Sunday 21 June 2015

குறள் குறுங்கதைகள்

குறள்நெறிக்_குட்டிக்கதைகள்

நடிகர் வசந்த் கேரவனில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது சிலர் அனுமதி பெற்று அவரை சந்தித்தனர்.

வணக்கம் சார் நாங்க xyz விளம்பர நிறுவனத்தில் இருந்து வர்றோம்.. சார் நம்ம விளம்பர படத்துல நடிக்கணும்ன்னு ஆசைப் படுறோம்.

அப்படியா நடிச்சிட்டா போச்சு.. எந்த பிராடக்ட்டுக்கு?

சார் வனிதா கேட்டரிங் காலேஜ் விளம்பரம் சார்..

அப்படியா.. ஆனா இப்ப இந்த மாதிரி விளம்பரங்களில் உண்மை இருக்காதுன்னு மக்கள் பேசிக்கிறாங்க.. அந்த காலேஜோட தரம் எப்படி?

அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு சார்? மார்க்கெட்டுல உங்க ரேட் என்னன்னு தெரியும் மேற்கொண்டு 5 லட்சம் தர்றோம் என்ன சொல்றிங்க?

இல்லிங்க முழுவிவரம் சொல்லுங்க நடிக்கிறதா இல்லையான்னு நான் சொல்றேன்..

சார்.. நீங்க சமீபத்துல கேட்டரிங் செஃபா நடிச்ச படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு.. அதனாலதான் இதுல உங்களை தேர்ந்தெடுத்து இருக்கோம்.. டபுள் மடங்கு பேமண்ட் கூட தர்றோம் நடிக்க மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதிங்க.. ப்ளீஸ்

ஓ.. அப்ப ஏதோ உங்ககிட்ட தவறு இருக்கு.. கஷ்டப்பட்டு சம்பாதிச்சு தன் பிள்ளைங்களுக்கு நல்ல எதிர்காலம் அமையணுமுன்னு ஆசைப்படுற பெற்றோர்களை ஏமாத்த எனக்கு மனசு வரலை நீங்க கோடி ரூபா கொடுத்தாலும் அந்தப்பணம் எனக்கு வேணாம்..

நான் காசுக்கு நடிக்கிறவன் தான் ஆனா என்னை காசுக்கு விக்கிறவன் இல்லை தயவுசெஞ்சு எழுந்திருச்சி போயிடுங்க.

நீதி: பொருந்தா வழிகளில் வரும் செல்வத்தை புறக்கணித்துவிட வேண்டும்.

அருளோடும் அன்போடும் வாராப் பொருளாக்கம்

புல்லார் புரள விடல்.

No comments:

Post a Comment