தீனா "கொரலு"....
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
எப்படி துண்ணா ஒடம்புக்கு நல்லது தெரிமாபா..? நீ துண்ண சோறு நல்யா ஜீர்ணமா ஆக சொல்லோ அத்த தெரிஞ்சுகினு அப்பால துண்ணுறத தேவயா அளவா துண்ணியினா உன் ஒடம்புக்கும் நல்லது உனுக்கு ஆயுசும் கெட்டி..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"பசிச்சதுக்கு அப்புறம் அளவா துண்ணு.. நீ பல வர்சம் வாழ்ந்திடு கண்ணு"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
[ பொருட்பால் : அதிகாரம் : மருந்து : குறள் எண் : 943 ]
தீனா "கொரலு"....
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...
புர்சன் பொஞ்சாதி 2 பேரும் கட்டில்ல சந்தோஸ்மா இர்க்குறதுக்கு மின்னாடி சின்யதா ஒரு சண்ட போட்றது ஒரு சொகம் தான்..ஆனா அந்த கோவம் எப்டி இர்க்கணும் தெரிமா?துண்ற சோத்துல போட்ற உப்பு மேறி அள்வோட தான் இர்க்கணும்.. அத்து அள்வுக்கு மீறுனா உன் சந்தோசம் நெறியா உப்பு போட்யா மேறி கர்ச்சிடும்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"ஊடலு அள்வா போட்ற உப்பு.. அளவு அதிகமான அது தப்பு"
குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.
[ இன்பத்துப்பால் : அதிகாரம் : புலவி : குறள் எண் : 1302 ]
தீனா "கொரலு"....
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..
அன்பா பண்பா ஒழுக்கமா ரீஜண்டா இருக்குறவரு கொணம் இன்னா மேறி இர்க்கும் தெரிமா.? அவ்ரோட பழகுனவங்க விஷத்த கொட்த்து இத்த துண்ணுபான்னாலும் அத்த தன் கண்ணாலேயே புர்ஞ்சுகினு வோணான்னு சொல்யாம சந்தோஸ்மா வாங்கி துண்ணுடுவாங்களாம்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"நம்புனவன் நஞ்சே கொட்த்தாலும்... நல்லவனுக்கு அது நன்னாரி சர்பத்து"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
[ பொருட்பால் : அதிகாரம் : கண்ணோட்டம் : குறள் எண் : 580 ]
தீனா "கொரலு"....
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...
எனுக்கு தும்மலு வர்ற மேறி இர்ந்து அப்டியே அத்து வர்றாம நின்னு போச்சே! ஒருவேள என் ஆளு என்னிய நெனிக்கிறா மேறி ஆக்ட் கொட்த்து நெனிக்காம போய்ட்டானோன்னு டவுட்டாகீது.. இல்லின்னா தும்மலு வந்துர்க்குமே.! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"தும்மலு வந்து அடங்குது.. அத்த நென்ச்சு மன்சு மடங்குது"
குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.
[ இன்பத்துப்பால் : அதிகாரம் : நினைந்தவர் புலம்பல் : குறள் எண் : 1203 ]
தீனா "கொரலு"....
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
ஒல்கத்துல யாரோட துட்ட ரொம்ப நல்யா மதிப்பாங்க தெரிமா? அகங்காரம் புட்ச்ச குணம், காண்டு, ஈனத்தனமான செய்கை இத்தெல்லாம் இல்யாத நல்ல மன்சன் துட்டு கீதே அத்து தான் அல்லாரும் மதிக்கிற துட்டு..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"கெட்ட கொணம் இல்யாதவன் துட்டு... ஒலகம் மதிக்கும் அதை தொட்டு"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.
[ பொருட்பால் : அதிகாரம் : குற்றம் கடிதல் : குறள் எண் : 431 ]
தீனா "கொரலு"....
வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...
