ்ட்டுதன்மா துணிஞ்சு செய்றது பெர்ய குத்தம்பா.

சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"பிளான் பண்ணி பண்ணு.. இல்லாட்டி நீ மண்ணு"

சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"


எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.



தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.. இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

நல்யா பட்ச்ச புலவரு எப்படி இர்க்கணும்ன்னா.!அல்லாத்தோடயும் சந்தோஸ்மா கல்கலன்னு சிர்ச்சு பேசி பயகற நல்ய குணம் இர்க்குணுமாம்..! அவுரு கிளம்ப சொல்லோ, அடடா...

இந்தய மன்சன் அதுக்குள்ள கிளம்புறானே, அப்பாலிக்கா இன்னொரு தபா இவர எப்ய கண்டுக்க போறமோன்னு அப்டியே நாம பீல் ஆவணுமாம், அதான் புலவருக்கு லச்சணம்..! 

சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா..!

"குஜாலா இர்க்கணும் புலவன் பேச்சு... நீ பிரிஞ்சா நிக்கணும் கேக்குறவன் மூச்சு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"


உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அணைத்தே புலவர் தொழில்.



தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.. இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

மன்சுக்குள்ள நெரியா ஆசய வச்சுக்கினு ஒன்யுமே தெர்யாதது கண்க்கா அதுக்கு அல்லாம் ஆசயே படாது மேறி ஆக்ட் குடுக்குற ஆள நம்பாத்தே.! அவன் ஒரு விசம் புட்ச்ச ஆளு.!

அவனை மேறி ஒரு துரோகி.... ஈவு இர்க்கம் இல்லாத ஆளு இந்தய ஒல்கத்துல ஆருமே கடியாத்து..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா....

"வேசம் போட்டா துறவி..... அவன்மோசமான பிறவி"

சோக்கா சொல்லிக்கீரார்பா " தல"

நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

வாழ்வாரின் வன்கணார் இல்.



தீனா கொரலு...

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.! இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..
 
வாய்க்கயில வேலிக்கு ஆகாம உருப்படாம போர்து யாரு தெரிமா?ஒரு நாட்டயே ஆட்சி செஞ்சுனுக்குற ராஜா நமக்கு தோஸ்த்தா இர்ந்தாலும், இல்ல அவ்ரு சங்காத்தம் உனுக்கு கெட்ச்சாலும்...

நீ சோம்பேறியா இர்ந்தா அத்தினியும் வேஸ்ட்டு.. அத்த நீ புர்ஞ்சுக்கவே மாட்ட.! உன் கொண்த்துக்கு அதுனால எந்தய பிர்யோஜன்மும் இல்ல.! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"உனுக்கு நல்ல பிரண்டு ராஜா...சோம்பேறியா இர்ந்தா நீ கூஜா"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"


படியுடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடியுடையார்

மாண்பயன் எய்தல் அரிது.





தீனா கொரலு...

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.! இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..
 
நீ ஆர வோணா நம்பு ஆன்யா ஒர்த்தர பத்தி தெளிவா தெர்யாம அவன் மேல்ய மட்யும் அன்ப வச்சிடாதே.! அத்து யாருன்னா? தெர்ஞ்சிக்க வேண்டியத தெர்ஞ்சுக்காத முட்டாள பாத்து..

அய்யோ பாவமுன்னு நம்புனே அவ்ளோதான்.! அவுன் செய்ற முட்டாள்தனம் உனுக்கும் வந்துரும்,நீ எவ்ளோ தான் உசார் பார்ட்டியா இர்ந்தாலும் இப்டியாப்பட்டவன நம்பாதே.

சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"தோஸ்த்து லூசா.. உன் வாழ்க்கை லாசு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"


காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்

பேதைமை எல்லாம் தரும்.


தீனா கொரலு...

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.! இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..
 
இந்தய ஒல்கம் எப்ப தெரிமா உன்னிய மெச்சாயாது? நீ வேற எதுல வோணா உர்தியா இஸ்ட்ராங்கா இர்ந்தாலும் செரி,அத்தெல்யாம் ஒன்யும் மேட்டரு கடியாத்து.! 

