Sunday 16 August 2015

Bergan

Bergen... உலக உருண்டையின் கழுத்துப்பகுதி.. இதற்கு மேலே க்ரீன்லாந்து அதன் பிறகு ஆர்டிக் பனிப்பிரதேசம் நார்வே நாட்டின் முன்னாள் தலை நகரம்.. ஸ்காண்டிநேவிய அரசு ஆட்சி புரிந்த இடம்.. நார்வேயின் உச்சியில் அமைந்த்துள்ள பழம் பெருமை வாய்ந்த அழகான நகரம்..

பனிச்சிகரங்கள், உறை பனிக் கடல், பழம் பெருமை வாய்ந்த கட்டிடங்கள், சிலைகள், அருங்காட்சியகங்கள் நிறைந்த நகரம்... உலகத் தரம் வாய்ந்த பனிச் சறுக்கு மைதானங்கள் இங்கு உண்டு.. மிகப்பெரிய கப்பல் துறைமுகமும் விதவிதமான நவீன படகுகளும் உள்ள அழகிய துறைமுகம்.

பனி மலைகளை குடைந்து போடப்பட்ட வெகு நீளமான மலைக் குகை பயணம் சிலிர்ப்பூட்டும் .. தற்போதைய தலை நகரான ஓஸ்லோவிலிருந்து 7 மணி நேர ரயில் பயணம். பசுமை புல்வெளிகள், அழகிய பனிமலைகள் என கண்கொள்ளாக் காட்சி.. கோ" படத்தில் என்னமோ ஏதோ பாடல் படமாக்கப்பட்ட இடம் என்றால் திரைப்பட ரசிகர்களுக்கு நன்கு புரியும்...

அங்கு ymca விடுதியில் உள்ள டார்மெட் ரி என்னும் வகை அறைகளில் தங்கியிருந்தோம்.. ஒரு அறையில் நான்கு பேர் இரட்டைக் கட்டில் அப்பர் பெர்த் உடன் இதற்கே 200 டென்மார்க் ரூபாய்கள்.. (டேனிஷ் டாலர்) கிட்டத்தட்ட நம்ம ஊர் காசுக்கு 10 ஆயிரம் ரூபாய்..! (2010இல்)

சாக்லெட் தூவப்பட்ட பன்.. கொய்யாப்பழ ஃபேளவரில் Fanta, மெகா சைஸ்களில் பீட்ஸா என எங்கள் பயணம் முழுவதும் (ஒரே டைப்) சாப்பிட்ட எங்களுக்கு YMCA வில் காலை ஆச்சரியம் காத்திருந்தது.. உணவு ஹாலுக்குள் நுழைந்ததும் பிரமிப்பானோம்.

சுடச்சுட இட்லிகள், தோசைகள், பூரிக்கிழங்கு, சட்னி, சாம்பார், ஈழத்து சிறப்பான சம்பல், ஆம்லெட்டுகள், இடியாப்பம் தேங்காய்ப் பால், அசைவர்களுக்கான பெப்பர் மட்டன் பாயா, தர்பூசணி&லெமன் ஜுஸ் என பிரமாதப்படுத்தியிருந்தார்கள். நெகிழ்ந்து புகுந்து விளையாடினோம்.

ஏனெனில் இங்கு வந்து 7 ஆம் நாளில் நாங்கள் சாப்பிட்ட முதல் தமிழ்நாட்டு உணவு இது.. மதியம் பருப்பு சாதம், சாம்பார், ரசம், தயிர்,கூட்டு, பொரியல், அவியல், அப்பளம் வடை, பாயாசம் என ஒரு நாள் சைவமும், மறுநாள் மட்டன் சிக்கன் மீன் என ஒவ்வொன்றிலும் 3 அயிட்டங்களில் விருந்து..!

அதிலும் ஒடியங்கூழ் எனப்படும் அரிசி மற்றும் மீன் இறால் உள்ளிட்ட பல வகை மீன்களில் தயாரான ஒரு கூழ் கொடுத்தார்கள் அசுராமிர்தம்... (தேவர்கள் அசைவம் உண்பதில்லை என்பதால்) அதற்கு தொட்டுக்கொள்ள ஒரு இஞ்சித் துவையல் வேறு.. 5 ஆண்டுகள் ஆனாலும் நினைவிலிருக்கிறது.

கிட்டதட்ட 2000 தமிழ்க் குடும்பங்கள் வசிக்கின்றனர் இனிய விருந்தோம்பல் மிகுந்த அன்பில் எங்களை குளிப்பாட்டி விட்ட அன்பு நெஞ்சங்களை என்றும் மறக்க இயலாது -6 டிகிரி உறைய வைக்கும் குளிரில் டிசம்பர் மாதத்தில் நடுக்கத்துடன் சென்று வந்தது இனிய நினைவுகளாய்.

No comments:

Post a Comment