தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
நீ இந்த எள்ளு பாத்துக்கிறாயா நைனா.? தம்மாத்தூண்டு தான் இருக்கும் அத்த ரெண்டா பொள்ந்தா எவ்வளவு சிறுசா இர்க்குமோ அந்தய அளவுக்கு கூட யாருமேலியும் நாம பகைய நெனிக்கக்கூடாத்து..அப்டி நெனைக்க சொல்லோ அந்தய தம்மாத்தூண்டு நெனப்பே ஒரு வம்சத்தியே அழ்ச்சிருமாம்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"எள்ளா நெனிக்கிற பகைதான் ஒரு வம்சத்துக்கு எள்ளு தெளிக்கிற பகை"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாம் கேடு.
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
கைல கத்திய வச்சிகினு குத்தவர்ற விரோதிய கண்டா கூட நீ பயப்படாதே..ஆனா உன் கிட்ட கூடவே சொந்தக்காரன் கணக்கா இர்ந்து... நல்லவனா ஆக்ட் குட்த்து உனுக்கு குழி பறிக்காறான் பாரு பேமானி அவுன கூடவே வச்சிக்கினு இர்ந்தா நீ பயந்தே ஆவணும்.! பிரிறா மேறி சொன்னா... "எதிரிய நம்பு..துரோகிய நம்பாதே"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
வாள்போல பகைவரை அஞ்சற்க;அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
உன்னிய மதிக்யாத ஆளோட பின்னாலியே போயி அவுன தாஜா பண்ணினு உசுர் வாழ்றத வுட செத்தாலும் அவுன் பின்யால போறதில்லன்னு வய்ராக்கியமா இர்ந்தேன்னு வய்யி.. அப்ப நீ அழிஞ்ச்சே போனாலும் அதான் நல்லது..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"மதிக்காதவன் பின்னால போறதவுட மரிச்சே போய்டலாம்"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
இத்த செஞ்சா நமக்கு கெட்ட பேரு வரும்ன்னு எத்த நெனிக்கிறியோ... அத்த செய்யாம மின்னாடியே உஸாரா இர்ந்து உன்னிய காப்பாத்திக்கணும்.. அப்டி செய்யாம போனா இன்னா ஆகும்.? நெர்ப்பாண்ட வச்ச வக்கப்பில்லு கணக்கா ஒன் வாழ்க்க எர்ஞ்சு கருகியேப்பூடும்...!
சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"உஸாராக படுற சோம்பலு...வாழ்க்கய ஆக்கிடும் சாம்பலு"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
உன்னிய பத்தி ஆருகிட்டகேட்டாலும் அல்லாரும்"ஆஹா..அவுரா..! அவுரு எப்பேர் பட்ட நல்ல மன்சன்" அப்டி பேசணும்.. இப்டி ஊரே புகழ்ந்து பேஸ்றா மேறி வாழாட்டா.. உன் உடம்பை சுமந்த பூமிய "தர்சா போன பூமின்னு"ஒலகம் திட்டிகினே இர்க்குமாம்..!
சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"புகழோட வாழப் பாரு..இல்லாட்டி..உன் மண்ண பழிக்கும் ஊரு"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
வசைஇலா வண்பயன் குன்றும் இசைஇலா
யாக்கை பொறுத்த நிலம்.
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
உனுக்கு ஆராவது கெடுதியே செஞ்சாலும்.. அத்த பொறுக்காம அத்த உனுக்கு செஞ்சவுன நீ பேஜார் பண்ணேன்னு வை.. ஒலகம் உன்னை ஒரு பொருளாவே மதிக்யாத்து.. ஆனா அப்பயும் பொறுத்து போனா உன்னிய மன்சுக்குள்ள அல்லாரும் தங்கமா மதிப்பாங்கோ..!
சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"பொறுமை இல்லாதவன் மண்ணு.. பொறுத்துப் போறவன் தான் பொன்னு"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே; வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
உனுக்கு கய்யி,காலு,கண்ணு,வாயி,காது இத்து அல்லாமே நல்லா இர்ந்தாலும்..உள்ள இர்க்குது பார் மன்சு அத்து நல்லா இர்க்கணும்,அப்டி இல்லாங் காட்டி வெளியே இர்க்குற உறுப்பல்லாம் சொம்மா ஓட்டினுகீறா மேறிதான் தான் அத்து இர்ந்து பிரியோஜன்மே இல்லை
சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"நல்ல மன்சு தான் ஞானம்.. அதில்லாட்டி நீ ஊனம்"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு?
