Wednesday 8 October 2014

தீனா - அக்டோபர்

"தீனா கொரலு"

நம்பளை புர்ஞ்சிகினு நம்ம மேல உசுரியே கொடுக்குற அன்பான மன்சங்க இல்யாத ஊருல வாழுறது பேஜாரான்து.. அத்தவுட பேஜார் இன்னா தெரிமா? மன்சார காதலிச்சவங்களை பிர்ஞ்சி வாழ்றது தான்..! குஜாலா சொல்லிக்கீரார்பா"தல"

இன்னாது இனனில்ஊர் வாழ்தல் அதனினும்

இன்னாது இனியார்ப் பிரிவு.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : பிரிவாற்றாமை : குறள் எண் : 1158]


"தீனா கொரலு"

இந்த யானைகீதே அத்துகிட்ட கையில வேல் வச்சிகினு எம்மாம் பெர்ய பிஸ்தா அல்லாம் சேந்து கூட்டமா வந்தாலும் அல்லாத்தையும் தில்லா நின்னு தொம்சம் பண்ணிடும்..ஆன்யா அத்தே யானை சேத்துக்குள்ள காலவுட்டு மாட்டிக்கிச்சுன்னு வை அத்த ஒரு நரிகூட கொன்னுரும்..!  சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா

வேலாள் முகத்த களிறு.

[ பொருட்பால் : அதிகாரம் : இடனறிதல் : குறள் எண் : 500 ]


"தீனா கொரலு"

விதிய மாத்தவே மிடியாது சிலரு புலம்பிகினு இர்ப்பாங்கோ.. ஆனா இன்னா ட்ரபுள் வந்த்யாலும் அத்தக் கண்டு மெர்சலாகாம அட்த்தட்த்து ட்ரை பண்ணிகினே கீறான் பாரு அவன் விதியவே விரட்டியட்ச்சுடுவான்.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்.

[ பொருட்பால் : அதிகாரம் : ஆள்வினையுடைமை : குறள் எண் : 620 ]


"தீனா கொரலு"

சொம்மா தக தகன்னு ஜொலிச்சுனுகீறாளே என் ஆளு.. இவ எம்மேல இன்னும் கோச்சுகட்டும் அப்ப தான் நான் அவுளோட சமாதான்மா போக கெஞ்சிகினே இர்ப்பேன் அப்றோம் நாங்க குஜாலா இர்ப்போம்.. இந்தொ ஒண்ணுகோசரமே இந்தய நைட்டு நீண்டுகினே போவட்டும்.. குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப

நீடுக மன்னோ இரா.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : ஊடலுவகை : குறள் எண் : 1329 ]



No comments:

Post a Comment