அது எங்கள் குடும்பத்தில் வறுமை மைக்கேல் ஜாக்ஸனைப் போல துள்ளாட்டம் போட்டுக்கொண்டிருந்த சமயம்! எனக்கு 15 வயது பெரிய தம்பிக்கு 12, தங்கைக்கு 10, கடைசிதம்பிக்கு 6 வயது நாங்கள் அனைவருமே நன்கு வசதியாக வாழ்ந்து விதவிதமானஉணவுகளை உண்டவர்கள். பசி என்று எழுத்தில் கூட எழுதிப்..
படித்ததில்லை! அய்யோ பாவம் இது வாழ்ந்து கெட்ட குடும்பங்க என்பது எங்களைஅறிந்த அனைவரின் வாயிலும் இருந்து வரும் பரிதாப வார்த்தைகளாகும். எங்கள் வசதிகாலத்தில் வீட்டில் சமைக்கும் பாத்திரங்களாக இருந்த பித்தளைப் பாத்திரங்கள் எங்கள்வறுமையில் விலைக்கு போய் பசியாற்றும் பாத்திரத்தை..
கனகச்சிதமாக செய்தன! எல்லாம் விற்று வீடே அலுமினியமாய் ஜொலித்த போது அதன்ஜொலிப்பு தெரியாத வண்ணம் அங்கு வறுமை ஒளி வீசிப் பிரகாசித்தது! வீட்டில்இருப்பதை சாப்பிட்டு பழைய சோற்றை அதிசயமாகப் பார்த்து முதலில் அதை சாப்பிடாதுவிலக்கி பிறகு அதை மனதார ஏற்றுக் கொண்டதை..
ஃபாஸ்ட் ஃபார்வேர்டாக ஓட்டிவிடுங்கள்! போஷாக்காக வளர்ந்த வறுமை 3 வேளைசாப்பாட்டையும் 1 வேளை ஆக்கியது! எந்த பழைய சோற்றை வேண்டாம் என விலக்கிவைத்தோமோ அதாவது காலையில் கிடைக்காதா என்று ஏங்க வைத்தது. இதில் ஒரேஆறுதலான விஷயம் நாங்கள் பசி தாங்கப் பழகிக் கொண்டோம்!
நன்றாக வாழ்ந்த குடும்பம் என்னும் ஒரு தகுதியே என் தந்தைக்கு எந்த ஒரு வேலையும்கிடைக்காமலிருக்க அற்புதமாக உதவியது. மூத்தவன் எனக்கே 15 வயது என்பதாலும்அப்போது எந்த வேலையும் தெரியாததாலும் எதற்கும் முயற்சிக்கவில்லை. அம்மா மட்டும்ஒரு வழி கண்டுபிடித்தார்! அது என்ன வேலை தெரியுமா?
முள் வெட்டுவது! சீமைக் கருவேல மரத்தை வெட்ட வேண்டும். ஒரு கட்டு முள் அப்போது 2 ரூபாய்! அம்மா ஒரு நாளைக்கு 8 முதல் 10 கட்டு வெட்டுவார்கள்! அதில் 2 கட்டு எங்கள்வீட்டு சமையலுக்கு எரிக்க.. மீதிக்கு 16 ரூபாய்கிடைக்கும்! அன்றைக்கு 16 ரூபாய்என்பது மிகப் பெரிய தொகையாக இல்லாவிட்டாலும் 2 வேளை..
சாப்பாடு நிச்சயம்! காலையில் அம்மா 6 மணிக்கு கிளம்பினால் தான் மாலை 6 மணிக்குள்இது சாத்தியம். காலையில் 4 பன்னும் வெல்லம் போட்ட வர டீயும் செய்து வைத்துவிட்டுஎன் அம்மா தங்கையை துணைக்கு அழைத்துக் கொண்டு காட்டுக்கு முள் வெட்டகிளம்பிவிடுவார். டீயை சூடுபடுத்தி பிறருக்கு தருவது..
பெரிய தம்பி தான்! அம்மா முதலில் முள் வெட்டும் போது 4 கட்டுக்கு மேல் வெட்டமுடியவில்லை! அவங்களும் வசதியா இருந்தவங்க தானே! ஆகவே முதல் 6 மாதங்கள்காலை உணவுக்கு மிகவும் ஏங்கினோம். பாதாம், பிஸ்தாவாக அள்ளியள்ளி சாப்பிட்டஎங்களை பழைய சோற்றுக்கு ஏங்கவிட்டது வறுமை.
இந்த சமயத்தில் ஒரு நாள் சூடான உப்புமா சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது! யார் வீடுஎன்பதை சொல்ல விரும்பவில்லை சட்டியில் அடி பிடித்து சற்றே கருகிப் போன உப்புமாஅது! கீழே கொட்ட வேண்டிய அந்த உப்புமாவை எங்களுக்கு தந்தனர். ஆனால் அந்தஉப்புமா அன்றைக்கு எங்களுக்கு தேவாமிர்தமாக ருசித்தது!
13 வயது வரை நன்கு விதவிதமாக சாப்பிட்டு.. வெறும் 2 வருடங்கள் வறுமையில் வாடியஎங்கள் வாய்க்கே அந்த ருசி அற்புதமாக இருந்தது என்றால் காலம் காலமாக கஷ்டப்படும்ஏழைகளின் நிலையை இப்போது எண்ணினாலும் அழுகை வரும். உயிர் வாழ ருசிதேவையில்லை ஒரு உணவு வேண்டும் என்பதே வாழ்வியல்!
🩷 காலத்திற்கும் மறக்க இயலாது அந்த வறுமை காலத்து காலை உணவை..🩷
No comments:
Post a Comment