Saturday 31 May 2014

பந்திக்கு முந்துங்க...

ஒரு சாப்பாட்டு சரித்திரம்..!

நல்ல ரசனை என்பது ஒருவரின் உணவிலிருந்து தான் தொடங்குகிறது.! நல்ல உணவுப் பிரியர்கள் பல துறைகளில் ரசனை மிக்கவராய் இருப்பார்கள் என்பார்கள்..! நானும் ஓர் சாப்பாட்டுப் பிரியன்.. எனது தந்தையின் தொழிலும் ஓட்டல் தொழிலே என் தம்பியும் இந்தத் தொழிலில் தான் உள்ளார்.. எனக்கும் அதில் ஆர்வமுண்டு..!

ஆனால் என் தொழில் அவ்வாறு அமைய வில்லை.. ஆனால் ஊர் ஊராக சுற்றி பிறகு உலகம் முழுவதும் சுற்றி வித விதமான உணவுகளை சுவைக்கும் வாய்ப்பு கிடைத்தது. என் உணவு ரசனைக்கு மதுரை வாழ்க்கையும் ஒரு மிக முக்கிய காரணம்..! அப்போதே நல்ல உணவுகள் பற்றி எழுத வேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை அது இப்போது நனவாகியுள்ளது..!

தமிழகத்தின் சிறந்த உணவுக் கடைகள் & அங்கு கிடைக்கும் உணவுகளின் சிறப்பு பற்றி எழுதப்போறேன்னு சொன்னதும் ஆதரிச்ச நண்பர்களுக்கு முதலில் நன்றி.. அதே நேரம் இதப் பத்தி நிறைய பேரு எழுதி இருக்காங்க..அவங்க எழுதாததை நீங்க என்ன புதுசா எழுதப் போறிங்கன்னு கேட்பவர்களுக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்..!

காதல் பொது தான் அதை கதையா வச்சுகிட்டு நிறைய பேரு படம் எடுக்கலியா.! சாப்பாடும் அப்படித் தான் என்னுடைய கோணத்துல நான் ருசித்த உணவுகளை என்னுடைய ரசனைய உங்க கிட்ட பரிமாறப் போறேன்... இதுக்கு முன்னாடி எழுதினவங்க அவங்க அனுபவத்தை எழுதி இருப்பாங்க..அதுக்கு இன்னொரு முகம் இருக்கலாமில்லையா.! 

அது தான் இந்த சாப்பாட்டு சரித்திரம்! இந்த கூகுள் காலத்திலயும் எந்த ஊருக்கு போனாலும் "நல்ல சாப்பாட்டுக் கடை எங்க இருக்கு"ன்னு சக மனுஷனை தான் கேக்குறோம் அதை கூகுளில் தேடுவதில்லை.. ஏன்னா சாப்பாடு மட்டும் தான் மனிதன் சக மனிதன் பேச்சை நம்பி போகிற இடம்.. அப்படி நான் போன இடத்துக்கெல்லாம் உங்களையும் கூட்டிட்டு போறேன்.. 

இங்க கிடைக்குற சாப்பாடெல்லாம் சரியான நேரத்துக்கு போகலைன்னா தீர்ந்திடும்... சீக்கிரமா வாங்க போகலாம்... ஏன்னா பந்திக்கு முந்தணுமில்ல...!



No comments:

Post a Comment