Thursday 17 April 2014

இவர்கள் சந்தித்தால்...!

மோடி - ராமராஜன் 

ராம : வணக்கம்ண்ணே... நாந்தேன் ராமராசன்.. 

மோ: அடடே வாங்க ராம்ஜி.. உங்க பேரே எங்க கட்சிக்கு ரொம்பப் பிடிச்ச
பேரு தான்..!

ராம : ஆனா எனக்கு எங்கம்மாதேங் பிடிக்கும்..! 

மோ : எனக்கும் அம்மாவை பிடிக்கும்..! 

ராம : அப்புடியா..! அப்ப ஏன் ஆதரவு தரலை?

மோ : ஹலோ.... நான் சொன்னது என்னை பெத்த அம்மாவை..!

ராம : என்னண்ணே இது பெத்த அம்மா..சின்ன வயசுல பண்ண கல்யாணம்
எல்லாம் இப்ப தான்  உங்க நெனைப்புக்கு வருதா..? 

மோ: நான் உண்மையைச் சொன்னது தவறா ராம்ஜி..?

ராம : எது உண்மை?அம்மா தந்த ஆடு உண்மை..அம்மா உணவக சாம்பார் உண்மை..
விலையில்லா மிக்ஸி உண்மை.. இப்படி நீங்க எந்த உண்மையை சொன்னிங்க?

மோ : அப்ப தமிள் நாட்டுல கரண்ட் இல்லாத உண்மை..? 

ராம : அது பொய்யிண்ணே.. அது திமுக வின் சதி..!

மோ : இதுல திமுக எங்க வருது..?

ராம : அவங்க தானே முதல்ல மின் வெட்டு கொண்டு வந்தது அதனால தான்..!

மோ : ஆனா அம்மா ஆட்சிக்கு வந்து 3 வருஷமாச்சே..!

ராம: அம்மா ஆட்சிக்கு வந்து 3 வருசம் ஆனாலும் தீராத அளவுக்கு மின் பிரச்சனைய திட்டம்
போட்டு உருவாக்கி இருக்காங்கன்னா...! உங்களுக்கு புரியலையா?

மோ: அதெல்லாம் சரி தமிள் நாட்டுல மூலை முடுக்கெல்லாம் சுத்துறிங்க..! எப்படி
மோடி அலை வீசுதா..?

ராம : அட நீங்க வேறண்ணே... கடல்லியே இப்ப அலைய காணோம்..அம்மா பேரை சொன்னா
கடல் அலையே அமுங்குது..இப்போதைக்கு அலைன்னா அது காங்கிரஸ் தான்.!

மோ: என்னது காங்கிரஸ் அலையா..!!!! புதுசா இருக்கு..!

ராம : ஐய்யய்யே..!அவங்க தான் ஜெயிக்கறதுக்கு அலை அலைன்னு அலையுறாங்க அதத்தான்
சொல்ல வந்தேன்..!

மோ : அப்ப நாங்க தான் ஜெயிக்கிறோம் இல்லியா ராம்ஜி..!

ராம : அதெப்படி உடனே நீங்க ஜெயிக்கப்போறதா சொல்றிங்க..?நாங்க ஜெயிக்கலாமில்ல..!
உங்களுக்கு அம்மா பவர் தெரியாதா?

மோ : அம்மா ஆட்சில தான் பவரே இல்லியே..! அது சரி ஐயா நிலவரம் எப்படி.?

ராம : ஐயா.. நிலவரம் ரொம்ப மோசமுங்க...! அவரு... தான் பெத்த மகன் மேலேயே வருத்தமா
இருக்காரு..!

மோ : ஆமாமா..அழகிரி எனக்கு கூட போன் பண்ணாரு அடுத்து அவரைத் தான் சந்திக்கலாம்ன்னு
நினைச்சு இருக்கேன்..!

ராம : ஐய்ய.. என்னது அழகிரியா...! ஐயான்னா.. நீங்க யாரை நினைச்சிங்க..?

