Wednesday 30 April 2014

தீனா - மே

தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....

நாலு நல்ய விஸ்யம் உன் காதால கேக்குணும்ன்னா... காத நல்யா தொர்ந்து வச்சுக்கோ... அப்டி கேக்காம போனா.. உன் காது தான் ஒலகத்துல மெய்யாலுமே கேக்காத காது..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா.. "நல்லத கேக்குற காது.. அதுக்கு ஈடு ஏது"

சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

நெதமும் என் கனவுல வந்து குஜாலா பேசி என்னிய பேஜாராக்குற பாவி மன்சன்.. ஒரு நாளாவது நேர்ல வந்து இப்படி பேசினானா..! ஏன் இப்டி என்னை கொல்றான்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா... "கனவுல குஜாலு.. நனவுல பேஜாரு"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

நனவினால் நல்காக் கொடியார் கனவினால்

என்எம்மைப் பீழிப் பது.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...!

மன்சனுக்கு ஆசயே இல்யாத மன்சு இர்ந்தா.... அது மேறி பெர்ய சொத்து ஒன்யுமே இல்ல அதுக்கு ஈடா ஒல்கத்துல எதுவுமே பெர்ய சொத்து இல்ல...! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா.. "மன்சுல இருக்குற ஆசய ஒத்து... அதான் ஒல்கத்துல பெர்ய சொத்து"

சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை

யாண்டும் அஃதுஒப்பது இல்.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

இந்தய நெர்ப்பு இர்க்குதே அத்து கூட தொட்டா காண்டித்தான் சுடும்.. ஆன்யா தொடாமயே  ஒண்யு சுடுதுன்னா...ஒர்த்தர ஒர்த்தர் பிரிஞ்சு இர்க்க சொல்லோ.. பலானது நியாபகம் வந்தா அந்த மூடு மேறி சுடுறது வேற எதுவுமில்ல..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...!

"தொட்டா சுடும் நெர்ப்பு.. தொடாம சுடும் காம தகிப்பு"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

தொடிற்கடின் அல்லது காமநோய் போல

விடிற்சுடல் ஆற்றுமோ தீ.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...!

நெதமும் சோத்துக்கு லாட்டரி அட்ச்சி... பொழுது வந்தா கஸ்டம் பொழுது போனா கஸ்டம்ன்னு வாழ சொல்லோ உன் அறிவு நாசமாப்பூடும்..! அத்தே மேறி தான் நீ எத்தயாவது மர்ந்து போய்கினே இர்ந்தா பெர்சா சம்பார்ச்சி வச்ச உன் பேரும் ரிப்பேராய்டும்..!

சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா.. "வறும அறிவ கொல்லும்.. மறதி புகழ கொல்லும்"

சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

பொச்சாப்புக் கொல்லும் புகழை; அறிவினை

நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

என் மன்சுல நென்ச்சுனு இர்க்குற மவராசனை பிர்ஞ்சு இர்க்க சொல்லோ.. மெலுசா இர்க்குற அனிச்ச பூவும் அன்னப்பறவ சிறகும் பொண்ணு என் பாதத்தில பட்டா பஞ்சு மேறி இல்யாம நெர்ஞ்சி முள்ளுகணக்கா குத்துதுய்யா..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"நீ எங்க இர்க்குற மாமா... பூவ முள்ளா ஆக்கலாமா"

குஜாலா சொல்லிக்கீரார்பா"தல"

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம்.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...!
 
