Friday 12 June 2015

நச்மார்னிங் கதைகள்...

நச்மார்னிங்_கதைகள்

இரு நண்பர்கள் வெற்றியைத் தேடி பயணம் செய்து கொண்டிருந்தார்கள் அப்போது எதிரே ஒரு துறவி வந்தார் வெற்றி எங்கேயிருக்கிறது என்று அதில் ஒருவன் கேட்டான்.

துறவி சொன்னார் வெற்றி நகர்ந்து கொண்டே இருக்கும் நீங்கள் தான் அதை விரட்டிப் பிடிக்க வேண்டும். அது அருகிலும் இருக்கலாம் ஆயிரம் மைல் தள்ளியும் இருக்கலாம்...

எனக் கூறிவிட்டு போய்விட்டார் உடனே கேள்வி கேட்டவன் தன் ஊருக்கு போன் செய்து அதிவிரைவாக போகும் கார் ஒன்றை தான் இப்போது நிற்கும் இடத்தை சொல்லி வரச்சொன்னான்.

உடன் வந்த நண்பன் மீண்டும் கிளம்பத்தயாரானான்.. உடனே இவன் அவனைப்பார்த்து நண்பா ஏன் கிளம்புகிறாய் கார் வந்ததும் சேர்ந்தே போகலாமே கொஞ்சம் பொறுத்துக்கொள் என்றான்.

நண்பா துறவி சொன்னதை கேட்டாய் தானே வெற்றி அருகிலும் இருக்கலாம் என்றதை.. கார் வரும் வரை காத்திருப்பதைவிட பயணத்தை தொடர்வதே புத்திசாலித்தனம் என்றான்.

நண்பா நீ எவ்வளவு தூரம் நடந்து விடப்போகிறாய் கார் வந்தால் காத்திருந்த நேரத்தையும் சேர்த்து வேகமாக போய்விடலாம் பொறு என்றான்.

உன்னுடன் காத்திருந்து வெற்றிக்கும் நமக்குமான தூரத்தை அதிகப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை நான் கிளம்புகிறேன் என்று கூறி கிளம்பினான்...

அந்த பாதையின் திருப்பத்தில் வெற்றி நின்று கொண்டிருந்தது.!

No comments:

Post a Comment