Tuesday 28 July 2015
அப்துல்கலாமுக்கு...
Tuesday 21 July 2015
குறள் குறுங்கதைகள்
Friday 17 July 2015
பிரியாணி குறள்கள்
#ரமலான்_குறள்கள்
தால்சா எலும்பு தயிர் வெங்காயம் இவை நான்கும்
இல்லா பிரியாணி இழுக்கு.
முகநக நட்பது நட்பன்று பிரியாணி தரும்
முகமது நட்பே நட்பு.
எலும்போடு கறியுள்ள பிரியாணி அதை
குழம்போடு உண்பது சிறப்பு.
பெருநாள் உணவாக பிரியாணி தருவோர்க்கு
பெருமை வாழ்வில் வரும்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
ரம்ஜான் பிரியாணி தராதவர்க்கு.
Thursday 16 July 2015
T.R
கவியரசு தெரியும் கவிப்பேரரசு தெரியும் காதல் கவியரசு யார் தெரியுமா..! நீங்கள் முகநூலில் கிண்டலடிக்கும் டி.ஆர் தான்..
எப்படின்னு கேட்டா இந்த நீண்ட பதிவினை படித்தால் தெரியும்.. கரடி என்றோ, டண்டணக்கா என்றோ, நீங்கள் கலாய்க்கும் டி.ஆர். காதல் வரிகளில் கிங்..
இளையராஜா ரசிகர்களையும் ஏற்றுக் கொள்ள வைத்த அவரது திறமை அளவிட முடியாதது.. இசையை விடுங்கள் அவரது பாடல் வரிகளில் துள்ளும் காதலைப் பாருங்கள்.. இனி லிஸ்ட்...
இது குழந்தை பாடும் தாலாட்டு.. இது இரவு நேர பூபாளம்.. இது மேற்கில் தோன்றும் உதயம்.. (ஒரு தலை ராகம்)
வசந்தம் பாடி வர வைகை ஓடி வர இளமை கூடி விட இனிமை தேடி வர ஆராதனை செய்யட்டுமா...
செம்மார்ந்த மலர்கள் அண்ணாந்து பார்க்கும் உன் காந்த விழிகள்.. ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட ஏதேதோ குயில்கள்.. (இரயில் பயணங்களில்)
நெஞ்சம் பாடும் புதிய ராகம் பாடல் ஒன்றைத் தேடுது
(நெஞ்சில் ஓர் ராகம்)
விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கிலேறுதாம்..ஓ..ஓ.ஓ
விழியோ பிரம்மன் மயக்கத்தில் வரைந்த கவிதை.... மொழியோ அமுதம் குழலாகி தொனிக்கின்ற ஓசை.. ஒரு ஆனந்த ராகம்..
(கிளிஞ்சல்கள்)
பொன்னூறும் கன்னம் குழிய ஒரு புன்முறுவல் சிந்திச் சென்றாள்.. இந்த மானிடனும் மயங்கிவிட்டான்.. அந்த மானிடமும் மனதை விட்டான்..
அமுதம் என்ற சொல்லை ஆராய்ச்சி செய்வதற்கு அவனியிள் அவளே ஆதாரம்...
புருவ வில்லை வளைத்து போதைக் கணையைத் தொடுத்து..(2) அழகு ரதத்தை அணைக்கும் சுகத்தை...(2) ஒரு நாகம் போல் காளை ஆடுகின்றான்...
பிரம்னனுக்கும் ஞானம் வந்து உன்னைப் படைக்க அட பிரமிப்புடன் நானும் வந்து உன்னை ரசிக்க... தவிப்பதா.. சிலிர்ப்பதா...அணைப்பதா.. அழைப்பதா...
(உயிருள்ள வரை உஷா)
கனவென்னும் ஆலைக்குள் அகப்பட்ட கரும்பே.. நினைவென்னும் சோலைக்குள் பூத்திட்ட அரும்பே... எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி..
(உறவைக் காத்த கிளி)
தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாற தாமரைப்பூ மீது விழுந்தனவோ.. இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில் படைத்திட்ட பாகம் தான் உன் கண்களோ.. இடையின் பின்னழகில் இரண்டு குடத்தைக் கொண்ட புதிய தம்பூராவை மீட்டிச் சென்றாள் கலைநிலா மேனியிலே சுவை பலா சுவையைக் கண்டேன்..
ஆஹா... ஆஹா.. நீ ரசிகண்டா..
நான் சொன்னது சரிதானே காதல் கவியரசுப்பட்டம்...
