Wednesday 22 October 2014

ஏர்போர்ட் வாடிவாசல்.

ஏர்போர்ட் வாடிவாசல்..!

நான் இம்முறை மலேசியாவிலிருந்து இந்தியா திரும்பும் போது மலேசிய நேரப்படி மாலை 3:55 க்கு விமானம்.. மூன்றரைமணி நேரப்பயணத்திற்கு பிறகு 7:25 க்கு சென்னை வருவோம். அப்போது இந்திய நேரம் மாலை 5 மணி..!

அதாவது ஒரு நாளில் இரண்டுமுறை நாங்கள் 5 மணியை சந்திக்கிறோம் வெவ்வேறு நாடுகளில்.. இது தான் ஜெட் லாக் எனும் நேர மாற்றத்திற்கான கால மாற்றமாகும்.

நாங்கள் விமானம் ஏறி இருக்கைகள் எல்லாம் நிறைந்த பின்னும் கதவுகள் சாத்தப்பட்ட பிறகும் விமானம் கிளம்பவில்லை.. கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் எந்த அறிவிப்பும் இல்லை..! பயணிகள் முணுமுணுக்கத் தொடங்கினர்

இப்போது விமான ஆண் பணியாளர்கள் இருவர் வந்து சேர்ந்து கொண்டார்கள்.. அதில் ஒருவர் மலேசியத் தமிழர் என்பது பார்த்ததும் புரிந்தது..! அவரிடம் கேட்டேன் ஏன் தாமதம் என்று.. அவர் சொன்ன பதிலும் அதற்கு பின் பார்த்ததும் மிக அருமை..!

அதாவது அன்று விமான நிலையத்தின் ரஷ் ஹவர்ஸ்... அதாவது அதிக விமானங்கள் கிளம்பும் நேரமாம் ஓடு பாதைக்காக காத்திருக்கிறோம் என்றார் அவர்..! சரியாக 40 நிமிடங்களுக்கு பிறகு விமானம் ஓடு பாதைக்கு போக அனுமதி கிடைத்தது.!

அந்த விமான நிலையத்தில் இருந்து ஓடு பாதைக்கு செல்ல ஒரு 3 நிமிடங்கள் ஆகியிருக்கும் அதற்குள் 4 விமானங்கள் இறங்கி ஏறியதை கண்ணால் பார்த்தேன் ஓடு பாதைக்கு அருகில் வந்து ஒரு வளைவில் நின்றது எங்கள் விமானம்..!

நின்றது வளைவில் என்பதால் எங்கள் விமானத்தின் பின் புறம் பார்க்க முடிந்தது..! பார்த்தேன் வியந்தேன் ஏறத்தாழ 8 விமானங்கள் ஒன்றின் பின் ஒன்றாக வரிசையாக நின்றிருந்தன..! அப்படின்னா எங்களுக்கு முன்னாடியும் விமானங்கள் இருக்கு..!

ஓ.. எங்கள் விமானம் நிற்பது வரிசையில் என அப்போது தான் புரிந்தது.. அடுத்த 5 நிமிடங்களில் கிட்டத்தட்ட 10 விமானங்கள் வரிசையாக ஒன்று இறங்கும் ஒன்று ஏறும் காட்சியை கண்டு வியந்தேன்..! 11வது விமானமாக நாங்கள் கிளம்பினோம்.!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளையை அவிழ்த்து விடும் இடத்திற்கு வாடிவாசல் எனப்பெயர்.. ஒரு காளை வந்த பிறகு அடுத்த காளையை விடுவார்கள்.. அங்கு மாடுகளை விடுவது போல இங்கு விமானங்களை விட்டது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது..!

No comments:

Post a Comment