Tuesday, 25 February 2025

✍️நோட் பண்ணுங்கப்பா..

#பின்குறிப்புகள்




திருச்சியில் திருமண வீட்டு விருந்தொன்றுக்கு சென்றிருந்தோம்! மணமக்கள் இருவரின் வீட்டாரும் உணவு சம்பந்தமான ஓட்டல் & ரிஸார்ட் துறையில் இருப்பவர்கள்! எனவே திருமண விருந்து களை கட்டியது! சைவ அசைவ 2 விருந்துப் பந்திகளும் தனித் தனியே எதிரெதிர் திசையில் அமைக்கப்பட்டிருந்தது சிறப்பு!


அசைவத்தில் மட்டன் எலும்பு சூப்சீரகச் சம்பா மட்டன் பிரியாணிகீழக்கரைநெய்ச்சோறுகுரும்பாடு நெஞ்சு சாப்ஸ், மிளகு மட்டன் சுக்கா, துபருப்பு & சுரைக்காய் எலும்பு மட்டன் தால்ஸாதயிர் வெங்காயம்,  வெள்ளைச் சோறு, ரசம், சிக்கன் லெக்பீஸ்விரால் மீன் ரோஸ்ட், இறால் க்ரேவி, பெப்பர் முட்டைன்னு தரமான மெனு! 


சைவம் அசைவம் இரண்டுக்கும் பொதுவான மெனுவாக இருந்தது தக்காளி ரசமும், கெட்டி மோரும்! கடைசியாக ஒரு அற்புதமான முந்திரி பால் பாயாசமும், சூடான குலாப் ஜாமூன், வெனிலா ஐஸ் க்ரீமும் ஃபைனல் டச்சாக பரிமாறினார்கள்! நமக்குத் தான் சைவம் என்றாலே குமட்டிக் கொண்டு வரும் என்று உலகமே அறியுமே! 


ஒரு வழியாக மூக்கைப் பொத்திக் கொண்டு சைவ உணவுப் பந்தியை கடப்பதற்குள் மயக்கமே வந்துவிட்டது! தடுமாறி ஒரு சேரில் அமர்ந்ததும் பெப்பர் தூக்கலாகப் போட்ட மட்டன் சூப் ஒரு கிளாஸ் தந்தனர் அதைக் குடித்த பின்பு தான் மயக்கம் தணிந்தது! பந்தி துவங்கும் நேரத்தை அறிய ஒற்றர் படை வைத்திருக்கும்..


உலகின் ஒரே தனிமனிதனான எனக்கு தகவல் தெரிந்தது.. முதல் ஆளாக பந்திக்கு வந்து அமர்ந்தது எல்லாம் பெரிய விஷயமல்ல! பந்தி நிறைந்த அடுத்த நொடி இன்னொரு பந்திக்கு அமரும் அளவு ஆட்களும் பந்திக்குள் நுழைந்தனர்! அவர்களும் நமக்கு நேர் பின்னே VVIPகளோடு நிற்கும் செக்யூரிட்டி போல நின்றனர்! 


நமக்கு இலை விரித்த போதே சீக்கிரம் சாருக்கு பரிமாறுங்கப்பா என்று அவர்கள் பேச்சில் வலை விரித்தனர்.! பந்தி பரிமாறுபவர் பிரியாணியோடு கறி எடுக்கும் போது பார்த்து பார்த்து எலும்பு இல்லாத கறியா போடுங்கப்பா என்றார் ஒரு பின்னணிக் காவலர்! எலும்புன்னா நாம் சாப்பிட லேட்டாகுமாம் அதான் இந்த அக்கறை! 


இன்னொருத்தர் யப்பா சாருக்கு சுக்கா வறுவல் இன்னும் வரலை என்றார்! இன்னும் மீனை இவர் தொடவே இல்லை பார்த்தியா? சார் முட்டை மசாலா உங்களுக்கு வைக்காம போயிட்டாங்க.. லெக் பீஸ் கடிச்சிட்டு வச்சிட்டார் நல்லா இல்ல போல.. வெள்ள சோறு குறைவா வாங்கிருக்கார் அதிகம் சோறு சாப்பிடமாட்டாரோ..


என தமது பின்னணிக் குரலில்  SPB யைவிட அதிகப் பாடல்களை பாடிக்கொண்டு இருந்தனர்! அதில் ஒருவர் பாயாசம், ஜாமூன் எல்லாம் ஸ்வீட்! சாருக்கு சுகர் இருக்கும் அதெல்லாம் வாங்க மாட்டார் என்றார்! நான் இவர்களுக்கு சிறிது ஆட்டம் காட்டலாம் என்று நினைத்தேன்! பிரியாணி, சோறு, ரசம் வாங்கிட்டு இப்போ..


பாயாசத்தை வாங்கப் போன போது மணவீட்டு நண்பர் வந்து அட வெங்கி நீங்களா! பிரியாணி எப்படி இருந்துச்சு திரும்ப தரவா என்றதும் “ யோவ் அந்தாளு தான் பாயாசத்துக்கே வந்துட்டானே இப்ப அவன்ட்ட போய் எதுக்கு பிரியாணி வேணுமான்னு கேக்குற” என்ற பின்னணியினரின் மைண்ட் வாய்ஸ் என் காதில் கேட்டது! 


அதுக்கென்ன நல்லா நாலு நல்லி எலும்புடன் பிரியாணி என்றேன்! பின்னால் மளுக்கென எலும்பு முறிந்தது போல ஒலி கேட்டது! அது பலகீன இதயங்கள் உடைந்த ஒலின்னு என்னால் புரிந்து கொள்ள முடிந்தது! பிரியாணியையும் கறியையும் எவ்வளவு மெதுவாக ரசித்து ருசிக்க முடியுமோ அவ்வளவு மெதுவாக ருசித்தேன்!


பின்குறிப்பர்களின் சலசல சப்தமும் கூடிய போதுநல்லி எலும்பை எடுத்து மேசையில் நீதிபதி ஆர்டர் ஆர்டர் எனத் தட்டுவது போல தட்டினேன்! அவர்களும் தமது அப்ஜெக்‌ஷனை இது ஓவர் ரூல்யா என்பது போல வெளிப்படுத்தினர்! பொரிச்ச விரால் மீனை சூடா கொண்டு வந்து இப்ப பரிமாறவா என்றார் மணவீட்டு நண்பர்! 


பின்னால் ப்யூஜியாமா எரிமலையே வெடித்தது! சார் அவரு முதல்ல வாங்கின மீனையே இன்னும் சாப்பிடலை என்றார் ஒரு SPB.. அப்ப இறால் க்ரேவி கொண்டு வர்றேன் தயிர் வாங்கி சாப்பிட்டு பாருங்க என்றார் நண்பர்! என் பின்னே நின்றவர் தனது போனில் ங்கோத்.. ங்கொ.. எனத் திட்டுவது போல திட்டிக் கொண்டே கிளம்பினார்!


நான் தயிரும் இறாலும் சாப்பிட்டு, பாயாசமும் சாப்பிட்டு விட்டே கை கழுவ எழுந்தேன்! நான் ஐஸ்க்ரீம் வாங்கும் போது தூரத்தில் என் பின்னே நின்ற அதே நபர் 2 வது பந்தியிலும் ஒருவர் பின்னே நின்றிருந்தார்! அவரிடம் போய் நீங்க இலங்கையா தம்பி? என்றேன்! எதுக்குணே அப்படி கேட்டிங்க என்றார் புரியாமல்…


நிறைந்தது.. 




 


Friday, 21 February 2025

🥸காந்தி மியூசியம்

#மதுரை_காந்தி_மியூசியம்

மதுரையில் மகாத்மா காந்தி நினைவு அருங்காட்சியகமாக இருக்கும் கட்டிடம் நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த ராணி மங்கம்மாளுக்குச் சொந்தமான வரலாற்றுச் சிறப்புமிக்க தமுக்கம் அரண்மனை ஆகும்! இந்த அரண்மனையானது, கி.பி 1670ஆம் ஆண்டு காலகட்டத்தில் நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்டது!

தமுக்கம் என்றால் யானைகள் மோதி சண்டையிடும் இடம்! அதனால் தான் இதன் எதிரே அமைந்திருக்கும் யானைச் சண்டை மைதானம் தமுக்கம் என்று அழைக்கப்பட்டது! இந்த மாளிகையின் உப்பரிகையில் இருந்து ராஜ குடும்பத்தினர் யானைச் சண்டையை கண்டு களிப்பார்களாம்! நாயக்கர்களுக்கு பின்னர் இது..

