Monday 17 August 2015

ராதுபலி.

#ராதுபலி

பாகுபலியை மிஞ்சும் ஒரு பிரம்மாண்டமான புதிய சினிமாக்கதை

ராதாவும் ராஜாவும் தம்பதியினர் இருவரும் திருமணம் செய்து கொண்ட பின்பு அந்த ஊர் நாட்டாமை ராஜாவின் அப்பா பகிரதன் அடுத்த நாட்டாமையாக ராஜாவை தேர்ந்தெடுக்க முடிவு செய்கிறார் ராஜாவின் சித்தி வைதேகி அவர் மகனை நாட்டாமையாக்க விரும்பி காய் நகர்த்தி நயவஞ்சகமாக பேசி பகிரதனிடம் பழைய சத்தியத்தை நினைவூட்டுகிறார்.

வாக்குத் தவறாத எர்வாமேட்டின் பற்றித் தெரியாத கவரிமான் ஜாதியான பகிரதன் வைதேகியின் பேச்சைக் கேட்டு அவர்களை ஊரை விட்டு வெளியேற தீர்ப்பு சொல்லிவிடுகிறார். அவர்களும் குடும்பத்தை விட்டு விலகி வந்து ஊருக்கு வெளியே வசிக்கிறார்கள். ராஜாவின் தம்பி இளங்கோ அண்ணன் மேலுள்ள பாசத்தால் அவர்களோடு வந்துவிடுகிறான்.

இடையில் புத்திரசோகத்தில் பகிரதன் இறக்க அமெரிக்கா போயிருந்த வைதேகி மகன் சரத் ஊர் திரும்புகிறார்.. நடந்ததை கேள்விப்பட்டு அவர் தன் தாயை திட்டிவிட்டு போய் அண்ணன் ராஜாவை ஊருக்கு அழைக்கிறார். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை எனவே அப்பா தந்த தண்டனைக்காலம் முடியும் வரை நான் ஊருக்கு வரமாட்டேன் என்கிறார் ராஜா.

கண்ணீருடன் ராஜாவின் அங்கவஸ்திரத்தையும் சொம்பையும் கேட்டு வாங்கி இனி நம்ம ஊரில் இது தாண்ணே தீர்ப்பு சொல்லும் என நா தழுதழுக்க கூறு திரும்புகிறார் சரத். இப்படியாக இவர்கள் வாழ்க்கை போய்க்கொண்டிருக்க ஒருநாள் ராதா அதிர்ச்சியாகிறாள். அவளது ஃபேஸ்புக் இன்பாக்ஸில் சரவணன் என்பவன் அடிக்கடி டார்ச்சர் கொடுக்கிறான்.

அவள் பதிவிடும் புகைப்படங்களுக்கு cute darling, awesome dear, wow looking like angel, my sweety இப்படி அவன் அட்டூழியத்தை கண்டு வெறுத்து அவன் இன்பாக்ஸ் போய் தான் இன்னொருவர் மனைவி என்கிறாள் ராதா.. அதனாலென்ன ஃபேஸ்புக்கில் அதெல்லாம் சகஜம் டியர் அப்புறம் எதுக்கு இங்க வர்ற இந்தா இந்த விடியோ பாரு என ஆபாசமாக ஒரு படம் அனுப்பி அநாகரீகமாக பேசுகிறான் சரவணன்.. 

வெகுண்டெழுந்த சீதா சரவணனை திட்டி போஸ்ட் போட அதுக்கு நிறைய லைக்கும் சரவணனை திட்டி நிறைய கமெண்டும் வருகிறது. அவனை பிளாக்கும் செய்கிறாள் அதனால் கொதித்த சரவணன் தன் தங்கை சூர்யாவிடம் சொல்லி ராதாவைப் பற்றி அசிங்கமாக பதிவிட்டு மானத்தை வாங்கு என்கிறான் அவளும் அப்படியே செய்ய இதை மச்சினன் இளங்கோவிடம் சொல்கிறாள் ராதா.

