#எமை_ஆண்டாள்
உலகில் தன்னை அலங்கரித்துக் கொள்ளாத பெண் இருந்தால் அது எட்டாவது உலக அதிசயம்.. தன்னை அழகுப் படுத்திக் கொள்ள விரும்பாத பெண்கள் யாரேனும் உண்டா! அதுவும் அதிகாலை மார்கழி நீராடிய பின்பு கண்ணுக்கு மை எழுத மாட்டோம் கூந்தலில் பூச்சூட மாட்டோம் என்கிறார் ஆண்டாள்.
பால்,நெய் உண்ணாமல் இருந்து, தீயச் சொற்களை பேசாது, தான தருமங்கள் செய்து, செய்யக் கூடாததை செய்யாமல் இருந்து, இப்படி கடைபிடிக்கும் பாவை நோன்பில் பெண்ணின் இயல்பான உடன் பிறந்த குணமான அலங்கரிக்கும் குணத்தையும் மாதவனுக்கு முழுமையாக அர்ப்பணிக்கிறார் ஆண்டாள்.
மேக்கப் இல்லாத முகத்தை விட மேக்கப் இல்லாத மனமே முக்கியம் என்கிறார் அர்ப்பணிப்புக்கு இதை விட ஓர் நல்ல உதாரணம் இருக்க முடியுமா? கண்ணனின் அருளை மட்டுமே வேண்டும் ஆண்டாளின் அர்ப்பணிப்பு எல்லையில்லாதது.
மார்கழி 2ஆம் நாள் பாடல்:
வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே
நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்
முடியோம் செய்யா தனசெய்யோம் தீக்குறளைச்
சென்றோதோம்
ஐயமும் பிச்சையும்
ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாற் எண்ணி
உகந்தேலோர் எம்பாவாய்.
No comments:
Post a Comment