கர்நாடக நவாப், கிழக்கிந்திய கம்பெனி மற்றும் சிலரின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தது. இறுதியாக ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இந்த அரண்மனை பல ஆண்டுகளாக மதுரை பிரிட்டிஷ் மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்தது. பிறகு தான் இது மகாத்மா காந்தி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது!

மதுரைக்கும் காந்தியடிகளுக்கும் பிரிக்கவே முடியாத ஒரு பிணைப்பு இருக்கின்றது. காந்தியின் தீண்டாமை எதிர்ப்பு போராட்டத்தில் மிகப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் நிகழ்வான மீனாட்சி திருக்கோவிலின் உள்ளே ஹரிஜன மக்களை அனுமதிக்கும் படலம் மதுரையில் தான் நிகழ்ந்தது.

மேலும் காந்தி அரையாடை உடுத்தும் வைராக்கிய முடிவை எடுத்ததும் இதே மதுரையில் தான்! காந்தியின் வாழ்வில் முக்கிய திருப்புமுனை ஏற்படுத்திய நகரம் மதுரையாகும்! ஆகவே அவர் நினைவைப் போற்றும் வகையில் 1955 ஆம் ஆண்டு சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த அரண்மனையையும்..

அதனைச் சுற்றியுள்ள நிலத்தையும் மகாத்மா காந்தி நினைவு அருங்காட்சியகத்தை அமைக்க அகில இந்திய காந்தி ஸ்மாரக் நிதிக்கு தமிழ்நாடு மாநில அரசால் பரிசாக வழங்கப்பட்டது. அசல் கட்டிடத்தின் பெரிய புதுப்பித்தலுக்கு மேலதிகமாக, நூலகம், திறந்தவெளி அரங்கம் மற்றும் பல கட்டிடங்களுக்காக..

வடக்குப் பகுதியில் ஒரு முழுமையான புதிய பிரிவு கட்டப்பட்டது. சேவா கிராமத்தில் உள்ள ஒரு குடிசையின் மாதிரி இந்த அருங் காட்சியகத்தின் முக்கிய கட்டிடத்தின் முகப்பில் அமைக்கப் பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள நூலகத்தில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

அவற்றை பார்க்கும் பொழுது காந்தியடிகள் எழுதிய பழைய கடிதங்களையும் பல ஆவணக்குறும்படங்களின் தொகுப்பையும் நாம் காண முடியும். பிரதான கட்டிடத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு திறந்தவெளி திரையரங்கமானது, பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளை நடத்த அமைக்கப்பட்டது!

இங்கே ஒவ்வொரு வருடமும் காந்தி ஜெயந்தியின் பொழுது ஐந்து நாட்கள் நடக்கும் விழா பிரசித்தி பெற்றது. அருங்காட்சியகத்தில் ஒரு பிரத்தியேகப் பகுதி காந்தியின் வாழ்க்கையின் சிறப்பான சில அத்தியாயங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. "இந்தியா தனது சுதந்திரத்திற்காக போராடுகிறது" என்று குறிப்பிட்ட பகுதியில்..

சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் ஆணி வேர்களை சில அழகான படங்கள் & ஓவியங்கள் விவரிக்கின்றன. இந்த படக் காட்சிக்காக அரண்மனையின் தர்பார் மண்டபமானது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது காந்தியின் குழந்தை பருவத்தில் இருந்து அவரது இறப்பு வரை பல்வேறு அரிய புகைப் படங்களைக் கொண்ட ஒரு புகைப்பட..

சுயசரிதை கண்காட்சியும் இங்குள்ளது! காந்தியைப் பற்றிய எழுத்துக்கள், ஓவியங்கள் & சிற்பங்களும் இங்கு கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தின் மூன்றாவது பகுதி மகாத்மா காந்தி தனது வாழ்நாளில் பயன்படுத்திய நூறு அன்றாட பொருட்களை கண்காட்சிக்கு வைத்துள்ளது.

இப்பொருட்களில் மிக முக்கியமானவையாக கருதப்படுபவை ஹிட்லருக்கு காந்தி எழுதிய ஒரு கடிதமும், அவர் படுகொலை செய்யப்பட்ட தினத்தன்று அவர் உடுத்தி இருந்த ரத்தம் தோய்ந்த ஒரு துணியும் அடங்கும்.! காந்தி மியூசியம் மதுரைக்கும் காந்திக்கும் இருக்கும் ஆத்மார்த்தமான அடையாளச் சின்னம்!

Wednesday, 19 February 2025

🥘 புரோட்டா கொத்து

#கொத்து_புரோட்டா

புரோட்டா சாப்பிடுவது உடல் நலனுக்கு கெடுதின்னு நினைக்கிற புரோட்டா ஹேட்டர்ஸ் இந்த வரிகளுக்கு மேல படிக்க வேண்டாம்! நீங்க தாராளமா கோ பேக் சொல்லிட்டு போகலாம்! புரோட்டா ஈட்டர்ஸ் என் கூட வாங்க! விதவிதமான புரோட்டா, சால்னா, குருமா, குழம்பு பற்றியெல்லாம் இங்கே இதிகாசங்கள் அளவுக்கு நிறைய எழுதியாச்சு! எழுதாதது கொத்து பரோட்டா பற்றிதான்!

மதுரையில மட்டும் தான் கொத்து புரோட்டான்னா அது முட்டை புரோட்டாவை குறிக்கும்! செட்டு, கொத்து, முட்டை கொத்துன்னு இந்த பாட்ஷாவுக்கு பல பெயர்கள் இருக்கு! முன்னாடி எல்லாம் முட்டை பரோட்டான்னா புரோட்டா மாவை பெருசா வீசி பேப்பர் போல கல்லில் விரிச்சு ஒரு முட்டையை உடைச்சு நடுவிலே ஊற்றி மாவின் நாலா பக்கங்களையும் மடிச்சுவிட்டு சதுரமாக சுடுவாங்க!

அதுக்கு சிலோன் பரோட்டான்னு பேரு! அதன் பிறகு அதிலே வெங்காயம் போட்டும், அப்டேட் ஆகி சிக்கன், மட்டன் போட்டும் சுட ஆரம்பிச்சாங்க! தம் புரோட்டா, லாப்பான்னு அதுக்கு பேரு! நாம் முட்டை புரோட்டாவுக்கு வருவோம்! சுடச்சுட சாப்பிட வேண்டிய உணவுகளில் முட்டை புரோட்டாவுக்கு முதலிடம் தரணும்! ஆறிய மு. புரோட்டாவை எவரது ஆன்மாவும் ஏற்காது!

முற்கால மாஸ்டர்கள் புரோட்டாவில் முட்டையுடன் வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, சீரகத் தூள் மட்டும் தான் போட்டு கொத்துவாங்க! இதில் சிக்கன் குழம்பு மட்டன் சால்னா ஊத்தி கொத்துவது பிற்கால மாஸ்டர்களின் கண்டுபிடிப்பாகும்! சால்னா இல்லாத ப்ளைன் கொத்து ரகளையான ருசியில் இருக்கும்! இதுக்கு சூடான கறிக் குழம்பு தொட்டுகிட்டு சாப்பிட்டா, அடடா!

இப்போ குழம்போட கொத்துற புரோட்டாவை சால்னா இல்லாம கூட அப்படியே சாப்பிடலாம்! ஆனா ப்ளைன் கொத்து சால்னா இருந்தா தான் மாஸா இருக்கும்! சால்னா ஊத்தி கொத்துற புரோட்டாவுக்கு அதே சால்னா செட்டாகாது! இந்த உண்மையை அனுபவப்பூர்வமா உணர்ந்த ஓட்டல்கள் புரோட்டாவில் ஊற்ற தனி சால்னாவே சமைக்க ஆரம்பித்தனர்! அப்போ ஏறுன கிராஃப் தான்!

இன்னிக்கு வரைக்கும் கொத்து பரோட்டாவை டாப்ல வச்சிருக்கு! முதலில் கொத்துக்குன்னே கனமான இரண்டு இரும்பு குறுப்பிகள் இருந்தன! முக்காலடி உயரத்தில் இருக்கும்! குறுப்பில கொத்துற புரோட்டா ருசி மாதிரி இப்பவும் வராது! சவுண்ட் பொல்யூஷனில் அதை தடை பண்ணிட்டாங்க! அப்புறம் சில கடைகளில் டம்ளர், தட்டையா பிளேடு போன்ற மரக் கைப்பிடி வச்ச கரண்டி போன்ற..

சாதனங்களைக் கொண்டு இப்போது புரோட்டாவை கொத்து போடுகிறார்கள்! கொத்து புரோட்டாவை ரொம்ப நைஸாக கொத்து போட்டுவிடக் கூடாது! சில பேரு நைஸ் கொத்துன்னு பவுடர் மாதிரி ஆக்கிடுவாங்க! மைதாவை பிசைஞ்சு புரோட்டா செய்து அதை பவுடர் மாதிரி கொத்துறதுக்கு அந்த மைதா மாவையே சாப்பிடலாம்! அவ்வளவு நைஸில் கொத்தக்கூடாது!