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
நீ எத்தாவது ஒரு பொய் சொல்லி அதுனால ஆருக்காச்சும் பிரியோஜன்மா இர்ந்தாலோ.. அப்டி நீ சொல்ற பொய்யி எந்த பெர்ய குத்தமும் இல்யாம இர்ந்தாலோ.. நீ சொன்னது பொய்யே கெடியாத்து அதுவும் உண்ம தான்பா..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"நல்லதுக்கு சொல்ற பொய்யி... அது எப்யுமே மெய்யி"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்த்த
நன்மை பயக்கும் எனின்.
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
நீ இன்னாதான் நெரியா நல்லது செஞ்சு இர்ந்தாலும்.. வாயத் தொர்ந்து பேசக்கூடாத்த ஒரு கெட்ய வார்த்த பேசினின்னா...அந்த ஒரு கெட்ய வார்த்தியினால வர்ற கெடுதி நீ செஞ்ச அல்லா நல்லதையும் கெட்த்து அழிச்சுடும்.! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா
"கெட்டத பேஸ்றது தப்பு...அது நல்லதுக்கு வச்ச ஆப்பு"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றுஆகா தாகி விடும்.
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
இந்த ஒலகத்ல ஒர்யே ஒரு விஸ்யத்துல மட்டும் பெர்மை கெடிக்காது..! அத்து இன்னான்னு கேக்குறியா? இந்த ஒல்கத்துலே ஆரா இர்ந்தாலும் பொறாம புட்ச்சு பெர்மை படவே முட்யாது.. அத்தே நேர்த்துல பொறாம இல்யாதவங்கோ வோணான்னு சொன்னாலும் அந்த பெர்மை அதுவாவே அவுங்களாண்ட போய் சேரும்.. அத்த ஒண்ணியும் பண்ண முடியாத்து..!
சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"பொறாம தராது பெர்மை.. நீ பொர்த்து இர்ந்தா அது அர்மை"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதிலார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
வாழ்க்கில உம்மேல எந்த பழியும் வராம வாழ்ற பார்.. அதான்பா நல்ய வாழ்க்கை..! பழி இல்யாம வாழ்றது தான் நீ உசுரோட இர்க்கறதுக்கு அர்த்தம்...! அந்த மேறி ஒரு புகழ் உனுக்கு இல்யாம போச்சின்னு வை நீ உயிரோட இர்ந்தும் செத்தா மேறி தான்..!
சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"உன் மேல வுழுவுற பழி.. உனுக்கு வெட்டுன குழி"
சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"
வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்.
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
தப்பான விஸ்யத்த மன்சால நெனிச்சு பாக்குரதே தப்பு... அதுலயும் நென்ச்சே பாக்ககூடாத பெர்ய தப்பு இன்னா தெரிமா? அட்த்தவன் பொர்ளு மேல ஆசப்பட்டு அத்த அவனுக்கே தெரியாம லவட்டிக்கினு போலாம்ன்னு நெனிக்கிற நென்ப்பு இர்க்கவே கூடாத்து..
சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா..
"அடுத்தவனோட டப்பு...அத அடைய நெனிக்கிறது தப்பு"
சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"
உள்ளத்தால் உள்ளலும் தீதே;பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
ஒதவின்னு கேட்டு வந்தவங்க ஆருக்குமே ஒதவி செய்யாத ஒர்த்தன்.. எவ்ளோ துட்டு வச்சி இர்ந்தாலும்..அந்த துட்ட ஊர்ல இர்க்க அல்லாரும் கொஞ்சயம் கூட மதிக்க மாட்டாங்கோ.!
ஏன்னா..! அப்டியாப்பட்ட துட்டு ஊரு நடுவுல இர்க்குற விஷ மரத்து காயி பழம் ஆனா மேறி..! அந்த துட்டு அப்டி தான் பிர்யோஜனமில்யாம போகும்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"யாருக்கும் உதவாத துட்டு..விஷப்பழம் இர்க்குற தட்டு"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
வாழ்க்கய்க்கு தேவயான கொணம் இன்னா தெரிமாபா?அல்லார் கிட்டயும் அன்பா பணிஞ்சு இர்க்குறது தான்... நீ எம்மாம் பெர்ய பண்க்கார்னா இர்ந்தாலும் நெறியா சொத்து...
