கவி காளமேகத்தின் சிலேடை வெ(ல்ல)ள்ளம்...!
பாம்புக்கும் எலுமிச்சைபழத்திற்கும்....
பாடல்:
பெரியவிட மேசேரும் பித்தர் முடி யேறும்
அரியுண்ணு முப்புமே லாடும் - எரிகுணமாம்
தேம்பொழியும் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பு மெலுமிச்சம் பழம்.
தேன் பொழியும் சோலைகளுடைய திருமலை ராயன் மலைச்சாரலிலே பாம்பும் எலுமிச்சம்பழமும் ஒன்று எப்படி என்றால்.. (இது கடைசி இரு வரிகளுக்கான விளக்கம்)
பாம்பு..... பெரிய விடமே சேரும்...மிகுந்த விஷம் உடையதாக இருக்கும், பித்தர் முடி ஏறும்... பித்தனான சிவனின் முடியிலும் இருக்கும், அரி உண்ணும்... காற்றைப் புசிக்கும், உப்புமேலோடும்.... அதனால் தன் மேல் உடலை உப்ப வைத்து கொள்ளும், மேல் ஆடும்... தலை தூக்கி மேல் எழுந்து ஆடும், எரி குணமாம்.... சீற்றம் செய்யும் சினம் கொண்ட குணம் உடையது.!
எலுமிச்சை.... பெரிய விடமே சேரும்... பெரியவர்களிடம் கொடுக்கப்பட்டு அவர்களை சேர்ந்து இருக்கும், பித்தர் முடி ஏறும்.... பித்து பிடித்தவர்கள் தலையில் தேய்க்கப்பட்டு மருந்தாகவும் இருக்கும், அரியுண்ணும்.... சிறு துண்டங்களாக அரிந்து வைக்கப்படும் உப்புமேலோடும்.....மேலாக உப்பு தூவி வைக்கப்படும் (ஊறுகாய்க்காக) எரிகுணமாம்.... அதன் சாறு பட்டால் எரிச்சல் தரும் குணம் உடையது.!
என்னுடைய பஞ்ச் : எலுமிச்சையை பிழிவது ஏன்..? புற்றில் பால் ஊற்றுவதேன்..?
விடை: "சர்பத்துக்காக"
No comments:
Post a Comment