Friday, 19 August 2016

4💃🏻 👙🎉 18+ நகரம் 🍺 நியூ ஆர்லின்ஸ் 👙💋🎉 4


தூரத்தில் எங்களை அதிர வைத்த காட்சி பால்கனியில் கூட்டமாக நிற்கிறார்கள் கீழே தரையில் நின்ற பெண் சரலேன தன் டி சர்ட்டை மேலே உயர்த்தி தன் மார்பகங்களை காட்டுகிறாள்.. மேலே இருப்பவர்கள் அங்கிருந்து கலர் மணி மாலைகளை இவள் மீது வீசுகிறார்கள் அதை லாவகமாகப் பிடித்து தன் கழுத்தில் அணிந்து கொள்கிறாள்.. ச்சே என்ன பெண் இவள்.! இவர்கள் கலாச்சாரம் வேறு தான் அதுக்காக நடுரோட்டிலா.?

அந்தப் பெண் மட்டுமே அப்படி என நாங்கள் நினைத்தது எவ்வளவு தவறு என அடுத்தடுத்து பார்த்த காட்சிகளில் உணர்ந்தோம்..ஆம் எல்லா பெண்களுமே மேலாடையை உயர்த்த மாலை விழ இது தான் வைபவமே என லேட்டாக புரிந்தது.. இந்த பனியன் உயர்த்துதலுக்கு ப்ளாஷ் எனப் பெயராம் நிச்சயம் ப்ளாஷ் தான் கண் கெட்டுவிட்டது.. அந்த பால்கனி உச்சியில் நிற்க தனிக் கட்டணம் அவை எல்லாம் கிளப்புகள் உள்ளே ஸ்டீரிப் நடனமும் உண்டு.



க்ளப்பின் கதவு திறக்கப்பட்ட போது உள்ளே இருந்து கசிந்த ஜாஸ் இசையும்.. சந்தோஷ இரைச்சலும் கலவையாக கேட்டு தேய்ந்தது.. சில கதவிடுக்கு காட்சிகளில் காசியில் அலையும் திகம்பரச் சாமியார்களைப் போல பெண்கள் தென்பட்டனர்.. அவர்கள் காலில் செருப்பைத் தவிர ஏதும் அணியாமல் ஏவாள் உடையில் உலவிக் கொண்டிருந்தனர்.. க்ளப் நுழைவுக் கட்டணமே மினிமம் 30 டாலர்கள் முதல் துவங்கியது (₹2100/-)

அன்று மேர்டி கிராசின் முதல் தினமாம் தெருவெங்கும் பியர் பாட்டில்களை சீப்பிக் கொண்டு அரை முக்கால் முழு நிர்வாணத்துடன் உற்சாக இரைச்சல் இட்டுக் கொண்டு அணைப்பது முத்தமிடுவது எல்லாம் சர்வ சுதந்திரமாக சாலையிலேயே செய்து கொண்டு இருந்தார்கள்.. நாங்கள் பட்டிக்காட்டான் மெக்டொனால்டு பார்த்தது போல நின்றிருந்தோம்.தமிழில் "அவன் முகம் தேன் குடித்த நரி போல ஆயிற்று என ஒரு சொல் வழக்கு உண்டு..

அதற்கு உதாரணமாக இப்போது எங்கள் முகங்களைச் சொல்லலாம்.. சாம்பல் புதன் வருகிறதல்லவா அதற்கு முன்வரும் செவ்வாய் தான் இந்த மேர்டி கிராசின் முக்கிய பரேடு தினம் அதற்கு 12 நாட்களுக்கு முன்பே மேர்டி கிராஸ் ஈவ் என்பது தொடக்க நாள்.. கலர் கலரான முகமூடி, கலர் மணிகள், கண்கவர் வண்ணங்களில் ஆடைகள், வித்யாசமான வேடங்கள், நடனங்கள், அலங்கார வண்டிகள் என அந்த கார்னிவல் களை கட்டுமாம்.



முதல் நாள் ஆரம்பமே இப்படின்னா கடைசி நாள் கேட்கவா வேணும் ஆனால் அன்று அடுத்த 12 நாளில் நாங்கள் அமெரிக்காவிலிருந்து கிளம்பி இந்தியா வரும் தேதியில் அந்த விழா அமைந்திருந்தது.. சோகத்துடன் வாயைத் துடைத்துக் கொண்டோம்.. (அங்க தான் ஈரம் அதிகம்) சரி இதென்ன கலர்மாலைகள் எறியும் விழா..பெண்களுக்கு எதற்கு இத்தனை மாலைகள் , இந்த குழுக்களெல்லாம் யார் எதற்காக இந்த கார்னிவெல்.?? எல்லாவற்றிற்கும் பதில் விடுதியில் தூங்கி எழுந்திருந்த சாம்பியன் அண்ணனிடம் இருந்தது.. அவர் சொன்ன சுவராஸ்யத் தகவல்கள்...

