Thursday 6 August 2015

சேலம் திரையரங்குகள்..

#விரும்பிச்_சொன்ன_பொய்கள்

இதை படிக்கும் முன்".. இந்தப்பதிவில் நான் சொல்வதெல்லாம் உண்மை..

சேலத்தில் எனது பள்ளிப்பருவம்.. சேலத்தில் திரையரங்கங்கள் இருப்பது போல தமிழகத்தில் வேறு எங்கும் இருந்ததில்லை (அன்று) அன்றைக்கு மிகப்பெரிய பொழுது போக்கே சினிமா தான் நான் பெரும் ரசிகன் சினிமாவுக்கு இதுவும் அப்போது தான்.. (கடந்த பத்து வருடங்களில் 10 படம் கூட திரையரங்கில் போய் பார்த்ததில்லை) 

சங்கம், சங்கம்பாரடைஸ், அலங்கார், சித்ரா, சாந்தி, சங்கீத், ஜெயா, நியூசினிமா, ஒரியண்டல் விக்டோரியா, அப்சரா, சென்ட்ரல், பிரபாத், பேலஸ், நியூ இம்ப்ரியல், பாரத், பாலாமணி, ஜோதி, தியேட்டர்கள் இவையெல்லாம் ஆரம்பகாலத்தில்... பிறகு கைலாஷ், பிரகாஷ், சந்தோஷ் சப்னா சாந்தம், கீதாலயா, ஓரியண்டல் சக்தி, நாகாமினி, சபரி, மினி அப்சரா, L.KS போன தியேட்டர்கள் உதயமாயின..

இதுல பாலாமணி தியேட்டர் மட்டும் பிடிக்காது ஏன்னா பள்ளியில் அந்த தியேட்டருக்கு தான் படம் பார்க்க மொத்தமா கூட்டிட்டு போயி அடுத்த நாள் கேள்வி கேப்பாங்க.. அங்க ஒரு முறை ஹாதீம்தாயும் ஏழுகேள்விகளும்ன்னு ஒரு படத்துக்கு கூட்டிட்டு போயிட்டு அடுத்தநாள் சிவானந்தம் சார் 700 கேள்வி கேட்டாரு.. அப்பவே அவர் மேல உள்ள கோவம் தியேட்டர் மேல மாறிடுச்சு... 

நான் ஆரம்பத்தில் இருந்தது சேலம் குகை என்னும் பகுதியில் 1முதல்5 வகுப்பு வரை பிறகு கிச்சிப்பாளையம் இது ரெண்டுக்கும் நடுவுல தான் நான் மேலே சொன்ன பல தியேட்டர்களும் இருந்தது சென்ட்ரல், பேலஸ், நியூ இம்ப்ரியல் மற்றும் பாலாமணி ஜோதி மட்டும் தூரம்.. சங்கீத் தியேட்டருக்கு நேர் பின்புறம் கொஞ்ச தூரம் நடந்து திருச்சி மெயின் ரோடு வந்துட்டா எங்க வீடு கடை எல்லாம்.. முதன் முதலா தனியா படம் பார்க்கப் போனது 10 வயதில் பார்த்த படம் "பொல்லாதவன்"...

-இடைவேளை-

No comments:

Post a Comment