Tuesday 23 June 2015

குறள் குறுங்கதைகள்

#குறள்நெறிக்_குட்டிக்கதைகள்

"அவங்க கேட்ட பணத்தைக் கொடுத்து அந்த நிறுவனத்தை வாங்கிடுங்க" என்றார் தொழிலதிபர் ராஜசேகர். போர்டு மீட்டிங்கில் இருந்த அனைவரும் திகைத்தனர்.

சார் என்ன சொல்றிங்க.. அந்த நிறுவன அதிபர் வேல்பாண்டியன் உங்க பரம எதிரி.. நம்ம கம்பெனி மேல இல்லாத பொய் வழக்கு போட்டு நம்ம வியாபாரத்தையே அழிக்க பார்த்தவர்.. அவர் நமக்கு செய்யாத இடைஞ்சலே இல்லை என்றார் ஜி.எம்.

இருக்கட்டுமே அதெல்லாம் பழசு..இப்ப ரொம்ப நொடிச்சு போயி தானே கம்பெனியை விற்கிறார்.. கேட்டதை கொடுத்து வாங்கிடுங்க என்றார் ராஜசேகர்.

இல்ல சார் அவர் ரொம்ப கஷ்டத்துல இருக்கார் நாம ஏன் கேட்ட காசை கொடுக்கணும் குறைச்ச விலைக்கு கேட்டாலும் கொடுத்துடுவார் அவர் கம்பெனியை வாங்க மார்க்கெட்டுல  நம்மைத் தவிர யாருமேயில்லை. அதான் சொல்றேன் சீப்பா வாங்கிடவா என்றார் ஜி.எம்.

வேணாம் அது பாவம் அவரு கஷ்டத்துல இருக்கும் போது இப்படி செய்யறது பாவம்.. அவர் கேட்ட பணத்தையே கொடுத்து வாங்குங்க என்றார் ராஜசேகர்.. ஓகே சார் என்று எழுந்த ஜி.எம். சார் கடைசியா கேக்குறேன் அவர் கொடுத்த டார்ச்சர் எதுவுமே உங்களை பாதிக்கலை என்றார்.

ஹா..ஹா.. ஹா.. நான் அதெல்லாம் எப்பவோ மறந்துட்டேன் என்றார்  ராஜசேகர் சிரிப்புடன்.

நீதி: ஒருவர் செய்த தீமையை தண்டிக்க முடிந்தும் தண்டிக்காது இருப்பது சிறந்தது.. அந்தத் தீமையை மறந்துவிடுவது அதைவிட சிறந்தது.

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனினும் நன்று.

No comments:

Post a Comment