நம்ம ஊரில் எப்பவும் சொல்லுவாங்களே ஒண்ணு ரெண்டா இடிச்சு அப்படின்னு அப்படித்தான் புரோட்டாவை கொஞ்சம் பெரிய பெரிய பீஸா பிய்த்து பிறகு முட்டை, வெங்காயம் தக்காளி, மிளகாய், குழம்பு எல்லாம் சேர்க்கணும்! முட்டை புரோட்டாவில் போடுற தக்காளி புளிப்பா இருந்துடக்கூடாது! இனிப்பாவும் இருக்கக் கூடாது! அதை கவனமா தேர்ந்தெடுத்து இதிலே சேர்க்கணும்!

வெங்காயத்தை முதலில் ஒரு நிமிடம் வதக்கணும், பிறகு பச்சை மிளகாய் அப்புறமா தக்காளி சேர்த்து வதக்கிட்டு தான் பிறகு முட்டை சேர்க்கணும்! அதே போல முட்டையை கல்லில் உடைச்சு போட்டுட்டு பிறகு புரோட்டாவை பிச்சு போடக் கூடாது! அது தாமரையிலை தண்ணீர் போல புரோட்டா பீஸில் நன்கு ஒட்டாது! முட்டையை ஆம்லேட்டுக்கு கலக்குவது போல கலக்கிட்டு பிறகு..

புரோட்டாவை பிச்சி போட்டு அபிஷேகம் பண்றது போல அதன் தலை மேல அடிச்சு வச்ச முட்டையை ஊற்றணும்! முட்டையும் புரோட்டாவும் நன்கு பின்னிப்பிணைந்ததும் வெங்காய, தக்காளி வதக்கலை சேர்த்து பிரட்டணும்! இப்போ தான் குழம்பு சேர்க்குற நேரம்! அதையும் ஊற்றி நன்கு கலந்து பிரட்டியபின் கொத்துக் கரண்டி எனும் வெப்பன்ஸை எடுக்கணும்! முக்கியமான ஒண்ணு..

புரோட்டா கொத்துறவர் அதை கொத்தும் போது அவரு மனசுக்கு பிடிக்காதவங்களை நினைச்சிடவே கூடாது! மகிழ்ச்சியான மன நிலையில், சிரித்த முகத்துடன் டென்ஷனே இல்லாமல் பூப்போல, பிரட்டுனது போல ஒன்றிரண்டா கொத்த ஆரம்பிக்கணும்! இதுவே கொத்தை நைஸா கேட்டா அவருக்கு பிடிக்காத முகத்தை கூட நினைச்சுக்கலாம்! (எதேஏஏ..மாஸ்டரின் மனைவி முகமா??)

சில கடைகளில் எல்லாம் மல்லி, மிளகாய் போடி போடுறாங்க அது ஓவர் மசாலாவாகிவிடும்! சீரகத்தூள், மற்றும் மிளகுத் துளை நம்ம வடிவேலு சொல்ற மாதிரி மழைச்சாரல் போல தூவி ஒரு பிரட்டு பிரட்டிட்டி எடுக்கணும்! இங்க ஒரு சீக்ரெட் சொல்றேன் கடைசியா கல்லில் இருந்து கொத்தை தட்டுக்கு மாற்றும் போது ஒரே ஒரு சிட்டிகை கரம்மசாலாதூள் சேர்த்து கிளறி தட்டுல எடுத்துடணும்!

ஒண்ணு ரெண்டா கொத்துன புரோட்டாவும், முட்டையும் பிறகு வதக்கிய வெங்காயம், தக்காளி, குழம்பு கலவை மிளகு சீரகத் தூள் இறக்கும் போது சேர்த்த கரம் மசாலா எல்லாம் சேர்த்து கமகமனு நாசிக்குள் வாசம் நுழையும்! இப்போ சூடான குழம்பு வாங்கி தொட்டுகிட்டு சாப்பிடணும்! முட்டை புரோட்டாவில் குழம்பு ஊத்தி குழப்பி சாப்பிடுவது அதை கற்பழிப்பதற்கு சமமான குற்றமாகும்!

இதிலேயே காய்கறிகள் போட்ட சைவ கொத்து புரோட்டா இலங்கையில் ஃபேமஸ்! இன்றும் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கை மக்களின் விருந்துகளில் பரிமாறப்படும் ஒரு முக்கிய உணவாக இருக்கிறது கொத்து புரோட்டா! சிக்கன் கொத்து, மட்டன் கொத்துன்னு அசைவ கொத்தும் அங்கே கிடைக்கும்! முட்டை புரோட்டாவுக்கு புகழ் பெற்ற ஊர் மதுரை தான்!

ஆனாலும் தென் மாவட்டங்கள் எங்கும் மதுரைக்கு இணையான ருசியில் கொத்து புரோட்டா கிடைக்கும்! திருச்சி, சேலம், ஈரோடு, கோவையிலும் கொத்து புரோட்டாவின் சாம்ராஜ்யம் களை கட்டியிருக்கிறது! புரோட்டா வாங்கி ருசிக்கவே கூடாது என்னும் ஊர்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது! திண்டிவனம் தாண்டி வந்தால் தான் ஒரு நல்ல கொத்து புரோட்டாவையே ருசிக்கலாம்!

பிறந்த ஊருல பிறந்த மேனியா திரியறா மாதிரி சொல்லுவாங்களே அதுபோல முட்டை புரோட்டா கூட சாப்பிடக்கூடிய முட்டை வகை ஆஃப்பாயில் தான்! ஆஃப்பாயிலுக்கு நடுவே இருக்கும் மஞ்சள் கருவை மடை மாற்றி புரோட்டாவில் பாயவிட்டு கொஞ்சம் சால்னா கொஞ்சம் மஞ்சள் கருன்னு தொட்டுகிட்டு சாப்பிடுறது இருக்கே! அதெல்லாம் சொன்னா புரியாது! ரசிச்சு ருசிச்சு அனுபவிக்கணும்!

அதிலும் கொத்து புரோட்டா கொத்துற அந்த சத்தமே நமக்கு ஒரு சிறந்த சங்கீதம் தான் 🎶 🎶 🎵 சரிதானே..

(கமெண்ட்டில் உங்களுக்கு பிடித்த கொத்து புரோட்டா அனுபவங்களை சொல்லலாம்)

Monday, 17 February 2025

🍚 தயிர் சாதம்

#தாபா_ஸ்டைல்_தயிர்சாதம் 




தயிர் சாதம் என்றதும் என் நினைவுக்கு வருவது என் அப்பா செய்யும் தயிர் சாதம் தான்! சோற்றை நல்லா குழைய வடிச்சு அதை நன்கு ஆறவிட்டு, நீர் சேர்க்காமல் காய்ச்சிய ஒரு சொம்புப் பாலை சோற்றில் ஊற்றி அதை 15 நிமிடங்கள் ஊறவைத்து பின்பு ராசி புரம் எருமைத் தயிரை அதன் மீது தாராளமாக ஊற்றிப் பிசைந்து தாளிப்பில் கடுகு,உளுந்து,மிளகு, முந்திரி, வரமிளகாய் எல்லாம்..


போட்டு முதல் தாளிப்பும், சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கி எண்ணெய்யில் தாளித்து இரண்டாவது தாளிப்பும் செய்து கொத்துமல்லி, பச்சை மிளகாய்,  இஞ்சியை அப்படியே சன்னமாக நறுக்கித் மேலே தூவி கடைசியாக உப்பு சரி பார்த்து சேர்ப்பார்! தயிர் சாதம் இருக்கும் பாத்திரத்தை மூடி ஒரு பெரிய பாத்திரத்தில் வைத்து சுற்றிலும் ஐஸ் கட்டிகளை போட்டு வைத்துவிடுவார்! 


கை தேர்ந்த சிற்பி செதுக்கிய சிலை போல அப்பாவின் தயிர்சாத தயாரிப்பு இருக்கும்! மாங்காய் சீஸனில் இதில் கூடுதலாக புளிப்பு இல்லாத மாங்காய் துண்டுகள் இருக்கும்! இன்றைய ஸ்டைலில் மாதுளை முத்துகள், திராட்சை, அன்னாசி துண்டுகள் போடும் வழக்கம் அன்று கிடையாது! அதே போல ஊறுகாய் வகைகள் மட்டுமின்றி பருப்பு,புளி, பச்சை மிளகாய் கூட்டு ஒன்று வைப்பார்! 