மோ : நம்ம கலைஞர்ஜியைத் தான்..!

ராம : பாத்திங்களா..! ஐயான்ன உடனே உங்களுக்கு கலைஞர் தான் ஞாபகம் வருது.. ஆனா உங்க கூட்டணில இருக்குற ராமதாஸ் ஐயா ஞாபகம் வரலை..!

மோ : ஹி..ஹி..ஹி... அப்படி ஒண்ணும் இல்லியே...!

ராம : ஏன் மழுப்புறிங்கண்ணே.. உங்க கூட்டணில அதிக இடத்துல நிக்குற நம்ம கேப்டன் விஜயகாந்த பாக்காம ரஜினிகாந்த பாத்தவரு தானே நீங்க..!

மோ : அதெல்லாம் இல்லியே... ஏன்..! இப்ப உங்களையும் தானே பாக்குறேன்..! அது தப்பா..?

ராம : அண்ணே..! நீங்க ரஜினி,அடுத்து விஜய்,அப்புறம் நான்.. இப்படி தொடர்ந்து பல நடிகர்களை பார்த்துகிட்டே வர்றது சரத்குமார் அண்ணனுக்கு தான் பிடிக்கலை..

மோ : என்னது சரத்குமாரா..!  அவருக்கு ஏன் பிடிக்கலை..? 

ராம : ஆமாண்ணே.. நீங்க நாட்டோட தலைமை பதவிக்கு போட்டியிடுறிங்களா இல்லை நடிகர்
சங்கத்தோட தலைமை பதவிக்கு போட்டியிடுறிங்களான்னு எனக்கே குழப்பமா இருக்கே.!

மோ : அடப்போங்க ராம்ஜி.. நீங்களும் என்னை கிண்டல் பண்றிங்க..

ராம : ஆமா நீங்க ரஜினிய சந்தித்ததை பத்தி கேப்டன் என்ன சொன்னாரு..

மோ : கேப்டன் என்ன சொன்னார்... வைகோ என்ன சொன்னார்... ராமதாஸ் என்ன சொன்னார்... அத்தனைக்கும் பதில் சொல்வார் எங்க பொன்னார்...!

ராம : சூப்பருண்ணே என் பிரசாரத்தை நானே கேட்டா மாதிரி  பதில் சொல்றிங்களே..!

மோ : என்ன பண்றது உங்க தமிள் நாட்டுக்கு வந்து நானும் கத்துகிட்டேன்...!

ராம : சரிண்ணே அம்மா தான் பிரதமர் அப்படின்னா நீங்க ஏத்துப்பிங்களா..? 

மோ : அ" அப்படின்னு துவங்குற எழுத்துல யாருமே பிரதமர் ஆக முடியாதே ராம்ஜி..!

ராம : அண்ணே நீங்க ஏதோ பொடி வச்சு பேசறிங்கன்னு எனக்கு தெரியுது.. சரி..அம்மா
ஆதரவோட தான் ஆட்சி அமைக்கணும் அப்படின்னு ஒரு நிலைமை வந்தா..?

மோ : சொப்பன சுந்தரிய யார் வச்சிருக்காங்கன்னு கேட்டா கூட சொல்லிடுவேன்
ஆனா எனக்கு இதுக்கு பதில் தெரியலையே..!

ராம : அட அண்ணே சூப்பர்..! என் படமும் பாத்து இருக்கிங்களா..! அப்ப... "ஒரு பழம்
இந்தாருக்கு இன்னொண்ணு எங்க" காமெடியும் தெரியுமா..! 

மோ : இப்ப அரசியலில் நாட்டு மக்களின் குழப்பமே அது தானே..ராம்ஜி..!

ராம : சரிண்ணே... உங்களை பாத்தது ரொம்ப சந்தோசம்... மறக்காம அம்மாவுக்கு ஓட்டுப்
போட்டுறுங்க.. என்ன..!

மோ : யாரு நானா...!!!!! ( மோடி திகைக்க கிளம்புகிறார்...ராமராஜன்)

No comments:

Post a Comment