இர்ந்தாலும் உங்கைல இந்த பணிஞ்சி போற கொணம் இர்ந்தா அந்த கொணம் நீ சம்பார்ச்ச சொத்து மேறி இன்னொரு சொத்து..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா....
"பணிவு தான் கெத்து.. அது பண்கார்னுக்கும் சொத்து"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
எல்லார்க்கும் நன்றுஆம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
யார் மேலியாச்சும் நீ அன்பா இர்க்க சொல்லோ அத்த மூடி வைக்க முடிமா..? இல்ல அத்த ஒரு ரூம்ல போட்டு கதவ அட்ச்சு தாழ்ப்பா போட முடியுமா.? நீ அன்பு வச்சிக்கிற ஆளுக்கு..
ஏதாவது கஸ்டம் வர் சொல்லோ உன் கண்ணு சட்டுன்னு கல்ங்குது பாரு அந்தஒரு சொட்டு கண்ணீரு சொல்லிடும் அந்த உண்மியான அன்பை..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா..
"அன்புக்கு ஏது தாழ்ப்பா... உங்கண்ணு அழுவும் ஷார்ப்பா"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? ஆர்வலர்
புண்கண்நீர் பூசல் தரும்.
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
புள்ளய பெத்து வளக்குற அல்லா நைனாவும் நல்யா கேட்டுக்கோங்கோ.! நீங்க உங்க மவனுக்கு செய்ற பெர்ய ஒதவி இன்னா தெரிமா?அவன பெர்ய படிப்பு படிக்க வெச்சி...
பெர்ய அறிவாளி ஆக்கி படிச்ச பெர்ய பெர்ய மன்சனுங்க இர்க்குற சபயில அல்லாரும் உங்க மவன பாத்து அறிவுல நீ தாம்ப்பா முந்தி அப்டின்னு மெச்சற மாதிரி சொல்ல வைக்கணும்..
சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"மவனுக்கு அறிவாளி பதவி.. அதான் அப்பன் செய்ற உதவி"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்.
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....
உனுக்கு எதிரியே இல்லின்னாலும் ஒர்யே ஒரு எதிரி மட்யும் உனுக்குள்ளயே இருக்கிறான்.! அத்து யார்ன்னா? மத்தவங்கோ நல்லா இர்க்குறத பாத்து காண்டாகுற பொறாம தான்..!
பொறாம இர்க்குறவனுக்கு வேற பகயே தேவியில்லை.. உன் எதிரி கூட உன்னிய சும்மா உட்றுவான்..! ஆனா இந்த பொறாம உன்னை அழிக்காம வுடாது..!
சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"பொறாம பட்ற குணம்.. உன்ன ஆக்கிடும் பொணம்"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடுஈன் பது.
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....
உன் கைல நெறியா துட்டு இர்ந்தாலும் பெர்ய பண்க்காரானாஇர்ந்தாலும் ஒர்யே ஒரு விஸ்யம் செய்யாம இர்ந்தா துட்டு இர்ந்தும் நீ ஏழை.! அது இன்னான்னு கேக்குறியா..?
ஒன்னிய தேடி உன் வூட்டாண்ட வர்ற விர்ந்தாளிங்களை மதிக்காம இர்க்க பாரு அதுதான் பெர்ய பிச்சக்காரத்தனம்.! அப்டி இர்க்குற அல்லாரும் மகா மடப்பசங்கோ..!
சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"விர்ந்தாளிய மதிக்காத கேசு... துட்டு இர்ந்தும் லூசு"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....
ஒரு யாபாரியா இர்க்க சொல்லோ அவுனுக்கு இன்னா மேறி கொணம் வோணும்? பொறத்தியார் பொருளையும் தன்யோடதா நென்ச்சி அதுக்கு நல்ல மர்வாத கொட்த்து..
யாபாரம் செய்றான் பார்..! அதான் யாபாரிக்கு ஏத்த மர்வாதயான கொணம்..! அதான் யாபார்த்திலியும் நேர்மியான மொறை.. சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"உன் பணம் என் பணம்.. அப்டின்னா அது யாபாரிக்கு நல்ல கொணம்"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தம்போல் செயின்.
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....
நீ உங்க நைனாவுக்கு செய்யிற பெர்ய மர்யாத இன்னா தெரிமா? நீ நல்லதயே நென்ச்சி நல்லதையே செஞ்சு நல்லவனாவே நடக்குறத பாத்து அடடா இப்டியாப்பட்டநல்ல புள்ளய...
