Monday 22 June 2015

குறள் குறுங்கதைகள்

குறள்நெறிக்_குட்டிக்கதைகள்

ஓட்டல் கடை வைத்திருக்கும் சேகருக்கு ஒரு ஆச்சரியம் தினமும் ஒரு முதியவர் வந்து 10 அல்லது 15 பொட்டலங்கள் சாப்பாடு வாங்கிப்போவார் பார்த்தால் வசதியானவர் போலில்லை. ஆனால் யாருக்கு வாங்கிப் போகிறார் என்பதும் தெரியவில்லை.

இன்று கேட்டுவிட வேண்டும் என முடிவு செய்தான்.. பெரியவர் வந்தார்.. ஐயா தப்பா நினைக்கலைன்னா இது யாருக்கு வாங்கறிங்கன்னு தெரிஞ்சுக்கலாமா என்றான். தம்பி இதெல்லாம் சாலையில் அனாதையா இருக்குற மன நோயாளிகளுக்கு.

தனக்கு பசின்னு மத்தவங்க கிட்ட பிச்சை கேட்கக் கூட தெரியாத அவங்களுக்கு ஒரு உதவியா செய்யறேன்.. நானும் கூலி வேலை தான் பாக்குறேன் என் சாப்பாடு போக மிச்சத்தை சேத்து வச்சு இப்படி செய்யறேன்.
இந்தா பணம்.. வரட்டுமா என கட்டி வைத்திருந்த உணவு பொட்டலங்களை எடுத்துக் கொண்டு கிளம்பினார். அந்தப் "பெரிய" மனுஷன்.

நீதி : தன் கடமையை உணர்ந்தவர்கள் தன்னிடம் வசதி இல்லாவிட்டாலும் இயலாதவர்க்கு உதவுவார்கள்.

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடனறி காட்சி யவர்.

No comments:

Post a Comment