Saturday 15 February 2014

வைக்கோலும்... யானையும்...

கவி காளமேகத்தின் சிலேடை வெள்ள(ல்ல)ம்....

வைக்கோலுக்கும் யானைக்கும்....


பாடல்...


வாரிக் களத்தடிக்கும் வந்துபின்பு கோட்டைபுகும்

போரிற் சிறந்து பொலிவாகும் - சீருற்ற

செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில்

வைக்கோலு மால்யானை யாம்.

இதில் முதலிரண்டு அடிகளே சிலேடை.! கடைசி இரு வரிகளுக்கான அர்த்தம்..சிறப்பு பொருந்திய செந்நிறமான திருமேனியுடைய திருமலைராயனின் மலைச்சாரலிடத்தே வைக்கோலும் யானையும் ஒன்றே..(சீருற்ற செக்கோல மேனித் திருமலைராயன் வரையில்)

வைக்கோல்: வாரிக் களத்து அடிக்கும்- அறுவடை செய்பவரால் வாரிக் களத்தில் அடிக்கப்படும்... வந்த பின்பு கோட்டை புகும் - அதன் பிறகு அரசாங்க களஞ்சியமான கோட்டைக்குள் புகும்... போறிற் சிறந்து பொலிவாகும் - பெரிய வைக்கோற் போரின் தோற்றத்தினால் பொலிவு பெறும்

யானை: வாரிக் களத்து அடிக்கும்- பகைவர்களை வாரி போர்க்களத்தில் துதிக்கையால் அடித்து கொல்லும்... வந்த பின்பு கோட்டை புகும் - அதன் பிறகு பகைவரின் கோட்டையை தகர்த்து உட்புகும்... போறிற் சிறந்து பொலிவாகும் - அதன் வலிமையால் போரில் சிறந்து விளங்கும்..!

என்னுடைய பஞ்ச் :
வைக்கோல் மலை போல் குவிந்திருக்கும்... யானை முதுகில் அமைந்திருக்கும்...அது என்ன?

விடை: #அம்பாரமாய்.       


(அம்பாரி அம்பாரம் என்றும் அழைக்கப்படும்)

No comments:

Post a Comment