Thursday 5 June 2014

திருப்தி..

பரமசிவனும் பார்வதியும் இன்றைய பூலோகத்தில் வாழ்ந்து பார்க்க ஆசைப்பட்டார்கள்.. ஒரே ஒரு கண்டிஷன் பார்வதியை அழவைக்கக்கூடாது..கேட்டதை வாங்கித்தர வேண்டும்.. சட்டென சிவன் சங்கர் ஆனார்...பார்வதி உமா ஆனார்.. பார்ப்பதற்கு டைடல் பார்க்கில் பணிபுரியும் ஒரு இளம் தம்பதி போல தோற்றம்.. சென்னைக்கு வந்தனர்.!

OMR ரோட்டில் புகழ் பெற்ற கன்ஸ்ட் ரக்ஷன் நிறுவனம் கட்டிதந்த குடியிருப்பில் 12 வது மாடியில் ஒரு 3BHK சொகுசு ப்ளாட் வாங்கினார்கள், வீட்டுக்குள் கைலாயம் போல் க்ளைமேட் இருக்க O General AC பொருத்தப்பட்டது.. வீட்டின் ஒவ்வொரு அறையும் ரசனையோடு இண்டீரியர் செய்யப்பட்டது.. 

காஸ்ட்லியான விளக்குகள் பொருத்தப்பட்டது... ஹாலில் ஷாண்ட்லியர் தொங்க விடப்பட்டது.. லேட்டஸ்ட் ஸ்டைலில் மாடுலர் கிச்சன் அமைக்கப்பட்டது.. டபுள்டோர் ரெஃப்ரிஜிரேட்டர், ஃபுல்லி ஆட்டோமெடிக் வாஷிங் மெஷின் வாங்கினார்கள், எந்த மின் தடையையும் சமாளிக்கும் நவீன இன்வெட்டர்கள் பொருத்தினார்கள்..!

போஷ்க் கம்பெனியின் அதிநவீன டிஜிட்டல் சவுண்ட் ஹோம் தியேட்டருடன் 54 இன்ச் மெகா LCD டிவி பொருத்தப்பட்டது.. இன்னும் கேபிளா..? டிஷ் ஆண்ட்டெனாவா என்று மட்டும் தான் முடிவு செய்யவேண்டும்.. சங்கரின் போக்குவரத்திற்கு நவீன C கிளாஸ் பென்ஸ் ஒன்றும் உமாவிற்கு ஒரு ஹூண்டாய் I 20 யும் வாங்கினார்கள்..!

தேவையானது எல்லாம் வாங்கி குவித்தார்கள்.. பட்ஜெட் கிட்டத்தட்ட 3 கோடியை தாண்டியது சங்கருக்கு (சிவன்) பணம் பெரிதல்ல உமாவின் (பார்வதி) சந்தோஷமே முக்கியம் உமா சொன்னாள் "சங்கர் இன்னும் கேபிள் கனெக்ஷன் வரலையே", அதற்கு சங்கர் "இல்லம்மா கேபிள் வேணாம் டிஷ் வாங்கலாம் HD கிளாரிட்டி கிடைக்கும்"என்றான்..! 

உமாவும் சரி என ஒப்புக்கொள்ள அடுத்த 3 மணி நேரத்தில் அதுவும் பொருத்தப்பட்டது.. வீடெல்லாம் தேவையானது நிரம்பி இருக்க சிவனான சங்கருக்கு ஒரு பெருமிதம்.. உமா டிவியை ஆன் செய்த போது அவள் கேலக்ஸி 5 மொபைல் ஓம் நமச்சிவாயா என்ற காலர் ட்யூனில் சிணுங்கியது.. டிஸ்ப்ளேவில் நகைக்கடை காரரின் எண் ஒளிர்ந்தது..!

பேசினாள்..பேசிவிட்டு சங்கரிடம் திரும்பி டியர்" போன வாரம் நாம ஆர்டர் கொடுத்த வைர நெக்லஸ் ரெடியாம் போய் வாங்கிட்டு வரலாமா என்றாள்.. உடனே சங்கர் ஓ.. குட் இதுக்கு ஏன் நீ அலையறம்மா கடை பக்கத்துல தானே வெளியே வெயில் பொளக்குது நீ டிவி பாத்துட்டு இரு நான் போய் வாங்கிட்டு வரேன் என்றான்..!

ஓ..ரொம்ப தேங்ஸ்ப்பா.. உங்களுக்கு ஒண்ணும் சிரமமில்லையே என உமா கேட்க என்னம்மா இது உனக்கு செய்யாம யாருக்கு செய்வேன் நீ என்னில் பாதியல்லவா.. நீ ஒரு சொட்டு கண்ணீர் சிந்துனா எனக்கு பொறுக்காது.. நீ நல்லா டிவி பாத்துட்டு ஹாயா இரு நான் இப்ப வந்துடுறேன் என்று கூறி கிளம்பி போனான் சங்கர்...!

வைரநெக்லஸ் வாங்கிக் கொண்டு சங்கர் வீடு திரும்பிய போது உமா ஓ வென்று அழுது கொண்டிருந்தாள்.. சங்கர் பதறிப்போனான்.. "என்னம்மா ஆச்சு என்ன பிரச்சனை" என்று கேட்க உமா அழுது கொண்டே கேட்டாள் "நீங்க எனக்கு கேட்டதெல்லாம் வாங்கி தரேன்னு சொல்லிதானே பூலோகம் கூட்டிட்டு வந்தீங்க"

ஆமா அதுக்கு என்ன இப்ப நீ கேட்டு நான் எது வாங்கி தரலை..? என சங்கர் கேட்டவுடன் உமா.."எல்லாமே வாங்கித் தந்திங்களா பொய் சொல்லாம சொல்லுங்க".. என்றாள்.. அடடா இப்ப உனக்கு என்ன பிரச்சனை..? இந்த வீட்டுல இல்லாத வசதி என்ன இருக்கு..? ஒண்ணு இருக்கு சொல்லவா தோ அந்த டிவில (திருவிளையாடல் சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்) நல்லாஆஆஆஆஆ பாருங்க...!!

சங்கர் திரும்பி பார்க்க டிவியில் ஓடிக் கொண்டிருந்தது #டேபிள்மேட்_வாங்கிட்டிங்களா விளம்பரம்..!

No comments:

Post a Comment