Friday 13 November 2015

கனவுச் செய்திகள்...

#வெளிவராத_நாளிதழ்_செய்திகள்

+தமிழகத்தில் கனமழையால் பாதிப்பு எங்கும் இல்லை அரசு எடுத்த முன்னெச்செரிக்கை நடவடிக்கைக்கு மக்கள் பாராட்டு...

+மழையால் சாலைகளில் நீர் தேங்காது நிலத்தடிக்கு நீர் திருப்பிவிடும் திட்டம் மூலம் 50 டி.எம்.சி நீர் சேமிப்பு.

+தமிழகம் எங்கும் கன மழையால் கொஞ்சம் கூடசாலைகள் சேதமாகவில்லை நெடுஞ்சாலைத் துறையினருக்கு பாராட்டு குவிகிறது.

+புறநகர் பகுதிகளில் நீர் புகாமல் நீர் நிலை ஆதாரங்களை தூர் வாரியதால் அந் நீர் சேகரிப்பு திட்டம் வெற்றியடைந்துள்ளது..

+பாதாள சாக்கடைகள் ஒழுங்கு படுத்தப்பட்டதால் மழையில் எங்கும் அது நிரம்பி வழியவே இல்லை அனைத்து மாநகராட்சி நகராட்சி நிர்வாகங்கள் சாதனை.

+அடுத்த 5 ஆண்டுகளுக்கு உடையாத ஏரிக்கரைகளை பலப்படுத்திய பொதுப் பணித்துறையினர் தேசிய விருது பெறுகிறார்கள்.

+தமிழகத்தில் அணைகள் ஏரிகள் நிரம்பின.. பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.. வெள்ள அபாய எச்சரிக்கை முறைப்படி அறிவிக்கப்பட்டு உயிர்சேதம் பொருட்சேதம் தடுக்கப்பட்டது.

+எவ்வளவு மழை வந்தாலும் இனி கடலூர் தாங்கும்.. கடலூர் கலெக்டர் பெருமிதம்.

+அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேவையான தண்ணீர் தேவை இருப்பில் உள்ளது குடிநீர் வாரியம் அறிவிப்பு.

+மழையால் எங்கும் நிற்காமல் பழுதின்றி ஓடியும் ஒரு சொட்டு தண்ணீர் கூட உட்புறம் வராத அளவிற்கு நல்ல வசதியுடன் அரசுபேருந்துகள் இயங்கியன மக்கள் நெகிழ்ச்சி.

+சாலைகளில் நீர் தேங்கியதை பார்த்து 25 வருடங்கள் ஆயிற்று 85 வயது மூதாட்டி ருசிகர பேட்டி.

+மத்திய அரசின் வெள்ள நிவாரண நிதி வாங்காத மாநிலம் என்னும் பெருமையை தொடர்ந்து 10 வது ஆண்டாக தக்க வைக்கிறது தமிழகம்.

+தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளும் இணைக்கப்பட்ட பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது.. தைப் பொங்கலன்று திறந்து வைக்கிறார் முதல்வர்.

+கன மழை வந்தால் எப்படி அதை எதிர்கொள்வது.. அதை தமிழகத்தில் கற்றுக் கொள்ளுங்கள் ஐ.நா.சபை அறிவிப்பு.

+நீர் மேலாண்மை பற்றி கற்றுக் கொள்ள தமிழகம் வருகிறார்கள் அமெரிக்க பல்கலைக் கழக மாணவர்கள்.

+தமிழகம் முழுவதும் 7894 புதிய நீர் நிலைகள் ஏற்படுத்தப்பட்டது.. பழைய நீர் நிலைகள் 8956 கண்டுபிடிக்கப்பட்டு தூர் வாரப்பட்டன.

+ஒரே நாளில் 300 செ.மீ மழை பெய்தாலும் பாதிப்பின்றி தாங்கும் உலகின் ஒரே இடம் தமிழ்நாடு தான்.. சர்வதேச பேரிடர் மேலாண்மை அமைப்பின் தலைவர் நற்சான்றிதழ்.

+எங்களுக்கு தண்ணீர் தாருங்கள் ஆந்திரா, தெலுங்கானா,கேரளா அரசுகள் தமிழகத்திடம் கெஞ்சல்.

+காவிரி நீர் இனித் தேவைப்படாது... நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் கர்நாடக அரசிடம் தமிழகம் திட்டவட்ட அறிவிப்பு.

+இவ்வாண்டும் தேசிய அளவில் வேளாண்மையில் முதலிடம் பிடித்தது தமிழகம்.

No comments:

Post a Comment