Monday 13 July 2015
MSV
மனிதர்கள் உடலில் ஹார்மோன்கள் சுரந்தது இவரது உடலில் மட்டும் ஆர்மோனியம் சுரந்தது இவர் விரற்கட்டை பட்ட போதெல்லாம் ஸ்வரக்கட்டை சிலிர்த்தது நல்ல மெட்டுக்கட்டை அணிந்தது கண்ணதாசனின் பாட்டா விஸ்வநாதனின் மெட்டா எது சிறந்தது எனக் கேட்டா
எவரும் இங்கு பதில் சொல்ல மாட்டா..
நல்லிசை தந்த மெல்லிசையே நீ வல்லிசை தந்ததில்லை.. கவிஞர்களின் சொல்லிசையை ராமனின் வில்லிசை போல அதிர வைத்தாய்.. ஏனெனில் உன்னுடனும் இருந்தார் ஒரு இராமமூர்த்தி உங்கள் இசையால் கிடைத்தது பெரும் கீர்த்தி.. நீ ஒரு இசை விவசாயி உன் வயலினில் விளைந்தது எத்தனைப் பாட்டுப் பயிர்.. அதை கேட்டு மகிழ்ந்தது மக்களின் உயிர் இரட்டைக் குழலாய் இணைந்திருந்த போதும் தனித்து இருந்த போதும் நீ ஒரு துப்பாக்கி.. அது தோட்டாவை பொழியும் நீ பாட்டாகவே பொழிந்தாய்.. கண்ணதாசன், வாலி, செளந்தரராஜன், விஸ்வநாதன் இந்த நால்வர் தான் தமிழ் சினிமாவின் நான்மறை.. ஆனால் இந்த நால்வருமே மறைந்தது என்ன முறை.. மறைந்தது உங்கள் உயிர் தான் மெல்லிசைகளில் நீங்கள் வாழ்வீர்கள் இவ்வுலகம் உள்ள வரை..
கண்ணீருடன்..
ரசிகர்கள்.
Friday 10 July 2015
ஸ்வீட்ஸ்
Wednesday 8 July 2015
குறள் குறுங்கதைகள்
Tuesday 7 July 2015
குறள் குறுங்கதைகள்
Sunday 5 July 2015
குறள் குறுங்கதைகள்
Saturday 4 July 2015
100 ஆண்டுகளுக்கு பின்...
Friday 3 July 2015
குறள் குறுங்கதைகள்
#குறள்நெறிக்_குட்டிக்கதைகள்
சார் நம்ம நிறுவனத்து தயாரிப்புகளை கிண்டல் அடித்து நமக்கு மார்க்கெட் போட்டியான ஒரு நிறுவனம் விளம்பரம் எடுத்து இருக்காங்க.
ஓ.. அப்படியா அதுக்கு என்னா செய்யலாங்கறிங்க!
நாமும் பதிலுக்கு ஒரு விளம்பரம் எடுத்து அதுக்கு கவுன்ட்டர் கொடுக்கணும் சார்..
சரி அவங்க நம்ம தயாரிப்பு பத்தி கிண்டல் பண்ணதுல ஏதும் உண்மையிருக்கா?
95 சதவீதம் இல்ல சார்..
ஓ.. அப்ப 5சதவீதம் இருக்கு இல்லியா.. அந்த நிறுவனம் நமக்கு நல்லதை தான் செஞ்சிருக்காங்க.. அவங்க செலவு பண்ணி நம்ம குறையை சுட்டிக்காமிச்சு இருக்காங்க.. அவங்களுக்கு பதிலடி தர்றதுக்கு யோசிக்கிற நேரத்துல இந்தக் குறையை களையெடுக்க யோசியுங்க, அதுவே நமக்குப் போதும்.
அந்த முதலாளியின் இந்த பாசிட்டிவான பழி வாங்கும் குணமில்லாத அணுகுமுறை அடுத்த சில மாதங்களில் அவர்களது விற்பனையை பல மடங்காக்கியது.
நீதி: செல்வத்தை உயரிய வழியில் சேர்த்துக் கொண்டே இருப்பது தான் எதிரியின் கர்வத்தை அறுக்கும் கூரிய ஆயுதமாகும்.
செய்க பொருளைச் செறுநர் செறுக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.
Thursday 2 July 2015
குறள் குறுங்கதைகள்
குறள்நெறிக்_குட்டிக்கதைகள்
என்ன சார் சொல்றிங்க இளம்பிள்ளை வாதம் வந்து இரண்டுக்காலுமே சூம்பிப் போன என் மவனுக்கு விளையாட்டு கத்துத்தர போறிங்களா?!?! அதெப்படி சார் முடியும் என அப்பாவியாய் கேட்டார் மாடசாமி.
