Saturday 20 June 2015

குறள் குறுங்கதைகள்

குறள்நெறிக்_குட்டிக்கதைகள்

யோவ் பி.ஏ வெளிய யாரு?

உங்க தொகுதியில் இருந்து வந்துருக்காரு..

என்ன ஏதும் மனுவா இல்ல நன்கொடையா? இல்லிங்க அவரு மக ப்ளஸ்டூவில் 1180 மார்க் எடுத்துருக்காம் புள்ள டாக்டராக ஆசைப்படுதாம் அதான் வந்திருக்காரு.

வரச்சொல்லு..

வாங்க வாங்க... பி.ஏ எல்லாம் சொன்னாரு டாக்டர் சீட்டா ஆனா அதுக்கு நிறையா செலவாகுமேய்யா உங்கிட்ட பணம் இருக்கா..

பணம் இருந்தா நான் எதுக்குங்க உங்ககிட்ட வரப்போறேன்.. அய்யா தேர்தலில் நிக்கும்போது ஏழைகுழந்தைகள் கல்விக்கு உதவுவேன்னு வாக்குறுதி தந்திங்க அதை நம்பித்தான்...

ஓ.. வாக்குறுதி தந்திட்டா செய்யணுமா.! இந்த ஒரு சீட்டுக்கு 25 லட்சம் கொடுக்க ஆளிருக்கு.. உன்னை மாதிரி இல்லாதவனுக்கு கொடுக்க நான் ஒண்ணும் கேனையன் இல்ல கிளம்பு கிளம்பு..

செய்யறேன்னு வாக்குறுதி தந்திட்டுஇப்படி மனசாட்சி இல்லாம பேசுறிங்களேய்யா

யோவ்.. மனசாட்சியா சும்மாவா ஓட்டு போட்டிங்க ஒரு ஓட்டுக்கு 2000 கொடுத்திருக்கேன்.. அதை வாங்கினபோதே உங்க மனசாட்சி எங்க போச்சு.. போ போ எனக்கும் நியாயம் தெரியும்.

நீதி: ஒருவன் குணத்தையும் குற்றத்தையும் அறிந்த பிறகே அவனை பதவிக்கு தேர்ந்தெடு.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்.

No comments:

Post a Comment