Wednesday 1 July 2015

குறள் குறுங்கதைகள்

#குறள்நெறிக்_குட்டிக்கதைகள்

"இப்படியே வியாபாரம் நடந்தா ஒரு மாசத்துல கடையை மூடிட வேண்டியது தான்" என்றான் ரவி.

ரவியும் ஹரியும் இணைந்து ஆரம்பித்த ரெஸ்ட்டாரெண்ட் அது.. ரவி தான் முதலீடு செய்திருந்தான் பெரிய செல்வந்தன் அவன்.. ஹரி உழைப்பு மட்டும் தான் மூலதனம். ஆகவே இப்படி ரவி சொன்னதும் ஹரி திடுக்கிட்டான்.

என்ன சொல்ற ரவி? நாம இந்தக் கடையை ஆரம்பிச்சி 2 மாதம் கூட ஆகலை.. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா நம்ம கடை பெயர் பிரபலமாகிட்டு வருது.. நம்ம உணவுகள் தரமா ருசியா இருக்கு அதுல குறையிருந்தா தான் நீ சொன்னது நடக்கும்.

எப்பவும் உணவுக்கடைகள் மக்கள் வாய் வார்த்தையால் தான் பிரபலமாகும் அது தான் அவர்களுக்கு உண்மையான விளம்பரம். இன்னும் சில மாதத்தில் நம் வியாபாரம் பெருகும் பொறு என்றான் ஹரி.. எனக்கு நம்பிக்கையில்லை ஹரி அதெல்லாம் முடியாது இப்ப தாங்குற அளவுக்கு நஷ்டம் இருக்கு இதை இப்படியே விட்டுடுறது தான் சரி என ரவி கூறினான்.

அப்ப என்ன செய்யலாம் என்றான் ஹரி.. நான் போட்ட மூலதனத்தை மட்டும் நீ கொடுத்துடு இல்ல வேற யார்கிட்டயாவது வித்துடுறேன்.. எனக்கு பணம் வந்தா போதும் ரிஸ்க் எடுக்க நான் தயாரில்லை என்றான் ரவி. சரி ரவி எனக்கு 3 நாட்கள் டைம் தா சொல்றேன்.. ஹரி.

3 ஆண்டுகளுக்கு பின் ஹரிஸ் கிச்சன் என்னும் உணவகங்கள் 50 கிளைகளுடன் சக்கை போடு போட்டு வருகிறது. இப்போது மாநிலம் முழுவதும் அதற்கு கிளைகள் உண்டு.. அன்று ரவியிடம் டைம் கேட்ட ஹரி வங்கி அதிகாரி ஒருவர் மூலம் கடன் வாங்கி ரவிக்கு செட்டில் செய்து விட்டு அயராது உழைத்ததன் விளைவே இந்த வெற்றி.

நீதி: ஊக்கம் உடையவரே எல்லாம் உடையவர் செல்வம் இருந்தும் ஊக்கமில்லாதவர் எதுவுமே உடையவர் அல்ல.

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்

உடையது உடையரோ மற்று.

No comments:

Post a Comment