Saturday 27 June 2015

இந்திரசபையில் மேகி..

இந்திரலோகத்தில்_நூடுல்ஸ்

இந்திரலோகமே ஆனந்தமாக இருந்தது.. பூலோகத்தில் இருந்து வந்திருந்த புதிய உணவான மேகியைச் சுவைக்க அனைவரும் காத்திருந்தனர். எப்பம்மா சாப்பிடலாம் என அங்குள்ள குழந்தைகள் கேட்க வீட்டுக்கு வீடு இரண்டே நிமிஷம்டா கண்ணா என்னும் குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.

ரம்பா, ஊர்வசி, மேனகா எல்லோரும் தங்கள் பெயர்களை ராஜகுமாரி என மாற்றிக்கொண்டனர்.. மூன்று ராஜகுமாரிகள் இருக்கும் போது ரியல் ராஜகுமாரியான இந்திராணி என்ன செய்வதென யோசித்து தன் பெயரை மாதுரி தீக்‌ஷித் என மாற்றிக் கொண்டார்.

இந்திரன் அமிதாப் ஆனார். நல்லவேளை விக்ரம் பிரபு அங்கில்லை இல்லாட்டி சிவாஜி தாத்தா என்று அழைத்திருப்பார்.. பூலோகத்தில் விஷம் என்ற மேகியை எப்படி தேவலோகத்தில் ஏற்றுக் கொண்டனர்.. பரமசிவனே ஃபுட் கண்ட்ரோலராக வந்து அதை எடுத்து விழுங்கி நற்சான்றளித்தார்.

ஆலகாலமுண்டவரே அருமை என்றபின் அப்பீல் இருக்குமா.. இதை சமைக்க பூலோகத்தில் இருந்து நிறைய சமையல் நிபுணர்கள் வரவழைக்கப் பட்டிருந்தனர். எல்லோரும் வெகுகாலம் அமுதத்தையும் இந்திரலோகத்து டாஸ்மாக்கில் சோம, சுரா பானங்களை மட்டுமே சுவைத்திருந்ததால் மேகியை சுவைக்க ஆவலாக இருந்தார்கள்.

பாற்கடலின் ஓரம் ஒரு பெரிய ரிசார்ட்டில் சமையல் தயாராக வெகேஷன் வந்தது போல் குவிந்திருந்த முக்கோடி தேவர்களும் ஆவலாக இருந்தார்கள்.. சமையல் முடிந்தது.. அனைவருக்கும் பரிமாறப்பட்டது.. மேகியை சுவைத்த வானவர் அதன் சுவையில் மயங்கிப் போனார்கள்.. திரும்ப திரும்ப கேட்டுச் சாப்பிட்டார்கள்..

அனைவரின் விருப்பத்துக்கு இணங்க தேவலோகத்தின் சிறந்த ஃபாஸ்ட்ஃபுட் ஆக மேகி தேர்ந்தெடுக்கப்பட்டது.. மகிழ்வோடு வீடு திரும்பிய அனைவருக்கும் மறுநாள் வாந்தி மயக்கம் தேவலோகமே தலை சுற்றலில் இருந்தது.. ஃபுட் பாய்சனுக்கு காரணம் மேகியே என கண்டுபிடிக்கப்பட்டது.

இப்போது எல்லோரும் மேகி நன்று என தீர்ப்பு சொன்ன பரமசிவனை குமாரசாமி போல பார்த்தார்கள்.. சிவனும் பதறி மேகி முதலாளியை அழைத்து விசாரித்தார்.. தேவலோக லேபில் மேகி பரிசோதிக்கப்பட்டது.. ஆனால் அதில் குறை ஏதுமில்லை.. பின் எப்படி தவறு குழம்பினார்கள். அப்போது மேகி முதலாளி ஒரு யோசனை தந்தார்..

அந்த கிச்சனை நான் பார்க்க முடியுமா என்றார்.. அழைத்துச் சென்றார்கள் அங்கிருந்த சமையல் நிபுணர்களை அழைத்து விசாரித்தார்.. அப்போது தான் அதில் ஒருவருக்கு சமையலே ஒழுங்காகத் தெரியாது என கண்டறிந்தார்.. யார் நீ எங்கிருந்து வருகிறாய் என கேட்டார்கள் அவன் சொன்ன பதிலில் அனைவரும் மயங்கி விழுந்தனர்.. அவன் சொன்னது...

#நான்_அமிர்தாவில்_படிச்சிட்டு_வந்தவனுங்க

No comments:

Post a Comment