பார்க்க புளியோதரை காய்ச்சல் போலவே இருக்கும் அந்த பருப்பு காய்ச்சலோடு தயிர்சாதத்தை ருசிப்பதே பேரின்பம்! ஆம்! உங்களுக்கு எவ்வளவு காய்ச்சல் அடித்தாலும் அந்த தயிர்சாதத்தை ரசித்து ருசிப்பீர்கள்! அந்தளவுக்கு ருசியாக இருக்கும்! அதிலேயே வெல்லம் போட்டு ஒரு இனிப்பு பச்சடியும் செய்வார்! இந்த இரண்டு காய்ச்சல்களுமே ருசியில் ட்வின்ஸ் என்றே சொல்லலாம்! 


இந்த தயிர்சாதத்திற்கு தொட்டுக்கொள்ள எத்தனையோ ஊறுகாய் இருந்தாலும் எலுமிச்சை & நார்த்தங்காய் ஊறுகாய் போல சிறந்த காம்போ வராது! ஆவக்காய், மாங்காய் எல்லாம் இரண்டாம் இடம் தான்! வத்தக் குழம்பு இருந்தால் இதற்கு இன்னும் ஒரு ஸ்டார் கூடும்! இந்தத் தயிர்சாதம் எந்த ஒரு அசைவ சைட்டிஷ்களுக்கும் ஏற்றது அல்ல என்பது என்னுடைய மிகத் தாழ்மையான கருத்து! 


இந்தத் தயிர்சாதம் ஒரு அம்பி தான்! ஆனால் அசைவ உணவோடு மட்டும் அந்நியன் ஆகிவிடும்! இதுவே காரா சேவு, காரா பூந்தி, முந்திரி பக்கோடா, சூடான மசால் வடை போன்ற காதலிகள் கிடைத்துவிட்டால் ரெமோ ஆகிவிடும்! இப்படிப்பட்ட தயிர்சாதம் சாப்பிட்டு பல ஆண்டுகள் ஆகியிருந்தது! தற்செயலாக கோவை சென்றிருந்த போது ஒரு தாபாவில் இந்த அற்புதம் தென்பட்டது!


அப்பா காலத்து அதே ருசி இல்லை என்றாலும் கூட கிட்டத்தட்ட அதில் 70 மதிப்பெண்களை பெறும் அளவு இருந்தது! துடியலூர், காளப்பட்டி,  சாலைகளில் எல்லா தாபாகளிலும் இந்தத் தயிர் அமுதம் கிடைக்கிறது! இந்த மாதுளை, திராட்சை அட்ராசிட்டியை வேண்டாம் என்று சொல்லி வாங்கி விட்டால் ஃபினிஷிங்கில் அற்புதமான தயிர்சாதம் சாப்பிட்ட திருப்தியை அனுபவிக்கலாம்!


சின்ன வெங்காயம், முந்திரியை வதக்கியது இன்னும் சிறிது சிறப்பாக இருக்கலாம் என்பது மட்டுமே சிறு குறை! இதை முழு கத்திரிக்காய் போட்ட புளிக்குழம்புடன் சாப்பிட எல்லாம் பல பூர்வ ஜென்ம புண்ணியங்கள் செய்திருக்கணும்! அது எனக்கு வாய்த்தது! வெறும் தயிர்சாதம் தான் அதையும் பொறுப்புடன் நேர்த்தியாக செய்தால் நிச்சயம் உலகம் நம்மை வாழ்த்தும் என்பதே உண்மை! 

Thursday, 13 February 2025

🍔 உணவு ஜோடிகள்

#ஆஹா_என்னப்_பொருத்தம் 





வெளிநாட்டு ஆண் அல்லது பெண் நமது இந்தியர்களை திருமணம் செய்து கொண்டால்அந்த ஜோடிகளை நாம் வியந்து பார்ப்போம் அல்லவாஅப்படி உணவுகளிலும் வித்யாசஜோடிகளைப் பற்றித் தான் இந்தப் பதிவேதமிழர்களின் உணவு ரசனை எத்தகையசிறப்பானது என்பதற்கு ஒரு சோறு பதம் தான் இந்தப் பதிவு..! 


☕️ டீ - மிக்ஸர் - முறுக்கு 🥨


தமிழ்நாட்டு டீக்கடைகளை வித்யாசமான உணவு ரசனைகளின் ஊற்று எனலாம்இங்குதான் பலப்பல புது காம்போக்கள் உருவாகின்றனஉணவுகள் பற்றிய விஞ்ஞானத்தில்தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான எடிசன்கள் பிறந்து இருக்கின்றனர் என்றால் அதுமிகையில்லாததுநம்ம ஊரு டீக்கடை பலகார வகைகளே அதற்குச் சான்றாகும்


டீக்கடை பலகாரங்கள் பற்றி வேறு பதிவில் பார்ப்போம்இப்போ வித்யாச காம்போக்ளாஸில் சூடான டீ வாங்கி அதில் கைப்பிடி மிக்ஸரை அள்ளிப் போட்டு குடிக்கும் அந்தயோசனை முதலில் யாருக்கு வந்ததுனு சரித்திர சான்றுகள் ஏதுமில்லைடீ&மிக்ஸராகேட்க ஒரு மாதிரியா இருந்தாலும் நல்ல ருசியான காம்போ இது


பொடி மிக்ஸரா இல்லாம கொஞ்சம் மோட்டாவான மிக்ஸர் அதில் உள்ள நிலக்கடலைபருப்புகடலை பருப்பு சகிதம் தேயிலையின் மணமும்இனிப்பும் மிக்ஸரின் காரமும்நமது நாவில் இணையும் போது அடசொல்ல வைக்கும்பின்னே மனைவி அமெரிக்காவாஇருந்தாலும் அவளும் பெண் தானேடீயில் மிக்ஸருக்கு பதில்..


காராபூந்திகாராசேவு போட்டு ருசிப்பவர்களும் இருக்கிறார்கள்மதுரையில் தேன் குழல்போல இருக்கும் அரிசி முறுக்கை ஒரு நொறுக் நொறுக்கி டீயில் போட்டுகுடிப்பார்கள்.சுருள் சேவுபட்டை சேவு போட்டுக் குடிக்கும் பழக்கமும் பாண்டிய நாட்டின்வழக்கமாகும்அசட்டு இனிப்பான அச்சு முறுக்குஇனிப்பு சேவு போட்டு..


டீ குடிப்பவர்களும் ஏராளம்டீ மட்டுமின்றி பாலில் இதை போட்டுக் குடிப்பவர்களும்உண்டுடீ க்ளாஸில் மேலாகப் போட்ட மிக்ஸரை முதலில் டீயோடு மொறு மொறுன்னேருசிப்பார்கள்டீ குடித்து முடிக்கும் போது மிக்ஸர் டீயில் நன்கு ஊறியிருக்கும்அதைலாவகமாக ஒரு ஆஃப்பாயிலை வாயில் கவிழ்ப்பது போல..


க்ளாசோடு வாயில் கவிழ்த்துவிட்டு பெருமிதத்துடன் தங்கள் உதடுகளை துடைக்கும்ஸ்டைல் தென் தமிழகத்திற்கே உரித்தான ஸ்டைலாகும்இந்த டீ - மிக்ஸர் - முறுக்குகாம்போவை தென் தமிழ்நாட்டின் டீக்கடை மரபுன்னு கூட சொல்லலாம்


🌮 பூரி - சாம்பார் - சட்னி 🥘


சேர்த்த ஜோடி சேட்டு வீட்டுப் பொண்ணா இருந்தாலும் எப்படி இரு மனங்கள் கலந்ததோஅப்படி வட இந்திய தென் இந்திய சமையல் கலையும் சங்கமித்த இடம் தான் இந்த பூரி - சாம்பார் - சட்னிவட இந்தியாவிலேயே பூரி சப்பாத்திக்கு தால் செய்யும் பழக்கம் உண்டுஇதனால் பூரி சாம்பார் காம்போவில் பெரிய வித்யாசம் இல்லை


ஆனா பூரிக்கு சட்னி ஒரு வித்யாசமான இணைபூரிசப்பாத்திஏன் புரோட்டாவுக்கு கூடசட்னி தொட்டுகிட்டது நாங்க தான்னு கோவை மக்கள் காலரை தூக்கிவிட்டுக்குறாங்கஆனா அந்தப் பெருமை நெல்லைக்கு தானாம்அங்கு சைவப்பிள்ளை உணவு மெஸ்கள்அதிகம்பொடி தோசை வகைகளின் தாய்வீடும் இதுவே