பெத்ததுக்கு மவராசன் இன்னா தவொம் செஞ்சானோ அப்படின்னு நாலு பேரு பேசுறது உன் நைனா காதுல வுயணும்..அதான் மவனா பொர்ந்தவன் அப்பனுக்கு செய்யிற ஒதவி..!
சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா
"நல்ல மவன்னு எடு பேரு... உன் அப்பனை பாராட்டும் ஊரு"
சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....
சம்சாரத்த பத்தி ரெண்டே வார்த்தயில சொல்லிக்கிராருபா நம்ம வள்ளுபரு.! உனுக்கு அமயுற வூட்டம்மா நல்ய கொணவதியா அமஞ்சா உன் வாழ்க்கயில அல்லாம் கெடிக்கும்..!
அப்டி இல்லாம கெட்ட குணத்தோட அமஞ்சா உன் வாழ்க்கயில ஒன்யுமே கெடிக்காது..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா... நல்ல மனைவின்னா வாழ்க்கயில இல்லாதது இன்னா..! கெட்ட மனைவின்னா வாழ்க்கயில இருக்குறது இன்னா..!
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....
நாயமா ஒர்த்தன் வாழ்றதுன்னா எப்டி தெரிமா? மன்சுக்குள்ள குத்தம் கொற இல்யாம வாழறது தான் அது.. குத்தமில்லாத நெஞ்சு தான் நாயம்...!
அழுக்கு புட்ச்ச மன்சால நல்லது எதுவும் நடக்காது அதெல்லாம் சும்மா உதார் காட்றதுக்கு கொரலு உட்ற மேறி சவுண்டு மட்யும் தான் கேக்கும்..... நாயமா இருக்காது..!
சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"மன்சுக்குள்ள நல்லது சைலன்டா இர்க்கும்... கெட்டது சவுண்டா இர்க்கும்"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா... இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
நீ சம்பார்ச்சு சேக்குற சொத்து எப்டியாப்பட்டதா இர்க்கணும் தெரிமா? இன்னா இன்னா நல்ல வழி இர்க்குதோ அந்த வழியில நாயமா நேர்மியா சேத்ததா இர்க்கணும்..!
யாருக்கும் எந்த கெடுதியும் செய்யாம துட்ட சேக்குறது தான் மிக்கியம்..அப்டி சம்பார்ச்சா தான் உனுக்கு நாயமானவன்ற பேரும் வரும்..! வாழ்க்கயில சந்தோஸ்மும் நிம்மதியும் வரும்..!
சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா....
"நேர்மியா சேத்த துட்டு...எப்பயும் இனிக்கிற லட்டு"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா... இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
இந்த ஆச இர்க்குதே அது படா பேஜாரானதுபா... அந்த ஆச தான் நம்ம அழிவுக்கு காரணம் இத்த புத்தரு மட்டும் சொல்லலை..! நம்ம தலயும் சொல்லிக்கிராரு எப்டின்னா...
இந்த ஆசய்க்கு பய்ந்து வாழ்ந்தா அது நாயமான வாழ்க்கையாம்..! அப்டி வாழாம அல்லாத்துக்கும் ஆசப்பட்டா..அந்த ஆச உன்னிய ஏமாத்தியே அழிச்சுர்மாம்..!
சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா....
"ஆசய்க்கு அஞ்சு... ஆசப்பட்டா நஞ்சு"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா.
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா... இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
மன்சனை எப்போ சாமியா பாக்குறது?இதுக்கு ஒரு பெர்ய லிஸ்ட்டே கொட்த்துக்கிறாரு நம்ம வள்ளுபரு.! "குறிப்பு அறிதல்"அப்டின்ற அதிகார்த்துல இன்னா சொல்லிக்கீரார்னா...
கொஞ்சயம் கூட டவுட் ஆகாம நம்ம மன்சுல நென்ச்சத அப்டியே கண்ணாடில பாத்தா மேறி கண்டுக்கிறான் பாரு அவன் தெய்வத்துக்கு சமானமாம்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"நென்ச்சத கண்டுக்குற கண்ணு... அவனும் சாமியும் ஒண்ணு"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
ஐயப் படாஅது அகத்து உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
No comments:
Post a Comment