உனுக்கு தோஸ்த்தா இர்ந்தாலும் செரி,உன் விரோதியா இர்ந்தாலும் செரி,இல்ல ரெண்டுமே இல்யாது வேத்து ஆளா இர்ந்தாலும் செரி,அல்லாத்துகிட்டேயும் ஒரே மேறி நாயமா நேர்மியா இர்ந்தா உனுக்கு வாழ்க்கயில அல்லாமே நல்லுது தான்.! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...! "நியாயம் அல்லாத்துக்கும் ஒண்ணு.. அப்டி வாழ்ந்தா உன் வாழ்க்கயில வின்னு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

தகுதி எனஒன்று நன்றே பகுதியால்

பாற்பட்டு ஒழுகப் பெறின்.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

மன்சுக்கு புட்ச்சவர பாக்க சொல்லோ குஷியாவுற அதே கண்ணுதான்... அவுர பாக்காத  போது அழுதுனு இர்க்கு.! இந்தய கண்ணை பத்தி நென்ச்சா மட்யும் எனுக்கு ஒரே சிரிப்பா வர்து! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா.. பாத்தா குஷியாவுது..பாக்காட்டி அழுவுது" #கண்ணு

குஜாலா சொல்லிக்கீரார்பா"தல"

கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும்

இதுநகத் தக்கது உடைத்து.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...!

உனுக்கு இன்னா தான் கஸ்டத்துக்கு மேல்ய கஸ்டம் வந்துகினே இர்ந்தாலும்.. அத்த நென்ச்சு கலங்காம தில்லா இர்ந்தேன்னு வய்யி..உனுக்கு வந்த கஸ்டத்துக்கே கஸ்டம் வந்து உன்ய வுட்டு ஓடிப் போய்டும்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"கஸ்டத்துலயும் காட்டு தில்லு.. அது கஸ்டத்துக்கே கஸ்டம்ன்னு சொல்லு."

சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற

இடுக்கண் இடுக்கண் படும்.

தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...!

கய்யில எதுவுமே இல்யாத ஏழ பாழைங்க அல்லாத்துக்கும், கொட்த்து எல்ப் செய்றதுக்கு பேரு தான்பா தருமம்..! இருக்குறவனுக்கு செய்யுற எல்ப்பு அப்டி கெடியாத்து.. அது அள்ந்து கொடுத்து எல்ப் செஞ்சிட்டு"எப்ப நைனா திர்ப்பி தருவேன்னு" கேட்டு திரும்ப வாங்றா மேறி அது தருமமே இல்ல..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா... 

"இல்யாதவனுக்கு செய்றது தான் தருமம்.. இருப்பவனுக்கு செஞ்சா அது கருமம்"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீரது உடைத்து.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்து இல்ல காதல்..!

டாவடிச்சுனுகீற பொண்ணாண்ட பேசினு இர்க்க சொல்லோ தும்முலு வந்து தும்மிட்டன்பா.! உட்னே அவ உனுக்கு ஆய்சு நூறுன்னு வாழ்த்திட்டு அட்த்த செகண்டே காண்டாயி எவ்ளோ ஒர்த்தி உன்னிய நென்ச்சி தான் இப்ப நீ தும்மினுக்குற.. சொல்லு எந்தய சிறுக்கி உன்னிய நென்ச்சான்னு அய்துகினே கேக்குறா..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"தும்மலு போட்டதா குத்தம்..காதலி உட்றா சத்தம்"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீர் என்று


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா..

இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

இந்தய கள்ளு இர்க்குதே அத்த குட்ச்சிட்டா அப்டியே மிதக்குற மேறி குஜாலா இர்க்கும்.. ஆன்யா அத்தவுட போத இன்னா தெரிமா.? ஒண்யா கூடின அந்த மேறி பலான நேரத்த நென்ச்சி பாக்க சொல்லோ..அந்த நெனப்பிலியே இன்னொரு தபா குஜாலா இர்ந்தா மேறி பீலாகும் பாரு அதான்பா மெய்யாலுமே கில்மா.. சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"கள்ளுல இல்யாத போதை... காமத்துல கண்டவன் மேதை"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்

கள்ளினும் காமம் இனிது.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....