இந்திய சுதந்திரத்திற்கு முன்பே பூரிக்கு கிழங்கு கிடையாது என கடை வாசலில் போர்டுதொங்குமாம்மேலும் நெல்லையில் வித விதமான அற்புத ருசியில் சொதிகள்கிடைக்கும்அதுவே பூரி சப்பாத்திக்கு அல்டிமேட்டாக இருக்கும்தேங்காய் பால் சொதிஇல்லாத போது வந்த சப்ஸ்டிட்யூட் தான் தேங்காய் சட்னி


மதுரை ஓட்டல்களில் பூரி மசாலா தீர்ந்துவிட்டால் பூரிக்கு மசால் இல்லிங்க சாம்பார்சட்னிதான்னு சொல்லியே பரிமாறுவார்கள்!  பெரியார் பஸ் ஸ்டண்ட் அசோக், KBS & துளசிராம்,  ஜங்ஷன் கற்பகம்அரசரடி கெளரி கிருஷ்ணாமனோரமா போன்றவைஎல்லாம் பூரி சட்னி சாம்பாருக்காகவே புகழ் பெற்ற கடைகளாகும்


🫕 ரவா உப்புமா - ரசம் 🍲


என்னங்க சொல்றிங்கன்னு சிலர் அதிர்ச்சியாகலாம்சுடச்சுட குழைவா செய்த ரவாஉப்புமாவை தட்டில் போட்டு நடுவே குழி பன்ணி 3 கரண்டி தக்காளி ரசத்தை ஊத்திசாப்பிட்டா.. அடடாதேவலோகத்தில் அதுதான் அமிர்தம்னு சொன்னா உடனே நம்பிவிடுவிங்கஅதைச் சூடா சாப்பிடணும் என்பதுதான் முக்கிய விதி


ரசம் அல்லது ரசமண்டி வைத்து சாப்பிடும் ரசிகர்களும் உண்டுஇதில் தக்காளி ரசம்பருப்பு ரசம் போன்றவை தான் உப்புமாவிற்கு நல்ல காம்போபூண்டுமிளகு ரசம்அவ்வளவா செட்டாகாது இல்ல அதுக்கு தகுந்தாற் போல சேர்மானங்களை உப்புமாவில்குறைக்கணும்மாயவரத்தில் காளியாகுடி ஓட்டல் அந்தக் காலத்தில் ஃபேமஸ்


அங்கே மதிய உணவு தீர்ந்து போய் மாலை 4 மணிக்கு டிபன் ஆரம்பிக்கும் போது சூடானகிச்சடி செய்வார்கள்கிச்சடி வேகமாக செய்துவிடலாம்அன்று கிரைண்டர் இல்லாததால்சட்னி அரைக்கத் தான் சிறிது தாமதமாகும்எனவே அவர்கள் கிச்சடிக்கு மதிய உணவில்மீதமான ரசத்தை ரவா கிச்சடியோடு பரிமாறுவார்கள்!


இந்த காம்போ படு ஹிட்டடிக்க கிச்சடி & ரசத்திற்கு ரசிகர்கள் பெருக கிச்சடிக்காகவேஅண்டா அண்டாவாக ரசத்தை தயாரித்து பரிமாறினார்கள்இதுவே ரவா உப்புமா & ரசம்காம்போ உருவான கதைஅளவான புளிப்புடன் இனிப்பான தக்காளியில் செய்த சூடானரசமும் கொதிக்கும் உப்புமாவும் ஒரு ரசனையான காம்போ


🍛 பிற வித்யாச காம்போக்கள்🧆


அடை தோசைக்கு அவியல்சொதி எல்லாம் பக்கா காம்போன்னா கூட மோர்க்குழம்புஇன்னும் பிரமாதமா இருக்கும்அதே போல இடியாப்பம் & ஆப்பத்திற்கு பால் பாயாசம்செமையா இருக்கும்இட்லிதோசைக்கு குருமாதோசை & தேங்காய் பால்பிரட் & வெஜிடபிள் குருமா இதெல்லாம் கூட சிறந்த காம்போக்கள் தான்!


குலாப் ஜாமூன் ஜீராவில் சப்பாத்தியை பிய்த்து போட்டு ஊற வைத்து சாப்பிட்டால் பிறகுஅதற்கு மயங்கி விடுவீர்கள்தயிர்சாதம் & வத்தக் குழம்பு போலபருப்பு சாதம் & பூண்டுக்குழம்பும் ஒரு பிரமாதமான இணையாகும்அட நாமெல்லாம் பாயாசத்தில் அப்பளத்தைபோட்டு நொறுக்கி குழைத்து சாப்பிட்ட மறத்தமிழர் வம்சமல்லவா


உங்களது வித்யாசமான உணவுக் காம்போவை கமெண்ட்டவும்💖

🐓சேவல்கறி 🐔

“சண்டைச் சேவல் கறிக் குழம்பு”

பொதுவா நாட்டுக்கோழிக் குழம்புக்கு நாட்டுக்கோழி அடிப்பது வேறு! சண்டைச் சேவல் நாட்டுக்கோழி குழம்பு சாப்பிட்டு இருக்கிங்களா? சேவற் சண்டையில் ஒரு கண் போனது, இறக்கை அடி வாங்கியது, நிறைய அலகு குத்து வாங்கியது, காலில் அடிபட்டது போன்ற சேவல்களை பலர் கறிக்கு விற்றுவிடுவார்கள். இந்தச் சேவல்கள் எல்லாம் ஆட்டுக்கறியை விட கடினமானவை!

குக்கரில் வேக வைத்தால் கூட 10 - 12 விசில்கள் வைத்தால் மட்டுமே ஓரளவு நன்கு வேகும்! உசிலம்பட்டி செல்லும் வழியில் செக்கானூரணி அருகே இதை அற்புதமாக சமைப்பார்கள்! நல்ல கொதிக்கும் நீரில் 2 மணிநேரம் ஊறவைத்து இறக்கை மற்றும் மயிர்களை அகற்றி சுத்தம் செய்து பிறகு மீண்டும் கொதிக்கும் நீரில் 3 மணிநேரம் மூழ்க வைத்து அதன் பின்பே சமைப்பார்கள்!

சமையலிலும் கறி கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு மேல் குழம்பில் வேகும்! இப்படி சமைத்தால் தான் அப்படியே திருநெல்வேலி அல்வா போன்ற பதத்தில் அந்தக் கறி வெந்திருக்கும்! ரோஜா இதழ்களை பறித்தது போல கறி எலும்பில் இருந்து கழன்று வரும்! கசகசா, தேங்காய், முந்திரி அரைத்த மசாலாவுடன் கிராம்பு, ஏலம், பட்டை மசாலா வாசத்துடன் அதை ருசிப்பதே பேரானந்தம்!

அதிலும் செக்கிலாட்டிய நல்லெண்ணெய் சொட்டச் சொட்ட அந்தக் குழம்பை சுடு சோற்றில் போட்டு பிசைந்து கூடவே அவித்த நாட்டுக் கோழி முட்டையோடு உண்பதே பூலோக சொர்க்கம் எனப்படும். கார் டயரைப் போன்ற கறியை பஞ்சு மிட்டாய் போல வேகவைத்து தருவது பெரிய பக்குவம் ஆகும்! கிட்டத்தட்ட ஓர் இரவு முழுக்க இந்தக் கறி வெந்தால் மட்டுமே இந்த பக்குவம் கிடைக்கும்!

இன்றும் மதுரையில் இந்த சண்டை சேவல் கறி மிக மிக பிரபலம்! மிக மிக டிமாண்ட்!! ஏனெனில் பாக்யராஜின் முருங்கையை விட இது முந்நூறு மடங்கு வீரியம் உடையது என்ற நம்பிக்கையே! இன்றும் புது மாப்பிள்ளைக்களுக்கு மறுவீட்டில் தருகின்ற விருந்தில் சேவல் கறி முதலிடம் பிடித்து இருக்கிறது! உருளைக்கிழங்கு, சோயா பீன்சுடன் முக்கால் கிலோ சேவல் கறியுடன்..

சாஃப்டான பிராய்லர் கோழி 1/4 கிலோ சேர்த்து சமைப்பது மதுரைப் பக்கத்து விருந்து வழக்கமாகும்! சேவலின் அந்தரங்கப் பகுதி, ஈரல், மாங்கா, கழுத்து, மண்டை, கால் போன்றவை நிச்சயம் நாம் ருசிக்க வேண்டிய ஒன்றாகும்! இந்த பாகங்கள் இதன் ருசியை மட்டுமின்றி ருசிகரமான தாம்பத்ய உறவுக்கும் காரணம் என நம்புகின்றனர்! இந்தக் குழம்பை சோற்றுக்கு மட்டுமின்றி..