நீ செய்ற தொழிலு இர்க்கு பாரு அதுல்ய மட்டும்  உர்தியா இஸ்ட்ராங்கா இல்லாங்காட்டி இந்தய ஒல்கம் உன்னிய மதிக்கவே மதிக்காதுபா..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா....

"செய்ற தொழில நம்பு..இல்லினா உலகம் பேசும் வம்பு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

எனைத்திட்பம் எய்திய கண்ணும் வினைத்திட்பம்

வேண்டாரை வேண்டாது உலகு.



தீனா கொரலு...

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.! இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..

இந்தய ஆத்து மண்லாண்ட குயி பர்ச்சா தண்ணி ஊறி வந்துகினே இர்க்கும் பாத்துர்க்கியா? எவ்ளோ ஆழ்மா குயி தோண்ட்றமோ அதுக்கேத்யா மேறி தண்ணி சுர்ந்து மேல வரும்..!

அதே மேறி தான்பா, நீ எவ்ளோ பட்ச்சியோ அதுக்கேத்யா மேறி தான் ஒன் அறிவும் சுரக்கும்.!  ஆயமா பட்ச்சா தான்பா நெரியா அறிவு..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"தண்ணிய சுர்க்குது கேணி.. அறிவ சுர்ந்தா நீ ஞானி"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத்து ஊறும் அறிவு.



தீனா கொரலு...

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.! இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..

ஒரு வேல்ய ஒர்த்தராண்ட குட்க்குறத்துக்கு மின்னாடி இன்னா பாக்கணும்ன்னா.! அந்தய வேலிக்கு அவன் கரீட்டா ? அத்தில அவுனுக்கு மின்னாடியே அன்பவம் இர்க்கா?..

அந்தய வேலில்ல அவன் கில்லியா? இப்படி அல்லாத்தியும் அல்சி ஆராஞ்சி அப்பால தான் அந்தய வேலிய அவுனாண்ட தர்ணுமாம்ப்பா... சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"வேலக்காரன் கில்லின்னா...வேலய குடு சொல்லி"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"


இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.



தீனா கொரலு...

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.! இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..

வர்மையில பிச்ச எட்த்து பொயக்குறத்த வுட கொடுமியானது இன்னா தெரிமா நைனா? அட்த்தவனுக்கு கொடுக்க பெர்ய மன்சு இல்யாம துட்ட சேத்து வச்சிக்கினு ஆருக்கும் அத்த..

தர்றாம தனியா குந்திகினு துண்றான் பாரு பேமானி!அவனாண்ட சொல்லுங்க இப்டி துண்றது தாண்டா பிச்ச எட்க்குறத வுட கேவுலமின்னு....சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா....

"தன்யா துண்ணாத மச்சி.. அத்து பிச்சயவுட எச்சி"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய

தாமே தமியர் உணல்.



தீனா கொரலு...

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.! இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..

நீ வாய்க்கயில எதுக்கு  மெர்சலாவுரியோ இல்யோ ஒன்யே ஒன்யுக்கு மட்யும் மெர்சலாகியே ஆவுணும்.!அது இன்னான்னா இந்தய பொல்யாத ஆசை இர்க்குதே அத்த கண்டுதான்.! 

அப்டி மெர்சலாகலின்னா ஆச ஒன் கூட்யே இர்ந்து ஒன்ய கெட்து குட்டிச் செவுராக்கி குயி பர்ச்சு உள்ய தள்ளிடும்.! ஆசக்கி அஞ்சி வாய்றது தான் நாயமான வாய்க்கை...

சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"ஆசய கண்டு நீ அஞ்சு.. இல்லாட்டி அது உனுக்கு நஞ்சு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

அஞ்சுவது ஓரும் அறனே;ஒருவனை

வஞ்சிப்பது ஓரும் அவா.



தீனா கொரலு...

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.! இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..

