Friday 8 May 2015

குறும்பா -3

லிமெரிக்...

கார் ஏற்றிக் கொன்ற வழக்கு
கான் மீது படிந்த அழுக்கு
பார்த்த சாட்சி
பல்டியடித்த காட்சி
தீர்ப்பை தள்ளிவைத்ததே இழுக்கு.

பட்டம் படித்திட கல்லூரிகள் திறந்து
படிப்புக்கு ஏற்றபடி  பணமங்கு கறந்து
கொட்டம் அடித்து
கொள்ளையை மறைத்து
திட்டம் தீட்டுகிறார் மனசாட்சி மறந்து.

இஞ்சினியரிங் படித்தான் முத்து
இறுமாந்து நடந்திட்டான் கெத்து
கஞ்சிக்கு வழியில்ல
கழுதைகூட மதிக்கல - இப்ப 
கெஞ்சி வாழுறான் டீ காபி வித்து.

பொன்னி அரிசியைக் குழைய வடித்து
பருப்பும் நெய்யும் அதிலிட்டு பிசைத்து
வென்னீர் போல ரசம்
வாய்த்திட்டால் வசம் 
என்றும் இதற்கிணை உருளைக்கிழங்கு வறுத்து.

வசந்தையும் கணேஷையும் படைத்தவன்
வாசகர் எண்ணங்களை நன்கு படித்தவன்
கசந்ததில்லை அவன் கதை
களிப்பிற்கது விதை
பசப்பி ஜல்லியடித்ததில்லை இவனே நிலைத்தவன்.

திருவரங்கத்தில் பிறந்த ரங்கராஜன்
திக்கெட்டும் புகழ்பெற்ற எங்க ராஜன்
அருமையாக எழுதியவன்
அறிவியலைப் பழகியவன்
உருவாக்கிய கதைகளில் அவன் தங்கராஜன்.

இளமை துள்ளும் எழுத்தில் கதை 
இன்றைய சந்ததியும் விரும்பும் அதை
வளமையான நடை
வாசிக்கயேது தடை
அளப்பரிய ஆற்றலுக்கு சுஜாதாவே விதை.

வெட்டி அழித்தனர் மரத்தோப்பு
வெயில் கொளுத்துதே யார் காப்பு
கொட்டுது வேர்வை
கொடுப்பாரோ தீர்வை - பசுமை
பட்டுப்போகும் இது பூமிக்கு ஆப்பு.

நம் அடையாளம் தாங்கிய ஆதார்
நீட்டினால் கேட்டனர் நீ யார்
உம் ஜாடை இருக்காது
ஊரே அதை மதிக்காது
எம்போன்றே தவிக்கின்றார் ஊரார்.

மம்மி என்று அழைக்குது பிள்ளை
மகிழ்ந்து குடிக்கிறார் ஆங்கிலக் கள்ளை
அம்மியில் நசுக்கி
அழகுத்தமிழ் பொசுக்கி
வெம்பி நம்மொழி போனது கொள்ளை.

குளிர் அடிக்கும் கொடை க்ளைமேட்டு
குதுகலத்தில் இது ரொம்ப அல்டிமேட்டு
தளிர் நடை
தகுந்த உடை
வெளிரிடும் அதுயின்றி உடல் நோடவுட்டு.

கோடை விடுமுறையை கழிக்க
கொடைக்கானல் வந்தேன் களிக்க
வாடைக் காற்று
வசந்தக் கீற்று
தாடை தாளமிடுது குளிர் அடிக்க.

இந்துக்கள் நாடென்பார் நேபாளம்
இடிந்து விரிசல் ஆனது பாளம் பாளம்
வந்தது பூகம்பம்
வலிகள் ஆரம்பம்
நொந்தவரங்கு கேட்பாரோ பூபாளம்?

பாரதி என்கின்ற ஞான ரவி
பாடியே வென்றான் இந்தப் புவி
சாரதியானான் பாட்டுக்கு
சாதியில்லையென்றான் நாட்டுக்கு
நேரது நிற்பான் இவன் அச்சமிலா வீரக்கவி.

கோடையில் பெய்த மழையாம்
குளிரச் செய்தது  நல்வழியாம்
ஆடையது நனைத்து
ஆனந்தத்தில் திளைத்து
மேடையின்றி ஆடுவது முறையாம்.

