#உதடும்_உள்ளமும்
உதடு சொன்னது...
என் வாழ்க்கையில் வந்த ஃபிளவர் கார்டனே...
துன்பப் பனியை விலக்க வந்த வெயிலே
என்னில் ஒரு பாதியாய் இருக்கும் வைஃப் நீதான்
என் இளைப்பாறுதலுக்கு நீதான் நாற்காலி
ஆண்டுகள் இருபதானாலும் அதே காதல்
நீயின்றி நானில்லை நம் காதலுக்கு வானமே எல்லை..
உள்ளம் சொல்வது...
என் வாழ்க்கைச் சிறையின் வார்டனே...
என் இன்பத்தை கைது செய்த ஜெயிலே
கண்ணில் என்னை ஆட்டி வைக்கும் வைஃபை நீ தான்
உன்னை இளக்காரமாக நினைத்தால் நான் காலி
ஆண்டுகள் இருபதானாலும் அதே மோதல்
நீயின்றி நானில்லை.. வேற வழியில்லை தொடருதே தொல்லை..
20 ஆம் ஆண்டு திருமண தினம்..
No comments:
Post a Comment