அட..நீங்க xxxxxxxxx தானே.!
ஆமா சார் நீங்க..!?
நான் தான் சார் yyyyyyyyyyyyyy உங்க ஃபேஸ்புக் ஃபிரண்டு.!
அட நீங்க தானா அது புரொபைல் பிக்சருக்கும் நேரிலேயும் நிறைய வித்யாசம் தெரியுது.
போன வாரம் கூட நீங்க கூட "வழுக்கி விழுந்தாலும் கவிதைகள் மீது" புத்தகம் ரிலீஸ் பன்ணிங்க தானே.!
அட! அதெப்படி உங்களுக்கு தெரியும்.! இன்னும் அதுபற்றி நான் ஸ்டேட்டஸ் ஏதும் போடலியே.!
இல்லை சார் அதே பப்ளிகேஷன்ல நானும் ஒரு புத்தகம் போட விசாரிக்க வந்திருந்தேன்..அப்ப பார்த்தேன்.
நீங்க என்னா புத்தகம் எழுதியிருக்கிங்க.?
நானும் கவிதை தொகுப்பு தான் சார் "எழுதுவதெல்லாம் கவிதை"ன்னு ஒரு தொகுப்பு..
வாழ்த்துகள் சார் இது முதல் புத்தகமா..?
இல்ல சார் முதலில் "விட்டத்தில் அமர்ந்த பட்டாம்பூச்சின்னு" ஒரு புத்தகம் போட்டேன்..
ஓ..எவ்வளவு கிடைச்சது சார்?
500 லைக் கிடைச்சது சார்..
சார் நான் பதிவா போட்டதை பத்தி பேசலை புத்தகம் வித்து எவ்வளவு கிடைத்தது.?
அதான் ஸார் அந்த 500 லைக் தவிர ஏதும் கிடைக்கலை..
ஓ..எனக்கு அந்த பிரச்சனை இல்லை... கவிஞர்zzzzzzzzz உங்க ஃபிரண்டு லிஸ்ட்ல இருக்காரா.?
இல்லியே ஸார் ஏன்..?
இல்லியா.. முதல்ல அவருக்கு ரெக்வெஸ்ட் தந்து சேருங்க சார்..!
அவரு யாரு சார்.?
அவரு தான் முகநூலில் பலர் நூல் வெளியிட ஜெம்கிளிப் விக்கிறவரு (ஊக்கு விக்க வேணாம்.. அது ரொம்ப பழசு)
ஓ.. அவர் புத்தகம் எழுதியிருக்காரா?
என்ன இப்படி கேட்டுட்டிங்க "ஆறிய இட்லியும் ஆரிய சாம்பாரும்"ன்னு அவர் எழுதிய தொகுப்பு ரொம்ப ஃபேமஸ் ஆச்சே!
அப்படியா.?!? அப்புறம்
"தலை நிமிர்ந்த சீனா... தலை குனிந்த என் பேனா" "ரோஜாவை பிய்த்தால் பிச்சிப்பூ அல்ல" எழுதுகோல் மையாக ஊற்றினேன் திராவகம்" குத்தகைக்கு போன கவிதைகள்" இப்படி பல புத்தகங்கள் வெளியிட்டு இருக்காரு.
அட ஆமா நானும் கேள்விப்பட்டு இருக்கேன்..அவரை பாக்க முடியுமா..?
நிச்சயமா..நீங்க புத்தகம் போடறது தெரிஞ்சா அவரே நேர்ல வருவாரு.. அவரது பதிப்பகத்துலேயே வெளியிடலாம்.. எல்லா ஏற்பாடும் அவரே செய்வாரே.!
அட இது நல்லாருக்கே அவர் பதிப்பகம் பேரு..?
பேக்கேஜ் வெளியீட்டகம் பேச்சியம்மன் படித்துறைன்னா பேயா போனவங்களுக்கு கூட தெரியுமே..
அப்படியா.. நல்லதுங்க ஆனா தப்பா நினைக்கலைன்னா அவரை பத்தி இன்னொருத்தர் கிட்டயும் விசாரிச்சிக்கவா..?
இதென்ன கேள்வி.! தாராளமா கேளுங்க.. அவர் ஃபிரண்டு லிஸ்ட்ல இருக்குற 5000 பேருமே இவர் மூலமா தான் புத்தகம் போட்டு இருக்காங்க..! யாரை வேணா நீங்.... அலோ ஸார் என்ன மயங்கிடிங்க அலோ...அலோ..ஸார்..ஸார்.....
No comments:
Post a Comment