Saturday 14 March 2015

சிங்கம் நம்பர் -1

இந்தியச் சிங்கம்...!

உலகத் தடகளப் போட்டியை நடத்தியது புதிய நாடு ஒன்று...! அதில் அந்த நாட்டின் வீரர் ஒருவரும் கலந்து கொண்டார்.. உலகின் மின்னல் வேக மனிதன் ஜான்சன் போல்ட் அந்த போட்டியில் முதலிடத்தையும் நடத்திய நாட்டின் வீரர் 2 ஆம் இடத்தையும் பிடித்தனர். இது அந்த நாடே எதிர்பார்க்காதது

போட்டியை நடத்திய நாடு ஒரு பணக்கார நாடு.. அதற்கு ஒரு பேராசை வந்தது. முதன் முதலாக இப்போட்டியை நடத்தும் நம் நாட்டில் நமது வீரரே முதலிடம் பிடித்தால் உலகமே நம்மை உற்றுப் பார்க்குமே என்று எண்ணி ஜான்சன் போல்ட்டிடம் பெரும் தொகை தருவதாக விலை பேசியது அவர் மறுத்துவிட்டார்.

இந்த பொறுப்பை யாரிடமாவது கொடுத்து ஜான்சன் போல்ட் மனதை மாற்ற எண்ணி உலக நாடுகளில் இருந்து 3 கட்சிகளை பார்த்து பார்த்து தேர்வு செய்தது.. அதில் நம் காங் கட்சியும் ஒன்று! மற்றவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கட்சிகள்.

முதலில் ஐரோப்பிய கட்சி ஜான்சனை அணுகியது தன் நாட்டுக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று அவர்களிடம் அவர் சொல்ல அவரது நாட்டுப்பற்றுக்கு தலை வணங்கி ஐரோப்பிய கட்சி பின் வாங்கியது,அடுத்து அமெரிக்க கட்சி கொஞ்சமும் தயங்காமல் ஜான்சனை மிரட்டியது.

நீங்கள் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளவர் தானே என்று எடுத்த எடுப்பிலேயே கொக்கி போட்டது அமெரிக்கா.. நீங்கள் தடகளப் பாதையை விட்டு விலகி ஓடினீர்கள் என்று பொய்யாக எங்களால் நிரூபிக்க முடியும் என்றது, அவர்களது அச்சுறுத்தலுக்கு கொஞ்சமும் ஜான்சன் பணியவில்லை.

அமெரிக்காவும் ஏமாற்றத்துடன் திரும்ப இப்போது காங் மட்டுமே.! புதிய நாடு காங் பிரதிநிதியிடம் அய்யா.. நீங்க தான் கடைசி உங்களைத் தான் மலை போல நம்பியுள்ளோம்.. ஜான்சனை சந்தித்து வெற்றியுடன் வாருங்கள் என்று சொல்ல.. அவர் "ஜான்சனா அவர எதுக்கு பாக்கணும்"? என்றார்.

காங் பிரதிநிதி கேட்ட கேள்வி அவர்களை திடுக்கிட வைத்தது... அவரை பாக்காம பின்ன யாரை பாக்கணும்? என்று கேட்க..."பத்திரிக்கையாளர்களை "என்றார் காங் பிரதி. இவரை அழைத்து வந்தது தவறோ.? என அந்த நாடு யோசிக்க சீக்கிரம் சீக்கிரம் என்று அவசரப்படுத்தினார் காங் பிரதி.!

ஸார்... ஜான்சனை ஒப்புக்கொள்ள வைக்க அவரைத்தானே போய் பாக்கணும் பத்திரிக்கையாளர்கள் எதுக்கு பாக்கணும்.? இந்த விஷயம் அவங்களுக்கு தெரிஞ்சா எங்க நாட்டுக்கே கேவலம் என்றனர். ஹாஹ்ஹா என சிரித்தபடி "உங்களுக்கு ஒண்ணும் புரியலை இல்ல எனக் கேட்டார் நம்ம காங் பிரதிநிதி.