நம்ய வூர்ல இர்க்குற பெர்ய மன்சங்கோ.. பட்ச்சவங்கோ... "இத்தெல்லாம் செஞ்சா உனுக்கு நல்ய பேரும் ஜபர்தஸ்தும் கெடிக்கும்ன்னு"சொன்ன அல்லா நல்லதயும் அப்டியே செய்ணும்.. அத்த மட்டும் மதிக்காம போய்யா போனு இர்ந்தேன்னு வய்யி உனுக்கு ஏழு ஜென்மித்துலயும் நல்ல வாழ்க்கியே கெடியாத்து..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா....

"நல்லதயே செஞ்சு நீ வாழு.. இல்ல வீணாய்டும் உன் ஜென்மம் ஏழு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது

இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா..

இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

என் மன்சுக்கு புட்ச்சவர எப்ப பாக்குறதுன்னு பொம்னாட்டி நான் பேஜாரா இர்க்க சொல்லோ... அவ்ரு என் கனவுல வந்து எனுக்கு ஒரு சங்கதி சொன்னாரு..! அவர நென்ச்சு ஏங்கிகினு இர்ந்த நேர்த்துல அவுரு அயகு மொகத்த இட்டாந்து காட்டிச்சே கனவு அதுக்கு நான் இன்னா விர்ந்து தந்து கைமாறு செய்ய..??! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"அவுரு தான் என் உசுருக்கு மருந்து.. அவுர காட்டுன கனவுக்கு இன்னா விருந்து"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு

யாதுசெய் வேன்கொல் விருந்து.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.. இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

கைல துட்டு இல்லாங்காட்டி இந்தய ஒல்கத்துல நீ வாழ்ற வாழ்க்கியே வேஸ்ட்டு..! அதே நேர்த்துல செத்தா சொர்க்கத்துக்கு போவுணும்ன்னு நீ நென்ச்சேன்னு வை அதுக்கு இன்னா தெரிமா செய்ணும்..? மத்த உசுரு மேல்ய அன்பா அன்சர்ணையா இர்க்கணுமாம்.. அப்டி இல்லின்னா உனுக்கு நர்கம் தான் கெடிக்கும்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா....

"அன்பா வாழ்ந்தா சொர்க்கம்.. அப்டி வாழாட்டி நர்கம்"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா..

இன்னிக்கு கர்த்தில்ல காதல்..

இந்தய மன்சு இர்க்குதே அது நென்ச்சா அட்த்த செகண்ட்டே ஒல்கத்துல எந்தய மூலைக்கி வோணா போவும்..? அத்தே மேறி காதலிச்சவனை நென்ச்சா அட்த்த செகுண்ட்டே அங்க போறா மேறி இர்ந்தா இன்னாத்துக்கு பொம்பளை நானும் கண்ணுல வெள்ளமா தண்ணி வர்றா மேறி அழ்துனு இர்க்க போறேன்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"மன்சு போகுது தூரமா... அது மேறி போகணும் வேகமா"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்

நீந்தல மன்னோஎன் கண்.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.. இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

உன் மன்சுக்கு தெரியும் இத இத செஞ்சா நம்க்கு கஸ்டமா இர்க்கும்.. இது நம்க்கு ஆவாது.. அப்டின்னுட்டு..! இதெல்லாம் தெர்ஞ்ச நீ அத்தே கஸ்டத்தை அட்த்தவனுக்கு கொட்த்தா அது இன்னாபா நாயம்..அதுக்கு இன்னா காரணம்..? இல்ல கேக்குறேன் உனுக்கு கஸ்டம்ன்னா அது அவனுக்கும் கஸ்டம் இல்லியா..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"உனுக்கு கஸ்டமா இர்க்குறத..அட்த்தவனுக்கு இஸ்டமா செய்யாதே"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ

மன்னுயிர்க்கு இன்னா செயல்.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா..

இன்னிக்கு கர்த்தில்ல காதல்..

