மஞ்சள் நிற இரவு... வானம் வெண்மையாக இருந்தது.. சிவப்பு ஊதா பச்சை ஆகிய மூன்று நிறத்தில் அறுகோண வடிவ நிலாக்கள் மூன்று ஜொலித்து கொண்டிருந்தன.
விடியலில் வயலட் நிற சூரியன் வடக்கில் உதிக்க இன்னும் 3 வருடங்களே இருந்தது. 60 நாட்கள் ஒரு வினாடியாய் கழிந்து கொண்டிருந்தன.....
தரையெங்கும் நீல நிற மண் குவிந்திருந்தது அதிலே கலன்கள் அமர்ந்த சுவடுகளைத் தவிர வேறேதும் இல்லை கிரகத்தின் அனைத்து மனிதர்களும் கால்களால் சுவாசித்து கொண்டிருந்தனர்.
இடுப்புக்கு கீழே அவர்களது நுரையீரல் விம்மிக் கொண்டிருந்தது.. உயிர் வாழத் தேவையான நைட்ரஜன் அந்த வெளியில் குறைந்து இருந்தது..
அவர்களின் அக்குளுக்குள் இருந்த மூளை அடுத்த கட்டத்தை பற்றி சிந்தித்து கொண்டிருந்தது. முதுகில் இருந்த 8 கண்களும் விழித்து கொண்டே இருந்தது...
அவர்கள் அனைவருக்கும் தெரியும் அவர்களது பூகா கிரகம் அழியப் போகிறது என்று வேற்று கிரக வாசிகளின் தாக்குதல் தொடங்கப்போகிறது என்று...
அவர்கள் கிரக தெய்வம் பூகாரூன் 3 நூற்றாண்டுகளுக்கு முன் சொன்னது நினைவுக்கு வந்தது... இதோ விண்கலங்கள் வந்திறங்கும் பேரிரைச்சல் செங்குத்தான ராக்கெட் போன்ற ஒரு கலன்..
இது பூமி என்ற கிரகத்தில் உபயோகிப்பதல்லவா அந்த மக்கள் சாவின் விளிம்பில் நின்று யோசித்து கொண்டிருந்த போது பூமியில் இருந்து வந்த கலத்தின் வாசல் திறந்தது...
பூகா கிரக மக்கள் தங்கள் வாழ்வின் கடைசி வினாடியை தங்களது இதயத்தால் பிடித்த படி பார்த்து கொண்டிருந்தனர் பூமியின் கலத்திலிருந்து இறங்கிய உருவத்தை பார்த்ததும் அவர்கள் அனைவரும்.....
அக்குளில் இருந்த மூளை வெடித்து சிதறி இறந்தே போனார்கள்... பூமியின் கலத்திலிருந்து இறங்கி கொண்டிருந்தார்....
.
.
.
.
.
.
.
.
.
மோடி..!!!!!!
ஹி...ஹி...ஹி ....ஹி ...
No comments:
Post a Comment