மேர்டி கிராஸ் கார்னிவல் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்த கலாச்சாரம் ரோம் மற்றும் வெனீஸ் வழியாக பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற மன்னர் பரம்பரையான போர்பார்ன் பரம்பரையினரால் ஏற்கப்பட்டு பிறகு அவர்கள் காலனிகளாக இருந்த தேசத்திற்கும் சென்றது.. ஆம் ஒரு காலத்தில் அமெரிக்காவை ஸ்பெயின் வழியாக ஆண்டது பிரான்ஸ்.. போர்பார்ன் பரம்பரையின் சம்பந்திகள் தான் ஸ்பெயின் அரசகுடும்பம்.



1699 ஆம் ஆண்டு நியூ ஆர்லின்ஸில் ஆய்வுப்ணிக்காக வந்த பிரஞ்சு - கனடியர் ஜீன் பாப்டிஸ்ட் என்பவர் ஃபோர்ட் லூயிஸ் என்னுமிடத்தில் முதன் முதலில் மேர்டி கிராசை கொண்டாடினார்.. அந்த இடம் தான் இப்போது mobile என்றழைக்கப்படுகிறது.. இங்கு தான் மேர்டி கிராஸ் சமூகம் துவங்கப்பட்டது இன்று பல்வேறு குழுக்கள் பிறப்பதற்கு இதுவே  முன்னோடி 1740 க்கு பிறகே நியூ ஆர்லின்ஸில் கொண்டாடப்பட்டது இந்த விழா.



சாம்பல் புதனுக்கு முன்பு வரும் செவ்வாய் தினம் தான் Twelfth Tuesday மேர்டிகிராஸின் முக்கியதினம் அதற்கு 12 நாட்களுக்கு முன்பே இந்த ஈவ் தொடங்கும் அது தான் நாங்கள் அங்கு போன தினம். இந்த 12 வது செவ்வாய் அன்று அலங்கார வண்டிகளின் அணிவகுப்புகள் கலர் கலரான ஆடைகள் வேடங்கள் அணிந்து வருவார்கள்..இவர்கள் தனித்தனி க்ளப்புகள் கிளப் உறுப்பினர்கள் பணம் போட்டு இந்த செலவை செய்கிறார்கள்.

எந்த கிளப்பின் வண்டி அந்த ஆண்டு சிறந்தது என்னும் போட்டியும் உண்டு.. பரிசு பணமெல்லாம் இல்லை என்றாலும் அந்த பெருமைக்காக செலவழிப்பது உண்டு.. அதிலும் மேர்டிகிராஸ் பால் எனப்படும் கலர்மணி மாலைகளும், விதவிதமான முகமூடிகளும் தான் இந்த விழாவின் ஹைலைட் அடையாளம். விவசாய மாடுகளுக்கு நன்றி கூறுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இவ்விழாவில் கேளிக்கை சமாச்சாரங்கள் நிறைய நுழைந்துவிட்டது.

மேலாடையை உயர்த்தி மார்பகங்களை காட்டும் ப்ளாஷ் என்னும் செயலுக்கு மாலையை வீசுகிறார்கள்.. எவ்வளவு மாலை உங்களுக்கு கிடைக்கிறதோ அவ்வளோ கில்லி நீங்கள் கழுத்து கொள்ளாமல் மாலை அணிந்த பெண்கள் எங்களுக்கு நினைவிற்கு வந்தார்கள். புகழ்பெற்ற போர்பார்ன் சாலைக்கு வந்தோம்.. பால்கனிகளில் நின்று கொண்டிருந்த செல்வந்தர்கள் மாலையோடு காத்திருக்க கீழிருந்து ஓரே ஆரவாரம்.

அவர்களுக்கு பிடித்த பெண்ணுக்கு மாலையோடு டாலர் நோட்டுகளும் வீசப்பட்டன.. தெருவில் பார்த்த பலரும் அரைக் கண் மூடிய நிலையில் இருந்தார்கள்.. இயற்பியலில் ராமன் விளைவு போல இது மரிஜ்ஜுவானா விளைவு என்பது பிறகு தெரிந்தது.. மெக்ஸிகோ அருகில் என்பதால் லாகிரிகள் எளிதாக கிடைத்துவிடுகிறது என்றார்கள். என்னருகில் ஒரு அழகி வந்து "நெசசீத்தே கொமிதா " என்றாள் ஸ்பானிஷில் அப்படின்னா.?

(வரும்..)



No comments:

Post a Comment