பொண்ணு சொல்றா, "அவரு என்ன வுட்டு பிர்ஞ்சி இர்ந்த அல்லா நாளயும் சொவத்தில கோடு போட்டு வச்சி.. அவுர நென்ச்சிகினே அத்த தடவி தடவி என் விரலெல்லாம் தேஞ்சுட்ச்சு.! அவுரு வர்வாரா மாட்டாரான்னு வர்ற வழிய பாத்து பாத்து கண்ணு ரெண்டும் அயகெல்லாம் கெட்டு ஒளியில்லாம பூட்ச்சு..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"பிர்ஞ்சு போனவர நென்ச்சி... "சொவத்தை தடவி விரலு தேயுது... வழிய பாத்து கண்ணு காயுது" குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.
[ இன்பத்துப்பால் : அதிகாரம் : அவர்வயின் விதும்பல் : குறள் எண் : 1261 ]
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
வொர்த்தன அழிவு வர்றாம காத்துகினு இர்க்குற கருவி அவுனோட அறிவு தான்..அத்து மட்யுமில்ல அவுனோட எதிரி உள்ய வந்து பூந்து அத்த அழிக்க மிடியாத கோட்டை கணக்கா காத்துகினு இர்க்குறதும் அத்தே அறிவு தான்.! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"அழியாம காக்குற அறிவு கோட்டை.. அத மீறி எவனும் செய்யமிடியாது சேட்டை"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்.
[ பொருட்பால் : அதிகாரம் : அறிவுடைமை : குறள் எண் :421 ]
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...
இந்த ஆசப்பட்ற மன்சுகீதே அதுக்கு வெக்கங்குற தாப்பாள போட்டு ஒரு கதவு கணக்கா பூட்டி வைக்க சொல்லோ.. அவுரு மேல நான் வச்சிக்கீற காதலு ஒரு கோடாலி மேறி ஆகி அந்த கதவயே ஒட்ச்சு போட்டுறுத்து..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"வெக்கம் தான் மன கதவுக்கு தாப்பா...காதலு அத ஒடச்சுடுது போப்பா"
குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
[ இன்பத்துப்பால் : அதிகாரம் : நிறையழிதல் : குறள் எண் :1251 ]
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
ஒர்த்தன் உண்மிய பத்தி பெர்சா பேஸ்லனாலும்.. உண்மிக்கு ஒத்து வர்றாத வேலயே செஞ்சாலும்..அவன் இன்னொர்த்தன பத்தி கோள் சொல்யாம ராங்கா பேஸாத்து வாழ்றவனா இர்ந்தா ஒலகம் அவனை நல்யவன்னு சொல்லும்.! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"அடுத்தவனை சொல்லாத கோளு.. அப்பத்தான் நீ உலகத்துக்கேத்த ஆளு"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறம்கூறான் என்றல் இனிது.
[ அறத்துப்பால் : அதிகாரம் : புறங்கூறாமை : குறள் எண் :181 ]
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...
காதலிக்கிறவங்கோ ரெண்ட்யு பேரும் ஒரு அளவா கோச்சிக்கினு பேசாமயே இர்ந்து.. அப்றம் சமாதான்மா போய் கட்டில்ல ஒண்யா சேர்றது கீதே.. அடாடாடாடா.. அத்து மேறி ஒரு சொகம் ஒல்கத்துல எத்யுமே கெடியாத்து...! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"லைட்டா இர்க்கணும் ஊடலு.. பிரைட்டா இருக்கும் காதலு"
குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.
[ இன்பத்துப்பால் : அதிகாரம் : ஊடலுவகை : குறள் எண் :1330 ]
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
உன்னால ஒர்த்தன் ஊருக்குள்ள வெக்கப்பட்டு தலிய குனிஞ்சி நிக்குறான்னா அத்த நென்ச்சி நீ வெட்கப்பட்யே ஆவுணும்.! அப்டி நீ வெக்கபடாம இர்ந்தின்னா ஒல்கத்துல நாயம்ன்னு ஒண்ணு கீதே அது உன்னாண்ட இர்ந்து வெக்கப்பட்டுகினு போய்டும்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா..
