Friday 28 August 2015

காஸ்ட்லி பர்ச்சேஸ்..

10 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருந்த கிரானைட் மாளிகை.. இந்தர்மஹால்... சுற்றிலும் ஆஸ்திரேலியன் கிராஸ் என்னும் பச்சைப் பசும் புல்வெளிகள் பழ மரங்கள் வண்ண மலர்கள் நிரம்பியிருக்கும் தோட்டம் பளிங்கு நீருற்றுக்கள் நவீன எல்.ஈ.டி விளக்குகள் பொருத்தப்பட்டு ஜொலித்தது..

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரும் ஆசியாவின் 3 வது பணக்காரரும் உலகளவில் 30 வது கோடீஸ்வரருமான தொழிலதிபர் இந்திரஜித்தின் பங்களா அது ஏறத்தாழ அங்கு பணிபுரிவர்களே 500 பேர். 

போர்டிகோவில் பெண்ட்லி, ரோல்ஸ்ராய்ஸ், ஜாகுவார், லேண்ட் ரோவர், லேண்ட் க்ரூசியர், வால்வோ, லெக்ஸஸ், பென்ஸ், ஹம்மர், பி.எம்.டபிள்யூ கார்கள் அணிவகுத்து நின்றன. பரபரவென அந்த மாளிகையில் இருந்து வெளிப்பட்டார் ப்ருதிவ் கபூர்.

அந்த வீட்டின் தலைமை செஃப் உலகில் பெரிய பெரிய ஏழு நட்சத்திர ஓட்டல்களில் பணி புரிந்தவர் தற்போது ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் சம்பளத்தில் இந்திரஜித்தின் தலைமை சமையல் நிபுணராக இருக்கிறார். நீல நிற பென்ஸ் வண்டியை பளபளப்பாக துடைத்துக் கொண்டிருந்த டிரைவரை அணுகி கடைக்குப் போக காரை எடுக்கச்சொன்னார்.

பொதுவாக பெரும்பாலும்வெளியே போவது அவரது உதவியாளர்கள் தான்..மிகமிகமிக முக்கியமான போது தான் அவரே போவார். இது டிரைவருக்கும் தெரியும். பரபரப்புடன் வண்டியை எடுத்தார்... நகரின் பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு வண்டியை விடச் சொன்னார்.. மிக மிக முக்கியமான வேலை அதுதான் என அவரே முணுமுணுத்துக் கொண்டார்.

சூப்பர் மார்கெட் முதலாளிக்கு போன் செய்திருப்பார் போலும் வாசலில் வந்து இவரை வரவேற்றுக் கூட்டிபோனார்.. என்ன ப்ரித்திவி சார் சொல்லியிருந்தா நானே வந்து இருப்பேனே என்றார் முதலாளி.. இல்லை மிக மிக முக்கியம் அதான் நானே வந்தேன் என்றார்.. சொல்லுங்க சார் என்ன வேணும் என முதலாளி கேட்டதற்கு கீழே உள்ள வரியைச் சொன்னார் ப்ரிதிவ் கபூர்...

#இரண்டு_கிலோ_வெங்காயம்

No comments:

Post a Comment