இட்லி, தோசை, ஆப்பத்திற்கும் ஆபத்தில்லாத அல்டிமேட் தொடுகறி ஆகும்! இந்தக் கறியில் பிரியாணியும் செய்யலாம்! எலும்புக் கறி, பருப்பு, சுரைக்காய், மாங்காய் போட்ட தால்ஸாவும், தயிர் வெங்காயமும் உங்களை ஒரு சட்டி பிரியாணியை ருசிக்க வைக்கும்! இதிலும் அவித்த முட்டை தனி! சூடான கோதுமை புரோட்டா, சப்பாத்தி, ரொட்டி வகைகளுக்கும் இந்த சேவல் கறிக்குழம்பு..

ஒரு நல்ல இணையாகும். புலாவ், ஃப்ரைடு ரைஸ் போன்ற உணவுகளுக்கும் பிரட், பன் போன்ற ரொட்டிகளுக்கும் சிறந்த தொடுகறி இந்த சண்டைச் சேவல் கறிக்குழம்பாகும்!

💝 அவள் வருவாளா…

#கனவுக்_காதலி 💜

சட்டுன்னு திரும்பிப் பார்க்க வைக்கும் முகம் இருக்கணும் அது எனக்குப் பிடிக்கணும்! அவள் தோலின் நிறம் பற்றிய கவலையில்லை! தோழியின் குணம் தான் முக்கியம். குரல் கொஞ்சம் மேன்லியா இருக்கணும், ஆனா இனிமையா பாடணும்.

கொஞ்சம் வெட்கம் இருக்கணும் ஆனா ஒரு திமிரும் அலட்சியமும் உடல் மொழியில் மிளிரணும். இந்த வானத்திற்கு கீழே எந்த சப்ஜெக்ட்டையும் பற்றி சுவாரஸ்யமா பேசத் தெரியணும்!

அவளுக்குத் தெரியாததை டக்குன்னு தெரியாதுன்னு சொல்லணும். என்னை மட்டுமல்ல ரசனை மிகுந்த அனைவரையும் ரசிக்கணும். முக்கியமா பொஸசிவ்னஸ் ஒரு கடுகை கோடி துண்டுகளாக்கினால் எவ்வளவு அளவு இருக்குமோ அந்தளவு கூட இருக்கக் கூடாது.

நேர்த்தியாக, அழகாக உடுத்தணும், பொறாமையும், கர்வமும் இருக்கவே கூடாது. சமையல் தெரியலைன்னாலும் சரி விதவிதமா சாப்பிடக் கூடிய ரசனை இருக்கணும்.

அவளோடு நான் இல்லாவிட்டாலும் அவள் உலகம் இயங்கணும். நான் உட்பட அவள் யாரையும் சார்ந்திருக்கக்கூடாது, தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் நிரம்பி வழியணும். என்னைக் கேள்விகள் கேட்கக் கூடாது எதையும் எதிர்பார்க்கக் கூடாது.

நானும் அவளிடம் அது போலவே இருப்பேன்! பிற ஆண் நண்பர்கள் இருந்தால் அதுபற்றி எனக்குத் துளியும் கவலை இல்லை! அதே போலத்தான் எனக்கும் தோழிகள் இருப்பாங்க எனும் தெளிவு இருந்தால் போதும்.

உலகின் எந்தச் சீதோஷ்ண சூழலையும் தாங்கிக் கொள்ளும் உடலும் உற்சாக மனமும் வேண்டும். பாஸிட்டிவ் எனர்ஜி மட்டும் பொங்கணும் நெகட்டிவ் அவள் எக்ஸ்ரேவில் கூட இருக்கக் கூடாது! காட்டாறு போல சடசட வேகமும், மாற்றமும், நிதானமும் கொண்ட என்னை..

நன்கு கணித்து அவள் நீராட வேண்டும். சில நேரங்களில் அவள் ஆணாகவும் மாறவேண்டும். நன்கு டிரைவிங் தெரியணும்! ஓடும் காரில் ஸ்டியரிங் கட்டுப்பாடு இழக்காது முத்தமிடத் தெரியணும்! எந்த மூடில் (mood) இருக்கிறோமோ அந்த கணத்தில் மட்டுமே வாழ வேண்டும்.

கட்டியணைத்து காதல் மொழி பேசும் போது கிச்சனில் கேஸ் அணைச்சிட்டேனான்னு மைண்டை ரோலிங்கில் விடக்கூடாது. எனது செண்டிமெண்ட் எங்கே, அட்டாச்மெண்ட் எங்கே என்பதை அழகாக பயன்படுத்த தெரியணும். எந்தச் சூழலிலும் சந்தேகிக்கவே கூடாது.

எங்க போனே? எங்க இருக்கே? என்று கேள்விகள் இருவருக்குமே முற்றிலும் தடை செய்யப்பட்டதாகும். புரிதல் இருந்தால் இந்தக் கேள்விகள் வரவே வராது என்பதை முதலில் புரிந்து கொள்ளணும். தயக்கமின்றி முத்தங்கள் தருவது எனக்கு மிகப் பிடிக்கும்!

அவளும் அப்படியே முத்தமிட வேண்டும். நல்ல ஹ்யூமர் சென்சும், புத்தகம் படிக்கும் பழக்கமும், சமையல் கலையும் தெரிந்தவர் எனில் தினமும் என்னிடம் இருந்து கூடுதலாக ஐந்தாறு ஐ லவ் யூக்களையும் ஐந்நூறு முத்தங்களையும் பெறலாம்.

அவளிடமிருந்து செல்லக் கோபமும், சண்டையும், பிடிவாதமும் வரவேற்கப்படும். வீண் வாக்குவாதங்கள் தவிர்க்கவேண்டும்! அவளை என்னைப் போல கருதுவேன்! பதிலுக்கு அவள் என்னை அப்படிக் கருதவேண்டியதில்லை! என்னை உணர்ந்தாலே போதும்.

அவள் உரிமைகளுக்கு என்னிடம் அனுமதி கேட்கவே தேவையில்லை தகவல் சொன்னால் கூட போதும். அதுவும் அவள் விரும்பினால் மட்டுமே. காசு பணம் கணக்கு பார்க்க கூடாது.

நானே அவள் உலகமாக இருக்கணும். நான் இல்லாவிட்டாலும் அவள் இந்த உலகத்தில் இருக்கணும். இந்த குவாலிட்டியில் ஒரு காதலியைத் தான் தேடிகிட்டு இருக்கேன்! 😜😜😜

இவ்வளவு தாங்க பட் I like that type of girl 🤪🤪🤪😉

டிஸ்கி : தகுதியுள்ள தோழிகள் தயவு செய்து எனது இன்பாக்ஸ் வரவேண்டாம்.. வரவேண்டாம்.. வரவேண்டாம்.. யெஸ் வேண்டாம்😜🤪

இனிய காதலர் தின வாழ்த்துகள் 💜💙💚🧡🩵❤️🤍🤎💛🩶💘💝

Wednesday, 12 February 2025

🐷🐖பாலூட்டும் பன்றி

#பால்குடி_பன்றிக்கறி  




1725ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட ஒரு ரெஸ்டாரெண்ட் இன்றும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா! கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற இந்த பழமையான ரெஸ்டாரெண்ட் இந்த 2025இல் தனது 300ஆவது வயதை நிறைவு செய்கிறது! இப்போதே ஆச்சரியப்பட வேண்டாம் முழு பதிவையும் படித்துவிட்டு ஒரு ரூம் போட்டே வியப்போமா! 


நம்ம ஊரிலேயே சிறு வயதில் நாம் ரசித்து ருசித்த பல ஓட்டல்கள் இப்போது இல்லை! வெறும் 50 ஆண்டுகளிலேயே இப்படி இருக்கும் போது 300 ஆண்டுகள் ஒரு கடை அதிலும் பிரத்யேகமா 2 வகை இறைச்சியை சமைத்து 10 தலை முறைகளை தாண்டி மக்களை இன்னும் தங்கள் உணவின் பிடியில் வைத்திருப்பது முதல் அதிசயம்! இன்றும் பரபரப்பாக இயங்குவது 2வது அதிசயம்! 


உலகின் மிகப் பழமையான இந்த ஓட்டல் இருப்பது ஸ்பெயின் நாட்டின் Madrid நகரில்! Casa Botin என்பது இந்த ஓட்டலின் பெயர்! 1590இல் கட்டப்பட்ட கட்டிடம் ஒன்றில் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது காஸா போடின் ஓட்டல்! இந்த ஓட்டலின் வயது 300 அந்தக் கட்டிடத்தின் வயது 435! கிட்டத்தட்ட Madrid நகரமும் அப்போது தான் தலைநகரமனது! 