இளங்கோவும் சூர்யாவுக்கு போக் செய்து அவள் கவனத்தை கவர்ந்து முகநூலில் இணைகிறான். ஒருவழியாக அவள் நம்பிக்கை பெற்றதும் நைசாக ராதா பற்றி பேசி அவளிடம் இருந்து தகவல்களை இன்பாக்ஸில் வாங்கி அதை ஸ்கிரீன்ஷாட்டாக போட்டுவிடுகிறான்..இந்த தகவல் பரவி சூர்யாவின் ஐ.டி ரிப்போர்ட் செய்யப்பட்டு ஐ.டிபிளாக்காகி அவள் மூக்குடைகிறாள்.

வெகுண்டெழுந்த சரவணன் தன் தம்பி சபேசனை அழைத்து ஒரு ஃபேக் ஐடி க்ரியேட் செய்யச் சொல்லி அதன் மூலம் ராதாவை நட்பாக்கிக் கொள்ள உத்தரவிடுகிறான். சரி என்று சொல்லிவிட்டு சபேசனும் சந்திரா என்ற பெண் பெயரில் ஐ.டி ஆரம்பித்து ராதாவுடன் நட்பாகிறான்.. அவனை பெண் என்றே எண்ணிய ராதா அப்பட்டமாக நம்புகிறாள். 

ஒருநாள் ஃபேஸ்புக் மீட் போகலாம் வர்றியா ராதா என சபேசன் சாட் செய்ய ராதா நான் அங்கெல்லாம் வருவதில்லை வேண்டுமானால் என்கணவரை அனுப்புகிறேன் என்கிறாள் சரி சரி நீவந்தாலென்ன அவர் வந்தாலென்ன அவரை அனுப்பு என்கிறான்/ள் சபேசந்திரா.. ராஜாவும் அங்கு கிளம்பும் முன் இளங்கோவை ராதாவுக்கு காவல் வைத்து விட்டு செல்கிறான்.

இதற்குள் ராஜாவின் ஐடியை ஹேக் செய்த சபேசன்.. அதிலிருந்து இளங்கோவின் இன்பாக்ஸிற்கு நீயும் மீட்டுக்கு வா என செய்தி அனுப்புகிறான். இளங்கோ அதை நம்பாமல் இருக்க ராதா அவனை வற்புறுத்தி அனுப்பிவிடுகிறாள் இளங்கோ போவதற்கு முன் வீட்டில் உள்ள Wi-Fi யை அணைத்துவிட்டு நான் வரும்வரை இதை ஆன் செய்யாதிங்க என அண்ணியிடம் சத்தியம் வாங்கிவிட்டு கிளம்புகிறான்.

அவன் கிளம்பிய சில நிமிடத்தில் சபேசனிடம் இருந்து மொபைலில் மெசேஜ் வருகிறது.. எங்க இருக்க ராதா நான் உன் வீட்டுக்கிட்ட வந்துட்டேன் ஒரு உதவி 
வேண்டும் என்று.. பரபரப்பான ராதா சந்திரா தான் வர்றாங்கன்னு வெளியே வர பெண் உருவில் இருந்த சரவணனை சந்திரா என்றே நம்பினாள்.

என்ன உதவின்னு கேட்க என்னோட நெட் தீர்ந்துடுச்சு உடனே நான் ஒரு மெயில் அனுப்பணும் உன் வீட்டு Wi-Fi யை 5 நிமிடம் உபயோகிக்கலாமான்னு கேட்க ராதாவுக்கு சத்தியம் ஞாபகம் வர தவித்து நிலையை கூறுகிறாள் சட்டென சந்திரா உருவில் இருந்த சரவணன் நீ தானே ஆன் செய்யக்கூடாது நான் செய்யலாமில்ல என்றாள்/ன்.

இந்த டீலிங் மிகப்பிடித்துப் போக சந்திராவை வீட்டிற்குள் அனுமதிக்கிறாள் ராதா.. வீட்டிற்குள் நுழைந்து Wi - Fi ஆன் செய்வது போல பாவலா காட்டிய சரவணன் சடாரென்று ராதா மீது மயக்கமருந்து ஸ்பிரே அடிக்க ராதா மயங்கி விழ வாசலில் வேகமாக வந்து நின்ற தன் அடியாட்களின் காரில் (சத்தியமா சுமோ இல்ல) ராதாவுடன் பறக்கிறான் சரவணன்.

மீதி ராதுபலி பார்ட் -2 வில் விரைவில்

No comments:

Post a Comment