Friday 28 March 2014

அரசியல் பைபிள்...!

பைபிள் வசனங்களும் - இன்றைய அரசியலும்...


என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் - ராமதாஸ்

கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் - தமிழருவி மணியன்

நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கை விடுவதும் இல்லை - கலைஞர்

நிச்சயமாகவே முடிவு உண்டு - காங்கிரஸ்

இடைவிடாமல் உன் தேவனை நம்பிக் கொண்டிரு - சரத்குமார்

ஒருவனை அவன் தாய் தேற்றுவது போலே நான் உங்களை தேற்றுவேன் - அம்மா

ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும் செய்யாமற் போனால் அது அவனுக்கு பாவமாயிருக்கும் - சோனியா

பலவீனரை தாங்குங்கள் - வை.கோ.

கர்த்தாவே என் வாய்க்கு காவல் வையும் - கேப்டன்

நீ உன் கண்ணில் இருக்கிற உத்திரத்தை உணராமல் உன் சகோதரன் 
கண்ணிலுள்ள துரும்பை பார்ப்பது ஏன் - மு.க.அழகிரி

நான் உம்மை துதிப்பேன் - நாஞ்சில்,பரிதி

வலது புறம் இடது புறம் சாயாதிருப்பீர்களாக - கம்யூனிஸ்ட்டுகள்

எனக்கு சித்தமானவைகளை எல்லாம் செய்வேன் - மோடி

நான் பயப்படேன் மனுஷன் எனக்கு என்ன செய்வான் - அத்வானி

ஒருவரையொருவர் தேற்றுங்கள் - காங்கிரஸ் வேட்பாளர்கள்

நீ எறும்பினிடத்தில் போய் அதன் வழிகளைப் பார்த்து ஞானத்தைக் கற்றுக் கொள் - ஞானதேசிகன்

சத்தியத்திற்கு விரோதமாய் பொய் சொல்லாமலும் இருங்கள் - நாராயணசாமி

சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகி இரு - ஈ.வி.கே.எஸ்

மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார் - சுப்ரமணியசாமி

உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லக் கடவீர்கள் - ராகுல்

நான் விசுவாசித்து இருக்கிறவர் இன்னாரென்று அறிவேன் - மன்மோகன்

ஒருவருக்கொருவர் பொய் சொல்லாது இருங்கள் - இந்திய வாக்காளர்கள்










No comments:

Post a Comment