Wednesday 24 June 2015

குறள் குறுங்கதைகள்

#குறள்நெறிக்_குட்டிக்கதைகள்

ரவியின் மளிகைக்கடை அந்த இடத்தில் பிரபலம் அது வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்புப் பகுதி.. வேறு கடைகளுக்கு 5 கி.மீ போக வேண்டும் என்பதால் அங்குள்ள வீடுகளுக்கு ரவியின் கடையே வசதி.

அவன் பலசரக்கு சாமான்களுடன் காய்கறிகளும் விற்று வந்தான். அவன் கடையில் கூட்டம் அலைமோதும்.. வாடிக்கையாளர்கள் காத்திருந்து வாங்கிப் போனார்கள்.. இச்சமயத்தில் தான் வந்தான் ஒரு தள்ளுவண்டி கடைக்காரன்.

மார்க்கெட்டில் இருந்து ஃபிரெஷ்ஷான காய்கறிகள் அந்த வண்டியில் இருந்தது வீடு வீடாக போய் அவனே கூவி அழைப்பதால் ரவி கடைக்கு போய் காத்திருக்க விரும்பாதோர் அந்த வண்டியை மொய்க்க ஆரம்பித்தனர்.

ரவிக்கு வியாபாரம் குறையலாயிற்று. ஒரு யோசனை செய்தான்.. அந்த ஏரியாவில் பிரபலமான அடிதடி கட்டபஞ்சாயத்து செய்பவரை அணுகி ஒரு தொகையை தந்து விஷயத்தை சொன்னான்.

இப்போது அந்த வண்டிக் காரனை அந்தப்பகுதியில் பார்க்க முடிவதில்லை.. ரவி கடையில் மீண்டும் கூட்டம் அள்ளியது.. ரவிக்கு பெரும் மகிழ்ச்சி.. ஒருநாள் ரவி கடையின் எதிர்புறம் இருந்த காலி இடத்தை சுத்தம் செய்து வேலி போட்டார்கள்.

மேற்பார்வை செய்து கொண்டிருந்தவர் அந்த அடிதடி பார்ட்டி. அவரைப் பார்த்ததும் ரவி என்னண்ணே இந்த இடத்தை வாங்கிட்டிங்களா வீடு கட்டப்போறிங்க போல என்றான்.

அதற்கு அவர் சொன்னார் ஆமா ரவி ஆனா கட்டப்போறது வீடு இல்ல.. காம்ப்ளக்ஸ் பில்டிங்  கிரவுண்ட் ப்ளோர்ல ஒரு  பெரிய கார்ப்பரேட் கம்பெனியோட சூப்பர் மார்க்கெட் வருது இன்னும் 4 மாசத்துல திறப்புவிழா.. என்றார். ரவிக்கு சுரீர் என்றது.

நீதி : நம்மை விட மெலியவரை துன்புறுத்த நினைக்கும் போது நம்மை விட வலியவர் உண்டு என்று நினைத்து வாழ்வதே சிறப்பு.

வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின்

மெலியார்மேல் செல்லு மிடத்து.

No comments:

Post a Comment