உனுக்கு ஆராச்சும் அள்வுக்கு மீறி ட்ரபுள் கொட்த்தாலும் அத்த பொர்மியா பொர்த்து போறது தான் நல்யது..! அத்த விட நல்யது இன்னான்னா அத்தயே எப்யும் நென்ச்சிக்காம இர்க்குறது!

அட ஆமாபா..!அப்டி நீ அத்த மர்ந்து போறது பொர்த்து போர்த வுட நல்யதாம்.! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா....

 "கெட்யத பொர்த்து போனா மன்சன்..! அத்த மர்ந்து போனா நீ பெர்ய மன்சன்"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

பொறுத்தல் இறப்பினை என்றும் ; அதனை

மறத்தல் அதனினும் நன்று.



தீனா கொரலு...

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.! இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..

உன்யோட விரோதியா இர்க்குறவன் திமிர... அவன்யோட ஜபர்தஸ்த்த ஒன்யுமே இல்லாம ஆக்க நீ இன்னா தெரிமா செய்ணும்?! அவுன பழி வாங்ணுமா? ஆள வுட்டு அடிக்கணுமா?

அத்தெல்லாம் ஒன்யும் ஓணாம்பா.! நீ நேர்மியா ஒழச்சு அம்பானி கணக்கா துட்ட சம்பார்ச்சு சேத்துகினே இர்ந்தா அத்து ஒண்ணே உன் விரோதிய கத்தி மேறி குத்திகினே இருக்கும்.!

சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

நீ சேத்து வச்ய சொத்து.. ஒன் எதிரிக்கு கத்தி குத்து...

சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

செய்க பொருளை;செறுநர் செருக்கறுக்கும்

எஃகதனிற் கூரியது இல்.


தீனா கொரலு...

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.! இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..

நாம பேஸ்ற ஒவ்வொரு வார்த்தியும் மீனிங்கா இர்க்கணும் நைனா.! அப்டியா பட்டத மட்யும் தான் பேஸ்ணும், அத்து கேக்கறவங்களுக்கும் பிரியோஜன்மா இர்க்கணும். அத்த வுட்டுட்டு..

பிரியோஜன்மா இல்யாத வார்த்திய பேசிகினே இர்க்கறது கூடவே கூடாத்துபா...சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா....

 "பண்பா பேசு..ஆனா பச்சயா பேசாதே" 

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க

சொல்லின் பயனிலாச் சொல்.


தீனா கொரலு...

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.! இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..

நாலு நல்ய விஸ்யம் இர்க்கா மேறி நாலு கெட்ய விஸ்யம் இர்க்குதுபா! அந்தய நாலு எதுனா ஒருவேலய முடிக்காம அப்டியே ஜவ்வா இயு இயுன்னு இஸ்க்கர்து, மறதி,சோம்பேறித்தனம், எப்யுமே தூங்கினுருக்குற தூங்கு மூஞ்சி...

இந்தய நாலு கெட்ய விஸ்யம் தான் கெட்டயிஞ்சு போர்வங்கோ இஸ்டமா ஏறி குந்திக்கிற வண்டியாம்!சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா.." நாசமா போர்துக்கு நாலு கெட்டது போதும்"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்.





தீனா கொரலு...

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.! இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..

உனுக்கு ஆராச்சும் ட்ரபுள் கொட்த்தா எவ்ளோ பேஜாரா இர்க்கும்!அத்தே மேறி தான் நீ இன்னொர்த்தருக்கு தர்றதும்! உன் மன்சார ஆருக்கும் அப்டி செய்யாத்தே.

மத்யவங்களுக்கு தம்மாத்தூண்டு கஸ்டத்த கூட்ய தர்றாதே... எந்த கால்த்துலயும் எந்த மன்சன்கிட்டயும் உன்யால ஒரு கஸ்டம் அப்டின்னு ஒரு பேச்சி வர்வே கூடாத்து...

சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"கஸ்டத்த கொட்த்து வாழாதே.. இஸ்டத்த கொட்த்து வாழு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்

மாணாசெய் யாமை தலை.



தீனா கொரலு...

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.! இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..

