#அரங்கனும்_ஆஞ்சநேயனும்
இந்த 2025 ஜனவரி 1 புத்தாண்டு அன்று திருச்சியில் இருந்தேன்! அன்று ஶ்ரீரங்கம்தரிசனத்துக்கு அதிகாலை 4 மணிக்கே எழுந்து குளித்து மிகச் சரியாக 4:50க்குகோவிலுக்கு சென்றால் அம்மா மண்டம் தாண்டி சில 100 அடிகளில்.. God அரங்கனைதரிசிக்க வரும் பக்த கோடிகளை பேரி Guard அமைத்து தடுத்திருந்தனர்!
விக்ஸ் என்பதை சுற்றி சுற்றி எழுதியதைப் போல நமக்கு நேரே 500 மீட்டர் தூரத்தில்இருந்த சந்நிதிக்கு 5 கிலோ மீட்டர் சுற்றி நடக்கவிட்டனர்! அதிகாலை 5 மணிக்கேஅவ்வளவு கூட்டம்! நான் என் வேகத்தில் நடந்து போய் க்யூவில் நிற்க தாமதமாகி 6:30 மணி தரிசனம் முடிந்தது அடுத்து 8:30க்கு தான் தரிசனம் என்றனர்!
முட்டாள் தனமாக க்யூவிலிருந்து வெளியே வந்துவிட்டேன்! அப்படியே இருந்திருந்தால்8:30 தரிசனம் போயிருக்கலாம்! திரும்ப வெளியே வந்ததால் பரமபத பெரிய பாம்புகொத்தியது போல மீண்டும் துவங்கிய இடத்துக்கே போய் நிற்க.. என்ன சார் 12:30 மணிதரிசனமா என்றார் நாமம் போட்ட மாமா ஒருவர்!
மணி பார்த்தேன் 7:30 என குறியீடாகக் காட்டியது! 2 கால்களிலும் ரத்தம் கட்டிக்கொண்டது போல வலி (இரண்டரை மணிநேரம் நின்றிருக்கிறேன்) புத்தாண்டில்என்னைப் பார்க்கும் வாய்ப்பை இழந்த அரங்கனை எண்ணி இரங்கினேன். வெளியேறும்போது தொண்டரடிப் பெரியாழ்வர் சந்நிதி முன் நின்று சேவித்தேன்!
அரங்கனார் ரங்கசாமியின் தரிசனம் தான் கிட்டவில்லை ஆனால் கோவிலுக்கு வெளியேவந்தால் பெரியார் ராமசாமியின் தரிசனம் கிட்டியது! அவரையும் வணங்கிவிட்டுகிளம்பினேன். நமது டிரைவர் அண்ணன் ராகவேந்திரா நகர் என்னும் இடத்தில் காரைநிறுத்தி இருந்தார்! கோவில் பக்கமெல்லாம் கார் நிற்க இடமேயில்லை!
லோக்கல் ஆட்டோ ஒன்றை கூப்பிட்டு ராகவேந்திரா நகர் என்றேன். கோவில் வாசலில்இருந்து 2 கி.மீ தூரம் இருந்த ராகவேந்திரா நகருக்கு ₹250 கேட்டார்! புது வருடம் வேறுஅவருடன் பேரம் பேச விரும்பவில்லை! சரி நீங்க என்ன கூடவா கேட்கப் போறிங்கபார்த்து செய்ங்க என ஆட்டோ ஏறினேன்!
சட்டுன்னு சார் 200 கொடுங்க போதும் என்றார்! உங்க ப்ரியம்ணே நான் வேற இன்னிக்குசாமி பார்க்கலை என்றதும் சார் 100 கொடுங்க போதும் என அதிரடியாய் கட்டணத்தைக்குறைத்து, ஆக்ஸிலேட்டரை கூட்டினார். ஆட்டோவில் பயணித்த 2 நிமிடங்களில் கார்நின்ற இடத்தில் இறங்கி 150 கொடுத்தேன்!
முகமெல்லாம் பிரகாசமாகி தேங்யூ சார் ஹேப்பி நியூ இயர் என்று வாழ்த்து சொல்லிக்கிளம்பினார். காரில் அமர்ந்தேன் கார் கிளம்பும் போது என் கதவருகே ஒரு ஆட்டோவந்து நின்றது! அதே ஆட்டோ தான்! கண்ணாடியை இறக்கினேன் சார்! இங்க பக்கத்துலசஞ்சீவன ஆஞ்சனேயர் கோவில்னு ஒண்ணு இருக்கு!
இப்போ தான் கட்டிகிட்டு இருக்காங்க! அங்க இவ்வளவு கூட்டம் இருக்காது என்றார்! ஆஞ்சநேயர் என்று காதில் விழுந்த போதே நான் சிலிர்த்து போனேன்! எப்படிப்பாபோறது என்றேன்! சார் இங்கேருந்து பட்டர்ஃப்ளை பார்க் போங்க பார்க் வாசலில்இருந்து 3கிமீ தூரத்தில் மேலூர் என்னும் ஊரில் இருக்கு என்றார்!
அடுத்த 15 நிமிடத்தில் அந்தக் கோவிலில் இருந்தோம்! இன்று உலகிலேயே மிகப் பெரியஆஞ்சநேயர் இவர் தானாம்! நாமக்கல் நங்கநல்லூர் ஆஞ்சநேயரை விடப் பெரியவர் 51 அடி உயரத்தில் விஸ்வரூபம் மட்டுமல்ல விக்ரம் வரை இருந்தார்! உள்ளே, ராமர், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், வெங்கடாஜலபதி ஆகியோரது,
சந்நிதிகள் இருந்தன! அங்கே கோவிலில் நடக்கும் திருப் பணிகளை ஆஞ்சநேயர் மாமாஎன்கிற வாசுதேவன் முன்னின்று செய்து வருகிறார்! எங்களுக்கு பிரசாதமும் கையில்கட்டும் ஆஞ்சநேயர் கயிறும் தந்தார்! பின்புறம் பெரிய கோசாலை ஒன்றும் இருந்ததுகோவில்கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தன!
37அடீ உயர சிலை பீடம் மற்றும் அடிப்புறம் அனைத்து சேர்த்து 51 அடி உயரஆஞ்சநேயர்! இத்தனை பிரம்மாண்ட ஆஞ்சநேயரை நான் காண்பது இதுவேமுதன்முறை! புத்தாண்டு அன்று திவ்யமான தரிசனம்! ஆம் அவனே என்னை அழைத்துஅவனே என்னை அருள் செய்தான்! புத்தாண்டு அன்று புத்துணர்வோடு திரும்பி வந்தேன்!
🐵 அரங்கன் தராததை அனுமன் தந்தான் 🐒
No comments:
Post a Comment