ஒரு கிராமத்தானின் புலம்பல்...!
மானமா பொழைக்கத்தான் பஸ் ஏறி வந்தோம்...
பட்டணத்து எல்லய்க்குள்ள பறி தவிச்சு நின்னோம்...
மோட்டாரு வண்டியில சனமெல்லாம் பறக்குது...
ஓடுகிற மிசினபோல வாழ்க்கையும் தான் இருக்குது..
நட்டு வச்ச மரமாட்டம் கட்டடங்க நிக்குது...
கடல் காத்தும் சூடாகி வெக்கையா அடிக்குது...
குடுவையில அடச்ச தண்ணி வியாவாரம் ஆகுது...
குளிர்பானம் பேருல தான் பூச்சி மருந்து கிடைக்குது...
பக்தி அதை ஒரு கூட்டம் பணங்காசா மாத்துது...
டாஸ்மாகில் ஒரு கூட் டம் நாளெல்லாம் சொக்குது...
விவசாய நிலமெல்லாம் வீடாக நிக்குது...
வெளஞ்ச காய்கறியும் ஆன வெல விக்குது...
ஆணும் பொண்ணும் சமமுன்னு கோஷங்கள் கேக்குது...
கோர்ட்டுல விவாகரத்து பஞ்சாயத்து நடக்குது...
காசு கொடுத்து வாங்குறது ஒசியில கிடைக்குது...
ஒசியில கிடைக்கறது காசுக்கு தான் விக்குது...
நகை கடயில் துணிக் கடயில் கூட்டம் அல மோதுது...
தேவையோ இல்லையோ கண்டதயும் வாங்குது...
தின்னு பெருத்ததெல்லாம் மூச்சிரைக்க ஓடுது...
வட பாயாச சோறெல்லாம் குப்ப தொட்டி திங்குது...
சாக்கடயில் குடிச போட்டு பல குடும்பம் வாழுது...
பங்களா நாய் கூ ட கார் ஏறி போகுது...
மனுச பய பொழப்பு நாய் பொழப்பு ஆகுது...
நாயா பொறந்தாலும் அது மதிப்பு ஏறுது...
காசு பணமிருந்தா தான் கோவில் கூட தொறக்குது...
குடிக்க தண்ணீ இல்ல..குடியிருக்க வீடில்ல..பசிக்கு சோறில்ல
கெட்டா தான் பட்டணமுன்னு சொன்னதெல்லாம் பொய்யிங்க..
பட்டணமே கெட்டுடுச்சு இது நான் கண்ட உண்மைங்க....
No comments:
Post a Comment