1560 ஆண்டு ஸ்பெயினை ஆண்ட மன்னர் இரண்டாம் பிலிப்பே Madrid நகரை ஸ்பெயினின் தலைநகராக அறிவித்தார்! அதற்கு 30 ஆண்டுகள் கழித்து கட்டப்பட்டது இந்தக் கட்டிடம்! 300 ஆண்டுகளாக இங்கு அப்படி என்ன ஸ்பெஷல் உணவு? பன்றி இறைச்சியும், ஆட்டிறைச்சியும் தான்! 300 ஆண்டுகளுக்கு முன்பு தந்த அதே பாரம்பரிய முறை ருசியில் சமைத்துத் தருகிறார்கள்!


மனிதன் இறைச்சிக்காக வளர்த்த மிருகங்களில் முதலிடம் பன்றிக்கு தான்! உலகிலேயே இன்று அதிக மக்கள் உண்ணும் கறி பன்றிக் கறியே! பிரத்யேகமான குட்டிப் பன்றி & ஆடுகளை மாய முக்கோணம் என்றழைக்கப்படும் செபுல்வேதா-அரண்டா-ரியாசா என்னும் இடத்தில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்கிறார்கள்! இந்த இறைச்சிகளின் தனித்த ருசிக்கு இதுவே காரணமாகும்! 


வெளிநாடுகளில் பன்றி, மாடு, மான் இறைச்சிகள் கிடைப்பது சர்வ சாதாரணம் தான்! ஆனால் காஸா போடின் பன்றி & ஆட்டு இறைச்சிகளின் சிறப்பு அவை 4- 6 வார குட்டிகளாக இருக்கும் போதே இறைச்சிக்காக கொல்லப்பட்டுவிடும்! அதாவது தாய்ப் பால் குடித்துக் கொண்டிருக்கும் குட்டிகளின் கறி! நம்ம ஊரில் சொல்வாங்களே பால் குடி மறக்காத பச்சிளம் குழந்தைன்னு!


பால் குடிக்கும் பருவத்திலேயே இறைச்சிக்காக வெட்டப்படுவதால் இந்த இறைச்சிகள் மிக மிக மிருதுவாகவும் அதிக ருசியாகவும் இருக்கின்றன! கறியும் தோலோடு எளிதில் வேகிறது! வெங்காயம், பூண்டு, ஒயிட் ஒயின், உப்பு, மிளகு, பிரியாணி இலை போன்ற பொருட்களை இதனுடன் சேர்ப்பதால் அது கறியின் ருசியை மேம்படுத்தி ஒரு அற்புதமான ருசி அனுபவத்தை தருகிறது! 


அதே போல பால்குடி மறக்காத ஆடு & பன்றிகளை பாரம்பரிய முறையில் சமைப்பதே காஸா போடின் தனிச் சிறப்பு! இந்த இறைச்சி மிகவும் மிருதுவாக இருக்கும்! கறியின் தோல் நன்கு வறுபட்டு ருசிக்க அருமையாக இருக்கும்! இந்தக் கறியை கஸ்டமர் விருப்பம் போல மசாலாக்களை சேர்த்து லைவாக சமைத்துத் தருவார்கள்!  நம்ம ஊரில் இரவு புரோட்டா கடையில் அமர்ந்து.. 


எக்ஸ்டிரா 1 முட்டை போட்டு ஒரு கொத்து போடுங்க மாஸ்டர்.. மட்டன் சுக்காவை வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி போட்டு நல்லா ப்ரை பண்ணுப்பா..  பெப்பர் தூக்கலா ஒரு ஆஃப் பாயில் போடுண்ணே என இன்று நாம் ஆர்டர் கொடுக்கும் வழக்கத்தை 17ஆம் நூற்றாண்டிலேயே ஸ்பெயின் மக்கள் துவக்கிவிட்டனர்! உலகிற்கே லைவ் கிச்சனின் முன்னோர்கள் ஸ்பெயின் நாட்டவரே!


உலகெங்கும் ஸ்பெயின் ஆட்சி செய்த நாடுகளில் எல்லாம் ஸ்பானிஷ் கலாச்சார உணவின் அடையாளமாக இந்த பன்றிக்கறி இருக்கிறது! போர்ச்சுகல், க்யூபா, டொமினிக் குடியரசு, ஸ்பானிஷ் மொழி பேசும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இந்தக் கறி மிகவும் பிரசித்தம்! ஸ்பானிஷ் மொழியில் ‘லெச்சான்’ (பால் பன்றி) எனவும் போர்ச்சுகல்லில் ‘லெய்டாவோ’ என்றும் அழைக்கப்படுகிறது! 


300 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க காஸா போடின் சமையலறை இன்று வரை ஓய்வின்றி இந்த 2 இறைச்சிகளையும்  தயாரித்து வழங்கி வருகிறது! 300 வருடப் பழமையான ஓக் மர ஓவன் அடுப்பில் இந்த உணவுகள் உணர்வுகளோடு சமைக்கப்படுகின்றன ஃபோர்ப்ஸ்பத்திரிகை உலகின் தலை சிறந்த பத்து கிளாசிக் உணவகங்களில் இதற்கு 3வதுஇடத்தை வழங்கியுள்ளது! 


பன்றி & ஆடு மட்டுமின்றி நேர்த்தியாக சமைத்த போட்டின்-ஸ்டைல் கிளாம்ஸ், காஸ்டிலியன் சூப்புத்துணர்வூட்டும் காஸ் பாச்சோ போன்ற பாரம்பரிய உணவுகளுடன் ஸ்பெயினின் சிறந்த ஒயின்களுடன் (ஆஹா கவிதை)  கூடிய பலப்பல ருசியானஉணவுகளையும் நீங்கள் இங்கே ருசிக்கலாம். இதற்கான சிறந்த செஃப்கள் இந்த உணவுகளை உரிய முறையில் சமைக்கிறார்கள்! 


காசா போடின் உணவகம் ஏராளமான இலக்கிய ஆளுமைகளுக்கு உணவு பரிமாறியுள்ளபெருமையைப் பெற்றது!  எர்னஸ்ட் ஹெமிங்வேபெனிட்டோ பெரெஸ் கால்டோஸ்கிரஹாம் கிரீன் மற்றும் மரியா டியூனாஸ் உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் தங்கள்நாவல்களில் இந்த உணவகத்தை பின்னணியாக வைத்து நாவல் எழுதியுள்ளனர்! இன்றைக்கும் இங்கு சாப்பிட டிமாண்ட் உள்ளது!


முன்பதிவு இன்றி இங்கெல்லாம் போய் உணவருந்தவே முடியாது! ஸ்பெயினிற்கு சுற்றுலா செல்பவர்கள் தவறாமல் சென்று ருசித்து வரும் இடம் இந்த காஸா போடின் உணவகமாகும்! Madrid நகரும் இந்த ஓட்டலும் ஒரே நேரத்தில் உருவான பெருமை கொண்டவை! ஸ்பெயினின் கலாச்சாரமும், பண்பாடும் இக்கறியின் ஒவ்வொரு துணுக்கிலும் உள்ளது என்கிறார்கள் மிகுந்த பெருமையுடன்!  





🥘 ஓட்டல்களில் மாற்றம்..

#ஓட்டல்கள்_மாறவேண்டும் 




இன்றைய காலத்தில் லாபகரமான தொழில் திட்டமிட்டு ஓட்டல் துவங்குவது என்றும்அடுத்த 100 ஆண்டுகளுக்கு ஓட்டல் துறை தான் கோலோச்சும் என்கிறது புள்ளிவிபரங்கள்ஆனால் அதை முற்றிலும் பொய்யாக்கும் அளவிற்கு தான் இப்போதையஓட்டல் நிர்வாகங்கள் நடந்து வருகின்றனவோ எனும் ஐயம் எழுகிறது


நான் இங்கு சொல்ல வருவது சாதாரணமாக இயங்கி வருகின்ற ஒரே ஒரு ஓட்டலையோசிறுகுறு உணவகங்களையோ அல்லசரவணபவன்சங்கீதாஅன்னப்பூர்ணாஆனந்தாஸ் போன்ற கார்ப்பரேட் ஸ்டைல் செயின் ரெஸ்டாரெண்டுகளைஇவர்களின்நிர்வாகம்திட்டம்செயல் எல்லாம் மிகத் துல்லியமாக இருக்கும்


இங்கே மார்க்கெட்டிங் உதாரணக் கதை ஒன்றுஇங்கிலாந்தில் உணவுத் தயாரிப்பில் 60 ஆண்டுகள் அனுபவம் பெற்ற மக்கள் பெரிதும் விரும்பும் பிராண்ட் ஒன்று செல்லப்பிராணிகளுக்கான உணவுகளை தயாரிக்கப் போவதாக அறிவிக்கிறதுஉலகிலேயேவீட்டில் நாய்பூனை வளர்ப்பு அதிமுள்ளது இங்கிலாந்தில் தான்


மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிஅந்த தயாரிப்பு வெளி வரும் நாளை குணா கமல் போலபார்த்தவிழி பூத்திருக்க காத்து இருக்கின்றனர்அந்த நாளும் வந்ததுகடைகளில்கூட்டம் அலைமோதியதுதயாரித்து விற்பனைக்கு வந்த அரைமணி நேரத்தில்அனைத்தும் விற்று தீர்ந்துவிட மகிழ்கிறது நிறுவனம்


தங்களது உற்பத்தி திறனை 2 மடங்காக்கி கடைகளுக்கு அனுப்ப அதுவும் அன்றே விற்றுதீர்ந்து முன்பதிவும் நடக்கிறதுநிறுவனம் அடுத்து 3 ஷிப்டில் வேலை செய்து அதைமும்மடங்காக தயாரித்து அனுப்புகிறதுமுதல் மாதம் முழுக்க டிமாண்ட்டில் விற்பனைமறு மாதம் எல்லா கடைகளிலும் போதிய ஸ்டாக் வைத்தது நிறுவனம்


வாரம் இரண்டாயிற்று நான்காயிற்று அந்த மாதமே முடிந்துவிட்டது  எந்தக் கடையிலும்ஒரு பாக்கெட் கூட விற்கவில்லைமக்கள் ஒருவரும் வாங்கவில்லைஎன்ன நடந்ததுஏனிந்த மாற்றம்குழம்பிப் போன நிர்வாகம் கள ஆய்வு செய்கிறதுமக்களிடம்  அந்தஉணவு பற்றிய கேள்விகளை எழுப்பி ஆய்வு செய்கிறது


உணவின் விலைபேக் டிஸைன்கடைகளில் இருப்பு எதிலும் எந்தக் குறையோகுற்றமோ இல்லைஆனால் பிரச்சனை எங்கே தெரியுமாநாய்பூனைக்கு அந்த உணவுபிடிக்கவில்லையாம்இதன் பின்பு தான் யார் பயனாளர்களோ அவர்களுக்கு தயாரிப்பைதந்து பிறகு தயாரிக்கும் முறை வழக்கத்திற்கு வந்தது என்பார்கள்.


இதே தான் இன்றைய பெரு ஓட்டல் நிர்வாகங்களுக்கும்அவர்கள் நிர்வாகம் திறன்செயல் திட்டம் எல்லாம் கார்ப்பரேட் லெவலில் இருந்தாலும் மக்களுக்கேற்ற சேவைஇல்லைசென்ட்ரல் கிச்சன் எனும் கான்செப்டை இவர்கள் முன் வைப்பார்கள்இவர்களது எந்தக் கிளையில் போய் சாப்பிட்டாலும் ருசியும் தரமும் மாறாது


இதுதான் அதன் தாரக மந்திரம் என்பார்கள்ஆனால் அது துளியும் உண்மையில்லைஎன்பதே வருத்தமான செய்திஒவ்வொரு கிளையிலும் ஒவ்வொரு ருசிதங்க விலைபோல அது ஒவ்வொரு நாளும் வேறுபடுகிறது என்பது மிகப் பெரிய குறையாகும்இதைஎந்த ஓட்டல் நிர்வாகமாவது சரி செய்து இருக்கிறார்களா


மத்திய கிச்சனில் உப்பு பார்த்து ருசி பார்த்தால் மட்டும் போதாதுபிராஞ்சைஸ்கொடுக்கப்பட்ட கடைகளில் பொதுவாக இது ஏற்படும்ஏன்னா பிராஞ்சைஸ் எடுப்பவர்பணம் சம்பாதிக்கத் தான் இதை எடுத்திருக்கிறார்அவருக்கு அந்த ஓட்டல் குடும்பப்பாரம்பரியத்தைப் பற்றிய அக்கறை எள்ளளவும் கிடையாது!


தலப்பாகட்டி பிரியாணி” எனும் பிராண்ட் இன்று தேக்க நிலையில் இருக்க இதுவேகாரணம்விறகடுப்பில்ஃபேன் கூட இல்லாத புழுக்கமான இடத்தில் ருசித்த பிரியாணி & தால்ஸாவின் ருசி இன்று.. அண்டார்டிக் போல குளிர் வீசகுஷன் சோபாவில் LED விளக்கொளியில் முற்றிலும் தொலைந்து போய்விட்டது!


உணவில் உப்பு அதிகம் என்றால் “அப்படிங்களா என்னான்னு பார்க்கிறேன்” எனும்பதிலை டெம்ப்ளேட்டாக வைத்துள்ளார்கள்என் அப்பா காலத்தில் உப்பு கம்மின்னாபாம்பு கடித்தது போல பதறுவார்கள்அந்தத் தவறுக்கு வருந்தி அந்த உணவை உடனேமாற்றித் தருவார்கள்இன்றைக்கு இதெல்லாம் நடப்பதேயில்லை


தோசை சூடாக இல்லை என்றால் இன்னிக்கு கூட்டமா இருக்கு அப்படித்தான்என்கிறார்கள்அப்போ கேஷ் கவுண்ட்டரில் கூட்டமா இருந்துச்சுன்னு நாம பில்கொடுக்காம போகலாமாஇந்த உணவுக்கு அதிகமாகவே நாம் விலை தருகிறோம்நமதுதேவைக்கு உரிய உணவு தரவேண்டியது அவர்களின் கடமை!


இது நுகர்வோரின் உரிமைநாம் போனில் பேசிக் கொண்டே வந்த தோசையைசாப்பிடாது ஆறிப் போனால் நாம் பொறுப்பாகலாம்அவங்க தரும் போதே அதுஆறியிருப்பதை ஏற்கவே முடியாதுஇவ்வளவு கூட்டத்தில் இதெல்லாம் பார்க்க முடியாதுஎன்பவர்கள் இதை கார்ப்பரேட் ஸ்டைல் என்று எங்கும் சொல்லவே கூடாது


அடுத்து கடைக்கு வந்து டேபிளுக்காக காத்திருப்பதுஇந்தக் கூட்டம் தான் உங்களதுவணிக பலம்நிறைய இடங்களில் இங்கு காத்திருக்க நேரமின்றி பலர்கிளம்பிவிடுகின்றனர்தியேட்டரில் ஹவுஸ்ஃபுல் போல உள்ளே இடமில்லை ()15 நிமிடம் காத்து இருக்கணும் எனும் அறிவிப்பை கடைக்கு வெளியே வைக்கலாம்!


அது நிறைய மக்களின் நேர விரயத்தை மிச்சப்படுத்தும்டைம் மேனேஜ்மெண்ட் என்பதுஓட்டல் நிர்வாகத்தின் ரத்தம்மக்களுக்கு அது தக்காளி சட்னியல்ல என்பதைஉணரவேண்டும்வீடு தேடி வந்து பீட்ஸா டெலிவரி தரும் நிறுவனங்கள் காலிங் பெல்அடித்து டெலிவரி தருவது குறிப்பிட்ட விநாடிகளுக்குள் நடக்கவேண்டும்


என்பதை திட்டமிட்டு அதற்கு முறையான பயிற்சியை டெலிவரி பணியாட்களுக்குத்தருகிறதுஅது போல உணவு தயாரிக்கும் இடத்தில் இருந்து சாப்பிடும் மேசைக்கு சூடாகஉணவினை சர்வ் செய்யும் பயிற்சியளிக்கவேண்டும்கூட்டம் அதிகம் போன்றபொறுப்பற்ற பதில்களை தராமலிருக்க அறிவுறுத்த வேண்டும்!


முடிந்தால் ஓட்டல் பணியாளர்களுக்கு ஆண்டுக்கொரு முறை பர்சனாலிட்டிடெவலப்மெண்ட் வகுப்புகள் எடுப்பது சாலச் சிறந்ததுஎன்ன தான் கார்ப்பரேட் லெவலில்நீங்கள் திட்டங்கள் வகுத்தாலும் ஓட்டலில் தரும் உணவு ருசியாக இல்லாவிட்டால்இங்கிலாந்து உணவு பிராண்டுக்கு ஏற்பட்ட கதி தான் நடக்கும்


நம் ஓட்டலுக்கு காத்திருந்து சாப்பிட ஒரு கூட்டமே இருக்கிறது என்று கர்வம்கொள்ளாமல்அடுத்தகட்ட செயல் திட்டத்திற்கு தயாராகுங்கள்பொது கிச்சனைவிட்டுவிட்டு கிளைகளிலும் விசிட் அடியுங்கள்மக்கள் கேட்பதை செய்யுங்கள்தவறினால்  உங்கள் வாசலில் காத்திருக்கும் கூட்டம் காணாமல் போகும்!