சின்னவெங்காயம் பொடியாய் நறுக்கி
சிறப்போடதை எண்ணெயில் வதக்கி
சொன்னேன் முட்டை சேர்க்க
சீருடன் தோசைமாவும் கலக்க
தின்போரை ஈர்க்குமிந்த எக்தோசை மயக்கி.

அயல் நாடுகள் பலவும் சுற்றினார்
அந்நிய முதலீட்டை கைப்பற்றினார்
புயல் போல ஓடி
புகழானார் மோடி - சின்னப்
பயல்கூட கலாய்ப்பதால் வெட்கினார்.

வார்த்த தோசையில் வட்டநிலா தெரியுது
வாங்கப் பணமில்ல வயிறெல்லாம் எரியுது
சேர்த்த காசு ஏதுமில்ல
செலவழிக்க தோதுமில்ல - ஏழையைப்
பார்த்தவங்க உதவிட்டா அதுதானே பெரியது.

இன்னா நடக்குதுன்னு ஒன்யுமே பிரிலை
இது யார்னு கேக்குறாங்க எதுமே தெரிலை
சொன்னா அத்த நம்பு
சொம்மா செய்யாத வம்பு
என்னாபா ஆதாருல எவன் மூஞ்சும்சரியிலை.

சாதிக்கப் பிறந்த மனிதர் வாழ்வு
சாராயத்தால் அடைந்திடும் வீழ்வு
போதித்தாலும் தெரியாது
போதையெதுவும் தெளியாது 
பாதித்தோர் சென்ற இடமெல்லாம் தாழ்வு.

கம்பனைக் கரைத்துக் குடித்து
கவிதைகள் பலவும் வடித்து
கொம்பனாக இங்கு
கொடுத்தாரே பங்கு
வம்பனாக மாற நின்றிடு நீ எதிர்த்து.

புளியோதரையில் நல்லெண்ணெய் மணக்க
பருப்புத் துவையலும் அதனோடு சிறக்க
தாளிப்பில் வேர்க்கடலை சேரு
தயிர் சேர்த்து சாப்பிட்டுப் பாரு
களிப்பான உணவிதனை எப்படி நான் மறக்க.

தலைமுடி கொட்டி வரும் வழுக்கை
தயங்காது அணிகின்றார் அதற்கு விக்கை
விலை மிக மிக அதிகம்
வளர்வதென்னவோ வணிகம்
இலைச்சாறு அமேசானாம் நாடுகிறார் அத் திக்கை.

மாலுக்குள் ஷாப்பிங் என்னும் பேரில்
மொய்க்குதய்யா கூட்டம் இவ்வூரில்
மேலுக்கு பந்தா காட்டி
மேய்ப்பார் பிள்ளகளை ஓட்டி - பின்னர்
காலுக்கு ஓய்வளித்தமர்வார் ஃபுட்கோர்ட் சேரில்.

மல்லிகை பிச்சி கனகாம்பரம் பூவை
மாலை நேரத்தில் விற்றாள் பாவை
சல்லிசா விலை கேட்டா
சிரிப்பா ஆனா தர மாட்டா
கில்லியவ வியாபாரத்தில் அதுதானே தேவை.

காரைக்குடி விருதுநகருக்கு பஸ் போச்சு
கவின்மிகு சென்னையிலது மெஸ் ஆச்சு
காரை விட பார்க்கிங்
களிப்புடன் பின் ஈட்டிங் - வெறும்
மோரைக் குடிப்பவனுக்கு இது ஆகாத பேச்சு.

வீதியில் முன்பு கூடிப் பேசுவார்கள் வீணாக
வீட்டுத் திண்ணைக்கும் போனதது தானாக
பீதியை நன்கு கிளப்பி
பொய்யை மெய்போல் குழப்பி
சாதித்தார் இன்றதை வாட்ஸப் போனாக.

பஜ்ஜியில் வெங்காயம் வைத்து
பதமாக சுட்டார் மாஸ்டர் முத்து
சொஜ்ஜியில் மெய்யாக
சொட்டுது நெய்யாக
வெஜ்ஜில் பலகாரமிது ரெண்டும் கெத்து.

No comments:

Post a Comment