#இன்று_உலக_சுற்று_சூழல்_தினம் JUNE 5
மீள் பதிவாக சுற்றுசுழல் பற்றி எழுதிய டிவிட்டுறள்கள் ...மரங்கள் வளர்ப்போம் வனங்களை காப்போம் நீர் ஆதாரத்தை முறைப்படுத்துவோம் வன விலங்குகளை வாழ வைப்போம்
#டிவிட்டுறள் - 27
மரம் வளர்ப்போர் அனைவரும் எதிர்கால
நலம் வளர்ப்போரெனச் சொல்.
#டிவிட்டுறள் - 32
வெட்டிச் சாய்த்த மரங்கள் வளமையை
கட்டிப் போட்டு விடும்.
#டிவிட்டுறள் - 37
எறியும் பாலிதீன் குப்பைகள் எரித்திடும்
நிலத்தடி மண் வளத்தை.
#டிவிட்டுறள் - 38
மழையின்றி உழவின்றி உலகம் வாடுதல்
மரங்களை அழிப்பதன் பரிசு.
#டிவிட்டுறள் - 54
பிள்ளையை போற்றி வளர்ப்பதும் மரங்களை
நீருற்றி வளர்ப்பதும் ஒன்று.
#டிவிட்டுறள் - 56
வீழுகின்ற மரங்கள் வேண்டாம்; வேண்டுமே
விழுதுகள் வீழுகின்ற மரம்.
#டிவிட்டுறள் - 60
மனிதர் நம்கடமை இவ்வுலகில் மரம்
வளர்த்து செழிக்க விடல்.
#டிவிட்டுறள் - 65
மரம்வெட்டி சாய்ப்பதும் மனிதர் உயிர்வெட்டி
சாய்ப்பதும் ஒன்றான செயல்.
No comments:
Post a Comment