"மனுசனுக்கு வோணும் வெக்கம்..இல்லாட்டி நாயம் வராது உம்பக்கம்"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
பிறர்நாணத் தக்கது தான் நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.
[ பொருட்பால் : அதிகாரம் : நாணுடைமை : குறள் எண் : 1018 ]
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...
மன்சால நென்ச்சுனு இர்க்குறவரை பிர்ஞ்சு இர்க்க சொல்லோ..என்யோட அயகான தோளு ரெண்ட்யும் அயகெல்லாம் கொர்ஞ்சி அப்டியே இள்ச்சி போச்சு..! இளச்சு அசிங்கமா போன உன்னாண்ட ஏன் இர்க்குணும்ன்னு.. என் கய் வளயலு அல்லாம் கயண்டு கீய உயுந்துர்ச்சு.. சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"அவுர நென்ச்சு மெலியுது தோளு.. கய் வளயலும் கழலுது கேளு"
குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.
[ இன்பத்துப்பால் : அதிகாரம் : உறுப்பு நலன் அழிதல் : குறள் எண் :1234 ]
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
ஊர்ல நல்யா மதிப்பும் மர்யாதியுமா வாழ்ந்துனுகீற மன்சன் வாய தொர்ந்து பேஸ் கூடாத்த வார்த்திய பேஸ்னா.. அத்து வரிக்கும் அவுரு மேல வச்சிர்ந்த அல்லா மர்யாதியும் அப்டியே அம்பேலாய்டும்..அப்றம் ஒரு ஆளு கூட அவுர மதிக்காது.! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா..
"நல்லத பேஸ்னா உனுக்கு சிறப்பு.. இல்லாட்டி நீ கால் செர்ப்பு"
சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல
நீர்மை உடையார் சொலின்.
[ அறத்துப்பால் : அதிகாரம் : பயன்இல சொல்லாமை : குறள் எண் :195 ]
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...
கண்ணுல மய்ய வய்க்க சொல்லோ அந்த மய்ய வெக்கிற குச்சிய கண்ணுக்கு தெர்யாது.. அத்தே மேறி தான் என்ன வுட்டு பிர்ஞ்சி போனவரு திரும்ப என்னாண்ட வர் சொல்லோ அவுரு பிர்ஞ்சு போன தப்பு எனக்கு தெர்யறதில்ல.. சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா..
"மை வய்க்கிற குச்சி கண்ணுக்கு தெர்யாது..காதலன் செஞ்ச குத்தம் பொண்ணுக்கு தெர்யாது"
குஜாலா சொல்லிகீரார்பா "தல"
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து.
[ இன்பத்துப்பால் : அதிகாரம் : புணர்ச்சி விதும்பல் : குறள் எண் :1285 ]
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
நாட்ட ஆண்டுகினு இர்க்க ராஜாவா இர்ந்தாலும் அவுரு ஏதாவது தப்பு செய் சொல்லோ... "தோ பாரு நீசெய்றது ஏதும் சரியில்ல..ராங்கு பண்ணா அப்றம் அல்லாமே ராங்காவே பூடும்ன்னு" சொல்ல நாலு பெர்ய மன்சனுங்க வோணும்.! அப்டி சொல்ல ஆருமே இல்லின்னா எதிரியே இல்லாட்டி கூடொ அவரு கெட்டயிஞ்சுருவாரு.! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா.
"நல்லத சொல்ற பெருசு.. அவரு இல்லாட்டி நீ தருசு"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும்.
[ பொருட்பால் : அதிகாரம் : பெரியாரைத் துணைக்கோடல் :குறள் எண்:448 ]
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...