அவர்களும் ஆம் எனத் தலையாட்டினர்.. நல்லா கேளுங்க உங்க ஆள் 2 ஆம் இடத்துல ஜெயிச்சு இருக்கார் இப்ப முதலிடத்துக்கு போகணும் அதானே உங்க பிரச்சினை! ஆமாம் என்றார்கள் அவர்கள்.. இதுக்கு எதுக்குங்க நாம போய் ஜான்சனைப் பாக்கணும்..?

பின்ன என்ன செய்யணும் என்பது போல் பார்க்க... தொடர்ந்தார் நம்ம காங் பிரதி முதலிடத்துல இருப்பவர் மேல ஏதாவது குறை சொன்னா ஆட்டோமேடிக்கா 2வது ஆளு முதலிடத்துக்கு வந்துடுவார் சரியா? ஆம் என்றனர் அனைவரும்.

வெரிகுட்! இப்ப இங்க அதான் நடக்கப்போகுது ஊக்க மருந்து பரிசோதனையில ஜான்சன் ஊக்க மருந்து பயன்படுத்தி இருக்காருன்னு டாக்டர் சர்ட்டிபிகேட் கிடைச்சா என்ன ஆகும்.? அவரது முதலிடம் பறிபோகும் 2ஆவது இடத்துல இருக்க உங்க ஆளு முதலிடத்துக்கு வந்துடுவாரு கரெக்டா" என்றார்.

அந்த நாட்டினர் முகத்தில் இப்போது குழப்பம்... "அது சரிங்க எந்த டாக்டர் அப்படி சர்ட்டிபிகேட் தருவாரு"? எங்க நாட்டு டாக்டருங்க எல்லாம் உயிர் போனாலும் அப்படி செய்ய மாட்டாங்க" என்று சொல்ல.. அட இவ்வளோ யோசிச்ச நான் அத யோசிக்க மாட்டேனா என்றபடி #கையைத் தட்டினார் காங் பிரதி..

உள்ளே இருந்து டாக்டர் ஒருவர் வெளியே வந்தார் அவரது #கையில் ஒரு ஃபைல்..!இதுல ஜான்சன் பத்தி எல்லா டெஸ்ட் ரிப்போர்ட்டும் இருக்கு அத்தனயும் ஒரிஜினல்.!  உலகில் எந்த டாக்டர் பார்த்தாலும் இதை சரின்னே சொல்லுவாங்க.

இதை பிரஸ்மீட்ல சொன்னா அப்புறம் நீங்க தான் வின்னர்" என்று அந்த ஃபைலை அவர்களிடம் கொடுத்தார் காங் பிரதி. மறுநாள் ஜான்சனின் முதலிடம் பறிக்கப்பட்டு அந்த புதிய நாட்டு வீரர் முதலிடம் பிடித்த செய்தி உலகம் முழுவதும் வெளியானது.

அந்த நாட்டில் கொண்டாட்டங்கள் தூள் கிளப்ப அந்நாட்டு அதிபர் ஒரு பெரிய விருந்து கொடுத்தார்.. அந்த விருந்தில் சிறப்பு விருந்தினர்கள் நம் காங் பிரதியும் டாக்டரும் தான்..! அந்நாட்டு அதிபருக்கு இணையான மரியாதை பெற்றார்கள்.

அதிபர் சொன்னார் அருமைங்க உங்க சாதனையே சாதனை சம்பந்தப்பட்ட ஆளை சந்திக்காமயே கச்சிதமா முடிச்சுட்டிங்க.. ஆமா இந்த டாக்டர் உங்க நாட்டில் எந்த ஊரு? அதிபரை பார்த்து மெலிதாக புன்னகைத்தபடி காங் பிரதிநிதி சொன்னார்...

"சிவகங்கை"..

No comments:

Post a Comment