Friday 20 March 2015

கி(சி)ரிக்கெட் ...

1.

ஏப்பா கிளார்க்கு..! இந்தியாவை ஜெயிச்சிடுவியா பஞ்சாயத்து கேக்குறதுக்கு பதில் சொல்லு..!

என்னங்கய்யா இப்படி கேட்டுபுட்டிங்க.. அடுத்த மாசம் ஐ.பி.எல் ஆரம்பம்... சம்பளமா எத்தனை கோடி வாங்குறானுங்க..அதுமில்லாம அவங்க எல்லாம் தனியா தான் இந்தியா வந்து போவணும் அதெல்லாம் அவய்ங்க கண்ணு முன்னால வந்து போகுமில்லியா.. சொல்லுப்பா கிளார்க்கு...

அய்யா நாங்க செமி பைனல் வந்ததே போதும் கப்பை நீங்களே வச்சுக்கோங்க..

ஏய்.. அதான் கிளார்க்கே சொல்லிட்டாரு இல்ல.. அப்புறம் என்ன... போ..போ.. போ... கூட்டம் போடாத கிளம்பு கிளம்பு...கிளம்பு..

அப்பாடா..! இப்படியே மெயிண்டண்ட் பண்ணுடா #சீனா_வானா.. .. ம்ம் ம்ம் போ போ...

2.
பைலட் நல்லா கேளுங்க நம்ம ப்ளைட்டுல ஶ்ரீலங்கா, பங்களாதேஷ், பாகிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ் டீம் ப்ளேயர்ஸ்எல்லாம் இருக்காங்க..! ப்ளைட்டை நேரா கொழும்புக்கு விடு அங்க ஏர்போர்ட்டுல இலங்கை டீமை இறக்கி விடுறோம். 

அப்படியே டாக்கா போறோம் அங்க பங்களாதேஷ் டீமை ஏர் போர்ட்டுல இறக்கி விட்டுட்டு அப்படியே இஸ்லாமாபாத் ஏர்போர்ட்டுல இறங்காம நேரா வெஸ்ட் இண்டீஸ் போயி அவங்களை இறக்கி விடுறோம்... ஓகே.!

ஸார் ஒரு சின்ன சந்தேகம் இஸ்லாமாபாத் ஏர்போர்ட்டுல பாகிஸ்தான் டீமை இறக்கி விட மாட்டோமா.?

நானும் அவங்க கிட்ட இறக்கி விடவான்னு கேட்டேன்.. அதுக்கு அவங்க சொன்னாங்க இஸ்லாமாபாத் வந்தவுடனே நாங்களே குதிச்சுக்கிறோம்.. ரெண்டும் ஒண்ணு தான்னு.!

No comments:

Post a Comment