Saturday 9 May 2015

இந்தக் கத்தியில் பழமும் நறுக்கலாம்..

#கிரெடிட்கார்டு

கிரெடிட் கார்டுகள் இது கூரிய கத்தி.. கவனமாக கையாளாவிட்டால் சிதைத்துவிடும். பொதுவாக கிரெடிட் கார்டு கம்பெனிகளின் சட்ட திட்டங்கள் விதிகள் எல்லாம் மக்களுக்கு உகந்தவை அல்ல நீங்கள் வெள்ளை பேப்பரில் கையெழுத்திடுவதும் அதன் விதிகளை ஒப்புக் கொள்வதும் ஒன்றே.!

மேலோட்டமாக குறைந்த வட்டி என்னும் பெயரில் அவர்கள் வாங்குவது அதிக வட்டியே.. ஃபிளாட் இண்ட்ரஸ்ட் என்று தான் போடுவார்கள்.. அதாவது 10ஆயிரம் ரூபாய் கடனுக்கு ஒரு வருட தவணையில் மாதா மாதம் பணம் செலுத்தினாலும் வட்டி கடைசி வரை அந்த 10 ஆயிரத்துக்குத் தான்.. புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

சரியான தேதியில் பணத்தை செலுத்தாவிட்டால் வட்டி கட்டியே நீங்கள் ஓய்ந்து விடுவீர்கள். ஆனாலும் இந்த கிரெடிட் கார்டுகளிலும் நன்மை இருக்கிறது.. இதை சரியாகப் பயன்படுத்தினால் அதன் பலனை நன்கு அனுபவிக்கலாம்.! அதைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.. முதலில் கிரெடிட் கார்டுகள் பாதுகாப்பானவை..!

ஏனெனில் உலகெங்கும் அதை கொண்டு செல்லலாம்.. பணமாக வைத்திருக்கும் அவசியம் இல்லை.. தொலைந்தாலும் அதை பிளாக் செய்து விடலாம்... முதலில் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்கள் தங்கள் பில் ஸ்டேட்மெண்ட் தேதியை நினைவில் வைத்துக் கொள்வது அவசியம்.. பில்லில் பார்த்தால் தெரியும்.

உதாரணமாக உங்கள் பில் தேதி மாதாமாதம் 19 ஆம் தேதி என்றால்.. உங்கள் கார்டுகளை 20 ஆம் தேதி முதல் பயன்படுத்துங்கள்.. அடுத்த 19 ஆம் தேதி தான் பில் போடப்பட்டு உங்களுக்கு அனுப்புவார்கள்.. அதிலிருந்து அதிகபட்சம் 15 நாட்கள் கழித்து தான் பணம் செலுத்த வேண்டும்.. ஆக 45 நாட்கள் கழித்து பணம் தரலாம்.

இதற்கு எந்த வட்டியும் கிடையாது..! சேவை வரி மட்டும் உண்டு அதாவது 10 ஆயிரம் ரூபாய்க்கு பர்ச்சேஸ் செய்திருந்தால் 130 ரூபாய் வரி சேர்த்து மட்டுமே வரும்.. இவையெல்லாம் அந்த due தேதிக்குள் செலுத்தினால் மட்டுமே. ஒரு நாள் லேட்டானாலும் வட்டி தான். Due தேதிக்கு இரு நாட்கள் முன்பு பணம் செலுத்துவது நல்லது. ஒருவேளை திடீரென தொகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால்..!

உங்கள் பில்லிலேயே மேற்புறம் மினிமம் due எனக் குறிப்பிட்டு இருக்கும் உதாரணமாக 10 ஆயிரம் பில்லுக்கு 600 ரூபாய் தான் வரும் அதை செலுத்தினால் போதும்.. அடுத்த மாதம் செலுத்தலாம் ஆனால் அதற்கு வட்டி வரும். கார்டுகள் பற்றிய விவரங்களை போனில் யாரிடமும் சொல்லாதீர்கள்..!

