Tuesday 24 November 2015

போராளியின் டைரி...

#முகனூல்_போராளிகளின்_நவம்பர்_2015_டைரிக்குறிப்பு

வேதாளம் டீசர்ல ஆரம்பிச்சது நவம்பர் மாசம்... அது ஏய் படத்துக் கதை... தூங்காவனம் ப்ரெஞ்ச் படத்துக் கதைன்னு உள்ளூர் சினிமால இருந்து ஒலக சினிமா வரைக்கும் கரைச்சிக் கழுவி வுட்டு வெளாண்டோம்.

அப்புறம் வூட்ல சுட்ட பீடை புடிச்ச சீடை, வரட்டி மாதிரி அதிரசம், முறுக்கு, ஜாங்கிரி, டோங்கிரி எல்லா பலகார போட்டோவும் போட்டு ஆப்பி தீவாளி சொல்லிகிட்டோம்... ஒரு சிலரு அவங்க தேனடைங்க கிட்ட தேன் வழுக்க வழுக்க  (அதாங்க சொட்ட சொட்ட) உள்ளாற இருக்க டப்பாவுல பட்சணம் சுட்டோம். (கடலை தான்)

இடையில லாலு நிதீஷ் சபாசு.. மோடி அமித்ஷா பூட்டகேசுன்னு வெடி போட்டோம்.. அவர் அத்வானியையே ஓரங்கட்டுனவரு நம்மள ஓரங்கட்றது என்ன பெரிசா..! வழக்கம் போல வெளிநாடு கிளம்பி போயி டிபன் காபி சாப்பிட்ட போட்டோ போட அதையும் கலாய்ச்சோம். தீபாவளி முடிஞ்சது

அப்புறம் தான் உலக லெவலுக்கு மாறுனோம்.. அல்லாரும் மூஞ்சியில பிரான்ஸ் கொடிய குத்திகிட்டு பொங்கி வழிஞ்சோம்... சில பேரு பிரான்ஸ் புலனாய்வுத் துறைக்கெல்லாம் ஸ்கெட்ச் போட்டு தந்து புளகாங்கிதமா இல்ல புளங்காகிதமா ஏதோ ஒண்ணை அடஞ்சோம்.

பிரான்சுக்கு தான் பொங்கலா.? இந்த கடலூர் தாமிரபரணிக்கு எல்லாம் 2இட்லி அட அட்லீஸ்ட் கொஞ்சம் பழைய சோறாவது போட்டிங்களான்னு கேட்டதும் சுரீர்ன்னு கோவம் வந்து ஜீன்ஸை சுருட்டிகிட்டு சண்டையை ஆரம்பிச்ச நேரம்...

அப்டியே இடி வெட்டி மின்னல் இடிச்சு "சோ"ன்னு மழை கொட்டுச்சு.. சரி நவம்பர் மாச மழை தானேன்னு நெனைச்சா.. அது சோ"வைத் தாண்டி நாகேஷ், சந்திரபாபு, தங்கவேலு, குலதெய்வம் ராஜகோபால், காகா ராதா கிருஷ்ணன், காளிN.ரத்தினம், NSK ன்னு விடாம பெஞ்சுகிட்டே போச்சு.

ஒருமணிநேரம் மழை பெஞ்சாலே ரோடெல்லாம் மினி ஸ்கர்ட் ஃபுல் ஸ்கர்ட்டா தெரிய மழைத்தண்ணி ஓடும்.... இதுல 4 நாள் விடாம பெஞ்சா.. ஊரே தண்ணியில மிதக்க.. FBயில் புறப்பட்டுச்சி நம்ம பதிவு கப்பல்கள்.

இதுல கலாய்க்கிறேன்னு "ஓலா போட்"ன்னு அவனை சீண்டி ஐடியா குடுக்க அவன் நெஜமாவே சைக்கிள் கேப்புல டைட்டானிக் ஓட்டி சம்பாரிச்சுட்டான். அம்மா, ஆடு, இலை, கலைஞர், கட்டுமரம் கோபாலபுரம் வரை பதிவுகளில் மழையை வச்சி படகு விட்டு வாயை வச்சி வடை சுட்டு மகிழ்ந்தோம்..

விட்ட மழை ரெண்டு நாளில் மறுபடி வருமுன்னு ரமணன் சொல்ல ரமணன் வருணன் பதிவு மழையை விட அதிகமா கொட்ட.. குழந்தைகளுக்கு ரமணன் ரமண மகரிஷியை விட தெய்வமாக தெரிய மீண்டும் சென்னை மிதக்க.. 

ஏரியெல்லாம் வீடுன்னு சர்வேயரா சர்வே எடுத்து சர் சர்ருன்னு ஸ்டேட்டஸ் போட பாதிக்கப்பட்ட சென்னை மக்களை விட நாம இங்க அதிகமாபுலம்ப.. அதை தாங்கிக் கொள்ளாத நம்ம தோழர்கள் கொதிச்சுட்டாங்க.

அதென்ன சென்னை.! தமிழ்நாட்டுல மத்த ஊரெல்லாம் என்ன பாவமுன்னு ஒரு அவலக்குரல் கேட்டதும் ஆனந்தவிகடனைக் கண்ட அம்மா போல பதறி அட நாமளும் தென் மாவட்டம் தானேன்னு சப்போர்ட் பண்ணப் போனா..

இந்த அமீர்கான் பய நாட்டுல சகிப்புத் தன்மை லிப்ட்டுல ஏறி இறங்கி கிட்டே இருக்கு நான் புள்ளக் குட்டியோட நாட்டை விட்டே போறேன்னு மொத்த ஃபேஸ்புக்கையும் திசை திருப்பி விட்டுருக்கான் ரேஸ்க்க்கல்ஸ்.. 

போடா போடா இந்தியா பக்கமே வரதடா ஓடிடிடான்னு அவனை கண்டபடி திட்டிட்டு வந்துட்டோம்.. இதை நீங்க ஏன் சகிச்சுகக் கூடாதுன்னு கேக்குறிங்களா.. அட போங்க பாஸ் அப்புறம் எப்படி போராளியாவுறது

உஸ்ஸ்ஸ்ஸ்... அபா... உஸ்ஸ்ஸ்ஸ் அபபா.. எத்தனை..மூச்சு வாங்குது.. ந்தா இப்படி கொஞ்சம் உக்காந்துக்குறோம் ஒரு ஜோடா தர்றியளா.. இன்னும் டிசம்பர்ல எப்படியெல்லாம் இங்க உளைக்க வேண்டியது இருக்குமோ..?  நெட் ரீ சார்ஜ் போட்டு வந்து வச்சுக்குவோம்.. வர்ட்டா...

ஓவிய உதவி : Thanks to Santhosh Narayanan

No comments:

Post a Comment