ஐயா நாங்க எங்க ஸ்போர்ட்ஸ் அகாடமி மூலமா திறமையான ஆளுங்களை பள்ளிகளில் தேடி வாய்ப்பளிக்கிறோம் உங்க பையன் படிக்கிற பள்ளியில் அவனது ஆர்வத்தை பார்த்து தான் அவனை தேர்ந்தெடுத்து இருக்கோம். நீங்க சம்மதம் தாந்தா தம்பியை எங்க அகாடமிக்கு அழைச்சிட்டு போய் சிறப்பு பயிற்சி தருவோம் என்றார் அந்த கோச்.
மாடசாமியைச் சுற்றி இருந்த உறவினர்கள் இதோ பாரு மாடசாமி எந்தக்குறையும் இல்லாதவனே ஜெயிக்க முடியலை..உன் மவன் பாவம் ரெண்டு காலும் இல்லாதவன் அவன் எல்லாம் விளையாடி சாதிக்க முடியுமா? அவன் விதி அப்படி... அவனை எங்கேயும் அனுப்பாதே என்றனர்.
மாடசாமி ஒரு நிமிடம் சிந்தித்தார்.. தன் மகனைப் பார்த்தார் அவன் கண்களில் அதீத ஆர்வமும் சாதிக்க வேண்டுமென்ற வெறியும் தெரிந்தது.. சட்டென சொன்னார்.. ஐயா எனக்கு என் மவன் மேல நம்பிக்கை இருக்கு எம்மவனை அழைச்சிட்டு போங்க நான் சம்மதிக்கிறேன் என்றார்.
5 வருடங்களுக்கு பின் இன்று... அந்த ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.. ஊனமுற்றவர்களுக்கான ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்றுத்தந்த தங்கள் ஊரின் தங்க மகனை வரவேற்க..
நீதி: சோர்வின்றி முயற்சி செய்பவர்களிடம் விதி கூட தோற்றுவிடும்.
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாளாது உஞற்று பவர்.
Wednesday 1 July 2015
குறள் குறுங்கதைகள்
#குறள்நெறிக்_குட்டிக்கதைகள்
"இப்படியே வியாபாரம் நடந்தா ஒரு மாசத்துல கடையை மூடிட வேண்டியது தான்" என்றான் ரவி.
ரவியும் ஹரியும் இணைந்து ஆரம்பித்த ரெஸ்ட்டாரெண்ட் அது.. ரவி தான் முதலீடு செய்திருந்தான் பெரிய செல்வந்தன் அவன்.. ஹரி உழைப்பு மட்டும் தான் மூலதனம். ஆகவே இப்படி ரவி சொன்னதும் ஹரி திடுக்கிட்டான்.
என்ன சொல்ற ரவி? நாம இந்தக் கடையை ஆரம்பிச்சி 2 மாதம் கூட ஆகலை.. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா நம்ம கடை பெயர் பிரபலமாகிட்டு வருது.. நம்ம உணவுகள் தரமா ருசியா இருக்கு அதுல குறையிருந்தா தான் நீ சொன்னது நடக்கும்.
எப்பவும் உணவுக்கடைகள் மக்கள் வாய் வார்த்தையால் தான் பிரபலமாகும் அது தான் அவர்களுக்கு உண்மையான விளம்பரம். இன்னும் சில மாதத்தில் நம் வியாபாரம் பெருகும் பொறு என்றான் ஹரி.. எனக்கு நம்பிக்கையில்லை ஹரி அதெல்லாம் முடியாது இப்ப தாங்குற அளவுக்கு நஷ்டம் இருக்கு இதை இப்படியே விட்டுடுறது தான் சரி என ரவி கூறினான்.
அப்ப என்ன செய்யலாம் என்றான் ஹரி.. நான் போட்ட மூலதனத்தை மட்டும் நீ கொடுத்துடு இல்ல வேற யார்கிட்டயாவது வித்துடுறேன்.. எனக்கு பணம் வந்தா போதும் ரிஸ்க் எடுக்க நான் தயாரில்லை என்றான் ரவி. சரி ரவி எனக்கு 3 நாட்கள் டைம் தா சொல்றேன்.. ஹரி.
3 ஆண்டுகளுக்கு பின் ஹரிஸ் கிச்சன் என்னும் உணவகங்கள் 50 கிளைகளுடன் சக்கை போடு போட்டு வருகிறது. இப்போது மாநிலம் முழுவதும் அதற்கு கிளைகள் உண்டு.. அன்று ரவியிடம் டைம் கேட்ட ஹரி வங்கி அதிகாரி ஒருவர் மூலம் கடன் வாங்கி ரவிக்கு செட்டில் செய்து விட்டு அயராது உழைத்ததன் விளைவே இந்த வெற்றி.
நீதி: ஊக்கம் உடையவரே எல்லாம் உடையவர் செல்வம் இருந்தும் ஊக்கமில்லாதவர் எதுவுமே உடையவர் அல்ல.
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.