காதலி சொல்றா.."என் மன்சுல இர்க்குற ஆள எப்யுமே நெஞ்சுக்குள்ளாறயே வச்சிகினு இர்ப்பேன்.. அதுனாலயே தான் நான் எத்தயுமே சூடா துண்ண பயப்படுவேன்.. ஏன்னு கேக்குறியா..? நான் சூடா துண்ண சொல்லோ.. அவுரு மேல அந்த சூடு பட்டு அவுருக்கு பொறுக்காம போய் வர்த்தப் பட்டுட்டாருன்னா..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"அவரு இர்க்குறது என் நெஞ்சாங்கூடு...அதுனால நான் துண்றதே இல்ல சூடு"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல" 

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்

அஞ்சுதும் வேபாக்கு அறிந்து.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.. இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

அல்லாத்துக்கும் ஒதவி செய்ற ரொம்ப பெர்ய மன்சு இர்க்குற ஆளுகிட்ட எக்கச்சக்கமா துட்டு இர்ந்தா அத்து எப்டியாப்பட்டது தெரிமா..? ஒரு ஊருக்கே குடிக்க நல்ல தண்ணி கொடுக்குற குளம்... எப்யுமே வத்தாம தண்ணி நெறஞ்சி இர்ந்தா எப்டி பிரியோஜன்மா இர்க்குமோ அத்தே மேறி இர்க்கும்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா..!

"வள்ளலு கைப் பணம்...வத்தாத தண்ணிக் குளம்"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா..

இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

காதல் பண்ணினுக்கிற பொண்ணு மேல சின்னுதா கோவப் பட்டு... ஒரு தம்மாத்தூண்டு சண்டை போட்டுகினு அப்பால அத்த மர்ந்துட்டு..அட்த்த நிம்சமே கட்டில்ல ஒண்ணா சேர்ற சுகம் இர்க்குதே.! அடடாடா அத்தெல்லாம் சொன்னா பிரியாது... ஒர்த்தர் மேல ஒர்த்தருக்கு அன்பிர்ந்தா தான் பிரியும்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"அன்பா படுற கோவம்.. கட்டில்ல உனுக்கு லாபம்"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்

கூடியார் பெற்ற பயன்.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

இந்தய ஒலகம் எப்படி நட்ந்துகினு இர்க்குதோ அத்தே மேறி தான் நாமளும் நட்ந்துக்கணும்.. அத்து போற போக்கிலியே போயி வாழ்றவன் தான் அறிவாளி...! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா... " ஒலகத்த புர்ஞ்சிக்கோ.. அறிவா நட்ந்துக்கோ"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

அவ்வது உறைவது அறிவு.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா..

இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

நமக்கு புட்ச்ச பொண்ணோட அயகான மெலுசான தோள் மேல நம்ம தலய வச்சி சுகமா சாஞ்சிகினு அப்டியே பஞ்சு மெத்தயில பட்த்தா மேறி பட்த்து தூங்கறது இருக்கே...! என்னா சுகம்..! அந்தய பெர்மாளு இர்க்குற வைகுண்டத்துல கூட இப்படி சொகமா தூங்க முடியாது.. அப்டியாப்பட்ட சுகம்ப்பா அது..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"நீ சாஞ்சி தூங்கணும் காதலி தோளு.. அத்த பாத்து ஏங்கணும் பெர்மாளு"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக்கண்ணான் உலகு.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

நல்ல விசயத்தை பட்ச்சி தெர்ஞ்சிக்க மிடியாட்டியும் தெர்ஞ்சவங்க பேசறத கேக்குறதாவது செய்ணும்..அதுவும் ஒரு ருசிதான்... ஆன்யா காதால நல்லத கேக்காம வாய் ருசிக்காக எப்யும் எத்தயாவது அரவ மிசின் கணக்கா துண்ணுகிட்டே இர்க்குற வாழ்க்க இர்ந்தா இன்னா.? செத்தா இன்னா.? சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா....

"காதுக்கும் இருக்கு பசி.. நீ நல்ல பேச்ச ரசி" 

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்?


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா...

இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

ஒர்த்தருக்கு ஒர்த்தர் நல்யா புர்ஞ்சிகிட்டு மெய்யாலுமே காதல் வச்சிர்ந்தா அவுங்கோ ரெண்டு பேரு கண்ணுமே இன்னா பேசணுமோ அத்தெல்லாம் பேசிடுமாம்.. அவுங்கோ ரெண்டு பேரும் வாயத்தொர்ந்து பேசவே வோணாம்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"கண்ணாலியே புர்ஞ்சி போச்சு... எதுக்கு இனி வாய் பேச்சு"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

ஒன்யே ஒண்ணு மட்டும் அல்லாத்துக்கும் பொதுவு... அதான்யா மன்ச பொறப்பு..! ஆனா மன்சங்க அல்லாரும் அவுங்கவுங்க செய்யிற தொழில வச்சி.. இந்த தொழிலு உசத்தி.. அந்த தொழிலு மட்டம்ன்னு வர் சொல்லோ தான் பிரச்சினியே.. செய்யுற தொழில வச்சி தான் அவன் அவுனுக்கு மருவாதி..! சுர்க்கமா..! பிரிறா மேறி சொன்னா..

"அல்லாத்துக்கும் ஒண்ணுதான் பொறப்பு..உன் தொழில வச்சிதான் சிறப்பு"

சோக்க்கா சொல்லிக்கீரார்பா "தல"

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

ஏழைங்கோ நல்லவங்க யார் கிட்டியாது கையேந்தி பிச்சை எடுக்க சொல்லோ அந்த நல்லவரு கிட்டயும் எதுவும் இல்லாம துட்டு இல்லபான்னு சொன்னாலே...அந்த நல்லவரு உசுரு போய்டுமாம்.. சரி அப்டின்னா அல்லா துட்டையும் வூட்ல ஒளிச்சு வச்சிகினு ஒன்யுமே இல்லன்னு சொல்றானே பிசினாரிப்பய அவன் உசுரு எப்படி போகும்..?

செர்ப்பால அட்ச்ச மேறி..சோக்கா கேட்டுகினாருப்பா "தல"

கரப்பவர்க்கு யாங்கொளிக்குங் கொல்லோ இரப்பவர்

சொல்லாடப் போஒம் உயிர்.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா 

இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

நீ கண்ணாலம் கட்டிக்க போற பொண்ணு... நீ பாக்காம இர்க்குற நேர்த்துல அப்டியே உன்னிய ஒரு லுக்கு உடுதுன்னு வை... அந்த லுக்கோட மீனிங்கு எப்டியாபட்டது தெரிமா..! நீ நாளிக்கு கண்ணாலம் ஆயி மொத ராத்திரில குஜாலா இர்க்குற சொகம் கூட்ய அதுல பாதி தானாம்... அந்த லுக்கு மேறி ஒரு பெர்ய குஜால் எத்யுமே இல்லியாம்..! 

சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"பாக்காம பாக்குற பொண்ணோட கண்ணு.. சுகம் கொடுக்கறதுல நம்பர் ஒண்ணு"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

கண்களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தில்

செம்பாகம் அன்று பெரிது.


தீனா "கொரலு" அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா 

இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

டைட்டா கட்டி புட்ச்சிகினு இர்க்க சொல்லோ எங்க இவுளுக்கு நோவுமேன்னு ஆம்பளை நெனிச்சுகினே கைய கொஞ்சம் லூசாக்குனா அந்தய சின்ன கேப்ப கூட தாங்காத பொம்பள நெனிப்பாளாம் இன்னாடா இது இந்த ஆளுக்கு நம்ம மேலே அன்பு குறஞ்சிட்ச்சா இல்ல நம்மள பிரிய போறானான்னு நெத்திய சுர்க்குவாளாம்..! குஜாலா பிரிறா மேறி சொன்னா...

"நீ கெட்டியா கட்டிப்புடிக்காத பொண்ணு.. அதுக்கு உடனே கலங்குமாம் கண்ணு"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது

பைந்தொடிப் பேதை நுதல்.


No comments:

Post a Comment