Thursday 5 June 2014

சுற்றுச்சூழல் - டிவிட்டுறள்கள்

#இன்று_உலக_சுற்று_சூழல்_தினம் JUNE 5

மீள் பதிவாக சுற்றுசுழல் பற்றி எழுதிய டிவிட்டுறள்கள் ...மரங்கள் வளர்ப்போம் வனங்களை காப்போம் நீர் ஆதாரத்தை  முறைப்படுத்துவோம் வன விலங்குகளை வாழ வைப்போம்


#டிவிட்டுறள் - 27

மரம் வளர்ப்போர் அனைவரும் எதிர்கால

நலம் வளர்ப்போரெனச் சொல்.


#டிவிட்டுறள் - 32

வெட்டிச் சாய்த்த மரங்கள் வளமையை

கட்டிப் போட்டு விடும்.


#டிவிட்டுறள் - 37

எறியும் பாலிதீன் குப்பைகள் எரித்திடும்

நிலத்தடி மண் வளத்தை.


#டிவிட்டுறள் - 38

மழையின்றி உழவின்றி உலகம் வாடுதல்

மரங்களை அழிப்பதன் பரிசு.


#டிவிட்டுறள் - 54

பிள்ளையை போற்றி வளர்ப்பதும் மரங்களை

நீருற்றி வளர்ப்பதும் ஒன்று.


#டிவிட்டுறள் - 56

வீழுகின்ற மரங்கள் வேண்டாம்; வேண்டுமே

விழுதுகள் வீழுகின்ற மரம்.


#டிவிட்டுறள் - 60

மனிதர் நம்கடமை இவ்வுலகில் மரம்

வளர்த்து செழிக்க விடல்.


#டிவிட்டுறள் - 65

மரம்வெட்டி சாய்ப்பதும் மனிதர் உயிர்வெட்டி

சாய்ப்பதும் ஒன்றான செயல்.




No comments:

Post a Comment