என் மன்சுல நென்ச்சிகினு இர்க்குறபரு என் கண்ணுக்குள்ளயும் கீறாரு.! கண்ண இமய்க்க சொல்லோ அவுரு மூஞ்சி மறயுமேன்னு பீலாகி நான் கண்ண இமிக்கமேயே இருக்கேன்.. இது எனுக்கு சந்தோஸ்மா இர்ந்தாலும் அது தெரியாம.. இந்த புள்ள இப்படி கீதே.. அத்தும் மேல உனுக்கு அன்பே கெடியாதான்னு அவுர ஊர்ல அல்லாரும் திட்டுறாங்க !
சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா..
"என்கண்ண இமிச்சா நீ அங்க இல்ல.. உன்ன ஊரு திட்டுது இன்னா சொல்ல"
குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும் இவ்வூர்.
[ இன்பத்துப்பால் : அதிகாரம் : காதற் சிறப்புரைத்தல் : குறள் எண் : 1129 ]
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
வாய் தொர்ந்து பொய்யே சொல்யாம உண்மியா ஒர்த்தரு வாழறாருன்னா அத்த வுட ஜபர்தஸ்து வேற எத்துவும் கெடியாது.. அப்டி வாழ சொல்லோ அவுருக்கு தெர்யாமலேயே அல்லா புண்ணியமும் தானா வந்து சேரும்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"பொய் சொல்லாத வீணா.. புண்ணியம் வரும் தானா"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்.
[ அறத்துப்பால் : அதிகாரம் : வாய்மை : குறள் எண் 296 ]
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...
காதலி சொல்றா..! "இந்த சாய்ங்கால நேரம் கீதே... அது அப்டியே காதலனோட குஜாலா பேசிகினு இர்ந்தப்போ சோக்கா தெர்ஞ்சது.. இப்ப அவுரை பிர்ஞ்சி இர்க்க சொல்லோ அத்தே சாய்ங்கால நேரம் எப்டி கீதுன்னா.. என்னிய உசுரோட துண்ணுற வேல் கணக்கா கொல்லுது..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"அவுரு இர்ந்தா சாய்ங்காலம்.. அவுரு இல்லாட்டி உசுர சாய்க்கிற காலம்"
குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.
[ இன்பத்துபால் : அதிகாரம் : பொழுது கண்டு இரங்கல் : குறள் எண் :1221 ]
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
நாட்டை ஆள்ற ராஜாவே உனுக்கு தோஸ்த்து ஆவணும்ன்னு தேடி வந்து தோஸ்த்தா இர்ந்தாலும்.. நீ ஒரு சோம்பேறியா இர்க்க சொல்லோ.. அந்த ராஜாவோட உனுக்கு கிட்ச்ச ஒறவுக்கு ஒரு சின்ய பிரியோஜ்னம் கூட கெடியாத்து..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"ராஜா உன் தோஸ்த்துன்னாலும்.. சோம்பேறியா இர்ந்தா நீ கூஜா
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
படியுடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது
[ பொருட்பால் : அதிகாரம் : மடி இன்மை : குறள் எண் : 606 ]
தீனா "கொரலு"
அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...
இந்த முளவுட்ட செடி கீதே அத்த பாத்தவுட்னே சொல்லலாம் இது எந்த மேறி நெல்த்துல முள்ச்சதுன்னு... அத்தே மேறி தான் மன்சன் வாய தொர்ந்து பேசற வாய் பேச்ச வச்சி அவன் பொர்ந்த பொறப்பயும் அவன் வம்சித்தயும் ஈசியா கண்டுக்லாம்..!
சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...
"நெல்த்த வச்சு செடிய சொல்லு.. பேச்ச வச்சு குடிய சொல்லு"
சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்; காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
[ பொருட்பால்: அதிகாரம்: குடிமை : குறள் எண் - 959 ]
அண்ணாத்தே..., தினா கொரலு படா ஷோக்காக் கீதுபா......
ReplyDelete