கவி காளமேகத்தின் சிலேடை வெள்ள(ல்ல)ம்....
நாய்க்கும்... தேங்காய்க்கும்..!
ஓடுமிருக்குமத னுள்வாய் வெளுத்திருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது - சேடியே
தீங்காய தில்லாத் திருமலைரா யன்வரையில்
தேங்காயு நாயுநேர் செப்பு.
தோழியே (சேடியே) தீமை இல்லாத திருமலைராயன் எல்லைக்குட்பட்ட நாட்டிலே தேங்காயும் நாயும் ஒன்று எனக் கூறு..! இது கடைசி இரு வரிகளின் அர்த்தம் இனி சிலேடை.!
தேங்காய் : ஓடுமிருக்கும் - ஓடுள்ளதாக இருக்கும்.. அதனுள் வாய் வெளுத்திருக்கும் - உட்புறம் வெண்மையாக இருக்கும்.. நாடும் குலை தனக்கு நாணாது - அனைவராலும் விரும்பப்படும் குலையாக தொங்குவதற்கும் அது கோணுவதில்லை.
நாய் : ஓடுமிருக்கும் - ஓடியும் திரியும் சில சமயம் இருந்த இடத்திலேயே இருக்கவும் செய்யும்.. அதன் உள் வாய் வெளுத்திருக்கும் - அதன் வாய் உட்புறம் வெளுத்திருக்கும்..
நாடும் குலை தனக்கு நாணாது - அதற்கு விருப்பமான குரைத்தலில் ஈடுபடுவதில் அது வெட்கப்படுவதில்லை.
என்னுடைய பஞ்ச் :
நல்ல தேங்காயை சோதிப்பது எப்படி? நாய் நன்றியை வாலில் தெரிவிப்பதெப்படி?
ஆட்டிப்பார்த்து..!
No comments:
Post a Comment