முக்கியமாக cvv நம்பர்.. இதை யாரும் கேட்டால் தரவே தராதீர்கள்.. E- மார்க்கெட்டிங் என நெட்டில் பர்ச்சேஸ் செய்யும் போதும் cvv நம்பர் டிஸ்ப்ளே ஆனால் அந்த பர்ச்சேஸை தவிர்க்கவும்.. Cvv எண்களை டைப் செய்யும் போது **** என வருகிறதா என்று கவனமாக பாருங்கள்.. நெட் பர்ச்சேஸில் ஒன் டைம் பாஸ்வேர்டு மூலம் வாங்குவது பாதுகாப்பானது. மறக்காமல் லாக் அவுட் செய்யுங்கள்.

அதே போல கார்டுகளில் சிப் பொருத்தப்பட்டு இருந்தால் உங்கள் பின் நம்பரை நீங்களே டைப் செய்யுங்கள்.. சர்வரிடம், சேல்ஸ்மேனிடம் சொல்லாதீர்கள். கார்டுகளை சரியாக பயன் படுத்தினால் 40 நாட்கள வட்டியில்லா கடன் கிடைக்கும் கார்டு இருக்கிறதே என்று தங்க வியாபாரி போல உரசாதீர்கள்..!

பெரிய பர்ச்சேஸ் 25 ஆயிரத்திற்கும் மேல் இருந்தால் மாதா மாதம் தவணை உண்டு அதை எளிதான ஈ.எம்.ஐ ஆக மாற்றிக் கொள்ளலாம்.. உங்கள் கிரெடிட் கார்டு கஸ்டமர் கேர் எண்களை நினைவில் வைத்திருங்கள்.. தைரியமாக புகார் கொடுங்கள் தேவையில்லாது பில்லில் தொகை குறிப்பிட்டு இருந்தால் அது எதற்கு என கேளுங்கள்.. அது சரியில்லை என்றால் தரமுடியாது எனச் சொல்லுங்கள்.

குறிப்பிட்ட காலத்தில் கார்டுகள் புதுப்பிக்கப்படும் போது பழைய கார்டுகளை இரண்டாக நான்காக வெட்டி எறிந்து விடுங்கள்.. முக்கியமாக கிரெடிட் கார்டு தொகையை நெட் பேங்கிங் மூலம் செலுத்துங்கள்.. செக்காக கொடுத்தால் அவசியம் செக்கின் பின்புறம் உங்கள் பெயர்/அலை பேசி எண்ணை குறிப்பிடவும், செக்கில் ஏதும் தவறு இருந்தால் அதை உங்களிடம் கூற எளிதாக இருக்கும்.

எல்லாவற்றிற்கும் மேல் உங்கள் மற்றும் வீட்டிலுள்ள மற்றவர்களின் கிரெடிட் /டெபிட் கார்டுகளை CPP என்னும் கார்டு புரொட்டக்ஷனில் பதியுங்கள் வருடத்திற்கு 1000 ரூபாய்க்குள் தான் வரும்.. ஒருவேளை உங்களிடம் திருடப்பட்ட கார்டுகளில் சைபர் க்ரைம் கில்லாடிகள் அதை உபயோகித்து பணம் எடுத்தால் கூட அதை நீங்கள் திரும்பப்பெறலாம்.. உங்கள் பணத்திற்கும் கார்டுகளுக்கும் சிறந்த பாதுகாப்பு..

CPP (Toll Free) 1800 419 4000 SMS to Talk : SMS 'CPP' to 56767 E.mail : cppindia.feedback@cpp.co.uk இது தான் உங்கள் கார்டுகளை பாதுகாக்கும் நிறுவனம் இங்கு பதிவு செய்து கொண்டு முழு பாதுகாப்பு பெறுங்கள்.. கிரடிட் கார்டுகள் கூரான கத்தி தான்.. ஆனாலும்

#இந்தக்_கத்தியில்_பழமும்_நறுக்கலாம்

No comments:

Post a Comment