உன்னாண்ட ரொம்ய தோஸ்த்தா இர்க்குறா மேறி வெள்ய காட்டிகினு மன்சுக்குள்ள ஒன்ய கலீஜா திட்டினு இர்க்குறவன் உனுக்கு தோஸ்த்தே கடியாத்து... அவன் படா கேடிபா.!

அவுன நீ இன்னா பண்ணணும்?அவன் இன்னா பேஸ்னாலும் அதுக்கு தேவயே இல்யாம சிர்ச்சு சிர்ச்சு அவுன காண்டாக்கி ஒன் சங்காத்தமே வோணான்னு சொல்லி ஓடுற மேறி பயகணும்.

சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"உன்ய கேலி பண்ணவனை... சிர்ச்சே காலி பண்ணு"...

சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து

நட்பினுள் சாப்புல்லற் பாற்று.



தீனா கொரலு...

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.! இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..

மன்சனுக்கு மன்சன் நல்யா பேசி கல்கலப்பா சிர்ச்சிகினே பயகி தானும் சந்தோஸ்மா இர்ந்து மத்தவினயும் சந்தோஸபடுத்துணும். அப்டி பயகாம முசுடா இர்க்குற மன்சனுக்கு இன்னாகும்?

இம்மாம் பெர்யா ஒலகம் நல்யா வெள்ச்சமா இர்க்குற பகலு பொயுது அவுனுக்கு மட்யும் ராவாப் பூடும்..சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"சிர்ச்சி பேசி பழகு...அல்லாட்டி ராவாயிடும் பகலு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டன்று இருள்.

Monday 17 February 2014

விளம்பர வாசகங்கள்..!

அரசியலுக்கு பொருந்தும் விளம்பர வாசகங்கள்...

கறை நல்லது...காங்கிரஸ்..

சேஞ்ச் தி கேம்... மோடி

இன்னொரு முறை சொல்லுங்க... கெஜ்ரிவால்

அடுத்தவங்க இடத்த யாராலும் பறிக்க முடியாது...ஸ்டாலின்

இப்ப உங்களுக்கு புரியுதா இந்த கட்(டி)சியை ஏன் நான் வாங்கினேன்னு...ஜெயலலிதா..

குடும்பத்தின் ஆரோக்கிய வாழ்விற்கு...கலைஞர்..

எங்க அவமானத்திற்கேற்ற தரமான கூட்டணி...கம்யூனிஸ்ட்..

புதுவீடு,புதுகாரு கலக்குற சந்துரு...கேப்டன்..

பத்து இடத்துக்கான பிரச்சனைகள் இனி இல்லவே இல்லை...வை.கோ...

கோணலா இருந்தாலும் நம்மதாக்கும்...ராமதாஸ்..

நாங்க இருக்கோம்... திருமா,வீரமணி,சரத்,நாஞ்சில்,பரிதி,&பண்ட்ருட்டி...

வாய்க்கு போடுமே பூட்டு... மன்மோகன்...

அரசியலுக்கு பொருந்தும் விளம்பர வாசகங்கள்...

பார்ட் - 2...


Connecting people : தமிழருவி மணியன்

Nothing like anything : நாராயணசாமி

கொஞ்சம் கலாட்டா பண்ணு : சுப்ரமணியசாமி

I feel up : ராகுல்காந்தி

நாக்கை நாட்டியமாடச் செய்யும் : டி.ராஜேந்தர்

பத்திரமா பாத்துக்கோங்க : கனிமொழி

அன்புக்குரியவர்களின் சிபாரிசு: அன்புமணி ராமதாஸ்

பசுக்களின் எமன் : லாலு பிரசாத் யாதவ்

கையில இருக்கு சுங்கம்.... கவலை ஏண்டா சிங்கம் : ப.சிதம்பரம்

அண்டை வீட்டாரின் பொறாமை... சொந்தக்காரரின் பெருமை : சசி தரூர்

நெருங்குவதற்கான வாய்ப்பு : மு.க. அழகிரி

உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா : ஞானதேசிகன்

பெருமை பட்டுக்கோங்க : சச்சின்

இது தங்கமான உறவு : ராபர்ட் வதோரா