உன்னைச் சுற்றி போலீஸ் தோன்றும்.. உலகம் அர்த்தப்படும்..
விடியற்காலையின் நீளம் விளங்கும்...தலையெழுத்து
அலங்கோலமாகும்..ஏட்டு எமனாவான்..உன் வீட்டு பால்கனி
கம்பி உன்னையே குத்தும்..குடல் உடையும்..கண்ணிரண்டும்
பீதியாகும் நேர்மையாக இருந்து பார்...
நான்கரை மணிக்கு எழுப்பப்படுவாய்..சட்டையணிய மறுக்கப்
படுவாய்..தர தரவென இழுக்கப்படுவாய் நிமிஷங்கள் வருஷங்களாகும்
தவறு ஒன்றும் இருக்காது.. அதுதான் பெரிய தவறு என்று உணர்வாய்
வயிற்றுக்கும் தொண்டைக்குமாய் உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்... நேர்மையாக இருந்து பார்....
இருதயம் அடிக்கடி இடம் மாறித் துடிக்கும் மிரட்டல் வழக்குகளில்
உன் பெயர் மட்டுமே இருக்கும்.. கொலை முயற்சி புகார்கள் பல
உன் மீது அம்புவிடும்.. வழக்குகள் நைல் நதியாய் பெருக்கெடுக்கும்
உன் கண்ணீரில் சட்டங்கள் இறக்கும்...நீதி தோற்கும்..
நேர்மையாக இருந்து பார்....
பொது நலத்திற்கு உழைத்து உழைத்தே உன்னால் உடைந்து போக
முடியும்.. அகிம்சையின் முகமூடி தாங்கி இம்சை உன்னை இம்சிக்கும்
உனக்குள்ளே நீ புதைந்து போவாய் அதிகார வர்க்கத்திடம்
மோதினால் அப்படியே சிதைந்து போவாய்..சபையில் தனிமையாக
நிற்பாய் பின்பு தனிமையாய் மருத்துவமனை அடைவாய்.. ஐந்தங்குல
இடைவெளியில் அமிர்தம் இருந்தும் அதைத் திருடிய பழி உன்மேல்
சுமத்தப்படும்.... நேர்மையாக இருந்து பார்....
சகாயம் வழக்கில் நீ அரசின் சட்டையைப் பிடித்தாய் உறவுகள் ஏதுமின்றி
ஒற்றை ஆளாய் உழைத்தாய் சிலுவையில் அறைந்து கொண்டு விளம்பரம்
தேடிய சிறு மனிதர்கள் வாழ்கின்ற இவ்வுலகில் நீயே சிலுவையில்
அறையப்படுவாய்.. நீ நேசிக்கும் நேர்மையும் உண்மையும் உடனே
கிடைக்காது போனாலும் நேர்மையாக இருந்து பார்.. சொர்க்கம் நரகம்
இரண்டில் ஒன்று இங்கேயே நிச்சயம்.. நேர்மையாக இருந்து பார்...
#வைய்யிறமுத்து
No comments:
Post a Comment