Friday 31 October 2014

தீனா - நவம்பர்

"தீனா கொரலு"

உனுக்கு கைல நெறியா துட்டு வந்து சேந்துச்சின்னா நாடக கொட்டாயில கூட்ற கூட்டம் கணக்கா உன்னிய சுத்தி மன்சங்க கூடுவாங்கோ.. அத்தே அந்தய துட்டு ஒன் கிட்ட தீர்ந்து போவ சொல்லோ அல்லாரும் நாடகம் முட்ஞ்சதும் கலையுற கூட்டம் மேறி கிளம்பிருவாங்கோ.! துட்டு இர்ந்தா சேருது கூட்டம்.. அது தீந்ததுன்னா ஓடுது ஓட்டம்.. சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அது விளிந் தற்று.

[ அறத்துப்பால் : அதிகாரம் : நிலையாமை : குறள் எண் : 332


"தீனா கொரலு"

கைல துட்டு நெறியா இர்க்க சொல்லோ அத்த ஏழ பாழய்க்கு கொட்த்து எதுனா உதவி செய்ணும்..அத்தெல்லாம் வய்சானதுக்கு அப்றம் செய்யலான்னு நெனிக்காம அன்னிக்கே செஞ்சிட்டோம்ன்னா அந்தய புகழு உனுக்கு வயசாகி மண்டயப் போடற வெரிக்கும் கூடவே இஸ்ட்ராங்கா இர்க்குமாம்..! செத்தா கிடைக்கணுமா சிவலோக பதவி.. அப்ப இப்பயே செய்யு உதவி.. சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.

[ அறத்துப்பால் : அதிகாரம் : அறன்வலியுறுத்தல் : குறள் எண் : 36 ]


"தீனா கொரலு"

நம்ம மன்சுக்கு புட்ச்சவங்க நம்ம மேல அன்பே இல்யாத மேறி நட்ந்துகினாலும் அவுர பத்தி யாராச்சும் புகழ்ந்து பேச சொல்லோ அத்து நம்ம காதுக்கு வரொ எம்மாம் சந்தோஸ்மா இருக்கு.! "மன்சுக்கு புட்சவன் புகழு... நம்பளை புடிக்கலைன்னாலும் மகிழு" சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு

இசையும் இனிய செவிக்கு.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : தனிப்படர்மிகுதி : குறள் எண் : 1199 ]


"தீனா கொரலு"

நாம பேஸ்ற பேச்சு எப்டி இர்க்கணும்ன்னா  அத்த கேக்குறவங்கோ மெய் மர்ந்து கேட்டுகினே கீறாமேறியும்... அத்த கேக்காதவங்கோ நம்பள தேடிகினு வந்து இஸ்டமா கேக்குறா மேறியும் இர்க்கணுமாம்.! பேச்ச கேட்டவனும் மயங்கணும்.. கேக்காதவனும் விரும்பணும்.. சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்.

[ பொருட்பால் : அதிகாரம் : சொல்வன்மை : குறள் எண் : 643 ]


"தீனா கொரலு"

மன்சனா பொர்ந்த அல்லாரும் நியாயமா வாழ்றது மட்யும் வாழ்க்க இல்ல..யாரு வாயில இர்ந்தும் பழி சொல்லு வராம வாழ்றான் பார் அதான் மெய்யாலுமே நியாயமான வாழ்க்க.! "நியாயமா வாழ்றது தான் வழி.. அதுல வராம பாத்துக்கோ பழி"..சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி

[ அறத்துப்பால் : அதிகாரம் : அறன்வலியுறுத்தல் : குறள் எண் : 40 ]


"தீனா கொரலு"

அவ என்னிய பாக்க சொல்லோ நானும் அவுள பாக்க அதுக்கு கொஞ்சமும் அசராம இஸ்ட்ராங்கா நின்னு திரும்ப வுடுவா பாரு ஒரு லுக்கு.. அடடா அத்து எப்டி இர்க்கும் தெரிமா..? தான் மட்யுமே கொல்லாம ஒரு படையவே கூட்டிகினு வந்து கொல்றா மேறி பேஜாரா இர்க்கும்.! கிக்கா வுட்டா பதில் லுக்கு.. படையெட்த்து அட்ச்சா மேறி சிக்கு... சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு

தானைக்கொண் டன்ன துடைத்து.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : தகையணங்குறுத்தல் : குறள் எண் : 1082 ]


"தீனா கொரலு"

நெறியா துட்டு சம்பார்ச்சு வச்சுகினு அல்லா வசதியயும் குஜாலா அனுபவிச்சிகினு இர்க்குறது ஒன்யும் பெர்சில்ல.. கொணத்துல உசந்த பெர்ய மன்சங்க இருக்காங்க பார் அவுங்க உன் மேல காண்டாகுற மேறி நீ நட்ந்துகினினா நீ சம்பார்ச்சு வச்ச அல்லாமே வேஸ்ட்டு.!  "அறிவாளி படுறகோவம்.. உன் வாழ்க்கைக்கு கெட்ச்ச சாபம்".....சோக்கா சொல்லிகீரார்பா"தல"

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்

தகைமாண்ட தக்கார் செறின்.

[ பொருட்பால் : அதிகாரம் : பெரியாரைப் பிழையாமை : குறள் எண் : 897 ]


"தீனா கொரலு"

அட்த்தவங்க செய்ற தப்ப மட்டும் எப்யுமே குத்தம் சொல்லிகினு இர்க்கவங்கோ அத்தே மேறி அவுங்க செய்ற தப்பயும் ஒர் நிம்சம் நென்ச்சு பார்த்தாங்கன்னா ஒலகத்துல வாழுற வாழ்க்க கஸ்டமில்லாம நிம்மிதியா இர்க்கும்..! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

[ அறத்துப்பால் : அதிகாரம் : புறங்கூறாமை : குறள் எண் : 190 ]

No comments:

Post a Comment