Sunday 28 June 2015

குறள் குறுங்கதைகள்.

குறள்நெறிக்_குட்டிக்கதைகள்

ராஜா கண்டிப்பு மிகுந்த முதலாளி.. 20 ஆண்டுகளாக தனது தொழிற்சாலையில் அனைத்தும் அவர் கட்டுப்பாட்டிலே இருக்குமாறு பார்த்துக் கொண்டு வருகிறார். இத்தனை ஆண்டுகளில் அவர் கம்பெனிக்கு நல்ல மேனேஜர் வாய்க்கவில்லை.

வருபவர்களும் 1 வருடம் கூட தாக்குப்பிடிக்காமல் ஓடி விடுவதன் ரகசியம் அவருக்கு தெரியவில்லை. இதை தன் நீண்ட நாள் நண்பரிடம் சொல்லி வருத்தப்பட்டார். நண்பர் கேட்டார்.. உங்க மேனேஜர்களுக்கு நீங்க என்ன மாதிரி வேலை தருவிங்க"

ராஜா சொன்னார் அவர்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் அத்தனையும் அறிவுறுத்துவேன் அதை செஞ்சாலே போதும்.. அவங்க வேலையில் பாதி வேலையை நானே பாத்துடுவேன் ஏன் தான் எல்லாரும் நிலைக்க மாட்டேங்குறாங்கன்னு தெரியலை என்றார்.

நண்பர் சொன்னார்.. ஓ பிரச்சனையே இது தானா!! ராஜா நீ செஞ்ச தப்பு இது தான் அந்த வேலையை செய்ய ஒருத்தனை தேர்ந்தெடுத்துட்டு நீயே கட்டளை இட்டுக் கொண்டிருந்தால் அங்கே அவனுக்கு என்ன வேலை.. ஒருவனை பொறுப்புக்கு வைத்தால் வேலையை நம்பி அவனிடம் தராது நீயே சுமந்தது தான் தவறு என்றார்.. ராஜாவுக்கு உண்மை புரிந்தது.

நீதி: பதவிக்கு ஒருவரை நியமித்துவிட்டால் அவர்களை நம்பி பணியாற்ற விடவேண்டும்.

வினைக் குரிமை நாடிய பின்றை அவனை

அதற்குரிய னாகச் செயல்.

No comments:

Post a Comment